பொதுமக்களும் சட்டங்களும்

பொதுமக்களும் சட்டங்களும், க.ராஜாராம், முல்லை பதிப்பகம், பக். 304, விலை 150ரூ. சட்டசபை அதிகாரங்கள், தனிப்பட்ட சட்டங்கள், சொத்துக்கள் பற்றிய சட்டம், ஒப்பந்தங்களுக்கான சட்டம், கிரிமினல் சட்டம், அவதுாறு சட்டம், சாட்சியங்களுக்கான சட்டம், சிவில், கிரிமினல் நடைமுறைச் சட்டம் என, ஒன்பது பகுதிகளைக் கொண்ட இந்நூல் ஆங்கிலத்தில் ஜி.சி.வெங்கடசுப்பாராவ் எழுதியதின் தமிழாக்கம். கடந்த, 65 ஆண்டு களில் அரசியல் அமைப்புச் சட்டம் முதல், அனைத்து வகைச் சட்டங்களும் பெரும் மாற்றங்களைப் பெற்றுள்ளன. நடைமுறைச் சட்டங்கள், ஒப்பந்தச் சட்டங்கள், சொத்துரிமைச் சட்டங்கள், மாற்றக்கூடிய உண்டியல் சட்டங்கள் […]

Read more

சொல்லில் நிரம்பும் குளம்

சொல்லில் நிரம்பும் குளம், எஸ்ஸார்சி, சொல்லங்காடி, பக்.144 , விலை ரூ.130. நூலாசிரியரின் எட்டாவது சிறுகதைத் தொகுப்பு. இதில் 18 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. பொங்கலுக்குப் படைக்க வாங்கிய கரும்பு வீணாகிறதே என்று அதைக் கடித்துச் சுவைத்து, பல் டாக்டருக்கு ரூ.12 ஆயிரம் அழும் சர்க்கரை வியாதிக்காரனின் கதை ‘சின்னத்தனம் 39’. ஓர் எழுத்தாளர், வட இந்தியக் கவிஞரின் புகழுரைக்கு மயங்கி அவருடைய 100 கவிதைகளை மொழிபெயர்த்து, அதனை தனது கைக் காசைச் செலவழித்து புத்தகமாக வெளியிட வேண்டிய நிர்பந்தத்திலும் சிக்கி அவதிப்படும் கதை […]

Read more

ஊக்குவித்தல் என்னும் மந்திரசாவி

ஊக்குவித்தல் என்னும் மந்திரசாவி, சி.எஸ்.தேவ்நாத், நர்மதா பதிப்பகம், விலை 80ரூ. ஊக்குவிப்பதன் மூலம் ஒருவரிடம் இயல்பாக உள்ள சக்தியைத் துாண்ட முடியும்; அதிகரிக்க முடியும். அவரிடம் உள்ள மிகச் சிறந்தவற்றை வெளிக் கொண்டுவர முடியும். நிறைய படைப்பாளிகள் அப்படித்தான் உருவாக்கப்படுகின்றனர். சாதனைகள் அப்படித்தான் நிகழ்த்தப்படுகின்றன. சமயங்களில் ஊக்குவிப்பு வெளியிலும் கிடைக்கும்; வீட்டிலும் கிடைக்கும். உண்மையில் உங்களுக்கு உள்ளிருந்தும் அதை நீங்கள் பெற முடியும். ஊக்குவிப்பு செய்கிற வேலைகளில் முதன்மையானது, ‘நம்மால் முடியும்’ என்ற உணர்வை ஒருவருக்குள் ஊட்டுவதும் ‘அத்தனை உயர்வுகளுக்கும் நாம் தகுதியானவர்தாம்’ என்ற […]

Read more

உருகும் பூமி உறையும் உயிர்கள்

உருகும் பூமி உறையும் உயிர்கள், நவீன அலெக்ஸாண்டர், அந்தாழை வெளியீடு, விலை 120ரூ. மனித குரங்கின் முன்னிரண்டு கால்களை நடப்பதிலிருந்து விடுவித்து கைகளாக்கிய நாளில் இருந்து தான், இந்த பூமிக்கு எண்ணற்ற நன்மை, தீமைகள் நடக்கத் துவங்கிவிட்டன. லட்சக்கணக்கான ஆண்டுகளாக எத்தனையோ உயிரினங்களை வளர்த்து, பொதுவுடைமையைப் பார்த்துப் பழகிய பூமிக்கு, தான் உருவாக்கும் மனித இனம் தன்னையே கூறுபோட்டு ஆட்டிப்படைக்கும் என்று நினைக்கவே இல்லை போலும். மனித இனம் உருவாவதற்கு முன்னால், ஐந்து மகா பேரழிவுகளைச் சந்தித்த பூமி முற்றிலுமாக அழிந்துவிடவில்லை. இப்போது, ஆறாவதாக […]

Read more

மினராவின் குரல்

மினராவின் குரல், யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், விலை 260ரூ. அல்லாமா இக்பாலின் கவிதைகள் பலவற்றைத் தமிழில் மொழி பெயர்த்தவர். ஐம்பதுகளில் இஸ்லாமிய சிறுகதைகளின் பொற்காலத்தை உருவாக்கியவர்களில் முக்கியமானவர். இஸ்லாமிய பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றை எடுத்துரைக்கும் கட்டுரைகளை எழுதிக் குவித்தவர் முதுபெரும் எழுத்தாளர் ‘மஹதி’. இவர் அண்மையில் மறைந்த கவிக்கோ அப்துல் ரகுமானின் தந்தை ஆவார்.கான்சாகிப் (மருதநாயகம்) பற்றி தமிழில் வெளிவந்த முதல் நூல் இவருடையது. இந்த நூலில் நபி பெருமானாரின் குடும்ப வாழ்வு, அருமறை நிகழ்த்திய அற்புதங்கள், சிறந்த முஸ்லிம் யார்? ரமலான் பெருநாள், குர்ஆனும் […]

Read more

சைவ சித்தாந்த நன்னெறி

சைவ சித்தாந்த நன்னெறி, ச.சௌரிராசன், மணிவாசகர் சிவநெறி அறக்கட்டளை, பக்.528, விலை ரூ. 350. ‘சைவ சமயமே சமயம்39’ என்று கூறிய தாயுமானவர் பாடலில் தொடங்கி, சைவ சமயத்தின் அடிப்படைச் செய்திகள், குரு மரபு, சைவ சித்தாந்த சாத்திரங்கள், மும்மல இயல்பு, பாச நீக்கம், சிவப்பேறு உள்ளிட்ட பல்வேறு செய்திகளையும் பதினைந்து பகுதிகளாகப் பிரித்து விளக்கியுள்ளார் ஆசிரியர். சைவ சித்தாந்தம் குறித்து ஏற்கெனவே அதிகம் சொல்லப்பட்ட செய்திகளை ஓரளவுக்குத் தொட்டுக் காட்டிவிட்டு தாதான்மிய சம்பந்தம், பஞ்ச சக்திகள், அருவ, உருவ, அருவுருவ வடிவங்கள், சுத்தாத்துவிதம், […]

Read more

ஒற்று

ஒற்று, அண்டோ கால்பட், வாசகன் பதிப்பகம், பக்.112, விலை 80ரூ. இந்தச் சின்னஞ்சிறு நாவல் நம்மை உருவாக்கிவிடுகிறது; உலுக்கி விடுகிறது. அம்மாவிடம் மகன் வைத்துள்ள உயர்ந்த அன்பைச் சொல்லும் உன்னதப் படைப்பு இது! ‘அம்மாவுக்கு இப்ப கேன்சர் ரொம்ப அட்வான்ஸ்டு ஸ்டேஜ்ல இருக்கு… அதிகபட்சம் இன்னும் மூணு மாசம் தான். குணப்படுத்துற கட்டத்தை அவங்க தாண்டிட்டாங்க’ என்கிறார் டாக்டர். தாயின் மரணத் தேதியை முன்கூட்டியே அறிந்து, வாழ்வதை விட ஒரு மகனுக்கு வேறு என்ன கொடுமை வாழ்வில் நேர்ந்துவிடும் என்று மகன் அழுகிறான். அம்மாவுக்கு […]

Read more

கும்பலாட்சியிலிருந்து கொடுங்கோன்மைக்கு

கும்பலாட்சியிலிருந்து கொடுங்கோன்மைக்கு, ரவிக்குமார், மணற்கேணி பதிப்பகம், விலை 150ரூ. மதுவெறியை விட ஆபத்தானது மதவெறி! ‘உலகில் எங்கெல்லாம் வகுப்புவாதம் மேலாதிக்கம் பெற்றிருக்கிறதோ, அங்கெல்லாம் அது நாடாளுமன்ற ஜனநாயக முறையை ஒழித்துக்கட்டிவிட்டது. அந்த நாடுகள் யாவும் உள்நாட்டுப்போரில் சிதைந்து சின்னாபின்னமாகிக்கொண்டிருக்கின்றன அதே பாதையில் இந்தியாவையும் இழுத்துச் செல்வதுதான் இங்குள்ள வகுப்புவாத சக்திகளின் திட்டம். அவர்கள் பாகிஸ்தானை எதிரியாகச் சித்திரித்துக்கொண்டிருந்தாலும் அவர்களது நடவடிக்கை அரசியல் ரீதியாக இந்தியாவை இன்னொரு பாகிஸ்தானாக மாற்றுவதற்கே வழிவகுக்கும்’ என்ற முன்னுரையைப் படிக்கும்போதே பதற்றமாக இருக்கிறது. புத்தகமாக இடம்பெற்றுள்ள 44 கட்டுரைகளில் 8 […]

Read more

ஜி.எஸ்.டி. கொள்கையா? கொள்ளையா?

ஜி.எஸ்.டி. கொள்கையா? கொள்ளையா?, ஆதனூர் சோழன், நக்கீரன் பதிப்பகம், பக். 80, விலை 60ரூ. ஜி.எஸ்.டி. மூல காரணம் யார்? கார்ப்பரேட்டுகளின் பினாமி அரசு, பெருமுதலாளியின் எடுபிடியா மோடி? எல்லா பிரச்னைகளுக்கும் ஜி.எஸ்.டி. மருந்தா? வேலையின்மையை அதிகரிக்கும் மோ(ச)டித் திட்டங்கள், ஜி.எஸ்.டி.யும் மருந்து தட்டுப்பாடும், வரி விகிதங்கள் ஆகியவற்றை படங்களுடன் விவரிக்கிறது இந்நூல். நன்றி: தினமலர், 10/9/2017.

Read more

என் வரித்துறைப் பயணமும் வாழ்வும்

என் வரித்துறைப் பயணமும் வாழ்வும், ஆங்கில மூலம் ச.இராஜரத்தினம், தமிழில் ப.காளிமுத்து, திராவிடர் கழக (இயக்க) வெளியீடு, பக்.560, விலை ரூ.600. விருதுநகரில் சாதாரண பின்தங்கிய குடும்பத்தில் பிறந்த நூலாசிரியர், தனது கடின உழைப்பால் இந்திய வருவாய்த்துறையில் ஆணையராகப் பணிபுரிந்தவர். பல்வேறு மாநிலங்களில் பணிபுரிந்தவர். எந்த ஊழலுக்கும் இடம் கொடுக்காமல் நேர்மையாகப் பணிபுரிந்தவர். பல பணியிட மாறுதல்களுக்கு உட்படுத்தப்பட்டவர். வரி ஏய்ப்புச் செய்பவர்களின் பல தந்திரங்களைத் தெரிந்து கொண்டு, அவர்களை வரி செலுத்தச் செய்ய நூலாசிரியர் செய்த பல முயற்சிகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. […]

Read more
1 3 4 5 6 7 9