ஆடிப்பாவை

ஆடிப்பாவை, ப. தமிழவன், எதிர் வெளியீடு, பக்.408, விலை ரூ.350. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு பெரும்பாலான மக்களின் மனங்களில் மின்னிக் கொண்டிருந்த நம்பிக்கை நட்சத்திரங்கள் மண்ணில் உதிர்ந்து கிடக்கும் காலம் இது. அப்போதைய சமூகப் பிரச்னைகள் இன்னும் தீர்வு காணப்படாமல் இப்போதும் தொடர்கின்றன. இப்போது பேசப்படும் மாநில உரிமைப் பிரச்னை, இந்தித் திணிப்பு எதிர்ப்பு, இப்போதும் நடைபெறும் சாதி வெறிக் கொலைகள்… என தீர்க்கப்படாத பிரச்னைகள் உக்கிரமடைந்திருக்கின்றன. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம், அவற்றை நடத்திய அரசியல் கட்சியினரின் செயல்கள், […]

Read more

அ.ச.ஞானசம்பந்தன்

அ.ச.ஞானசம்பந்தன், நிர்மலா மோகன், சாகித்திய அகாதெமி, பக்.128, விலை ரூ. 50. தமிழறிஞர் என்று பொதுவாக அறியப்படும் அ.ச.ஞானசம்பந்தன் ஒரு தமிழறிஞராக மட்டுமல்லாது, எழுத்தாளர், சொற்பொழிவாளர், திறனாய்வாளர், மொழிபெயர்ப்பாளர் எனப் பன்முகம் கொண்டவர். அவரது அனைத்துத் தமிழ்ப் பணிகளையும் இந்நூலில் சிறப்பாகப் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர். தனது ஒன்பதாவது வயதில் துறையூர் சைவ சமய மாநாட்டில் முதன்முதலில் மேடையேறிப் பேசினார் அ.ச.ஞா. அதனைத் தொடர்ந்து பதினைந்தாவது வயதில், தூத்துக்குடியில் வ.உ.சி. ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் ரா.பி. சேதுப்பிள்ளை உள்ளிட்ட தமிழறிஞர்கள் பலருடன் அ.ச.ஞா.வும் உரையாற்றிப் […]

Read more

விவசாயியை வாழவிடு

விவசாயியை வாழவிடு, விவசாயின் அழிவு சமூகத்தின் பேரழிவு, மக்கள் அதிகாரம், விலை 10ரூ. விவசாய வருமானத்தைக் கொண்டு வாழ்க்கைச் செலவுகளைச் சமாளிப்பதற்கு வாய்ப்பே இல்லை என்ற நிலையில், விவசாயச் சங்கங்கள் முன் வைக்கும் கடன் தள்ளுபடி, நதிநீர் இணைப்பு, நிவாரணங்கள் முதலான கோரிக்கைகளால் நிரந்தரத் தீர்வுகள் ஏற்படாது. எனவே, தற்போதைய விவசாயத்தின் மோசமான நிலைக்குக் காரணமாக இருக்கும் அரசின் விவசாயக் கொள்கைகளை மறுபரிசீலனை, செய்ய வேண்டும், நிலச் சீர்த்திருத்தங்கள், பசுமை புரட்சி என்று முன்னெடுத்த திட்டங்கள் தோல்வியைத் தழுவியுள்ள நிலையில், விவசாயம் சார்ந்த தொழில் […]

Read more

நன்னயம்

நன்னயம், வசீகரன், மின்னல் கலைக்கூடம், விலை 250ரூ. சிறுபத்திரிகையாளர், கவிஞர் என அறியப்பெற்ற வசீகரன் எழுதிய 83 குறுங்கட்டுரைகளின் தொகுப்பு இது. 30 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட கட்டுரைகள் என்றாலும்கூட, இன்றைக்கும் வாசிக்கையில் கட்டுரைகளின் பொருண்மையும், எளிமையும் வசீகரிக்கவே செய்கின்றன. மாற்றங்களும் தடுமாற்றங்களும், கேட்பவர்களும் கேளாதவர்களும், மலட்டுக் காரணங்கள் என ஒவ்வொரு கட்டுரையும் ஒரு வாழ்க்கை நெறியைச் சுருங்கக்கூறி விளங்க வைக்கின்றன. நூலாசிரியரின் தொடர் புத்தக வாசிப்பும், பத்திரிகை அனுபவமும் கட்டுரைகளின் உருவாக்கத்துக்குக் கை கொடுத்துள்ளன. நன்றி: தி இந்து, 9/9/2017.

Read more

வாழ்ந்தவர் கெட்டால்

வாழ்ந்தவர் கெட்டால், க.நா. சுப்ரமண்யம், நற்றிணை பதிப்பகம், விலை 60ரூ. ‘எனக்கு 200, 600 பக்கங்கள் என்று நாவல்கள் எழுதுவதைவிட, சிறிய சிறிய நாவல்கள் எழுதுவதில் ஒரு அலாதியான திருப்தி’ என்று சொல்லும் க.நா.சு. எழுதிய, 75 பக்கங்களே கொண்ட நாவல் இது. நாவலின் பரப்பும், அதில் வலம்வரும் பாத்திரங்களும் நிகழ்வுகளும்கூட மிகக் குறைவு. ஆனாலும், நாவலை வாசிக்கும்போது வாசகன் பெறும் சுகமான அனுபவம் நம்மைப் பெரும் வியப்பிலாழ்த்துகிறது. கதைதக்களனில் புதிய உலகம், புதிய பாணி எனத் தொடர்ந்து தனது நாவல்களில் புதுமை படைத்துவந்த […]

Read more

கார்காலம்

கார்காலம், என்.சொக்கன், கிழக்கு பதிப்பகம், விலை 100ரூ. மென்பொருள் வல்லுநராகவும், எழுத்தாளராகவும் அறியப்பட்ட என். சொக்கன், திருமணத்துக்குப் பிறகு தனக்கு ஏற்பட்ட பயண அனுபவத்தையும் பிரிவின் வலிமையையும் விறுவிறுப்பான மொழிநடையில் எழுதியுள்ளார். எப்போதும் முகம் பார்த்தபடியே அருகிருக்கும் கணவன் – மனைவி இருவரில், யார் ஒருவரேனும் சற்றே பிரிந்து சென்று, மீண்டும் கூடுகையில் அன்பின் நெருக்கம் இன்னும் அதிகமாவது நிச்சயம். பயண நாட்களின் அனுபவங்களை நாட்குறிப்பில் எழுதுவதுபோல் பதிவுசெய்துள்ள இந்நாவல், வெளியூர் பயணம் முடிந்து கார்காலத்தில் வீடு திரும்பாதவர்களின் பிரிவின் வலியை மெல்லிய குரலில் […]

Read more

பியாண்ட் டவுட் – எ டோஸியர் ஆன் காந்தி’ஸ் அசாசினேஷன்

பியாண்ட் டவுட் – எ டோஸியர் ஆன் காந்தி’ஸ் அசாசினேஷன், தொகுப்பு அறிமுகவுரை டீஸ்டா செடல்வாட், தூலிகா புக்ஸ், விலை 550ரூ. எம்மானை வீழ்த்திய மாயமான்! இந்திய நாட்டின் விடுதலைக்கு முன்பாக வேற்றுமைகளைக் கடந்து கோடானு கோடி மக்களை அணி திரட்டிய அண்ணல் காந்திக்கு எதிரான உருவான விஷமிக்க கசப்புணர்வு, அவர் காலம் எல்லாம் உறுதிபட முன்வைத்த கருத்துகளை அனைத்தையும் மறுதலித்தது ஆகிய அனைத்தையும் நினைவுபடுத்திக் கொள்வதன் மூலமே அண்ணலின் படுகொலையின் பின்னேயுள்ள அரசியல் தன்மையை நம்மால் உணர முடியும். கொலையுண்டவரின் மீது பழி […]

Read more

கரும்புத் தோகையில் கருப்புத் தங்கம்

கரும்புத் தோகையில் கருப்புத் தங்கம், எஸ். மனோகரன், வள்ளலார் பதிப்பகம், விலை 60ரூ. கரும்பாய் இனிக்கிறது! கரும்புச் சாகுபடியைத் திட்டமிட்டும் இலகுவாகவும் செய்வது எப்படி என்பதை எளிதாக விளக்கும் நூல் இது. கரும்பு விவசாயத்தில் நூலாசிரியருக்கு உள்ள 45 ஆண்டுகால அனுபவத்தின் தொகுப்பு இந்த நூல். கரும்புத் தோகையை எரித்துச் சூழலை மாசுபடுத்துவதுடன், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள எரிபொருளை வீணாக எரிக்கிறோம் என்பதை ஆசிரியர் நன்கு உணர்த்தியிருக்கிறார். தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் 43 சர்க்கரை ஆலைகள் உள்ளன. இவற்றுக்காக 7 லட்சம் ஏக்கரில் கரும்பு அறுவடையாகிறது. […]

Read more

பயங்கரவாதி என புனையப்பட்டேன்

பயங்கரவாதி என புனையப்பட்டேன், மொகமது ஆமிர்கான், நந்திதா ஹக்ஸர், தமிழில் அப்பணசாமி, எதிர் வெளியீடு, விலை 200ரூ. பயங்கரவாதி யார்? ‘குண்டுவெடிப்பில் தொடர்புடைய பயங்கரவாதி கைது’ என்று கறுப்புத்துணியால் மூடப்பட்டு போலீஸாரால் இழுத்துச் செல்லப்படும் நபர்களைப் பார்க்கும்போது ‘இரக்கமில்லா பாவி’ என்றெல்லாம் கோபப்படுவோம். ஆனால் அப்படி இழுத்துச் செல்லப்படுபவர்களில் நிரபராதிகளும் உண்டு என்பதையும், போலீஸாரோ, உளவுத் துறையினரோ நினைத்தால் யாரை வேண்டுமானாலும் இதுபோன்ற வழக்குகளில் சிக்க வைக்க முடியும் என்பதையும் நாம் அறிந்திருப்பதேயில்லை. அப்படி சிக்கவைக்கப்பட்ட டெல்லி இளைஞர் மொகமது ஆமிர்கானின் வலி நிறைந்த […]

Read more

ஸ்ரீ காவேரி ரஹஸ்யம்

ஸ்ரீ காவேரி ரஹஸ்யம், தொகுப்பாசிரியர் பி. மகாதேவ அய்யர், அல்லயன்ஸ் கம்பெனி, பக். 320, விலை 400ரூ. 1946-ல் ‘நர்மதா ரஹஸ்யம்’ என்று ஹிந்தியில் வெளியான நூலில், வடநாட்டில் உருவான நர்மதா நதியின் மகிமை குறித்த பல்வேறு விஷயங்கள் தொகுக்கப்பட்டு பலரது கவனத்தைக் கவர்ந்தது. மகிமைகளை தொகுத்து ஒரு நூல் வெளியாக வேண்டும் என்ற ஆவல், காஞ்சி மடத்தின் மஹா பெரியவராக இருந்த மறைந்த ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளுக்குத் தோன்ற, அதன் அடிப்படையில் இந்நூல் உருவானது. ஸ்ரீ காஞ்சி மஹாஸ்மிகளின் ஆசியுடன் 1962-ல் […]

Read more
1 4 5 6 7 8 9