அரசாங்க உத்தியோகம் பெறும் 12 ராசிகள்

அரசாங்க உத்தியோகம் பெறும் 12 ராசிகள்,  வி.ரவி, கற்பகம் புத்தகாலயம்,  பக்.296, விலைரூ.250; குறிப்பிட்ட ஜாதகத்துக்குரிய ஒருவருக்கு அரசாங்க உத்தியோகம் கிடைக்குமா கிடைக்காதா? என்ற கேள்விக்கு ஜாதகத்திற்குத் தகுந்தாற்போல் காரணத்தை அறிந்து, பரிகார சாந்தி செய்து, இறைவனை வழிபட அவர்களின் குறைகள் தகர்க்கப்பட்டு அரசாங்க உத்தியோகம் கிடைக்கும் என்பதை கிரக நிலைகள், தடைகள் உள்ளிட்ட பல்வேறு உதாரணங்களுடன் இந்நூல் விளக்குகிறது. தனியார் வேலை, சுய தொழில் முன்னேற்றம் பெறும் ஜாதகங்கள் மற்றும் பற்பல ஜோதிட ரகசியங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. ஜாதகக் கணக்கை அறிதல், ஜாதகக் கலையின் […]

Read more

தமிழ்வாணனின் மர்ம நாவல்கள் – பாகம் 5

தமிழ்வாணனின் மர்ம நாவல்கள் – பாகம் 5, தமிழ்வாணன், மணிமேகலை பிரசுரம், விலைரூ.440 எளிய தமிழ் நடையில் புதினங்கள் படைத்த பெருமைக்கு உரியவர் தமிழ்வாணன். துப்பறியும் புதினங்களுக்கு முன்னோடியாக கொடிகட்டிப் பறந்தவர். மர்ம நாவல்கள், துப்பறியும் நாவல்கள் என்று ஆர்வத்தைத் துாண்டும் எழுத்து நடைக்குச் சொந்தக்காரர். சங்கர்லால் என்னும் துப்பறியும் பாத்திரத்தை உருவாக்கிப் பல நாவல்களைப் படைத்தவர், சொந்தப் பெயரிலேயே, ‘தமிழ்வாணன் துப்பறிகிறார்’ என்றும் படைத்துள்ளார். பெர்லின், டோக்கியோ, சிகாகோ முதலான அயல்நாட்டு நகரங்களின் பெயர்களை, தமிழகத்தில் மூலை முடுக்குகளுக்கு எல்லாம் அறிமுகம் செய்தவர் […]

Read more

பிருந்தாவன் யாத்திரை

பிருந்தாவன் யாத்திரை ,  சுவாமி கமலாத்மானந்தர்,  ஸ்ரீராமகிருஷ்ண மடம், பக்.279, விலை ரூ.200.    ஸ்ரீகிருஷ்ணர் பல லீலைகளை நிகழ்த்திய புனித இடம் பிருந்தாவனம் பிருந்தாவன் தொடர்பான அனைத்து விவரங்களையும் தருவதுடன், அங்கிருக்கும் கோயில்கள், மலைகள், புனித தீர்த்தங்கள் என அனைத்தையும் பற்றிய விவரங்களையும் வண்ணப் படங்களுடன்மிக உயர்ந்த வழுவழுப்பான தாளில் தருகிறது இந்நூல். ஸ்ரீகிருஷ்ணர், ராதாராணி, கோபிகைகள் ராசலீலை நடந்த போதெல்லாம் ஸ்ரீகிருஷ்ணரின் குண்டலினி சக்தி சகஸ்ராரத்தை அடைந்திருந்தது என்று பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் கூறியதைப் பதிவிட்டதுடன், ராசலீலை சமயத்தில் எப்போதும் ஸ்ரீகிருஷ்ணரின் மனம் […]

Read more

மனம் அது செம்மையானால்?

மனம் அது செம்மையானால்? , க. மணி, அபயம் பப்ளிஷர்ஸ், பக்: 160, விலை ரூ.200. மனம் என்பது என்ன? அது எப்படிச் செயல்படுகிறது? மனத்தை எப்படிச் செம்மையாக்குவது? மனத்தின் நோய் எது? அதிலிருந்து எப்படி விடுபடுவது? ஒருவர் இறந்துவிட்டால் அவருடைய மனம் என்னவாகும்?இத்தனை கேள்விகளுக்கும் தத்துவரீதியாகவும் அறிவியல்ரீதியாகவும் இந்நூலில் விளக்கங்களை அளித்துள்ளார் நூலாசிரியர். மேல்மனம் என்பதையும் ஆழ்மனம் என்பதையும் வேறுபடுத்தி விளக்கியுள்ளார் (மேல்மனம் அறிவுமயமானது; ஆழ்மனம் உணர்வு மயமானது). நம் உயிர்தான் நம் மனம் என்பதை தெளிவாக விளக்குகிறார்.  மனம் உடலில் உள்ளவரை […]

Read more

குணங்குடி மஸ்தான் சாஹிப்

குணங்குடி மஸ்தான் சாஹிப்,  நாகூர் ரூமி,  கிழக்கு பதிப்பகம், பக்.96. விலை ரூ.120. இந்திய சூஃபிகள் வரிசையில் வெளியிடப்பட்டுள்ள நூல், குணங்குடி மஸ்தான் சாஹிப். இஸ்லாமியராக இருந்தபோதிலும் மதங்களுக்கு அப்பாற்பட்ட ஞானியாக வாழ்ந்து மறைந்தவர் சுல்தான் அப்துல் காதிர் என்ற இயற்பெயரைக் கொண்டவரான குணங்குடி மஸ்தான் சாஹிப். அவரை மிகச் சரியாகப் புரிந்துகொண்டு கிடைக்கப் பெற்ற தரவுகளைத் தேவையானஅளவு பயன்படுத்தித் தக்க விதத்தில் முன்வைத்துள்ளார் ரூமி. அரபு உலக ஞானிகளுடன் ஒப்பிட்டுத் தொடங்கும்நாகூர் ரூமி, மருத்துவமும் மகத்துவமும் தமிழும் கலந்துறையும் சித்தராக மஸ்தான்பார்க்கப்படுவதைக் குறிப்பிடுகிறார். […]

Read more

சுக்கா… மிளகா… சமூக நீதி?

சுக்கா… மிளகா… சமூக நீதி?  ஒரு மிக நீண்ட நெடிய வரலாறு,  மருத்துவர் ச.ராமதாசு, செய்திப்புனல், பக்.512,  விலை ரூ.500; இட ஒதுக்கீடு என்றால் என்ன? இந்த உரிமையை நிலைநாட்ட எவ்வளவு போராட்டங்களும் தியாகங்களும் செய்யவேண்டி வந்தது என்பதை இந்நூல் விளக்குகிறது. ஒட்டுமொத்த இந்தியாவின் இடஒதுக்கீட்டு வரலாற்றையும் குறிப்பாக, கேரளா-தமிழ்நாடு-கர்நாடகா- ஆந்திரப்பிரதேசம் ஆகியவற்றின் இட ஒதுக்கீட்டிற்கான வரலாற்றையும் எழுதியிருக்கிறார். பிரிட்டிஷ் ஆட்சியில் பின் தங்கியோர் கல்வி மேம்பாட்டுக்காக 1885-இல் அளிக்கப்பட்ட நிதி உதவி; நீதிக்கட்சி ஆட்சியில் 1927-இல் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்துக்கான ஆணை வெளியிடப்பட்டது; 1935-இல் […]

Read more

எழுபதுகளில் தமிழ் இலக்கிய வளர்ச்சி (1970-1980)

எழுபதுகளில் தமிழ் இலக்கிய வளர்ச்சி (1970-1980), அ.பிச்சை, கபிலன் பதிப்பகம், பக்.352, விலை ரூ.350. 1970 முதல் 1980 வரையிலான பத்தாண்டுகளில் தமிழ் இலக்கியத்துறையில்கவிதை, சிறுகதை, நாவல், நாடகம், இதழ்கள், திரைப்படங்கள்,கட்டுரை, இலக்கிய கருத்தரங்கம் ஆகியவற்றில் நிகழ்ந்த வளர்ச்சிகளை, மாற்றங்களை இந்நூல் சிறப்பாகப் பதிவு செய்கிறது. கவிதைத்துறையில் புதுக்கவிதையின் வளர்ச்சி இக்காலகட்டத்தில் மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். கவிஞர்கள் ந.பிச்சமூர்த்தி,சி.மணி,தருமு சிவராம், னக்கூத்தன்,கலாப்ரியா,தமிழ்நாடன்,கங்கைகொண்டான்,மீரா, அப்துல் ரகுமான், ஈரோடு தமிழன்பன், வேழவேந்தன்,ஷண்முகசுப்பையா, நா.காமராசன், சு.மா.சண்முகசுந்தரம், சி.சு.செல்லப்பா,தேவதேவன், பஞ்சு, ஆ.தனஞ்செயன், பாப்ரியா,வைரமுத்து,அபி, மு.மேத்தா, ஞானி உள்ளிட்ட பல கவிஞர்களின் பங்களிப்புகளை […]

Read more

அரசஞ் சண்முகனாரின் தமிழ்ப்பணி

அரசஞ் சண்முகனாரின் தமிழ்ப்பணி, பேரா.கு.ஞானசம்பந்தன்; பக். 368;  விலை ரூ. 370; தமிழ் இலக்கண உலகிலும் இலக்கிய உலகிலும் பெரும்புலவராய்த் திகழ்ந்தவர் சோழவந்தான் அரசஞ் சண்முகனார். இவர் தொல்காப்பிய பாயிர விருத்தி, அன்மொழித்தொகை ஆராய்ச்சி, நுண்பொருள் கோவை, நவமணிக்காரிகை நிகண்டு போன்ற இலக்கண ஆய்வு நூல்களையும், சிதம்பர விநாயகர் மாலை, திருவடிப் பத்து, மாலைமாற்று மாலை, இன்னிசை இருபது, வள்ளுவர் நேரிசை உள்ளிட்ட படைப்பிலக்கியங்களையும் இயற்றியுள்ளார். பாண்டித்துரைத் தேவர் உருவாக்கிய மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார். இவர் மதுரை சேதுபதி பள்ளியில் ஆசிரியராகப் […]

Read more

மணிச்சித்திரத்தாழ்

மணிச்சித்திரத்தாழ், தாழை மதியவன்; தாழையான் பதிப்பகம்,  பக்.158;  விலைரூ.150. மாறுபட்ட சமூகங்களைச் சேர்ந்த இரு இணையர்கள்தான் இந்நாவலின் நாயகர்கள் மற்றும் நாயகியர். அவர்களது காதல், மண வாழ்க்கை, இல்லறம் குறித்த கதை என்றாலும், அதனுள்ளே இருவேறு மதங்களைப் பற்றிய சமூகக் கட்டமைப்புகளையும், அதனால் ஏற்படும் சவால்களையும் விவரித்திருக்கிறார் நூலாசிரியர். காதலின் ஊடே சமகால சமூகப் பிரச்னைகளை அலசும் வகையில் இந்நாவல் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு. பேரன்பாக ஒவ்வொருவரது ஆழ்மனதுக்குள்ளும் நிறைந்திருக்கும் காதல், பேராண்மையாக இந்த மானுடத்தை எப்படி எதிர்கொள்கிறது என்பதுதான் கருப்பொருள். அனுராதா என்னும் […]

Read more

எட்டுத்தொகையும் பண்பாட்டுச் சூழலியலும்

எட்டுத்தொகையும் பண்பாட்டுச் சூழலியலும், முனைவர் ஆ.புஷ்பா சாந்தி, பக்.279, விலை ரூ.280. சங்க இலக்கியங்களை அணுகப் பண்பாட்டுச் சூழலியல் பெரிதும் துணை புரிகிறது. தற்போது பல துறைகளிலும் சூழலியல் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. காரணம், சங்க காலமும் சரி, பண்டைத் தமிழ்ச் சமூகமும் சரி இயற்கையோடு இயைந்த வாழ்வையே கொண்டிருந்தது என்பதற்கான சான்றுகள் சங்க இலக்கியங்களில் உள்ளன. அப்படி இயற்கையோடு இயைந்து வாழ்ந்தால் மட்டுமே மனிதகுலம் செழிக்கும் என்று உறுதியாகச் சொல்கிறார்கள் சூழலியல் கோட்பாட்டாளர்கள். தற்போது உலகம் பல பேரிடர்களைச் சந்தித்து வருகிறது. பேரிடர்களை […]

Read more
1 2 3 4 5