இளைஞர்களின் வழிகாட்டி அப்துல்கலாம்

இளைஞர்களின் வழிகாட்டி அப்துல்கலாம், குமரன் பதிப்பகம், விலை 50ரூ. இந்திய மக்கள் அனைவருடைய அன்பையும் பெற்று, மக்கள் ஜனாதிபதி என்று புகழ் பெற்றவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம். அவர் திடீரென்று காலமானபோது, இந்தியாவே கண்ணிரில் மிதந்தது. இளமையில் ஏழ்மையில் எதிர்நீச்சல் போட்டு, கல்வியாலும், அறிவாற்றலாலும் அணுசக்தி விஞ்ஞானியாக விஸ்வரூபம் எடுத்தார். ஏவுகணை வீச்சில் சாதனை படைத்து, இந்தியாவுக்கு புகழ் தேடித்தந்தார். உலகம் போற்றும் உத்தமத் தலைவரான அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றை, இளைஞர்களின் வழிகாட்டி அப்துல் கலாம் என்ற தலைப்பில் புத்தகமாக எழுதியுள்ளார், எழுத்தாளரும், […]

Read more

அறிஞர்கள் பார்வையில் கண்ணியம் குலோத்துங்கன்

அறிஞர்கள் பார்வையில் கண்ணியம் குலோத்துங்கன், இராம. குருமர்த்தி, மணிவாசகர் பதிப்பகம், சென்னை, விலை 200ரூ. கடந்த 45 ஆண்டுகளாக கண்ணியம் என்ற பத்திரிகையை நடத்தி வருபவர் முனைவர் ஆ.கோ. குலோத்துங்கன். 70க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். இவர் தொழிற்சங்கவாதி. அதனால் இவர் வேலை பார்த்த நிறுவனத்தில் வேலை நீக்க உத்தரவை கொடுத்தனர். அது ஆங்கிலத்தில் இருந்ததால், அதை வாங்க மறுத்து தமிழ் கொடுத்தால்தான் வாங்குவேன் என்று போராடி, தமிழில் பெற்றார். இது இவருடைய தமிழ்ப் பற்றுக்கு எடுத்துக்காட்டு. அவரைப் பற்றி தமிழறிஞர்கள், கவிஞர்கள், பிரமுகர்கள் […]

Read more

என் வாழ்வின் ஒளிவிளக்கு டாக்டர் எம். நடராஜன்

என் வாழ்வின் ஒளிவிளக்கு  டாக்டர் எம். நடராஜன், எம்.ஜே. மருத்துவமனை வெளியீடு, திண்டுக்கல் மாவட்டம், விலை 200ரூ. எலும்பு முறிவு சிகிச்சை நிபுணர் டாக்டர் எம். நடராஜன் எலும்பு முறிவு சிகிச்சையில் அகில இந்திய புகழ்பெற்று விளங்கியவர் டாக்டர் எம். நடராஜன். அதன் மூலம் தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்தவர். அவருடைய வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகளையும், அவருடன் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் என் வாழ்வின் ஒளிவிளக்கு டாக்டர் எம். நடராஜன் என்ற தலைப்பில் புத்தகமாக எழுதியுள்ளார் டாக்டர் எஸ். ஜீவராஜன். டாக்டர் எம். நடராஜனின் […]

Read more

வீடுதோறும் வெற்றி

வீடுதோறும் வெற்றி, டாக்டர் ந. சேதுராமன், கற்பகம் புத்தகாலயம், சென்னை, விலை 375ரூ. ஒரு கிராமத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்து டாக்டராக, தொழில் அதிபராக, அரசியல் கட்சித் தலைவராக வாழ்க்கையில் வெற்றி பெற்ற கதையை டாக்டர் ந.சேதுராமன் இந்த நூலில் சுவைபடச் சொல்கிறார். மருத்துவத் தொழிலில் ஈடுபட்டபோதிலும் நாணயமாக இருந்து நாணயம் சம்பாதித்ததைக் கூறுகிறார். தன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் எதையும் மறைக்காமல் உள்ளதை உள்ளபடியே உரைக்கிறார். இந்த நூலைப் படித்துப் பார்த்தால் ஒரு சாதாரண மனிதர் படைத்த சாதனையைத் தெரிந்து கொள்ளலாம். நாமும் […]

Read more

வீர வ.உ.சி.யும் ஆஷ் கொலையும்

வீர வ.உ.சி.யும் ஆஷ் கொலையும், சுஹைனா பதிப்பகம், பாளையங்கோட்டை, விலை 200ரூ. சுதந்திரப் போராட்டத்தின்போது, மணியாச்சி ஜங்ஷனில் கலெக்டர் ஆஷ் துரையை வீரவாஞ்சி சுட்டுக்கொன்ற சம்பவம், வரலாற்றில் இடம் பெற்றதாகும். ஆஷ் துரை செய்த அட்டூழியங்கள், அவரை கொலை செய்ய வாஞ்சி வகுத்த திட்டங்கள் முதலியவற்றை, ஆசிரியர் செ. திவான் சிரமப்பட்டு சேகரித்துள்ளார். ஆஷ் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்ச்சியை, தன் எழுத்து வன்மையால் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறார். ஆஷ் துரையை சுட்டுக்கொன்றபின், வாஞ்சி தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொள்கிறார். எனினும் கொலைக்கு […]

Read more

இனி ஒரு வலியில்லா பயணம்

இனி ஒரு வலியில்லா பயணம், விஜயஸ்ரீ மகாதேவன், சூர்யா கம்யூனிகேஷன், சென்னை, பக். 70, விலை 50ரூ. ஆரோக்கியமுள்ள எவரும் முற்றிய நிலையிலுள்ள புற்று நோயாளி ஒருவருடன் ஒருநாள் துணைக்கு இருந்தாலே போதும் – அவருக்கு வாழ்க்கையே வெறுத்துவிடும். அந்தளவுக்கு உடலாலும், மனதாலும், அந்நோயாளி படும் வேதனை, கடின மனம் கெண்டவர்களையும்கூடக் கலங்கச் செய்துவிடும். இது தொற்றுநோய் வகையைச் சார்ந்தது அல்ல. என்றாலும், சொந்தக் குடும்பத்தினரேகூட இவர்களின் சீழ் வடியும் கட்டிகளைக் கண்டு அருவருப்பு அடைந்து அருகில் வர மாட்டார்கள். இத்தகைய புற்றுநோயாளிகளுக்கு அடைக்கலம் […]

Read more

தேவை

தேவை, மரபு மாறா மனிதர்கள், மருதம் கோகி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, விலை 160ரூ. மீத்தேன் எதிர்ப்பின் மண்ணிலிருந்து காவிரி டெல்டாவை மிகப் பெரும் அச்சம் சூழ்ந்திருக்கிறது. முப்போகம் நெல் விளைந்த தஞ்சை பூமியின் அடையாளம் கொஞ்சகொஞ்சமாய் மாறிவருகிறது. பெட்ரோலியம் உள்ளிட்ட இயற்கை வளங்கள், அங்கு வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களுக்குக் கேடாய் மாறியிருக்கின்றன. பெட்ரோலிய எண்ணெய் தோண்டியெடுப்பதற்காக அந்த மண்ணில் ஒ.என்.ஜி.சி. ஆரம்பத்தில் காலடி எடுத்து வைத்தது. இப்போது மீத்தேன் வாயு, ஷேல் காஸ் என அங்கு பூமியை பிளந்தெடுத்து […]

Read more

தொல்லியல் ஆய்வுகள்

தொல்லியல் ஆய்வுகள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, விலை 120ரூ. ஒரு நாட்டுக் கலாசார பண்பாட்டு வரலாற்றை கணிப்பதற்குத் தொல்லியல் ஆய்வுகள் பயனுள்ளவையாக அமைந்துள்ளன. இதுகுறித்து குறிப்பாக தமிழகத்தில் பூம்புகார், காஞ்சி முதலான தொன்மைச் சிறப்புமிக்க நகரங்களில் கல்வெட்டு, நாணயம் பற்றியவை குறித்து செய்த அகழ்வராய்ச்சிகளைப் பற்றி எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நூல். பூம்புகாரில் செய்த அகழ்வாய்வுகள், அந்நகரம் முழுமையும் அழிந்துவிட்டது என்ற எண்ணத்தைப்போக்கி, பல பகுதிகள் புதையுண்டுக் கிடக்கின்றன என்னும் உண்மையைக் காட்டுகின்றன. தமிழகத்தில் கிடைத்துள்ள பிராமி கல்வெட்டுகள், தொண்டை மண்டலத்தில் […]

Read more

எளிமையின் சிகரம் எங்கள் நல்லகண்ணு

எளிமையின் சிகரம் எங்கள் நல்லகண்ணு, ஜீவா பதிப்பகம், சென்னை, விலை 180ரூ. இரா. நல்லகண்ணு விடுதலை போராட்ட வீரர். நெல்லை சதி வழக்கில் 8 ஆண்டுகளுக்குமேல் சிறையில் இருந்தவர். விவசாயிகள் சங்கத்தின் நெல்லை மாவட்டச் செயலாளராகவும், விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளராகவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளராகவும் செயல்பட்டவர். இப்போதும் பல உயர் பொறுப்பு வகித்து செயல்படுபவர். 90 வயதாகும் இரா. நல்லகண்ணுவைப் பற்றி எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், சான்றோர்கள் பலரும் தெரிவித்த கருத்துக்களை அருமையாக தொகுத்தளித்திருக்கிறார் நூலாசிரியர் […]

Read more

சித்தர்களின் ஜீவ சமாதிகள்

சித்தர்களின் ஜீவ சமாதிகள், து.செல்வகுமார், சங்கர் பதிப்பகம், சென்னை, விலை 300ரூ. தமிழகத்தில் வாழ்ந்து பல அற்புதங்களை நிகழ்த்திய 50க்கும் மேற்பட்ட சித்தர்களின் வாழ்க்கைக் குறிப்புகள், அவர்கள் நிகழ்த்திய அற்புதங்கள் ஆகியவை படிக்கப் படிக்க வியப்பூட்டும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளன. யோகி ராம் சுரத்குமார், சேர்மன் சாமிகள், பூண்டி மகான், அரவிந்தர் போன்றவர்கள் செய்த அற்புதங்களுடன், சென்னையில் எந்த எந்த கோவிலில் எந்த சித்தர்களின் சமாதி உள்ளது என்ற விவரமும் கொடுக்கப்பட்டுள்ளது. சித்தர்கள் பற்றி தெரிந்துகொள்ள நல்ல வழிகாட்டியாக இந்த நூல் உள்ளது. நன்றி: தினத்தந்தி, […]

Read more
1 7 8 9 10 11