திணைக் கோட்பாடு

திணைக் கோட்பாடு, முனைவர் துரை. சீனிச்சாமி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 164, விலை 125ரூ. திணை என்பது ஒழுக்கம், கோட்பாடு என்பது கொள்கை. பாடாண்திணை என்பது பாடப்படும் ஆண் மகனது ஒழுகலாறு, பழக்க வழக்கங்கள் என்று அறியப்படுகிறது. திணை என்பது நிலத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு புனைவு நெறி எனலாம். திணை கோட்பாடு என்ற நூலில் தொல்காப்பியம் – இலக்கியத் திறனாய்வுத் தொடங்கி, இலக்கியக் கோட்பாடுகள் வரை ஏழு தலைப்புகளில் விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. தமிழ் மொழி தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் பொதுவானது. […]

Read more

காரேய் கருணை இராமாநுஜா

காரேய் கருணை இராமாநுஜா, வேதா டி. ஸ்ரீதரன், வேதப்ரகாசனம், பக். 174, விலை 150ரூ. ஸ்ரீமத் ராமானுஜரின், 1,000வது ஆண்டில் அவரைப் பற்றி பலரும் நூல் எழுதுகின்றனர். இந்நூல் அவ்வரிசையில் வந்துள்ள போதிலும், சற்று மாறுபட்ட சிந்தனைகளுடன் வெளிவந்திருக்கிறது. எடுத்துக்காட்டாக, ராமானுஜர் தன் மனைவியைத் துறந்தது நியாயமா என்று ஆய்வு செய்கிறார். படிக்கச் சுவையாக உள்ளது. இந்நூலில், 11 தலைப்புகளில் கட்டுரைகள் உள்ளன. கட்டுரைகளின் இடையில் பெட்டிச் செய்திகள் பல, புதிய செய்திகளை நமக்குத் தருகின்றன. உதாரணமாக, மத்திய பிரதேசத்தில் விதிஷா நகருக்கு அருகேயுள்ள […]

Read more

இந்துக்கள் – ஒரு மாற்று வரலாறு

இந்துக்கள் – ஒரு மாற்று வரலாறு, வெண்டி டோனிக்கர், எதிர் வெளியீடு, பக். 904, விலை 750ரூ, இந்துக்களின் வாழ்க்கையில் பல முக்கியமான விஷயங்கள் எவ்விதம் பரிணமித்தன என்பதை விளக்கமாக விவரிக்கிறது இந்நூல். இந்துக்கள் ஒரு தனித்த மதத்தின் பகுதி தாங்கள் என்ற ஒரு வலுவான உணர்வைப் பிற மதங்கள் புகும் வரை உருவாக்கிக் கொள்ளவில்லை. பிறகு தான் தங்களை அவர்கள் வரையறுத்துக் கொள்ள வேண்டி வந்தது. வட்டாரம், மொழி, ஜாதி, தொழில், இனம் ஆகியவற்றால் அவர்களின் அடையாளங்கள் துண்டுபட்டிருந்தன. மேலும், உயர் ஜாதி […]

Read more

நாடகம் – திரை இன்னுமே பேசலாம்!

நாடகம் – திரை இன்னுமே பேசலாம்!, மு. இராமசாமி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 82, விலை 70ரூ. நவீன நாடக இயக்கங்களுடன் தனக்குள்ள தொடர்பு குறித்து ஆசிரியர் பேசுகிறார். ஜாம்பவான்கள் குறித்தும் அலசுகிறார். இப்பொழுது, 80 வயதில் பயணிக்கிற ந.முத்துசாமியின் முதல் நாடகம் அவரின், 33வது வயதில் வெளிவந்திருக்கிறது. அதிலிருந்து நாடக ஆசிரியராகவே இருந்து வருகிறார். ந.முத்துசாமி என்ற ஆளுமையை எந்த வகையிலும் கடக்காமல், எவரொருவரும், இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் நாடகம் பற்றி பேச முடியுமென்று எனக்குத் தோன்றவில்லை என்கிறார். ‘என் […]

Read more

வீழ்வதற்கல்ல வாழ்க்கை

வீழ்வதற்கல்ல வாழ்க்கை, லேனா தமிழ்வாணன், மணிமேகலைப் பிரசுரம், விலை 100ரூ. எழுத்தாளரும் பத்திரிகையாளருமான லேனா தமிழ்வாணன் எழுதிய வாழ்வு முன்னேற்றக் கட்டுரைகளின் தொகுப்பு. காலை முதல் இரவு வரை நாம் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகளையும் அவற்றுக்கான தீர்வுகளையும் எளிமையான முறையில், இனிய நடையில் சொல்கிறார். தாயைப்போல நன்னடத்தையைக் கற்றுக் கொடுக்கிறார்.தந்தையைப்போல வழிகாட்டுகிறார். ஆசிரியர்களைப்போல ஆலோசனை சொல்கிறார். ‘நமக்குள் ஒளிந்திருக்கும் ஆற்றல்கள் அபாரமானவை. அவற்றை வெளிப்படுத்த சந்தர்ப்பங்கள் வாய்க்கும்போது நழுவ விடக்கூடாது.” “நெல்லை விதைத்துவிட்டு பாராதிருந்தால் அதில் புல் மண்டியிட வாய்ப்பு இருக்கிறது.” “வாழ்வில் தனிப்பயணம் […]

Read more

கடற்கரை காவியம்

கடற்கரை காவியம், மதுரை இளங்கவின், காவ்யா, பக். 15, விலை 150ரூ. கடலோரக் காவியம் தமிழ் திரையுலகில் நிலவும் சிக்கல்களையும் அன்னை வேளாங்கன்னி மாதாவின் அருளையும் புதுமைகளையும் சித்திரித்து, சினிமா கலைஞர்களின் வாழ்வில் ஏற்படும் சிக்கல்களை, காதல் பிரச்னைகளை அன்னை அருளால் தீர்த்துவைத்து வெற்றியடையச் செய்வதை சித்திரிக்கும் நாவல் இது. நன்றி: குமுதம், 21/12/2016.   —-   எட்டுத் திக்கும் எங்கள் பாட்டு, தொகுப்பாசிரியர் மயிலாடுதுறை இளைய பாரதி, நம்மொழி பதிப்பகம், பக். 152, விலை 200ரூ. பல்வேறு கலைஞர்களின் கவிதைகள் ஒரு […]

Read more

வெற்றிப்படிக்கட்டு(பாகம் 3)

வெற்றிப்படிக்கட்டு(பாகம் 3), வசந்தகுமார், வசந்த்&கோ வெளியீடு, பக். 241, விலை 99ரூ. மனித வாழ்க்கையில் நிறைய போராட்டங்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. குறிப்பாக இளைஞர்கள் போராடினால்தான் வாழ்க்கை. அந்த போராட்டப் பயணத்தில் அவர்கள் வெற்றிபெற வழிகாட்டுவதுதான் ‘வெற்றிப்படிக்கட்டு’ என்ற இந்நூலின் மையக்கரு. அதற்குத் தேவைப்படும் தன்னம்பிக்கை, விடாமுயற்சி, புத்திசாலித்தனம், சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்துப்போய் செயல்பாடுகளில் சிறப்படைதல் இவையெல்லாம் வெற்றிக்கான வழிகாட்டல்கள் என்கிறார் வசந்தகுமார். அதை உணர்த்த கருத்தாழமிக்க கதைகள், உண்மைச் சம்பவங்கள், வரலாற்று நிகழ்வுகள், அறிவியல் கருத்துகள் ஆகியவற்றின் மூலம் வெற்றிப்படிக்கட்டுகளை உருவாக்கி, நம்மை தொலை […]

Read more

ரகுநாதம்

ரகுநாதம், தொகுப்பாசிரியர் காவ்யா சண்முக சுந்தரம், காவ்யா, விலை 1100ரூ. எழுத்தாளர், கவிஞர், கதாசிரியர், கவிஞர், பத்திரிகை ஆசிரியர், விமர்சகர், மேடைப் பேச்சாளர் என்னும் பன்முகம் கொண்டவர் தொ.மு.சி.ரகுநாதன். அவரது கட்டுரை, கவிதை, நாடகங்களை ‘ரகுநாதம்’ என்ற பெயரில் காவ்யா சண்முக சுந்தரம் நூலாகத் தொகுத்துள்ளார். இதில் 100 கட்டுரைகளும், 2 நாடகங்களும், 56 கவிதைகளும் இடம் பெற்றுள்ளன. இவரது எழுத்துகளில் நாட்டுப்பற்று, விதவை மறுமணம், சாதி மறுப்பு, விடுதலை உணர்வு ஆகியவைகளை வெளிப்படுத்தியுள்ளார். ‘ரகுநாதனின் தமிழ் நடை அழகியது. இனியது. ஜீவன் நிறைந்தது. […]

Read more

ஆன்மிக இலங்கைத் திருப்பயணம்

ஆன்மிக இலங்கைத் திருப்பயணம், “கயிலை மாமணி” மருத்துவர் நா. மோகன்தாஸ், இமாலயா பதிப்பகம், விலை 90ரூ. பயண நூல்களில் இது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில், பல இந்துக்கோவில்கள் உள்ளன. அங்கு யாத்திரை சென்ற “கயிலை மாமணி” மருத்துவர் நா. மோகன்தாஸ், தமது அனுபவங்களை இந்த நூலில் விவரித்துள்ளார். குறிப்பாக, யாழ்ப்பாணம், திரிகோணமலை வரலாறுகளையும், கதிர்காமம் கந்தன் திருக்கோவில், நயினார் தீவு, நாகபூசணி அம்மன் திருக்கோவில், நகுலேஸ்வரம் சிவன் திருக்கோவில் போன்ற திருக்கோவில்கள் பற்றி அவர் கூறுகின்ற தகவல்களைப் படிக்கும்போது மெய்சிலிர்க்கிறது. […]

Read more

என் கதை

என் கதை, சார்லி சாப்ளின், தமிழில் யூமா வாசுகி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 190ரூ. ஊமைப்பட காலத்திலேயே உலகப் புகழ் பெற்ற நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின். மறைந்த பிரதமர் நேரு, ஹிட்லர், சார்லி சாப்ளின் ஆகியோர் ஒரே ஆண்டில் (1889) பிறந்தவர்கள். அமெரிக்கத் திரைப்படக் கல்லூரி 1999-ம் ஆண்டில் நடத்திய கணக்கெடுப்பில், “உலகத் திரைப்பட வரலாற்றில் மிகச் சிறந்த பத்து நடிகர்களில் சார்லி சாப்ளினும் ஒருவர்” என்று தீர்மானிக்கப்பட்டது. “திரைப்படத் துறையில் தோன்றிய உண்மையான மாமேதை சாப்ளின்” என்று பேரறிஞர் […]

Read more
1 2 3 4 5 6 8