சிற்பியின் படைப்புத்தளம்

சிற்பியின் படைப்புத்தளம், தே.ஞானசேகரன், காவ்யா, விலை 450ரூ. இலக்கியம் காலம் தோறும் தன்னைப் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது’ என்று சொல்வர். உருவத்திலும், உணர்விலும், உள்ளடக்கத்திலும் அது எத்தனையோ மாற்றங்களைக் கடந்து வந்திருக்கிறது. அந்த வகையில் கவிதைகளால் தன்னை புதுப்பித்துக் கொண்ட கவிஞர் சிற்பி குறித்து, முழுமையாக அறிந்து கொள்ளும் வகையில் வெளிவந்திருக்கிறது சிற்பியின் படைப்புக்கலை நுால். ஒரு சிறந்த கவிஞனின் அனைத்து பரிமாணங்களும் இலக்கிய உலகிற்கு முறையாக சொல்லப்படவேண்டும் என்ற முயற்சியின் பலன் தான் இந்தப் புத்தகம். சிற்பி படைத்த ‘உத்திகள்’ குறித்தான பாலாவின் […]

Read more

வேதாந்த மரத்தில் சில வேர்கள்

வேதாந்த மரத்தில் சில வேர்கள்,  கா.வி. ஸ்ரீநிவாஸமூர்த்தி, சந்தியா பதிப்பகம், பக்.80, விலை ரூ.80. நூற்பெயர் குறிப்பிடும் வேதாந்த மரம் மகாகவி பாரதியாரேதான்! அந்த மகாமரத்தின் சில வேர்களை மட்டுமே கண்டு இன்புற்று இந்த புத்தகத்தில் அடங்கியுள்ள கட்டுரைகளைப் படைத்ததாக ஆசிரியர் கா.வி.ஸ்ரீநிவாஸமூர்த்தி குறிப்பிடுகிறார். இந்நூலில் இடம் பெற்றுள்ள ஏழு மணியான கட்டுரைகளைச் சிந்தனைக் கோவைகள் எனலாம். “மந்திரம் போல் வேண்டுமடா என்ற கட்டுரையில், சொல் என்பது உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளும் வெறும் ஊடகம் அல்ல, அதற்கு திடமான உருவமும் செயலும் உண்டு என்பதாக […]

Read more

விலகி நடக்கும் சொற்கள்

விலகி நடக்கும் சொற்கள், ஜி.கார்ல் மார்க்ஸ், எதிர் வெளியீடு, பக்.160, விலை175ரூ. சிந்தையள்ளும் கட்டுரைகள்! ‘அம்மாக்களும், அடையாளச் சிக்கலும்!’ என்ற முதல் கட்டுரையில் ஆசிரியர் சொல்வார்; ‘குழந்தைகள் அழகானவை. பூக்களை போன்றவை. எல்லா உயரிய விஷயங்களைப் போல அவையும் தீவிர கவனத்தைக் கோருபவை. ‘அந்தப் பராமரிப்பின் சுமையை ஏற்க ஆழ்ந்த காதலும், பொறுமையும், புரிந்துணர்வும் வேண்டும். அதற்கு தயாரில்லை எனில் நிகழும் வன்முறைகளைத் தடுக்கவே முடியாது!’ தமிழ் சினிமா: கோடுகளை அழிக்கும் ரப்பர்! என்ற கட்டுரையில் பேசுவார்; ‘‘பொறுக்கித்தனத்தில் ஒரு தீவிர எம்.ஜி.ஆர்., ரசிகனும், […]

Read more

இங்கே நிறுத்தக் கூடாது

இங்கே நிறுத்தக் கூடாது, அ.முத்துலிங்கம், நற்றிணை பதிப்பகம், பக்.128, விலை ரூ.150. நூலாசிரியரின் 12 சிறுகதைகளும் இரண்டு மொழிபெயர்ப்புச் சிறுகதைகளும் அடங்கிய தொகுப்பு.மனைவியின் பெண்ட்லி காரை இரவல் வாங்கி பயணிக்கிறார் பரமேஸ்வரன். பூச்சு வேலை செய்யும் மூசாவை உடன் அழைத்துச் செல்கிறார். அவன் அகதி. இனிமேல் இழப்பதற்கு அவனிடம் ஒன்றுமே இல்லை. பலவிதமான துயரங்கள் நாலா பக்கமும் அழுத்தியபோதும் அவன் நிம்மதியாகத் தூங்கிவிடுகிறான். தன்னை மறந்து ஒரு குழந்தை போல உறங்கும் அவனைக் கண்டு வியந்து நிற்கிறார் பரமேஸ்வரன். இதுதான் நூலின் தலைப்பைக் கொண்டுள்ள […]

Read more

சொல் அல்ல செயல்

சொல் அல்ல செயல்,  அதிஷா,  விகடன் பிரசுரம், பக்.264, விலை ரூ. 215. நமது அன்றாட வாழ்க்கையில் நம்மை நாமே சமரசப்படுத்திக் கொண்டும் நியாயப்படுத்திக் கொண்டும் இது தவறில்லை என்று செய்யும் பல்வேறு செயல்கள் தவறுதான் என்று ஆணித்தரமாக உடைத்துக் காட்டுகிறார் நூலாசிரியர் அதிஷா. உதாரணமாக, நாகரிக உலகில் கடன் அட்டைகள், ஆடம்பர செல்லிடப்பேசிகள் இவற்றை வாங்குவதற்காக கடன் வாங்கும் அவலத்தை நண்பர் ரவியின் தற்கொலை மூலம் உணர்த்துகிறார். வாழ்க்கையில் அனைவரும் தமக்கு விருப்பமானதை விட்டு விட்டு பிறரின் விருப்பத்துக்காக ஓடுவதையும், அதே நேரத்தில் […]

Read more

இன்பம் நல்கும் இசைத்தமிழ்

இன்பம் நல்கும் இசைத்தமிழ், தொகுப்பாசிரியர்: மு.கலைவேந்தன்,  தமிழ் ஐயா வெளியீட்டகம், பக்.368, விலை ரூ.500. கருத்தரங்கக் கட்டுரைகளின் தொகுப்பான இந்நூலில் இசைத் தமிழ் குறித்த 56 கட்டுரைகள் உள்ளன. அவற்றுள் நான்கு ஆங்கிலக் கட்டுரைகள். வேதநாயகம் பிள்ளை, பாபநாசம் சிவன், அண்ணாமலை ரெட்டியார், வேதநாயக சாஸ்திரியார் முதலானோர் வளர்த்த இசைத்தமிழ் பற்றியும், அவர்களது இசைத்திறன் குறித்த தகவல்களையும் சில ஆய்வுக் கட்டுரைகள் எடுத்துரைக்கின்றன. தமிழிசைக்கலை, இசைப் பெயரமைவு, இசைக் கருவிகளின் பெயரமைவு போன்றவற்றை ஒரு கட்டுரை சிறப்பாக விளக்குகிறது. மூன்றாம் நந்திவர்மன் காலத்திய இசைக்கலை […]

Read more

சமூகம் என்பது தீவுகள் அல்ல

சமூகம் என்பது தீவுகள் அல்ல, ஜி.மணிலால், வசந்தா பதிப்பகம், பக்.160, விலை ரூ.200. “இன்றைய மனித வள மேம்பாட்டிற்கு அடிநாதமாய் இருப்பது ஆதிமனிதனின் அறிவார்ந்த ஆற்றலே. “உன்னை நீ நேசி. பிறகு பிறரை நேசிப்பது எளிதாகிவிடும். “எதையும் நம்புவதற்கு எதையும் நம்பாமல் இருப்பதும் ஒரே வழி. “வாழ்க்கை என்பது சமூகநலன் கருதி மேற்கொள்ளப்படும் தியாகமே.”வாழ்க்கைக்கு ஆதாரம் குடும்பம். வீடு செழித்தால் நாடு செழிக்கும். “வாழ்க்கையில் பிறரை வஞ்சித்து, ஏமாற்றி அதன் மூலம் உயர்ந்த நிலைக்கு வருவது என்பது உலகம் முழுவதும் பரவலாகக் காணப்படும் செயல்முறையாகும். […]

Read more

சங்க இலக்கியத்தில் குறிப்பு வினைகள்

சங்க இலக்கியத்தில் குறிப்பு வினைகள் (சொல்லடைவுடன்), சு.அழகேசன், சுதா பதிப்பகம், பக்.996, விலை ரூ.700. தொல்காப்பியம் முதல் இன்றைய இலக்கணங்கள் வரை குறிப்பு வினையின் இலக்கணங்களை இந்நூல் எடுத்துரைக்கிறது. தமிழ் இலக்கணத்தில் வினைகள் தெரிநிலை வினை, குறிப்பு வினை என இருவகைப்படும். வினைகளை வெளிப்படையாக உணர்த்துவன தெரிநிலை வினைகள்; குறிப்பாக உணர்த்துவன குறிப்பு வினைகள். இக்குறிப்பு வினைகள் பெரும்பாலும் காலத்தை உணர்த்துவதாகவே அமையும். தொல்காப்பியர் குறிப்பு வினைகளைப் பயன்படுத்தும்போது, ஆக்கப்பொருள் இல்லாத போதும், ஆகு எனும் வினையைப் பயன்படுத்தியுள்ளார். (எ.கா) நிலைத்து ஆகும்மே, பொருட்டு ஆகும்மே, […]

Read more

அரபு நாடுகளின் அரசியல்

அரபு நாடுகளின் அரசியல், கடற்காகம், முஹம்மது யூசுஃப், யாவரும் பதிப்பகம், விலை: ரூ.395 இராக், குவைத், சவூதி அரேபியா, கத்தார், பஹ்ரைன், அமீரகம், ஓமன், ஈரான் போன்ற அரபு நாடுகளின் அரசியலை இந்நாவல் பேசுகிறது. சுற்றுச்சூழல் போர் என்ற தொழில்நுட்பத்தை வல்லரசு நாடுகள் பயன்படுத்தி, செயற்கை சுனாமி, நிலநடுக்கத்தை உருவாக்குவதை விவரிக்கிறது. வானில் கருமேகம் சூழும்போதெல்லாம், ஈரானிய பார்சி மொழியில் குழந்தைகளுக்குக் கதை சொல்லும் சமீரா டீச்சர் கதாபாத்திரம் ஒரு கவிதை. அரபு மண் என்றாலே பாலைவனம், ஒட்டகம், வறட்சி என்றே பழக்கப்பட்ட நமக்கு அதன் இன்னொரு முகத்தைப் பற்றி […]

Read more

காந்தி ராமசாமியும் பெரியார் ராமசாமியும்

காந்தி ராமசாமியும் பெரியார் ராமசாமியும், ப.திருமாவேலன், பரிசல் வெளியீடு, விலை: ரூ.140 காமராஜருக்கு முன்பே திராவிட இயக்கத்தால் தீவிரமாக ஆதரிக்கப்பட்ட காங்கிரஸ் முதல்வர், ஓமந்தூர் ராமசாமி. இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்தியதாலும், ஆலய நிர்வாகங்களில் அரசின் கண்காணிப்பை வலுப்படுத்தியதாலும் உள்கட்சிக்குள்ளேயே எதிர்ப்புகளைச் சந்தித்த அவர், உள்கட்சிப் போட்டியில் தோல்வியடைந்து, முதல்வர் பதவியிலிருந்து விலக நேர்ந்தது. தீவிர காந்தியராகவும் பழுத்த ஆன்மீகவாதியாகவும் விளங்கிய ஓமந்தூராரை ஆதரித்து, 1948 ஏப்ரலில் ‘திராவிட நாடு’ இதழில் அண்ணா எழுதிய இரண்டு தலையங்கங்கள் வகுப்பு துவேஷத்தைத் தூண்டிவிடுவதாய்க் குற்றஞ்சாட்டப்பட்டு ரூ.3,000 பிணை கோரப்பட்டது. அந்த […]

Read more
1 5 6 7 8 9