ஒரு விற்பனையாளரின் வெற்றி ரகசியங்கள்

ஒரு விற்பனையாளரின் வெற்றி ரகசியங்கள், சி.எஸ். தேவநாதன், சுரா பதிப்பகம், விலை 60ரூ. விற்பனையாளர், தங்கள் செயல்திறனை மேம்படுத்திக் கொள்ளவும், சிறந்த குணங்களை முழுமையாய் வெளிப்படுத்தவும், அடுத்த வாய்ப்பை இன்னும் மகத்தானதாக்கிக் கொள்ளவும், வாடிக்கையாளர்களோடு நம்பிக்கையூட்டும் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளவும் விரும்புபவர்களுக்கு உதவும் வகையில் இந்நூலை எழுதியிருக்கிறார் சி.எஸ். தேவநாதன். நன்றி: தினத்தந்தி, 10/8/2016.   —- சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம், ஆர். பாலகிருஷ்ணன், பாதி புத்தகாலயம், விலை 150ரூ. சிந்து வெளியிலும், ஆப்கானிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளிலும் இன்றுவரை திராவிட இடப்பெயர்கள் […]

Read more

நம் நாட்டின் பாதுகாப்பிற்கும் வளர்ச்சிக்கும் உதவிடுவோம்

நம் நாட்டின் பாதுகாப்பிற்கும் வளர்ச்சிக்கும் உதவிடுவோம், நாலுமாவடி கே.பி. கணேசன், மணிமேகலைப் பிரசுரம், விலை 125ரூ. இந்தியாவின் ராணுவ பலம் தேசபக்தியைத் தூண்டும் விதத்தில், “நம் நாட்டின் பாதுகாப்பிற்கும், வளர்ச்சிக்கும் உதவிடுவோம்” என்ற தலைப்பில் நாலுமாவடி கே.பி.கணேசன் நூல் ஒன்றை எழுதியுள்ளார். இது புதுமையான புத்தகம். ஓரங்க நாடக பாணியில் நூல் தொடங்குகிறது. மாணவி ஜெயா (ராணுவ அதிகாரியின் மகள்) பாரதி டீச்சர் ஆகியோர் இடையே நடைபெறும் உரையாடல் நாட்டுப்பற்றை தூண்டும் விதத்தில் அமைந்துள்ளது. நூலின் இடையே இந்தியாவின் ராணுவ பலம், அண்டை நாடுகளின் […]

Read more

உச்சாடனம்

உச்சாடனம், கா.சு. வேலாயுதன், கதை வட்டம் வெளியீடு, விலை 150ரூ. மந்திரங்களை உச்சரிக்கும் கலையின் மறுபெயரே ‘உச்சாடனம்’. வித்தியாசமான தலைப்பை கொண்ட இந்த நூலை பத்திரிகையாளர் கா.சு. வேலாயுதன் எழுதி உள்ளார். பத்திரிகை, படைப்பிலக்கியம், அரசியல், குடும்பம் என அனைத்திலும் சாதனை பல புரிந்து வயதிலும் நூற்றாண்டை நோக்கி நடைபோடுபவர் முன்னாள் முதல் அமைச்சர் மு. கருணாநிதி. இவருடைய நிருபர் சந்திப்பு கூட்டம் ஒன்றில் நூலாசிரியர் கேட்ட கேள்விக்கு, கருணாநிதி அளித்த பதில் சுவாரஸ்யமாக இந்த நூலில் தொகுக்கப்பட்டு உள்ளது. நன்றி: தினத்தந்தி, 10/8/2016.

Read more

மனதில் பதிந்தவர்கள்

மனதில் பதிந்தவர்கள், கவிஞர் ஏர்வாடி ராதாகிருஷ்ணன், வானதி பதிப்பகம், விலை 150ரூ. தன்னைக் கவர்ந்த பிரமுகர்களின் வாழ்க்கைச் சுருக்கத்தை ‘மனதில் பதிந்தவர்கள்’ என்ற தலைப்பில் கவிஞர் ஏர்வாடி ராதாகிருஷ்ணன் கட்டுரைகளைக எழுதி வருகிறார். இந்த வரிசையில் எட்டாவது புத்தகம் இப்போது வெளிவந்துள்ளது. வெ. இறையன்பு, நீதியரசர் மு. கற்பக விநாயகம், ‘கிருஷ்ணா சுவீட்ஸ்’ முரளி, ரவிதமிழ்வாணன், கவிஞர் முடியரசன் உள்பட 19 பேர்களின் வாழ்க்கைக் குறிப்புகள் இதில் அடங்கியுள்ளன. வாழ்க்கைக் குறிப்பு என்றால் வெறும் புள்ளி விவரங்கள் அல்ல. தன்னை கவர்ந்தவர்களை எழுத்தோவியங்களாகத் தீட்டி […]

Read more

ஏற்றுமதி செய்ய வழிகாட்டி

ஏற்றுமதி செய்ய வழிகாட்டி, டி. வெங்கட்ராவ் பாலு, நர்மதா பதிப்பகம், விலை 220ரூ. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்றுமதி மூலக் கிடைக்கும் வருமானமே மிக முக்கியமானதாகும். ஏற்றுமதி செய்வதை அரசாங்கம் எளிமைப்படுத்தி உள்ளது. ஏற்றுமதி செய்வதற்கான லைசென்சு பெறுவதற்கான கட்டணத்தை வெறும் 250ரூபாயாகக் குறைத்துள்ளது. ஏற்றுமதி செய்வதன் மூலம் லட்சக்கணக்கில் வருமானம் ஈட்ட முடியும். ஏற்றுமதி செய்ய விரும்புவோர் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்களையும், விதிமுறைகளையும் இந்த நூலில் தெளிவாகவும், விரிவாகவும் எழுதியுள்ளார் டி. வெங்கட்ராவ் பாலு. எந்த நாட்டுக்கு எந்தெந்த பொருட்களை அனுப்பலாம் […]

Read more

காக்கியின் டைரி

காக்கியின் டைரி, சிங்கம்பட்டி பெ.மாடசாமி, நேசம் பதிப்பகம், விலை 200ரூ. ‘தேடுதலாக’ தேடிய தகவல்களின் தொகுப்பு நூல். அதில் விசித்திர வழக்கு, விநோத மனிதர், அரிய நிகழ்வு, அபூர்வ சம்பவம், வேடிக்கை,,, விநோதமென… – ‘இப்படியா? இருக்குமா? நடக்குமா? நடந்ததா?’ என்கிற கேள்விக்குறிகள் பல ஆச்சரியக்குறியாய் எழ, சிக்கின சிக்கல் வழக்குகள் சில. அவைகளை அருமையாக பரபரப்பூட்டும் செய்தியாக பதிவு செய்திருக்கிறார் உதவி ஆணையராக ஓய்வு பெற்ற சிங்கம்பட்டி பெ. மாடசாமி. அன்றாடச் செய்திகளில், இப்படியெல்லாம் ஏமாற்றுவார்களா? இப்படியும் ஏமாறுவார்களா? மற்றும் நினைத்துப் பார்க்க […]

Read more

வெற்றித்திருமகன்

வெற்றித்திருமகன், ந. மணிவாசகம், ஸ்ரீசெண்பகா பதிப்பகம், விலை 140ரூ. வெறும் பழையாறையுடன் இருந்த சோழ நாட்டை, தமிழகமெங்கும் பரந்து விரியச் செய்தவன் விஜயாலயன். அதற்காக அவன் அடைந்த இன்னல்களும், எடுத்துக்கொண்ட முயற்சிகளும் தனிச் சரித்திரமாகும். முழுக்க முழுக்க சரித்திரத்தை ஆதாரமாகக்கொண்டு, சில கற்பனைப் பாத்திரங்களோடு, கற்பனைச் சம்பவங்களையும் கலந்து விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் படைத்துள்ளார் நூலாசிரியர் ந.மணிவாசகம். நன்றி: தினத்தந்தி, 10/8/2016.   —- விநாயகர், திருமுருக கிருபானந்த வாரியார், குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், விலை 24ரூ. திருமுருக கிருபானந்த வாரியார் எழுதிய விநாயகர் வரலாறு […]

Read more

எம்.ஜி.ஆர். என்றொரு மாயக் கலைஞன்

எம்.ஜி.ஆர். என்றொரு மாயக் கலைஞன், ஆர்.சி. சம்பத், கவிதா பப்ளிகேஷன்ஸ், விலை 120ரூ. எம்.ஜி.ஆர். வரலாறு புத்தி கூர்மை, சாதுர்யம், சாதக சூழ்நிலையை உருவாக்கிக் கொள்ளுதல், தகுந்த சூழ்நிலைக்காகக் காத்திருத்தல், மீன் கொத்திய வேகத்தில் தூண்டிலை ‘சரக்கென்று’ வெளியே வீசி எடுக்கும் தூண்காரனைப்போல சாதகச் சூழ்நிலை அமைந்த வேகத்தில் அதைப் பயன்படுத்தி நினைத்ததை ஜெயித்தல், எதிரிகளை வசப்படுத்துதல், வளைந்தும், நெளிந்தும், நிமிர்ந்தும் தனது பயணப் பாதைக்கு பங்கம் வராதபடி தொடர்ந்து முன்னேறுதல் – எல்லா வாழ்வியல் வித்தைகளும் அறிந்தவர் எம்.ஜி.ஆர். அவரது வாழ்க்கையில் நடந்த […]

Read more

பெரியார் வாழ்வின் வெளிச்சங்கள்

பெரியார் வாழ்வின் வெளிச்சங்கள், கி. வீரமணி, திராவிடக் கழக வெளியீடு, விலை 150ரூ. 20-ம் நூற்றாண்டின் பகுத்தறிவுப் பகலவனாகத் திகழ்ந்தவர் தந்தை பெரியார். அவருடைய வாழ்க்கை, தமிழ்நாட்டின் வரலாற்றுடன் பின்னிப்பிணைந்ததாகும். அவருடைய வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகளை சுவைபட எழுதியுள்ளார், திராவிட கழகத் தலைவர் கி. வீரமணி. பெரியாரின் தொலைநோக்கு பார்வை, அஞ்சாமை, நேர்மை, சிக்கனம், சமத்துவம் முதலிய பண்புகளை எடுத்துக்காட்டும் நிகழ்ச்சிகள் இடம் பெற்றுள்ளன. ஒரு சமயம் அவர் வாயில் புற்றுநோய் ஏற்பட்டு, அதில் இருந்து அவர் மீண்ட தகவலும் புத்தகத்தில் இடம் […]

Read more

ஆதி மனிதன் உணவுமுறை – பேலியோ டயட்

ஆதி மனிதன் உணவுமுறை – பேலியோ டயட், நியாண்டர் செல்வன், கிழக்கு பதிப்பகம், பக்.176, விலை ரூ150. இன்றைய நமது உணவுமுறை உடல் நலனுக்கு எதிராக உள்ளது. எனவே இன்றைய உணவுமுறையை மாற்றி ஆதி மனிதன் உண்ட உணவுகளை உட்கொண்டால் (அதுதான் பேலியோ டயட்) இன்று நாம் சந்திக்கும் பல உடல்நலப் பிரச்னைகள் பலவற்றைத் தீர்த்துவிடலாம் என்று கூறும் நூல். நூலில் கூறப்படும் பல கருத்துகள் மிகவும் வித்தியாசமாகவும், பலருக்கு அதிர்ச்சி ஏற்படுத்துபவையாகவும் இருக்கின்றன. இட்லி, சப்பாத்தி உடலுக்கு நல்லது என்பதற்கு மாறாக, “இட்லி, […]

Read more
1 5 6 7 8 9