jk ஜெயகாந்தன் வாதம் பிரதிவாதம்

jk ஜெயகாந்தன் வாதம் பிரதிவாதம், தொகுப்பு ஜெ.ஜெயசிம்ஹன், கலைஞன் பதிப்பகம், பக். 225, விலை 215ரூ. சுதந்திரத்திற்குப் பின் தன் படைப்புகளால் அதிகம் பேசப்பட்டவர் எழுத்தாளர் ஜெயகாந்தன். “நான் நானாக உருவானவன்” என்ற பிரகடனத்துடன்தான் அவரது எழுத்துக்கள் பலரின் மனதைத் தட்டியது. அரசியல், சமூகம், சினிமா, அறிவியல் என்று பல்வேறு துறைகளிலும் அவரது எழுத்துக்கள் ஆட்சி செய்தன என்ற போதும் எந்த இயக்கத்திற்கும் கட்டுப்படாமல் சுதந்திரப் பறவையாய், தன்னையே ஒரு இயக்கமாகக் கொண்டவர் ஜெயகாந்தன். இவற்றையெல்லாம் உள்ளடக்கிய அவரது வெளிவராத கட்டுரைகள் பலவற்றை அவரது […]

Read more

உணவே மருந்து

உணவே மருந்து, சீத்தலைச் சாத்தன், ஒப்பில்லாள் பதிப்பகம், பக். 172, விலை 125ரூ. இந்நூலாசிரியர் வங்கி மேலாளராக இருந்து ஓய்வுபெற்றவர். இவர் சித்த வைத்தியராக இல்லாவிட்டாலும், சித்த மருத்துவம் குறித்த பழைய ஓலைச் சுவடிகளைத் தேடிப் பிடித்து, அவற்றிலிருந்து – அதுவும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களில் உள்ள மருத்துவ விஷயங்களைத் தொகுத்து, எளிய தமிழ்நடையில் இந்நூலில் எழுதியுள்ளார். குறிப்பாக, நாம் உட்கொள்ளும் உணவுப் பொருட்களில் உள்ள மருத்துவக் குணங்களை அறிந்துகொண்டு, அவற்றை நம் உடல்நிலைக்கும், சுகாதாரத்திற்கும் ஏற்ப முறையாக எடுத்துக் கொண்டால் […]

Read more

பாலி முதல் மியான் வரை

பாலி முதல் மியான் வரை, மாத்தளை சோமு, தமிழ்க்குரல் பதிப்பகம், பக். 320, விலை 250ரூ. பயணக்கட்டுரைகளில் இந்நூல் சற்று வேறுபட்டது. பாலி, கம்போடியா, தாய்லாந்து, லாவோஸ், பர்மா ஆகிய நாடுகளில் பயணம் செய்து, அங்கு புலம் பெயர்ந்த தமிழின் தொன்மங்களையும் தமிழரையும் கண்டு, அவை தந்த அனுபவங்களையும், செய்திகளையும் நம்மோடு பகிர்ந்து கொள்ளும் பாணி சிறப்பானதாகும். நன்றி: குமுதம், 24/5/2017.

Read more

அறியாமையிலிருந்து களங்கமின்மைக்கு

அறியாமையிலிருந்து களங்கமின்மைக்கு, ஓஷோ, தமிழில் சுவாமி சியாமானந்த், கண்ணதாசன் பதிப்பகம், பக். 336, விலை 200ரூ. அமெரிக்காவில் ஓஷோ தனது சீடர்களுடன் இருந்த வாழ்க்கை, அரசியல்வாதிகளை நடுங்க வைத்த அவரது உரை, மக்களை மாற்றிய அவரது சிந்தனைகள், அவரை எதிர்த்த அரசியல்வாதிகளுக்கு தனது சொற்பொழிவுகளில் பதில் அடி கொடுத்து, அதற்கான கேள்விகள், பதில்கள் என்று ஓஷோவிற்கே உரிய கடுமையான அதே சமயம் நகைச்சுவையான பேச்சினை உள்ளடக்கியது இந்நூல். நன்றி: குமுதம், 24/5/2017.

Read more

என்னைப் பிரமிக்க வைத்த பிரபலங்கள்

என்னைப் பிரமிக்க வைத்த பிரபலங்கள், இயக்குநர் பேரரசு, கற்பகம் புத்தகாலயம், பக்.160, விலை ரூ.110. கவிஞர் வைரமுத்து எழுதிய ‘;இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்39’ நூலை நினைவூட்டி, நம் கண்களை ஈரமாக்குகிறது இயக்குநர் பேரரசு எழுதியிருக்கும் இந்த நூல். நாட்டரசன் கோட்டையில் பிறந்த பேரரசுவுக்கு, சினிமாவில் உதவி இயக்குநராக வேண்டும் என்று ஆசை. அவரின் தந்தை கூறுகிறார்: ‘ஓராண்டு காலம் முயற்சி செய். வாய்ப்பு கிடைக்காவிட்டால் திரும்பி வந்துவிடு, வெளிநாட்டு வேலைக்கு அனுப்ப பாஸ்போர்ட் எடுத்து வைச்சிருக்கேன 39;39’ என்கிறார். இப்படியொரு நிபந்தனையோடு சென்னைக்கு வந்த பேரரசு, […]

Read more

ஆடி காத்து

ஆடி காத்து, ரா. லட்சுமணன், விலை 100ரூ. மனதைத் தொடும் சிறுகதைகள் கொண்ட புத்தகம். நூலாசிரியர் ரா.லட்சுமணன் பாராட்டுக்குரியவர். இந்த நூல் 2014-2015-ம் ஆண்டுக்கான சிறந்த படைப்பாக தமிழக அரசின் ஆதி திராவிடர் நலத்துறை கலைப்பண்பாட்டுத் துறையால் தேர்வு செய்யப்பட்டு பரிசு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி: தினத்தந்தி, 19/4/2017.

Read more

அன்றாட அறிவியல் தகவல்கள்

அன்றாட அறிவியல் தகவல்கள், ஆத்மா கே.ரவி, சூர்யா பதிப்பகம், பக்.280, விலை ரூ.175. விசிறி இல்லாமல் விமானம் பறப்பது எப்படி? பாட்டரிகளில் அ, அஅ, அஅஅ என்பது எதைக் குறிக்கிறது? கிரெடிட் கார்டுக்கும், ஸ்மார்ட் கார்டுகளுக்கும் என்ன வித்தியாசம்? மெட்டல் டிடெக்டர் எப்படி துப்பாக்கி போன்றவற்றை இனம் கண்டுபிடித்து அறிவிக்கிறது? டெர்ரா கோட்டா என்றால் என்ன? கார்பன் – 14 டேடிங் என்றால் என்ன? மணல் கண்ணாடியாவது எப்படி? விமானத்தின் உடல் பகுதி எதனால் கட்டப்படுகிறது? எக்ஸ்ரே முதுகுக்குப் பின்னால் இருந்து எடுக்கப்படுவது ஏன்? கேடிஎம் […]

Read more

மலையாளம் தமிழ் இலக்கிய மொழி பெயர்ப்புகள்

மலையாளம் தமிழ் இலக்கிய மொழி பெயர்ப்புகள், ப.விமலா, காவ்யா, பக்.342, விலை ரூ.340. மலையாளத்திலிருந்து தமிழில் நிறைய நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. மொழிபெயர்ப்பாளர்களும் பலர் இருக்கின்றனர். அவர்களில் குளச்சல் மு.யூசுப், குறிஞ்சிவேலன், சிற்பி பாலசுப்பிரமணியம் ஆகிய மூவரின் 55 மொழிபெயர்ப்பு நூல்களை மட்டுமே இந்நூல் ஆய்வுக்கு எடுத்துக் கொள்கிறது. மலையாளத்தின் புகழ்மிக்க எழுத்தாளர்களான தகழி சிவசங்கரபிள்ளை, வைக்கம் முகம்மது பஷீர், எம்.டி.வாசுதேவன் நாயர், மலையாற்றூர் இராமகிருஷ்ணன், எஸ்.கே.பொற்றேகாட், ஓ.என்.வி.குரூப், கே.சச்சிதானந்தன் உட்பட பல எழுத்தாளர்களின் படைப்புகளைப் பற்றிய விரிவான அறிமுகம் வியக்க வைக்கிறது. என்னவிதமான படைப்புகள் […]

Read more

திருக்குறளை ஏன் இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்?

திருக்குறளை ஏன் இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்?, பதிப்பாசிரியர்கள் டாக்டர் ந.வேலுசாமி, டாக்டர் மோசசு மைக்கேல் பாரடே, ‘யுஎம்ஐ’ யூனிக் வெளியீடு, விலை 150ரூ. திருக்குறளை இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி தமிழறிஞர்களும், பேராசிரியர்களும் எழுதிய கட்டுரைகள் இந்த நூலில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி, 19/4/2017.

Read more

பழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்,

பழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள், முனைவர் க. மங்கையர்க்கரசி, லாவண்யா பதிப்பகம், விலை 140ரூ. பழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் கருத்துகள் இடம் பெற்றுள்ளன என்பதை முனைவர் க. மங்கையர்க்கரசி இந்த நூலில் ஆய்வுக் கண்ணோட்டத்தில் அலசி இருக்கிறார். மருத்துவயியல், கருவியல், மரபியல், இயற்பியல், அணுவியல், கணிதவியல், வானியல் என்பன போன்ற 12 தலைப்புகளில் தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்ற அறிவியல் சிந்தனைகள் தொகுக்கப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி, 19/4/2017.

Read more
1 2 3 4 5 9