கல்லூரி காணாதவர்களிடம் கற்க வேண்டியவை

கல்லூரி காணாதவர்களிடம் கற்க வேண்டியவை, சஞ்சீவியார் பதிப்பகம், விலை 110ரூ. கல்லூரி படிப்பு முடித்தவர்களே சாதிக்க முடியும் என்பதல்ல. கல்லூரி காணாதவர்களும் நம் நாட்டில் சாதித்துள்ளனர். அந்த வகையில் கல்லுரிக்குச் செல்லாமல், தனது அனுபவப் படிப்பு காரணமாக சாதனை புரிந்த வள்ளலார், ஈ.வே.ரா. பெரியார், கல்கி கிருஷ்ணமூர்த்தி, பெருந்தலைவர் காமராஜர், கிருபானந்த வாரியார், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., கவியரசர் கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ஆகிய 9 பேரை தேர்ந்தெடுத்து இந்த நூலில் என்ஜினீயர் க.அருச்சுனன் எழுதியுள்ளார். இந்த 9 பேர் வாழ்வில் […]

Read more

தமிழக ஜோக்ஸ் பிரபலங்கள்

தமிழக ஜோக்ஸ் பிரபலங்கள், தொகுப்பு திருமயம் பெ. பாண்டியன், வைகை ஆறுமுகம், பாண்டியன் வைகை பதிப்பகம், விலை 140ரூ. ஜோக்ஸ் எழுதுவதில் புகழ் பெற்றவர்கள் பற்றிய விவரங்களும், துணுக்குகளும் கொண்ட புத்தகம். நன்றி: தினத்தந்தி, 19/4/2017.

Read more

புகழ்பெற்ற விக்கிரமாதித்தன் கதைகள்

புகழ்பெற்ற விக்கிரமாதித்தன் கதைகள், பட்டத்தி மைந்தன், வசந்தா பிரசுரம், விலை 240ரூ. காலத்தால் அழியாத கதைகளில் விக்கிரமாதித்தன் கதைகளும் ஒன்று. சிறுவர் முதல் வயோதிகர் வரை அனைவரும் ஆர்வத்துடன் படிக்கும் 55க்கும் மேற்பட்ட விக்கிரமாதித்தன் கதைகள் விறு விறுப்பாக தொகுத்துத் தரப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி, 19/4/2017.

Read more

வெற்றிக்கு வழிகாட்டும் திருமந்திரம்,

வெற்றிக்கு வழிகாட்டும் திருமந்திரம், வேணுசீனிவாசன், அழகு பதிப்பகம், விலை 145ரூ. திருமந்திர பாடல்களில் சிலவற்றுக்கு எளிய விளக்கமும், நடைமுறை உதாரணங்கள் அடங்கிய கட்டுரைகள் இடம் பெற்ற நூல். குறிப்பாக அன்பும் சிவனும், யான் பெற்ற இன்பம், ஒன்றே குலம் ஒருவனே தேவன், இனிய இல்லறம் போன்ற தலைப்புகளில் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. நன்றி: தினத்தந்தி, 19/4/2017.

Read more

அவ்வையார் அருளிய அறநெறி அமுதம் – 2

அவ்வையார் அருளிய அறநெறி அமுதம் – 2, கொன்றைவேந்தன், இல. பழனியப்பன், கங்கை புத்தக நிலையம், விலை 110ரூ. அவ்வையார் எழுதிய கொன்றை வேந்தன் நம் வாழ்வுக்கு தேவையான நன்னெறிகளை எடுத்துக் கூறுகிறது. அதன் கருத்துகளை எளிய மொழி நடையில் அனைவரும் புரியும் வகையில் இல.பழனியப்பன் அழகுற எடுத்துக் கூறியுள்ளார். நன்றி: தினத்தந்தி, 19/4/2017.

Read more

தமிழ் இலக்கிய வரலாறு தொல்காப்பியம்

தமிழ் இலக்கிய வரலாறு தொல்காப்பியம், வித்துவான் க.வெள்ளை வாரணனார், பூம்புகார் பதிப்பகம், விலை 290ரூ. ‘தமிழ் நூல்களில் மிகப்பழமையானது ‘தொல்காப்பியம்’. உலகின் மிகப் பழமையான நூல்களில் ஒன்று என்றும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். தொல்காப்பியத்தின் சிறப்புகளை இந்த நூல் விளக்குகிறது. நன்றி: தினத்தந்தி, 19/4/2017.

Read more

உங்கள் குழந்தைக்கு சிந்திக்கக் கற்றுக்கொடுங்கள்

உங்கள் குழந்தைக்கு சிந்திக்கக் கற்றுக்கொடுங்கள், பி.சி.கணேசன்,நர்மதா பதிப்பகம், விலை 70ரூ. நம் குழந்தைகள் வாழ்க்கையில் வெற்றி பெற இளமையிலேயே நல்ல பழக்கங்களைக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதை இந்த நூலில் ஆசிரியர் பி.சி.கணேசன் எடுத்துரைக்கிறார். குழந்தைகளைச் சிந்திக்க வைப்பதற்கு பல்வேறு வழிகள், பல்வேறு கோணங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. நன்றி: தினத்தந்தி, 19/4/2017.

Read more

சனிபகவானின் பெருமை

சனிபகவானின் பெருமை, ராபர்ட் ஈ.ஸ்வோபோடா, தமிழில்  கீதா ஆனந்த், கண்ணதாசன் பதிப்பகம், பக்.272, விலை ரூ.170. சனி துன்பங்களைத் தரக் கூடியவர் என்று கருதப்படுகிறார். சனி தரும் துன்பத்தைக் குறைக்க என்ன செய்யலாம் என்று பலர் சோதிடர்களை நாடுகின்றனர். சனி மனிதர்களைப் பாதிப்பதைப் போலவே, மனிதர்களின் நடவடிக்கைகள் சனியின் செயல்களைப் பாதிக்கின்றன என்ற அடிப்படையில்தான் சோதிடர்கள் மனிதர்களுக்குப் பரிகாரங்களைக் கூறுகின்றனர். இந்த நூல் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய கிரகங்களைப் பற்றிய விரிவான அறிமுகத்தைத் தருகிறது. விக்கிரமாதித்தனை ஏழரை […]

Read more

முன்னோடிகள் ஆளுமைகள் சந்திப்புகள்

முன்னோடிகள் ஆளுமைகள் சந்திப்புகள்முன்னோடிகள் ஆளுமைகள் சந்திப்புகள், சூரியசந்திரன், எழில் பதிப்பகம், விலை 250ரூ. அண்டா அன்பும்… டம்பளர் அன்பும்! பேட்டிகள் படிப்பது பரவசமானது. அதுவும் பேட்டிகளின் தொகுப்பைப் படிப்பது பரவசங்களின் உச்சம். இலக்கியம், சமூகம், சூழலியல் என பல்துறை ஆளுமைகளை ஒருசேர ஒரே புத்தகத்தில் அறியக் கிடைப்பது உண்மையில் பொக்கிஷம் போன்றது. அத்தகைய பொக்கிஷத்தைக் கொடுத்துள்ளார் சூரியசந்திரன். இன்றைய இலக்கிய இதழ்களில் வெளிவரும் பேட்டிகளில் பலதும் சலிப்பை ஏற்படுத்துபவை. ஏனெனில் அவ பேட்டிகளாக, சந்திப்புகளாக இருப்பது இல்லை. எழுதித் தரப்பட்ட கட்டுரைகளுக்கு இடையில் சொருக்கப்பட்ட […]

Read more

நீயும் நானும்

நீயும் நானும், கோபால்தாசன், ஆரம் வெளியீடு, பக். 138, விலை 100ரூ. கவிதையில் நெய்த கதை! காதலைக் கவிதையில் சொல்லுவர், இவரோ கவிதையில் ஒரு இனிய காதல் கதையைத் தருகிறார். இம்முயற்சி பாராட்டுக்குரியதாகும். எளிய தமிழ் நடையில் யதார்த்தமான பின்னணியில் சென்னைக் காதலின் மணம் வீசுகிறது. நடுத்தரக் குடும்பத்திலிருந்து வேலைக்குச் செல்பவர்களின் பின்னணியில் கதை பயணிக்கிறது. எளிய நடையில் வழக்கத்தில் உள்ள சென்னைத் தமிழ் மற்றும் ஆங்காங்கே ஆங்கிலம் கலந்த வழக்குச் சொற்களைப் பயன்படுத்தி இருப்பது, இப்புத்தகம் அனைவரும் படித்து இன்புறக்கூடிய ஒன்று என்று […]

Read more
1 2 3 4 5 6 9