கல்விச்செல்வம் தந்த காமராசர்

கல்விச்செல்வம் தந்த காமராசர், ஈசாந்திமங்கலம் முருகேசன், மீனாட்சி பதிப்பகம், விலை 160ரூ. தமிழ்நாடு கல்வியில் முன்னேற அரும்பாடுபட்டு, அதில் வெற்றியும் கண்டவர் பெருந்தலைவர் காமராஜர். தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக ஏறத்தாழ 10 ஆண்டுகள் பதவி வகித்தார். அது ஒரு பொற்காலம் என்று வர்ணிக்கப்படுகிறது. இலவச கல்வி, இலவச மதிய உணவு திட்டம் ஆகியவற்றுக்கு முன்னோடி. அரசியல் வாழ்க்கையில் தூய்மையை கடைப்பிடித்தவர். “கிங்மேக்கர்” (அதாவது பல பிரதமர்களை உருவாக்கியவர்) என்று புகழ் பெற்றவர். அவருடைய வாழ்க்கை வரலாற்றை மிகச் சிறப்பாக எழுதியுள்ளார், ஈசாந்திமங்கலம் முருகேசன். படிக்க வேண்டிய […]

Read more

வாழ்வியல் சிந்தனைகள்

வாழ்வியல் சிந்தனைகள், கி.வீரமணி, பெரியார் சுயமரியாதை பிரசார நிறுவனம், விலை 250ரூ. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தமது சிந்தனையில் உதித்த கருத்துக்களை, நூல்களாக எழுதி வந்தார். இதில் 12-வது நூல் இப்போது வெளிவந்துள்ளது. இந்த வரிசையில் இது கடைசி நூல். இத்துடன் 1000 சிந்தனைகள் நிறைவு பெறுகின்றன. நூற்றுக்கணக்கான புத்தகங்களைப் படித்தபோது வெளிப்பட்ட சிந்தனைச் சிதறல்கள், அனுபவங்கள் வாயிலாக வெளிப்பட்ட சீரிய கருத்துக்கள் பொன்னும் வைரமுமாக இந்த நூலில் ஜொலிக்கின்றன. வாழ்க்கைக்கு வழி காட்டக்கூடிய இந்த நூல், ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டியதாகும். […]

Read more

காலத்தை வெல்லும் திருமுறைகள்

காலத்தை வெல்லும் திருமுறைகள், ராதா நடராஜன்,  கற்பகம் புத்தகாலயம், பக்.224,  விலை ரூ.150. சைவர்கள் தமிழ் வேதமாகக் கருதுவது அருளாளர்கள் அருளிய பன்னிரு திருமுறைகளை. திருமுறைப் பாடல்கள் பாடிய அருளாளர்களின் வரலாற்றில் நிகழ்ந்த – இறைவன் நிகழ்த்திய அற்புத நிகழ்ச்சியின் பின்னணியிலேயே திருமுறைப் பாடல்கள் அமைந்துள்ளன என்பதை இந்நூல் விவரிக்கிறது. சமயக் குரவர்களான நால்வர் பெருமக்களின் (திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தர், மாணிக்கவாசகர்) வரலாற்றில் நிகழ்ந்த சில அற்புத நிகழ்ச்சிகளை மட்டும் எடுத்துக்கொண்டு, இறைவன் நிகழ்த்திய அற்புதம், திருமுறைகளின் மாண்பு, சில நாயன்மார்களின் சிவத்தொண்டு, திருத்தலப் […]

Read more

கர்ணனின் வாழ்க்கை சாபமா? வரமா?

கர்ணனின் வாழ்க்கை சாபமா? வரமா?, செ. சரவணன், ஜெயலட்சுமி எண்டர்பிரைசஸ், விலை 100ரூ. பாண்டவர்களுக்கு அண்ணாகப் பிறந்தும், தேரோட்டியின் மகனாக வாழ்ந்தவன் கர்ணன். துரியோதனன் தயவால் வாழவேண்டிய நிலையில் இருந்தவன். எனினும் “தர்மம் செய்வதில் கர்ணனுக்கு நிகர் கர்ணனே” என்று புகழ் பெற்றான். அவன் வாழ்க்கையை அலசி ஆராய்கிறது இந்த நூல். படிப்பதற்கு சுவையான புத்தகம். நன்றி: தினத்தந்தி, 26/4/2017.

Read more

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன் (படக்கதை), ஓவியர் ப. தங்கம், தங்கப்பதுமை பதிப்பகம், விலை 200ரூ. “கல்கி”யின் “பொன்னியின் செல்வன்” சரித்திர நாவல் மீது தீராக் காதல் கொண்டவர் ஓவியர் ப. தங்கம். அந்த காவியத்தை சித்திரக் கதையாக வடிவமைத்து, புத்தகங்களாக வெளியிட்டு வருகிறார். இப்போது இரண்டாவது புத்தகம் வெளிவந்துள்ளது. பொன்னியின் செல்வனில் வரும் கதாபாத்திரங்களை ஓவியர் மணியம் எப்படி உருவாக்கி உயிரோவியங்களாக நடமாட விட்டாரோ, அதே பாணியில் ஓவியர் தங்கமும் தன் முழுத்திறமையையும் பயன்படுத்தி இந்த படக்கதையை உருவாக்கியுள்ளார். படங்களும், வசனங்களும் கண்ணையும் கருத்தையும் கவர்கின்றன. […]

Read more

சீனப்பெண்கள்

சீனப்பெண்கள், ஜி.வித்யபாமா, எதிர், விலை 280ரூ. பதினைந்து நீண்ட கட்டுரைகளைக் கொண்டது இந்நூல். அனைத்து தரப்பு பெண்களையும் நேரடியாக சந்தித்து பேட்டி கண்டு, உண்மைச் சம்பவங்களின் தொகுப்பாக வெளியிடப்பட்டு உள்ளது. சீனாவின் அரசியல் மாற்றமும் அதனால், பெண்கள் மீது ஏவப்பட்ட பாலியல் வன்முறைகளையும், பெண் குழந்தைகளுக்கு ஏற்பட்ட பாலியல் வன்முறைகள், ஆண் குழந்தைகளுக்கு சீனாவில் கொடுக்கப்படும் முன்னுரிமைகள், சீனாவில் பேசவே தடை செய்யப்பட்ட ஓரினச் சேர்க்கை, சீன சமுகத்திலும், கலாசாரத்திலும் பாலியலின் பங்கு குறித்தும் இந்நூலில் மிக ஆழமாக கூறப்பட்டுள்ளது. கடந்த, 1989 முதல், […]

Read more

இயற்கை விவசாயமும் பெண்களின் பங்கும்

இயற்கை விவசாயமும் பெண்களின் பங்கும், காந்தலட்சுமி சந்திர மௌலி, செங்கைப் பதிப்பகம், பக். 248, விலை 150ரூ. இந்நூலாசிரியர், உலக சுகாதார மையத்தில் பெரிய பொறுப்பிலிருந்த தன் தந்தையுடன் பல நாடுகளைச் சிறு வயதிலேயே சுற்றி வந்தவர். விவசாயம் குறித்த ஆர்வத்தால், அது குறித்த பல்வேறு தகவல்களைத் திரட்டியவர். விவசாய நாடாகிய நம் நாட்டில், வர வர விவசாயத் தொழில் சுருங்கி, மற்ற தொழில்கள் பெருகி வருகின்றன. இருக்கும் விவசாயமும்கூட இயற்கை விவசாயமாக இல்லாமல், ரசாயனப் பொருள்களைக் கொண்டு செயற்கை விவசாயமே நடைபெறுகிறது. இதனால் […]

Read more

கவிதை என்றால் என்ன

கவிதை என்றால் என்ன, வே.த.யோகநாதன், அனைத்துலகத் தமிழ் மாமன்றம், பக். 80, விலை 100ரூ. பல்வேறு கவிஞர்களின் கவிதைகளை ஒரு குடையின் கீழ் வாசிக்கும் வாய்ப்பைத் தரும் நூல். ‘கவிதை என்றால் என்ன?’ என்ற தலைப்பின் கீழ் சுமார் 80 கவிஞர்களின் கவிதைகள் இதில் இடம் பெற்றுள்ளன. படைப்போருக்கும் படிப்போருக்கும் ஒரு பாலமாக விளங்கும் நூல். நன்றி: குமுதம், 3/5/2017.

Read more

மதுரை நகரக் கோயில்கள்

மதுரை நகரக் கோயில்கள், டி.வி.எஸ். மணியன், அமராவதி வெளியீடு, பக். 200, விலை 130ரூ. மதுரை நகரத்திற்குள் அமைந்திருக்கும் கோயில்கள் பற்றி கூறும் நூல். மதுரைக் கோயில்களை காண விரும்புவோருக்கும் ஆராய விரும்புவோருக்கும் இந்நூல் ஒரு நல்ல வழிகாட்டி. கோயில்களை அறிமுகம் செய்யும் அதே வேளையில் கோயில் வரலாறு, கோயில் சார்ந்த மன்னர்கள் வரலாறு, மக்கள் வாழ்க்கை முறை, நம்பிக்கை, புராணப் பின்புலங்கள் என்று அனைத்தையும் நமக்கு எடுத்துக்காட்டிவிடுகிறார் நூலாசிரியர். நன்றி: குமுதம், 3/5/2017.

Read more

முதல் தலைமுறை மனிதர்கள்

முதல் தலைமுறை மனிதர்கள், சேயன் இப்ராஹீம், நிலவொளி பதிப்பகம், விலை 200ரூ. முதல் தலைமுறை மனிதர்களிடமிருந்து இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ள, ஏராளமான தகவல்களைத் தேடி அலைந்து சேகரித்து இந்நூலில் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர். தமிழகத்தின் தவிர்க்க இயலாத சக்திகளாகத் திகழ்ந்த 30 இஸ்லாமிய ஆளுமைகளின் வரலாறு இந்நூலில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக விடுதலைப் போராட்டம், அரசியல், கல்வி, சமூக சேவை, சமுதாயச் சேவை… என்று பல தளங்களில் இந்த முதல் தலைமுறையினரின் பங்களிப்புகளுடன், அவர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த சுவையான தகவல்களும் தொகுக்கப்பட்டுள்ளன. தவிர, அன்றைய தமிழக […]

Read more
1 4 5 6 7 8 9