ஏற்றுமதி செய்து பணம் குவிப்பது எப்படி?

ஏற்றுமதி செய்து பணம் குவிப்பது எப்படி?, எம்.ராமச்சந்திரன், முன்னாள் வங்கி ஏற்றுமதி இறக்குமதித் துறைத் தலைமை அதிகாரி,வசந்த் பதிப்பகம், பக். 650, விலை 700ரூ. ஏற்றுமதித் தொழில் என்பது வருமானம் ஈட்டும் தொழில். அதே சமயம் அதைப் பின்பற்ற ஏராளமான விதிகளும், நடைமுறைகளும் உள்ளன. அவற்றை அறிந்து கொள்ள வசதியாக, தமிழில் இந்த நுால் வந்திருப்பது சிறப்பாகும். ஏற்றுமதி – இறக்குமதிக்கான கொள்கை, 2002 – 2007ல் வந்த பின், பலரும் இத்தொழிலில் அதிக முனைப்பு காட்டுகின்றனர். உலக அளவில், 200 நாடுகள் இத்தொழிலில் […]

Read more

அய்யா வைகுண்டர் வாழ்க்கை வரலாறு

அய்யா வைகுண்டர் வாழ்க்கை வரலாறு, நெல்லை கவிநேசன், குமரன் பதிப்பகம், விலை 100ரூ. சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தின் தென் பகுதியில் வாழ்ந்த மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு, சாதிக்கொடுமை தலைவிரித்து ஆடியபோது, சமுதாய சீர்திருத்த எண்ணங்களை மக்களிடம் விதைத்து மறுமலர்ச்சி உண்டாக்கிய பகவான் வைகுண்டரின் வாழ்க்கை வரலாறு மனதைத் தொடும் வகையில் தொகுத்துத் தரப்பட்டு இருக்கிறது. புத்தகத்தில் ஆங்காங்கே பகவான் வைகுண்டரின் அகிலத்திரட்டில் இருந்து சிந்தனையைத் தூண்டும் வாசகங்களைக் கொடுத்து இருப்பது சிறப்பு. நன்றி: தினத்தந்தி, 5/2/19. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027989.html […]

Read more

பேசும் பரம்பொருள் – பகுதி-2

பேசும் பரம்பொருள் – பகுதி-2, சுதா சேஷய்யன், வானதி பதிப்பகம், பக். 480; ரூ.350 ஒவ்வொரு தெய்வத்தின் தோற்றத்தையும், நமது பாரத நாடு எத்தகைய பாரம்பரியத்தைக் கொண்டது என்பதையும் விரிவாகவும், வாசிப்பவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையிலும் கதை மூலம் நூலாசிரியர் விளக்கியுள்ளார். விநாயகரின் ஒவ்வொரு அங்கத்தைப் பற்றியும்,தோப்புக்கரணம் என்பதன் பொருளையும், விநாயகருக்கு ஒற்றைக்கொம்பன் என்ற பெயர் எப்படி வந்தது, இடது கொம்பை விநாயகர் தானே ஒடித்து எழுத்தாணியாக்கிய சம்பவத்தையும் எத்தனை முறை படித்தாலும் திகட்டாதவிதத்தில் அழகுற விளக்கியுள்ளார். இதேபோல வீரம், துணிச்சலுக்கு அதிபதியான துர்க்கை […]

Read more

வாழ்க்கை ஜெயிப்பதற்கே..!

வாழ்க்கை ஜெயிப்பதற்கே..!, ஞானசேகர்; யூனிக் மீடியா, பக்.198, விலை ரூ.160. வாழ்க்கை சவால் நிறைந்தது. அதை எதிர்கொள்வதற்கு பல எளிய வழிகள் உள்ளன என்பதை இந்நூல் எடுத்துரைக்கிறது. ஒவ்வொரு மனிதனும் தன்னிடம் உள்ள ஆற்றலை அறிந்து முன்னேற வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை உணர்த்த கட்டுரையாளர் மிக நேர்த்தியாக பல கருத்துள்ள உண்மை சம்பவங்களையும், கதைகளையும் மிகச் சுருக்கமாக எடுத்துரைத்துள்ளார். இந்நூலில் உள்ள 36 கட்டுரைகளும் தூதன் மாத இதழில் 3 ஆண்டுகள் வெளிவந்ததன் தொகுப்பாகும். இளைய சமுதாயத்தினரை சிந்திக்க வைக்கவும், தோல்விகளைக் […]

Read more

வீரப்பன்

வீரப்பன், நக்கீரன் கோபால், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், பக்.456, விலை ரூ.360; சந்தனக் கடத்தல் வீரப்பனை நூலாசிரியர் சந்தித்துப் பேட்டிகள் எடுத்த சம்பவங்களின் தொகுப்பு, திகில் நாவல் வடிவில் உருவாகியுள்ளது. வீரப்பன் சபாரி சூட் அணிந்து கையைக் கட்டியிருக்கும் பழைய போட்டோ மட்டுமே பத்திரிகைகளில் வெளிவந்து கொண்டிருந்த காலகட்டத்தில், தலைப்புச் செய்தியில் இடம் பெறும் வீரப்பனின் புதிய போட்டோவை தனது பத்திரிகையில் பிரசுரிக்க நூலாசிரியர் நிருபர் குழுவை அனுப்புவதில் தொடங்கும் விறுவிறுப்பு, நூலின் கடைசிப் பக்கம் வரை நீடிக்கிறது. வீரப்பனைச் சந்திக்க இரண்டரை நாள் 300 […]

Read more

ஏற்றுமதி செய்து பணம் குவிப்பது எப்படி?

ஏற்றுமதி செய்து பணம் குவிப்பது எப்படி?, எம்.ராமச்சந்திரன், வசந்த்பதிப்பகம், பக்.656, ரூ.700. ஏற்றுமதி தொழில் செய்வது தொடர்பான அனைத்து தேவையான விவரங்களும் அடங்கிய நூல். ஏற்றுமதி தொழில் செய்வதற்கு செய்ய வேண்டியவைகளான நிறுவனப் பெயர் அமைப்பது, அந்த நிறுவனம் பிரைவேட் நிறுவனமா அல்லது, பார்ட்னர்ஷிப்பா என்று முடிவு செய்வது, பான் கார்டு வாங்குவது, வங்கியில் கரண்ட் அக்கவுண்ட் தொடங்குவது, வங்கியில் கடன் வாங்குவது, ஏற்றுமதி பொருளுக்கு இன்சூரன்ஸ் எடுப்பது உட்பட பல அடிப்படை விஷயங்கள் தெளிவாக விளக்கப்படுகின்றன. எந்தெந்தப் பொருட்களை ஏற்றுமதி செய்யலாம், மதிப்பு […]

Read more

வைணவமும் வைணவத் திருத்தலங்களும்

வைணவமும் வைணவத் திருத்தலங்களும், எஸ்.ஸ்ரீகுமார், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், விலை 420ரூ. உலகின் மிகப் பழமையான சமயங்களில் ஒன்றான வைணவ சமயத்தின் தனித்துவங்கள், அவை தொடர்பான விழாக்கள், சடங்குகள், சம்பிரதாயங்கள், ஆலய வழிபாடு, பன்னிரு ஆழ்வார்கள், வைணவ பெரியோர்கள், குரு பரம்பரை ஆகிய அனைத்தும் மிக விரிவாக இந்த நூலில் தரப்பட்டுள்ளன. அத்துடன் ஆழ்வார்களால் பாடப்பெற்ற 108 வைணவ திருத்தலங்கள், அவை தொடர்பான வரலாறு, அந்த ஆலயங்கள் அமைந்து இருக்கும் இடம், அவற்றுக்கு எப்படிச் செல்வது என்பது போன்ற அனைத்து பயனுள்ள தகவல்களும் இதில் […]

Read more

நதிபோல ஓடிக்கொண்டிரு

நதிபோல ஓடிக்கொண்டிரு, இரா.காயத்ரி, தினத்தந்தி பதிப்பகம், விலை 100ரூ. தன்னிடம் உள்ள அளப்பரிய ஆற்றலை உணர முடியாமல், சமூக வலைத்தளங்கள், ஊடகங்கள், மேற்கத்திய கலாச்சாரங்களின் தாக்கங்கள் இன்றைய இளைஞர்களைத் திசை திருப்புகின்றன. அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு இந்த நூலை பேராசிரியர் முனைவர் இரா. காயத்ரி படைத்துள்ளார். “சுமைகளைக் கண்டு நீ துவண்டு விடாதே இந்த உலகத்தைச் சுமக்கும் பூமியே உன் காலடியில்தான்” “நீ விழுந்தபோதெல்லாம் தாங்கிப் பிடித்த கை நீ மனம் உடையும் போதெல்லாம் தட்டிக் கொடுக்கும் கை தனியே […]

Read more

காலனி ஆட்சியில் நல வாழ்வும் நம் வாழ்வும்

காலனி ஆட்சியில் நல வாழ்வும் நம் வாழ்வும், டாக்டர் சு. நரேந்திரன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக்.300, விலை ரூ.250. காலனி ஆதிக்கத்தின்போது நிகழ்ந்த அரசியல் மற்றும் சமூக மாற்றங்கள் குறித்து நூற்றுக்கணக்கான நூல்கள் வெளிவந்திருக்கின்றன. ஆனால், அந்தக் காலகட்டத்தில் மருத்துவத் துறை எவ்வாறு இருந்தது என்பதை பதிவு செய்யும் படைப்புகள் பெரிய அளவில் வெளியாகவில்லை. அந்தக் குறையை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த நூல் அமைந்துள்ளது. சங்ககாலம் முதல் சமகாலம் வரை மருத்துவம் கடந்த வந்த பாதையை தரவுகளுடன் எடுத்துரைக்கிறார் நூலாசிரியர். […]

Read more

கருத்தியல் பற்றிய சிந்தனைகள்

கருத்தியல் பற்றிய சிந்தனைகள், தேவி பிரசாத் சட்டோபாத்தியாய, தமிழில்: சே.கோச்சடை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி)லிட்., பக்.204, விலை ரூ.170. இந்தியப் பண்பாட்டு மரபியலில் ஆக்க அறிவியல், கணிதம், வானவியல், மருத்துவம் ஆகியவை உருவாகி வளர்ந்தமை பற்றி இந்நூல் கூறுகிறது. அதேபோன்று ஏற்கெனவே உருவாகி வளர்ந்திருக்கும் இந்தியாவின் பகுத்தறிவு மரபு, செயலறிவுக் கூறுகள், மெய்யியல், அறிவியல் ஆகியவற்றில் நாம் மேலும் வளர்த்தெடுக்க வேண்டியவை பற்றியும் இந்நூல் கூறுகிறது. பண்டைய இந்தியாவின் செழுமையான அறிவியல், பகுத்தறிவு வளர்ச்சி, ஆதிக்க சக்திகளின் திட்டமிட்ட மெய்யியல் பரப்பலால் […]

Read more
1 239 240 241 242 243 505