நைரா

நைரா, சுப்ரபாரதிமணியன், நியூ செஞ்சரி புக் ஹவுஸ், பக். 190, விலை ரூ.150. வர்த்தகத்துக்காகவும், வயிற்றுப் பிழைப்புக்காகவும் தமிழ் மண்ணுக்குப் புலம் பெயர்ந்து வந்த நைஜீரிய மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் நாவல் நைரா. உலகமயமாக்கலின் தாக்கத்திலும், அந்நிய தேச கலாசார பன்முகத்திலும் சிக்கித் தவிக்கும் நைஜீரிய இளைஞன்தான் கதையின் நாயகன். கண்டங்கள் தாண்டி வந்த மக்களும் கடை விரித்து காசு பார்க்கும் தொழில் நகரமான திருப்பூரின் பின்னணியில் விரிகிறது இந்நாவல். பண்பாட்டிலும், உருவ அமைப்பிலும், மொழியிலும் வேறுபட்ட ஒரு சமூக மக்கள், மாற்று தேசத்தில் […]

Read more

சுதந்திர சரித்திரம்

சுதந்திர சரித்திரம், எம்.எஸ்.சுப்பிரமணிய ஐயர், சந்தியா பதிப்பகம், பக். 344, விலை ரூ.270. 1953-இல் எழுதப்பட்டுள்ள நூலின் மறுபதிப்பு இந்நூல். வழக்கமாக, சுதந்திரப் போராட்டம் பற்றிய நூல்கள் எல்லாம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்துதான் தொடங்கும். இந்த நூலில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் கிரேக்க அரசரான அலெக்சாண்டர் படையெடுத்து வந்தது முதல் மொகலாயர்கள், ஆங்கிலேயர்கள், பிரெஞ்சு நாட்டவர் போன்றவர்கள் அடுத்தடுத்து தேசத்தில் புகுந்து, நாட்டை அடிமைப்படுத்திய விதம் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. முகலாயர்கள் காலத்தில் முகமதியர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையே தோன்றிய முரண்பாடுகளைச் சரி செய்யும் விதமாக […]

Read more

எம்.ஜி.ஆர். என்றொரு மாயக் கலைஞன்

எம்.ஜி.ஆர். என்றொரு மாயக் கலைஞன், ஆர்.சி.சம்பத், கவிதா பதிப்பகம், பக்.160, விலை ரூ.120. எம்.ஜி.ஆர். பற்றிய நூல்கள் எத்தனையோ வந்திருந்தாலும், மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் எத்தனையோ சம்பவங்கள் அவர் வாழ்க்கையில் இடம்பெற்றிருக்கும் என்பதை இந்த நூல் வெளிக்கொண்டு வந்துள்ளது. எம்.ஜி.ஆர். படங்களில் நடிக்கும்போது அழுது நடிக்க மாட்டார். முகத்தை மூடிக்கொள்வார். சிலபேர் இதைப்பார்த்து, அவருக்கு உணர்ச்சிகரமாக நடிக்கத் தெரியாது என்பார்கள். உண்மை அதுவல்ல. அவர் தன் ரசிகர்களிடையே ஓர் அழகனாகவும், வீரனாகவும் வெளிப்பட விரும்பினார். வீரன் அழுதால் மக்களுக்கு அவன் வலிமையில் நம்பிக்கை […]

Read more

இந்த நதி நனைவதற்கல்ல

இந்த நதி நனைவதற்கல்ல, தமயந்தி, பிரக்ஞை வெளியீடு, பக்.164, விலை ரூ. 130. ஒரு பெண், தன் வாழ்க்கையில் தொடர்புடைய பெண்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை, சமூகப் பார்வையோடு ஆராய்வதே “இந்த நதி நனைவதற்கல்ல‘’. சட்டங்களாலும், நீதிமன்றங்களாலும் தடுத்து நிறுத்த முடியாத பெண்களின் மீதான வன்முறை குறித்து பேசும் நூலாசிரியர், தனது ஒவ்வொரு கட்டுரையிலும் தான் படித்த, சந்தித்த பெண்களின் பிரச்னைகளைத் தன் உக்கிரமான சொல்லாடலால் உணர வைக்கிறார். வாசகரின் மனதில் அழுத்தமாகப் பதிய வைக்கிறார். மறக்கப்பட்ட வழக்குகள், சமூக அதிகாரக் கட்டமைப்புகள், குடும்பம் முதல் […]

Read more

கெளதம புத்தர்

கெளதம புத்தர், மயிலை சீனி.வேங்கடசாமி, அலைகள் பதிப்பகம், பக்.144, விலைரூ.110. அகிம்சையின் அடையாளமாக அறியப்படும் கெளதம புத்தரின் பிறப்பு முதல் பரி நிர்வாணம் வரை அவர் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகள் கால வரிசைப்படி இந்நூலில் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. கெளதம புத்தரின் வரலாறாயினும் அவருக்கு முந்தைய தலைமுறையினரான சுத்தோதனர், சிம்மஹணு, ஜயசேனன் ஆகிய மன்னர்களைப் பற்றிய குறிப்புகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. குழந்தை சித்தார்த்தனைப் பார்த்த அரண்மனை நிமித்திகர்கள், முதுமை, நோய், மரணம், துறவு இவற்றை அறிந்தால் இவன் துறவியாவான் என்று கூற, சித்தார்த்தனின் […]

Read more

சிவனும் சித்தர்களும்

சிவனும் சித்தர்களும், சத்யா சுரேஷ், கண்ணதாசன் பதிப்பகம், பக்.176 விலை ரூ.100. சித்தர்கள், கோயில்களில் உள்ள சிற்பங்களிலோ, சிலைகளிலோ சிவனைத் தேடாமல் தங்கள் சித்தத்தின் உள்ளேயே சிவனைக் கண்டு, தெளிந்து வழிபட்டதனால்தான் சித்தர்கள் எனப்பட்டனர். “சித்தன் போக்கு சிவன் போக்கு’’ என்கிற பண்டைத் தமிழரின் சொலவடை இதை உணர்த்தும். சித்தர்களிலேயே முதல் சித்தர் சிவபெருமான்தான் என்பதைத் திருவிளையாடல் புராணம் தெரிவிக்கிறது. பதினெண் சித்தர்களும் மெய்ஞ்ஞானியாகவும் விஞ்ஞானியாகவும் திகழ்ந்திருக்கிறார்கள். இவர்கள் சமய உலகிற்கும், மருத்துவ உலகிற்கும், அறிவியல் உலகிற்கும் வழங்கிய கொடைகள் ஏராளம். தற்போது சித்தர்கள் […]

Read more

நான் இராமானுசன்

நான் இராமானுசன், ஆமருவி தேவநாதன், விஜயபாரதம் பதிப்பகம், பக்.136. விலை ரூ.60. விசிஷ்டாத்வைத தத்துவத்தை புதினப் பாணியில் சொல்ல முயன்றிருக்கும் புதிய முயற்சி இது. அதிலும் தத்துவம் தந்த ஆசார்யர் ராமானுஜரே தற்காலத்துக்கு ஏற்ப அதனைச் சொல்லும், “நான் கிருஷ்ணதேவராயன் பேசுகிறேன்’’ பாணியிலான கதைச் சொல்லல் கூடுதல் சுவாரஸ்யம் தருகிறது. பிராமணர் என்பது பிறப்பின் அடிப்படையில் வருவதல்ல, அது அடையக் கூடிய நிலை என்பதை வஜ்ர சூசிகா (வைர முள்) உபநிஷதத்தின் துணையுடன் விளக்கியிருப்பது அருமை. பிராமணரல்லாத தமது குரு நம்மாழ்வாரையே தெய்வமாகக் கருதி […]

Read more

மின்னல் விளக்கு

மின்னல் விளக்கு (கட்டுரைகளின் தொகுப்பு), சொ. அருணன், கபிலன் பதிப்பகம், பக்.144,  விலை ரூ.100. மகாத்மா காந்தி, மகாகவி பாரதி, திருவள்ளுவர், ஆன்மிக – சமயப் பெரியோர்கள் என வெவ்வேறு காலகட்டங்களில் வெளியான கட்டுரைகளிலிருந்து 14 கட்டுரைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து அளித்திருப்பதற்கு ஏதாவது காரணம் இருந்திருந்தால் நூலாசிரியர் பதிவு செய்திருக்கலாம். புத்துப்பட்டு ஐயனார், புதுச்சேரி ஆரோவில் பற்றிய கட்டுரைகளில் அந்த இடங்களுக்குச் செல்ல யாரையும் வழிகேட்காமலேயே செல்லும் அளவுக்கு வழிகாட்டியாக இந்நூல் அமைந்திருக்கிறது.÷ நூலில் தொகுக்கப்பட்டிருக்கும் சில வரலாற்றுப் பதிவுகள் பழைய தகவல்களாக இருந்தாலும், அவற்றை […]

Read more

நான் ப்ரம்மம்

நான் ப்ரம்மம்,  ஸ்ரீ நிசர்கதத்த மஹராஜ், தமிழில்: சி. அர்த்தநாரீஸ்வரன், கண்ணதாசன் பதிப்பகம், பக்.208, விலை ரூ.250. “நான்’ எனும் தேடலே கேள்வியாக மனதினுள் வளர்ந்து நிற்கும்போது அதற்கான தேடலும் பதிலும் அவசியமாகிறது. ஸ்ரீ நிசர்கதத்த மஹராஜ் தமது ஆன்மிக சொற்பொழிவுகளால் பலரின் மன இருளைப் போக்கி ஆன்மபலத்தைப் பெருக்கும் கருவியாக இருந்தவர். அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களுமே ஒரு நூலாக (முதல் பகுதி) வடிவெடுத்திருக்கிறது. “”கடவுள் ஏன் என்னை இவ்வாறு படைத்தார்?” என்பது கேள்வி. அதற்கு மஹராஜ் அவர்கள் […]

Read more

வைதீஸ்வரன் கதைகள்

வைதீஸ்வரன் கதைகள், எஸ்.வைதீஸ்வரன், கவிதா பப்ளிகேஷன், பக்.304, விலை ரூ. 225 தமிழில் புதுக்கவிதையின் மறுமலர்ச்சிக் காலத்தில் கவனிக்கத்தக்க கவிஞராக அறிமுகமானவர் எஸ். வைதீஸ்வரன். பிறகு சிறுகதைகளையும் எழுதத் தொடங்கினார். அவர் சிறந்த நவீன ஓவியரும்கூட. அந்த வகையில் இந்தத் தொகுப்பில் உள்ள கதைகளில் பலவும் ஒரு கவிஞனின், ஓர் ஓவியனின் மன ஓட்டத்தைப் பிரதிபலிப்பதாக உள்ளன. “பிம்பம்’ என்ற கதை ஒரு மூதாட்டியைப் பற்றியது. “கதையாக’ அது தொடங்கினாலும், முடியும்போது அதற்கு ஒரு கவித்துவம் வந்துவிடுகிறது. அந்தக் கவித்துவ அம்சம்தான் நம் நெஞ்சைத் […]

Read more
1 6 7 8 9