நந்தவனங்கள் பேசுகின்றன

நந்தவனங்கள் பேசுகின்றன, மரியதெரசா, தென்றல் நிலையம், பக். 112, விலை 50ரூ. கல்வி, சாதி, முதியோர் இல்லம், குடிப்பழக்கம், உழைப்பு, நகம், கூந்தல், நா, வாழை, குழந்தை போன்ற தலைப்புகளில் ஒவ்வொன்றிலும் 100-ம், 50-ம் ஆக ஹைகூ வடிவில் கவிதைகள் படைத்துள்ளார். படிக்கப் படிக்க நற்பயன் நல்கும் கவிதைகள். நன்றி: குமுதம், 22/2/2017.

Read more

சிறிய தூண்டில் பெரிய மீன்

சிறிய தூண்டில் பெரிய மீன், மூ.இராசாராம், பழனியப்பா பிரதர்ஸ்,  பக்.174, விலை ரூ.155. சிறு சிறு முயற்சிகள் மூலம் பெரிய வெற்றிகளை எப்படிப் பெறுவது என்பதற்கான வழிமுறைகளைக் கூறும் நூல். நம்மிடம் அளவாக இருக்கும் சக்தியைப் பயன்படுத்தி அதிகமான பலன் பெறலாம் என்பதை சில முக்கிய மேற்கோள்கள் மூலம் சுவைபடக் கூறியுள்ளார். குறிப்பாக ரூ.1-க்கு விற்கப்படுகிறது என்ற பிரபல செய்தித்தாளின் விளம்பர உத்தி, இந்த  டிசைன்&#39 சேலைகள் இன்னும் மூன்று மட்டுமே எஞ்சியுள்ளன' என்ற ஜவுளிக் கடைக்காரரின் விளம்பரத் தந்திரம் போன்றவை வாடிக்கையாளர்கள் என்ற பெரிய […]

Read more

தொல்குடி வேளிர் வேந்தர்

தொல்குடி வேளிர் வேந்தர், பூங்குன்றன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 200ரூ. பழந்தமிழக வரலாற்றின் தொடக்கம், அதன் பின் உருவான தொல்குடிகள், நகரம் அமைப்பு, அரசு உருவாக்கம், வேந்தர்களின் வளர்ச்சி, வணிகப் பெருக்கம் போன்ற பல விவரங்களை ஆராய்ந்து இலக்கிய ஆதாரங்களுடன் விளக்கி இருப்பது தொல்பொருள் ஆர்வலர்களுக்கு வழிகாட்டி போல அமைந்து இருக்கிறது. நன்றி: தினத்தந்தி, 29/3/2017.   —-   ஞானத்தேடல், தென்றல் பதிப்பகம், விலை 75ரூ. ஆன்மிகக் கட்டுரைகள் கொண்ட புத்தகம். நூலாசிரியர் முனைவர் சி.ஆர். மஞ்சுளா, இக்கட்டுரைகளை இலக்கியத் […]

Read more

சேது காப்பியம்

சேது காப்பியம், பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், கவியரசன் பதிப்பகம், விலை 600ரூ. பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் தன் வாழ்க்கை அனுபவங்களை பிரதிபலிக்கும் வகையில், “சேது காப்பியம்” (கவிதை வடிவில்) எழுதி வருகிறார். இப்போது 8-வது பகுதி வெளிவந்துள்ளது. இலங்கையில் உள்நாட்டுப்போர் வெடிப்பதற்கு முன்பே, தமிழ்ஈழ விடுதலையை வலியுறுத்தி அமெரிக்காவில் மாபெரும் மாநாடு நடத்திய டாக்டர் பஞ்சாட்சரம் பற்றி இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆரை “மா.கோ.ரா” என்றே குறிப்பிடுகிறார், பெருங்கவிக்கோ. ஒரு இடத்திலாவது எம்.ஜி.ஆர். என்று அடைப்புக்குறிக்குள் குறிப்பிட்டால் பொதுமக்கள் புரிந்துகொள்ள உதவுமே. நன்றி: தினத்தந்தி, 29/3/2017.‘

Read more

வ.ரா. கதைக் களஞ்சியம்

வ.ரா. கதைக் களஞ்சியம், தொகுப்பாசிரியர் சு.சண்முகசுந்தரம், காவ்யா, பக்.864, விலை ரூ.850. சிறந்த எழுத்தாளரான வ.ரா. எழுதிய கட்டுரைகள் புகழ் பெற்ற அளவுக்கு, அவருடைய படைப்பிலக்கியங்கள் அறியப்படவில்லை. அவற்றைத் தேடிப் பிடித்துத் தொகுத்து நூலாக்கியிருக்கிறார்கள். தமிழில் வட்டார நாவல் என்ற ஒரு பிரிவு அறிமுகமாவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே (அன்றைய ஒன்றிணைந்த) தஞ்சை மாவட்ட மக்களின் பேச்சு மொழியையும் வாழ்க்கை முறையையும் தனது நாவல்களில் பதிவு செய்திருக்கிறார் வ.ரா. குறிப்பாக, ‘சுந்தரி 39 ’ நாவலில் இடம் பெறும் பூமரத்தாங்குடி, உளுத்தங்காடு ஆகிய இரு ஊர்களும் […]

Read more

தொல்குடி வேளிர் வேந்தர்

தொல்குடி வேளிர் வேந்தர் (பண்டைய தமிழகத்தில் அரசு உருவாக்கம் பற்றிய ஆய்வு), ர. பூங்குன்றன்,  நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக்.252, விலை ரூ.200. ‘தமிழகத் தொல்லியல் ஆய்வுகள் தொடக்க நிலையிலேயே உள்ளன. தமிழக அகழாய்வுகள் குறைந்த அளவிலேயே நடைபெற்றுள்ளதால்தான் பண்டைய தமிழ்ச் சமூகம் தொடர்பான முழுமையான வரலாற்றுத் தரவுகள், விவரங்கள் நமக்குக் கிடைக்கவில்லை39‘ என்பன போன்ற பல குற்றச்சாட்டுகளை முன் வைக்கும் நூலாசிரியர், தம் மனக்குமுறல்களை இந்நூலின் மூலம் தீர்த்துக் கொண்டிருக்கிறார் – வெளிப்படுத்தியுள்ளார் என்று கூறலாம். அந்த வகையில், […]

Read more

பாலி முதல் மியன்மார் வரை

பாலி முதல் மியன்மார் வரை, மாத்தளை சோமு, தமிழ்க்குரல் பதிப்பகம், பக்.280, விலை ரூ.180. தமிழில் பயண இலக்கியத்தை சுவாரசியமான முறையில் எழுதுபவர்கள் குறைவு. பாலி முதல் மியன்மார் வரையிலான நூலாசிரியரின் பயண அனுபவங்கள் இந்நூலில் சுவையாகப் பதிவாகியிருக்கின்றன. பண்டைய காலத்திலேயே நமது பண்பாடு, மதம் கடல் கடந்து சென்ற நாடுகளில் பாலித்தீவு, தாய்லாந்து, பர்மா, கம்போடியா ஆகிய நாடுகள் குறிப்பிடத்தக்கவை. பாலித்தீவிலும், தாய்லாந்திலும் சாதிப் பிரிவுகள் உள்ளன; ஆனால் அங்கு சாதி மோதல்கள் இல்லை. கோயில்கள் அந்த நாடுகளில் இன்றும் பாரம்பரிய சின்னங்களாகப் பராமரிக்கப்படுதல், […]

Read more

தமிழர் பூமி

தமிழர் பூமி, தீபச்செல்வன், எதிர் வெளியீடு, பக்.373, விலை ரூ.350. ஈழப் போரின்போது இலங்கை அரசால் அபகரிக்கப்பட்ட தமிழர்களின் நிலம் மீண்டும் தமிழர்களுக்கு வழங்கப்பட்டதா என்பது குறித்து விரிவாக அலசுகிறது இந்நூல். மீள்குடியேற்றம் முழுமையாக நடந்துவிட்டது என்றும் தமிழர்களின் நிலம் திருப்பியளிக்கப்பட்டு விட்டது என்றும் இலங்கை அரசு கூறி வருவது முழுவதும் உண்மையில்லை என்பதை நேரடி அனுபவத்தின் வாயிலாக உணர்த்தியிருக்கிறார் நூலாசிரியர். தாய் நிலத்தை இழந்துவிட்டு வெறும் நினைவுகளை மட்டுமே சுமந்து வாழும் லட்சக்கணக்கான தமிழர்களின் வலிகளை உணர்த்தும் பதிவாக இந்நூல் உள்ளது. பிறந்த நாட்டுக்குள் […]

Read more

தென்னிந்தியாவைப் பற்றி வெளிநாட்டினர் குறிப்புகள்

தென்னிந்தியாவைப் பற்றி வெளிநாட்டினர் குறிப்புகள், மெகஸ்தனிஸ் முதல் மா ஹுவான் வரை, தொகுப்பும் பதிப்பும் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி, தமிழில் மு.இரா.பெருமாள் முதலியார், அடையாளம், பக்.520, விலை ரூ.390. மிகச் சிறந்த வரலாற்றாசிரியரான நூலாசிரியர் தொகுத்தளித்திருக்கும் இந்நூல் தென்னிந்திய வரலாற்றில் புதிய வெளிச்சங்களைப் பாய்ச்சுகிறது.இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டுப் பயணிகளின் பலரின் குறிப்புகளை இப்போது படிக்கிறபோது, வியப்பு ஏற்படுகிறது. சிலநேரங்களில் அதிர்ச்சியும். உதாரணமாக, கி.பி.673 இல் சீனாவிலிருந்து இந்தியாவுக்கு வந்த இட்சிங் அன்றைய கல்விமுறையை இப்படிக் குறிப்பிடுகிறார்: ‘அறிவுத்திறனை வளர்த்துக் கொள்வதற்கு இந்தியா வழிவழியாகக் கடைப்பிடிக்கும் முறைகள் […]

Read more

முத்துவைக் கேளுங்கள்

முத்துவைக் கேளுங்கள், நெல்லை சு.முத்து, திருவரசு புத்தக நிலையம், பக்.152, விலை ரூ.150. நூலாசிரியர் கலந்து கொண்ட கூட்டங்களில் மாணவ, மாணவியர் எழுத்து மூலம் தொகுத்து அளித்த கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள், பல்வேறு நாளிதழ்களில், இதழ்களில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு நூலாசிரியர் அளித்த பதில்கள், நூலாசிரியரின் நேர்காணல் அனைத்தும் இந்நூலில் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. வானவியல் தொடர்பான கேள்விகளுக்கு மட்டுமல்ல, அறிவியலின் அனைத்துப் பிரிவுகள் தொடர்பான பல கேள்விகளுக்கும், எளிமையாகவும், தெளிவாகவும் அறிவியலில் ஆர்வமற்றவர்களுக்கும் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் நூலாசிரியர் பதில் அளித்துள்ளார். ‘ஏன் செயற்கைக்கோள்கள் விண்ணிற்கு […]

Read more
1 4 5 6 7 8 9