வ.உ.சி.யின் வாழ்க்கை ஒரு பார்வை

வ.உ.சி.யின் வாழ்க்கை ஒரு பார்வை, ப.செந்தில் நாயகம், பதிப்புத்துறை வெளியீடு, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், விலை 70ரூ. சுதந்திரப் போராட்ட வீரர், செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் வீரவரலாற்றைக் கூறும் நூல். வ.உ.சி.யின் நாட்டுப் பற்று, மொழிப் பற்று, ஆன்மிக வாழ்க்கை ஆகியவற்றை திரளான சான்றுகளுடன் முனைவர் ப.செந்தில் நாயகம் திரட்டித் தந்திருக்கிறார். வ.உ.சி.யின் விடுதலை வாழ்க்கை, தொழிற்சங்க வாழ்க்கை, சிறை வாழ்க்கை, விடுதலைக்குப் பிறகு அவரது சைவத் தொடர்புகள், சிறையிலும் வெளியிலுமான அவரது இலக்கிய பங்களிப்பு, இறுதி நாட்களில் அவர் வறுமையில் வாடியபோதிலும் தமிழ் […]

Read more

எம்.எஸ்.சுவாமிநாதன் வளங்குன்றா வேளாண்மை இயக்கத்தின் தலைமகன்

எம்.எஸ்.சுவாமிநாதன் வளங்குன்றா வேளாண்மை இயக்கத்தின் தலைமகன், முனைவர் என். பரசுராமன், மதிநிலையம், விலை 200ரூ. இந்தியாவில் இன்றைய இளைஞர்களின் பார்வை வேளாண்மை பக்கம் திரும்பி இருக்கிறது என்றால் அதற்கு முழு முதல் காரணம் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன்தான். உலகில் தலைசிறந்த வேளாண் விஞ்ஞானியான எம்.எஸ். சுவாமிநாதன் தன்னை தேடி வந்த ஐ.பி.எஸ். பணியை வேண்டாம் என்று நிராகரித்துவிட்டு, விவசாய வளர்ச்சியே தன் வாழ்க்கையின் குறிக்கோள் என்ற வகையில் அவர் விடும் ஒவ்வொரு மூச்சிலும் விவசாயம் விவசாயம் என்றே வாழ்ந்துகொண்டு இருக்கிறார். அவரது வாழ்க்கை […]

Read more

நம்ப முடியாத உண்மைகள்

நம்ப முடியாத உண்மைகள், எஸ்.பி. செந்தில், தந்தி பதிப்பகம், பக். 288, விலை 150ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/9788193129524.html 2003-ம் ஆண்டு மே மாதம் தினத்தந்தியில் தினம் ஒரு தகவல் என்ற தலைப்பில் புதிய பகுதி தொடங்கப்பட்டது. இதில் நாம் அறிந்திராத அபூர்வ செய்திகள் இடம் பெற்றன. இந்த செய்திகள் இளைஞர் முதல் முதியோர் வரை அனைத்துத் தரப்பு வாசகர்களையும் கவர்ந்தது. வாசகர்கள் அளித்த வவேற்பு காரணமாக 12 ஆண்டுகளைக் கடந்து இப்போதும் தினம் ஒரு தகவல் வெளியாகிவருகிறது. […]

Read more

இளைஞர்களின் வழிகாட்டி அப்துல்கலாம்

இளைஞர்களின் வழிகாட்டி அப்துல்கலாம், நெல்லை கவிநேசன், குமரன் பதிப்பகம், விலை 50ரூ. தலைச்சிறந்த விஞ்ஞானி, எளிமையும் புகழும் மிக்க குடியரசுத் தலைவர், இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரம், தமிழில் அறிவியல் பயின்று உலக சாதனை படைத்தவர், சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு எல்லோராலும் விரும்பப்படும் தலைவர், உயர்ந்த பண்பாளர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை, வாழ்க்கைப் பாடங்களை, அவரது உயர்ந்த சிந்தனைகளை, அவர் பிறந்த ராமேசுவரம் மண்ணில் தொடங்கி, அக்னிச் சிறகுகளாய் விண்ணில் சாதித்தது வரையான வரலாற்றை எளியமுறையில் தந்துள்ளார் ஆசிரியர். நன்றி: குமுதம், […]

Read more

தேர்விலும் வெல்வோம்

தேர்விலும் வெல்வோம், கவி முருகபாரதி, மணிவாசகர் பதிப்பகம், சென்னை, பக். 64, விலை 30ரூ. மாணவர்கள் வெற்றி என்ற இலக்குநோக்கி பயணம் செய்வது எப்படி என்று எளிய நடையில் பல உதாரணங்களுடன் சொல்லித்தரும் நூல். தேர்வில் நூற்றுக்கு நூறு எடுப்பதன் அவசியத்தைக் கூறி, நூற்றுக்கு நூறு எடுப்பதற்கான பத்து வழிகளையும் தருவது சிறப்பு. மாணவர்கள் தேர்வில் மட்டுமல்ல வாழ்விலும் வெல்வது எப்படி என்பதை பளிச்சென விளக்கி, மாணவர் சமூகத்தை வல்லமைப்படுத்த முனைந்துள்ளார் ஆசிரியர் கவி. முருகபாரதி. மாணவர்கள் மட்டுமல்ல ஆசிரியர்களும் இந்நூலைப் படித்தால் அவர்கள் […]

Read more

காமராஜ் புதிரா புதையலா

காமராஜ் புதிரா புதையலா, காமராஜ் விழிப்புணர்வு மையம், விலை 70ரூ. காமராஜரின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகளை வைத்து வரலாறு எழுதுவதென்பது, வரலாற்றை வாசகர் தெரிந்துகொள்வதற்கு மட்டுமல்ல, அந்த வரலாற்றிலிருந்து வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டியவற்றை கற்றுக் கொள்வதற்கும்தான். அந்த எதிர்பார்ப்பில்தான் நூலாசிரியர் எஸ்.பி. கணேசன் இந்நூலை தொகுத்து அளித்திருக்கிறார். வரலாற்று பதிப்பு என்பதால் கூட்டி, குறைத்து என்றில்லாமல் மிக கவனத்துடன் எழுதப்பட்டிருக்கிறது. செய்தி சேகரிப்பை வகைப்படுத்திய விதம் நேர்த்தியாக இருக்கிறது. வாசகரின் செய்தித் தேடலுக்குத் தகுந்தாற்போல் தலைப்புகள் அமைந்திருக்கின்றன. இந்த நூலை வாசித்தால், நம் மனதில் […]

Read more

மாவீரன் மருதநாயகம் (யூசுப்கான்)

மாவீரன் மருதநாயகம் (யூசுப்கான்), கொங்கு நூல் பதிப்பகம், சென்னை, விலை 175ரூ. தமிழ்நாட்டில் பிறந்து, பிரெஞ்சு படையில் பணி புரிந்து பின்னர் ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனியில் சேர்ந்து போர்த் தளபதியாக உயர்ந்தவன் மருதநாயகம். முஸ்லிம் மதத்தில் சேர்ந்ததால் யூசுப்கான் என்றும் கான் சாகிப் என்றும் அழைக்கப்படுகிறான். தீரமும், வீரமும் மிக்க மருதநாயகத்தின் வரலாற்றை எழுத்தாளர் பாஸ்கரதாஸ் எழுதியுள்ளார். தொடக்கத்தில் ஆங்கிலேயருக்கு ஆதரவாகச் செயல்பட்டவன், மருதநாயகம். பிற்காலத்தில் அவர்களின் அடக்குமுறையை தாங்கிக் கொள்ள அவனது தன்மானம் இடம் தரவில்லை. எதிர்த்துப் போராடுகிறான். இறுதியில் சிலரால் காட்டிக்கொடுக்கப்பட்டு […]

Read more

நாம் தமிழர்கள் தலை நிமிர்வோம்

நாம் தமிழர்கள் தலை நிமிர்வோம், மாதவ் பதிப்பகம், சென்னை, விலை 120ரூ. தமிழ் மொழியின் சிறப்பையும், தமிழ்நாட்டின் பெருமையையும் எடுத்துக்கூறும் புத்தகம் இது. நாம் தமிழர்கள் என்ற முதல் அத்தியாயத்திலேயே, தமிழ்நாடு பற்றிய பல அரிய தகவல்களைத் தொகுத்துத் தந்துள்ளார் ஆசிரியர் ப. இலட்சுமணன். மேல்நாட்டினர் காட்டுவாசிகளாகத் திரிந்த காலத்தில், தமிழன் நாகரிகத்துடன் வாழ்ந்தான் என்பதை மேல்நாட்டு ஆராய்ச்சியாளர்களே ஒப்புக்கொண்டுள்ளனர். சுமார் 50 ஆயிரம் ஆண்டுகளாகப் பேச்சு வழக்கத்தில் இருந்து வரும் மொழி தமிழ். இங்கிலாந்து நாட்டு மகாராணி விக்டோரியா, தினமும் காலையில் எழுந்ததும் […]

Read more

அறச்சீற்றம்

அறச்சீற்றம், விழிகள் பதிப்பகம், சென்னை, விலை 75ரூ. தலைமைச் செயலகத்தில் உயர் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஞா. சிவகாமி, அவருடைய சிறுகதைத் தொகுப்பு இது. சில எழுத்தாளர்கள், சிறுகதைகளை குறுநாவல் அளவுக்கு இழுப்பார்கள். இவர் நான்கு அல்லது ஐந்து பக்கங்களுக்கு மேல் போவதில்லை. கதைகள் சுருக்கமாக இருந்தாலும் சுருக் என்று நெஞ்சில் குத்துகின்றன. அவ்வளவு வர்மையான எழுத்ததுக்கள். நன்றி: தினத்தந்தி, 2/9/2015.   —- நல்லறம், குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், சென்னை, விலை 30ரூ. சமயோசித பத்ய மாலிகா என்ற பழமையான வடமொழி […]

Read more

நேரு முதல் மோடி வரை

நேரு முதல் மோடி வரை, சூரியன் பதிப்பகம், சென்னை, விலை 100ரூ. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் நேரு. 17 ஆண்டுகள் பதவி வகித்தார். பின்னர் அவர் மகள் இந்திரா காந்தி, பேரன் ராஜீவ் காந்தி ஆகியோரும் பிரதமராகப் பதவி வகித்தனர். பெரும்பாலானவர்களுக்கு இது தெரியும் என்றாலும், நேரு முதல் மோடி வரை மொத்தம் 15பேர் பிரதமர்களாக இருந்துள்ளனர் என்பது பலருக்குத் தெரியாது. அந்த 15 பேர்களும் எப்போது, எந்த சூழ்ந்லையில் ஆட்சிக்கு வந்தார்கள் என்பதையும், அவர்களுடைய சாதனைகள் பற்றியும் சுவைபடக் கூறுகிறார், பிரபல […]

Read more
1 6 7 8 9 10 11