உணவே மருந்து

உணவே மருந்து, சீத்தலைச்சாத்தன், ஒப்பில்லான் பதிப்பகம், பக். 172, விலை 125ரூ. நோய் தீர்க்கும் உணவுகள் பற்றி நம் முன்னோர்கள் சொன்னதை ஓலைச்சுவடிகளில் இருந்து தேடி எடுத்து தொகுத்துத் தந்துள்ளார். கூடவே பழைய நூல்களில் உள்ள பல மருத்துவக் குணம் உள்ள உணவுப்பொருட்கள் பற்றியும் தெரிவித்துள்ளது சிறப்பு. நன்றி: குமுதம், 17/8/2016.   —- செல்வச் சுரங்கத்தின் திறவுகோல், நெப்போலியன் ஹில், தமிழில் மு. சிவலிங்கம், கண்ணதாசன் பதிப்பகம், பக். 256, விலை 160ரூ. இந்நூல் செல்வச் சுரங்கத்தின் அனைத்து கதவுகளையும் திறக்கும் திறவுகோலாக […]

Read more

பாரதிதாசன் காப்பியங்கள்

பாரதிதாசன் காப்பியங்கள், பேரா.சு. சண்முக சுந்தரம், காவ்யா, பக். 376, விலை 1300ரூ. புரட்சிக்கவி பாரதிதாசன் எழுதிய காப்பியங்களின் மொத்தத் தொகுப்பு இது. இதில் எதிர்பாராத முத்தம், பாண்டியன் பரிசு, குடும்ப விளக்கு, உள்ளிட்ட 9 பெருங்காப்பியங்கள் இடம் பெற்றுள்ளன. 1930ல் அவர் முதன் முதலாக எழுதிய ‘சஞ்சீவி பர்வதத்தின் சாரல், புரட்சிக்கவி’ உள்ளிட்ட ஆறு சிறுகாப்பியங்களும் அடங்கும். காப்பியங்கள் அனைத்தும் இருபதாம் நூற்றாண்டில் பாரதிதாசன் விரும்பிய சமுதாய மாற்றங்களைப் பாடுபொருளாகக் கொண்டவை. சமுதாய மாற்றத்திற்கு உறுதுணையாக நிற்பவை. நன்றி: குமுதம், 17/8/2016.

Read more

பார்த்தீனியம்

பார்த்தீனியம், தமிழ்நதி, நற்றிணை பதிப்பகம், விலை 450ரூ. தமிழீழத்தில் நடந்த இன அழித்தொழிப்பு பின்புலமாக உடன் நிற்க, ஈழ நினைவுகளை துல்லியமாகவும், நேர்த்தியுடனும் வாசகப் பரப்பில் முன் வைக்கிறது பார்த்தீனியம். வரலாறு போலவும், நடப்பு போலவும், நாம் எல்லோரும் அதில் சம்பந்தப்பட்டது மாதிரியும் ஏக வடிவங்களில் நாவல் விரிவது பேரழகு. தமிழ்நதியின் மொழி நடையில் அலங்காரங்கள் இல்லை. அவரின் கவிதைகளில் கூடி வருகிற காவியத்தன்மை கூட இதில் இல்லாதது கதை சொல்லலை எளிதாக்குகிறது. இயல்பில் நாம் சந்தித்தவர்களே பாத்திரங்களாக வருகிறார்கள். கற்பனைப் பாத்திரங்களின் நுழைவெல்லாம் […]

Read more

பிம்பச் சிறை

பிம்பச் சிறை, எம்.எஸ். பாண்டியன், பிரக்ஞை பதிப்பகம், பக். 248, விலை 225ரூ. திராவிட இயக்க ஆய்வாளரான இந்நூலாசிரியர் 24 ஆண்டுகளுக்கு முன்னர் எம்.ஜி.ஆரைப் பற்றி ஆங்கிலத்தில் எழுதிய இந்நூல், தமிழில் இப்போது வெளிவந்துள்ளது. எம்.ஜி.ஆரின் இறுதி ஊர்வல நிகழ்விலிருந்து தொடங்குகிறது இந்நூல். எம்.ஜி.ஆர். மீது தமிழக மக்கள் வைத்திருந்த அபரிமிதமான பற்று (எம்.ஜி.ஆர். இறந்தபோது ஏராளமானோர் மொட்டையடித்துக் கொண்டது, 31 பேர் தற்கொலை செய்து கொண்டது), எம்.ஜி.ஆர். தனது படங்களுக்கு அடித்தட்டு மக்களிடமிருந்தே தலைப்புகளைப் பெற்றது (“தொழிலாளி’‘, “விவசாயி’‘, “படகோட்டி‘’), ஆரம்ப காலப் […]

Read more

இஸ்லாம் ஒரு பார்வை

இஸ்லாம் ஒரு பார்வை, டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது, கிழக்குப் பதிப்பகம், பக். 128, விலை 120ரூ. மனிதன் சீரிய ஒழுக்கத்துடனும், நெறிகளுடனும், பண்புகளுடனும், அமைதியாக வாழ வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் அன்று உருவானதுதான் மதங்கள். ஆனால், இன்று உலகில் நடக்கும் சில தீங்குகளுக்கு இந்த மதங்களும் ஒரு காரணம் என்ற விபரீதமான கருத்து சிலரால் பரப்பப்பட்டு வருகிறது. குறிப்பாக, இந்த விமர்சனத்திற்கு இஸ்லாம் தற்போது பலிகடாவாகி உள்ளது. பன்முகத் தன்மையும், மதச்சார்பற்ற கொள்கையும் கொண்டு உலகின் சிறப்புக்குரிய நாடாக விளங்கும் இந்தியாவில், […]

Read more

ஷேக்ஸ்பியர் முதல் ஜெயகாந்தன் வரை

ஷேக்ஸ்பியர் முதல் ஜெயகாந்தன் வரை, கா. செல்லப்பன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 100, விலை 70ரூ. ஷேக்ஸ்பியர், கார்ல்மார்க்ஸ், ஷெல்லி, வேர்ட்ஸ்வொர்த் போன்ற உலகளாவிய பெருமை மிக்க ஆளுமைகள் குறித்து இதுவரை அறியப்படாத தகவல்கள், காந்தி, தாகூர், நேரு போன்ற இந்திய பிரபலங்களின் சிறப்புகள், பாரதியார், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம், ஜெயகாந்தன், கண்ணதாசன் ஆகியோர் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்பு என மிகச் சிறந்த படைப்பாளிகள் குறித்து 22 அத்தியாயங்களில் கட்டுரை வடிவில் தொகுத்துள்ளார் நூலாசிரியர். நடுக்கோடையிரவுக் கனவு, வெனிஸ் […]

Read more

புதிய கல்விக் கொள்கை – மாணவர்களும் ஆசிரியர்களும் குற்றவாளிக் கூண்டிலா?

புதிய கல்விக் கொள்கை – மாணவர்களும் ஆசிரியர்களும் குற்றவாளிக் கூண்டிலா?, நா. மணி, பாரதி புத்தகாலயம், பக். 48, விலை 20ரூ. 1986 ஆம் ஆண்டிலேயே இன்றைய புதிய கல்விக் கொள்கைக்கான அடித்தளம் போடப்பட்டுவிட்டது. அதன் தொடர்ச்சியாக, தற்போது கல்வியை விற்பனைச் சரக்காக்க முயற்சிக்கப்படுகிறது என்று கூறுகிறது இந்நூல். “பொதுப்பள்ளி முறை தூர்ந்து கிடப்பதை எவ்வாறு சரி செய்வது? மிகப் பெரும் மக்கள் திறன் உள்ள இந்திய நாட்டில் வேலை வாய்ப்புகளை எத்தகைய கல்விமுறை உருவாக்கும்? வேலைவாய்ப்பு அற்ற இன்றையப் பொருளாதார வளர்ச்சி சிக்கல்களை […]

Read more

உரையாசிரியர்களின் செவ்வியல் நோக்கு

உரையாசிரியர்களின் செவ்வியல் நோக்கு, மு.முனீஸ்மூர்த்தி, இராசகுணா பதிப்பகம், பக். 136, விலை 100ரூ. தொல்காப்பியர், செய்யுள் உறுப்புகளுள் ஒன்றாக “நோக்கு‘’ என்பதைச் செய்யுளியலில் குறிப்பிடுகிறார். சில நூற்பாக்களில் இந்த “நோக்கை’‘க் காணமுடிகிறது (எ.கா. “நோக்கே பாவே அளவியல்’‘, “நோக்குதற் காரணம் நோக்கெனப் படுமே’‘). இந்த நோக்கு குறித்து பல ஐயங்களை எழுப்பி, அதற்கான விடையும் தரப்பட்டுள்ளது. இதற்கு முன் நோக்கு குறித்து ஆராய்ந்த அறிஞர்கள் பெருமக்களின் பட்டியல், இந்நோக்கு குறித்து நச்சினார்க்கினியர், பேராசிரியர், இளம்பூரணர், தமிழண்ணல், செ.வை.சண்முகம் போன்றோரின் புரிதல்கள் போன்றவையும் தரப்பட்டுள்ளன. கலித்தொகைக்குத் […]

Read more

மதராஸாபட்டினம்

மதராஸாபட்டினம், தாழை மதியவன், இலக்கியச் சோலை, பக். 176, விலை 100ரூ. மதரஸாபட்டினம், சென்னப்பட்டினம், மதராஸ், மெட்ராஸ், (இன்று) சென்னை என அழைக்கப்படும் இப்பட்டணத்தின் வரலாறு கி.பி. 15-ஆம் நூற்றாண்டிலிருந்து விவரிக்கப்பட்டுள்ளது. சென்னக் குப்பத்தை விலைக்கு வாங்கிய 1639-ஆம் ஆண்டைக் கணக்கிட்டு சென்னை-375, 376 என விழா நடத்துகிறார்கள். ஆங்கிலேயர்களின் சென்னப் பட்டினத்திற்குத்தான் வயது 376. நமது மதராஸப்பட்டினத்திற்கான வரலாறு ஆயிரம் ஆண்டுகள். இந்நூல் ஆங்கில ஏகாதிபத்தியம் அகலும் வரையுள்ள பல நூற்றாண்டு நிகழ்வுகளைக் கூறுகிறது. இன்றைய புனித செயிண்ட் ஜார்ஜ் கோட்டையும் அதன் […]

Read more

கடைசி நமஸ்காரம்

கடைசி நமஸ்காரம், தமிழில் புவனா நடராஜன், சாகித்திய அகாடமி, விலை 415ரூ. 1972-ம் ஆண்டு வங்க மொழிக்கான சாகித்திய அகாடமி விருது பெற்ற நாவல். கொஞ்சம் வேதனை, கொஞ்சம் அனுபவம், கொஞ்சம் தேடுதல், கொஞ்சம் உணர்ந்து கொள்ளுதல், கொஞ்சம் புரிந்துகொள்ளுதல் இவையும் வாழ்க்கைதானே. அவற்றை அழகாக படம் பிடித்து காட்டியிருக்கிறார் வங்க எழுத்தாளர் சந்தோஷ்குமார்கோஷ். இதை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் புவனா நடராஜன். நன்றி: தினத்தந்தி, 10/8/2016.   —- சர்க்கரை நோய், தொகுப்பாசிரியர் மரு.கு. கண்ணன், பாப்பா பதிப்பகம், விலை 145ரூ. சர்க்கரை நோய் […]

Read more
1 4 5 6 7 8 9