அறுபத்து மூவர்

அறுபத்து மூவர், நாயன்மார்கள் வரலாறு, கவிதா பப்ளிகேஷன்ஸ், விலை 450ரூ. சேக்கிழார் பெருமானால் எழுதப்பட்ட வரலாற்று காப்பியம் பெரிய புராணம். இது, சிவபெருமானின் அடியார்களான 63 நாயன்மார்களின் வாழ்க்கையை விவரிக்கிறது. இந்த நாயன்மார்கள் ஐந்து முதல் பத்தாம் நூற்றாண்டு வரை வாழ்ந்தவர்கள். பெரியபுராணம் 4,286 பாடல்களைக் கொண்டதாகும். பொருள் பொதிந்த சொற்களைக் கொண்டு இந்தப் பாடல்களை இயற்றியுள்ளார் சேக்கிழார். 63 நாயன்மார்களின் வரலாற்றை அனைவரும் உணர்ந்து ரசிக்கும் எளிய இனிய நடையில் எழுதியுள்ளார், ஈரோடு தங்க விசுவநாதன். புத்தகம் சிறந்த கட்டமைப்புடனும், படங்களுடனும் வெளிவந்துள்ளது. […]

Read more

உங்கள் சத்யராஜ்

உங்கள் சத்யராஜ், சபீதா ஜோசப், குமரன் பதிப்பகம், விலை 150ரூ. சத்யராஜ் வாழ்க்கைப்பாதை நடிகர் சத்யராஜின் வாழ்க்கை வரலாற்றை கூறும் நூல் “உங்கள் சத்யராஜ்”. சத்யராஜே தன்னைப் பற்றிய சுவையான சம்பவங்களைக் கூறுவதுபோல் இதை எழுதியுள்ளனர், பிரபல எழுத்தாளர் சபிதா ஜோசப். சத்யராஜ், ஜமீன்தார் வீட்டுப்பையன். ஆயினும் சினிமா நடிகராக ஆசைப்பட்டார். சோதனைகளையும், அவமானங்களையும் தாங்கிக்கொண்டு, படிப்படியாக உயர்ந்தார். தந்தை பெரியார் வேடத்தில் நடிக்க வேண்டும் என்பது சிவாஜிகணேசனின் ஆசை. ஆனால் அவர் விருப்பம் நிறைவேறவில்லை. பெரியாராக நடித்தவர் சத்யராஜ்தான். இப்படி ஏராளமான சுவையான, […]

Read more

நான் ஓர் இந்துவாக சாகமாட்டேன்

நான் ஓர் இந்துவாக சாகமாட்டேன், டாக்டர் அம்பேத்கர், தலித் முரசு, விலை 150ரூ. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தலித் மக்கள் துன்பப்படுவதற்கு இந்து மதம்தான் காரணம்” என்று கருதியவர் டாக்டர் அம்பேத்கர். “நான் பிரம்மன், விஷ்ணு, ராமன், கிருஷ்ணன் ஆகிய கடவுள்கள் மீது நம்பிக்கை வைக்கவும் மாட்டேன். அவர்களை வணங்கவும் மாட்டேன்” என்று கூறியவர். 1956-ம் ஆண்டில், 10 லட்சம் தலித் மக்களுடன், இந்து மதத்தைத் துறந்து புத்த மதத்தைத் தழுவினார். இவ்வாறு லட்சக்கணக்கான மக்கள் ஒரே நாளில் மதம் மாறிய நிகழ்ச்சி உலகில் […]

Read more

ஆடி காத்து

ஆடி காத்து, ரா. லட்சுமணன், விலை 100ரூ. மனதைத் தொடும் சிறுகதைகள் கொண்ட புத்தகம். நூலாசிரியர் ரா.லட்சுமணன் பாராட்டுக்கு உரியவர். இந்த நூல் 2014-2015-ம் ஆண்டுக்கான சிறந்த படைப்பாக தமிழக அரசின் ஆதி திராவிடர் நலத்துறை கலைப்பண்பாட்டுத் துறையால் தேர்வு செய்யப்பட்டு பரிசு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி: தினத்தந்தி, 19/4/2017.

Read more

தமிழ் இலக்கிய வரலாறு தொல்காப்பியம்

தமிழ் இலக்கிய வரலாறு தொல்காப்பியம், வித்துவான் க. வெள்ளைவாரணனார், பூம்புகார் பதிப்பகம், விலை 290ரூ. தமிழ் நூல்களில் மிகப்பழமையானது “தொல்காப்பியம்”. உலகின் மிகப் பழமையான நூல்களில் ஒன்று என்றும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். தொல்காப்பியத்தின் சிறப்புகளை இந்த நூல் விளக்குகிறது. நன்றி: தினத்தந்தி, 19/4/2017.

Read more

கல்லூரி காணாதவர்களிடம் கற்க வேண்டியவை

கல்லூரி காணாதவர்களிடம் கற்க வேண்டியவை, க. அருச்சுனன், சஞ்சீவியார் பதிப்பகம், விலை 110ரூ. கல்லூரி படிப்பு முடித்தவர்களே சாதிக்க முடியும் என்பதல்ல. கல்லூரி காணாதவர்களும் நம் நாட்டில் சாதித்துள்ளனர். அந்த வகையில் கல்லூரிக்குச் செல்லாமல், தனது அனுபவப் படிப்பு காரணமாக சாதனை புரிந்த வள்ளலார், ஈ.வே.ரா. பெரியார், கல்கி கிருஷ்ணமூர்த்தி, பெருந்தலைவர் காமராஜர், கிருபானந்த வாரியார், கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., கவியரசர் கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ஆகிய 9 பேரை தேர்ந்தெடுத்து இந்த நூலில் என்ஜினீயர் க. அருச்சுனன் எழுதியுள்ளார். […]

Read more

உங்கள் குழந்தைக்கு சிந்திக்கக் கற்றுக்கொடுங்கள்

உங்கள் குழந்தைக்கு சிந்திக்கக் கற்றுக்கொடுங்கள், நர்மதா பதிப்பகம், விலை 70ரூ. நம் குழந்தைகள் வாழ்க்கையில் வெற்றி பெற இளமையிலேயே நல்ல பழக்கங்களைக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதை இந்த நூலில் ஆசிரியர் பி.சி.கணேசன் எடுத்துரைக்கிறார். குழந்தைகளைச் சிந்திக்க வைப்பதற்கு பல்வேறு வழிகள், பல்வேறு கோணங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. நன்றி: தினத்தந்தி, 19/4/2017.

Read more

நான் ரசித்த வாலி

நான் ரசித்த வாலி, திருநின்றவூர் சந்தானகிருஷ்ணன், வாலி பதிப்பகம், விலை 90ரூ ரசிகனின் பார்வை புலமை எதுவும் பெற்றிராத ஒரு இரசிகனின் பார்வையில் வாலியின் பாடல்களில் மிளிரும் எண்ணங்களின் பதிவே இது – என்று முன்னுரையில் குறிப்பிடுகிறார் நூலாசிரியர். தமிழ் திரைப்பட உலகை விரல் நுனியிலும் தன் ஆவணக்காப்பகத்திலும் வைத்திருக்கும் சந்தானகிருஷ்ணன் வாலியின் பாடல்களைப் பற்றிய தன் எண்ணங்களை நன்றாக பகிர்ந்து கொண்டுள்ளார். ‘பூவரையும் பூங்கொடியே, பூமாலை போடவா’ என்ற பாடலில் ஆரம்பிக்கும் நூலாசிரியர் இப்பாடலின் சூழலை விவரித்து, பாடலின் நயங்களை எழுதுகிறார். அத்தோடு […]

Read more

விடம்பனம்

விடம்பனம், சீனிவாசன் நடராஜன், காலச்சுவடு, விலை 575ரூ. காலதரிசனம் கீழத் தஞ்சை மாவட்டத்தில் கடந்துபோன ஐம்பது ஆண்டுகால வாழ்வின் பின்னணியில் செல்லும் நாவல் சீனிவாசன் நடராஜனின் விடம்பனம். நாவலுக்கென்று நாம் அறிந்திருந்த எந்த ஒழுங்கும் இல்லாமல் ஓர் ஓவியர் பல்லாண்டாக வரைந்த ஓவியத் தொடர்போல இந்நாவல் அமைந்திருக்கிறது. நாவலாசிரியரும் ஒரு தேர்ந்த ஓவியர் என்பதால் இது சாத்தியம் ஆகியிருக்கலாம். இந்த தொடர்பற்ற தன்மையைத் தாண்டி, மென்மையான கிறுகிறுப்பூட்டும் தன் நடையால் கவர்கிறது இந்நாவல். மலர்கள் பூத்த குளமும் வாய்க்காலும், நெல்வயலும், கிணறுகளும், குடிசைகளும், தென்னை […]

Read more

மாஸ்தி சிறுகதைகள்

மாஸ்தி சிறுகதைகள், சாகித்திய அகாடமி, விலை 120ரூ. ஒவ்வொரு மொழியிலும் சிறந்து விளங்கும் எழுத்தாளர்களின் கதைகளை, மற்ற மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிடும் பணியை சாகித்திய அகாடமி செய்து வருகிறது. கன்னடத்தில் சிறந்த எழுததாளராக விளங்கும் மாஸ்தி வெங்கடேச அய்யங்கார் எழுதிய சிறந்த சிறுகதைகள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு, “மாஸ்தி சிறுகதைகள்” என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. சேஷநாராயணா சிறப்பாக மொழிபெயர்த்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 29/3/2017.

Read more
1 2 3 4 5 6 9