நின்று துடித்த இதயம்

நின்று துடித்த இதயம், பெண்ணும் இருதய அறுவை சிகிச்சையும், அகிலா, ஐரிஸ் பதிப்பகம், விலை 100ரூ. மரணத்தின் விளிம்பைத் தொட்டு மீண்ட அனுபவம் இதய நோய் அறுவை சிகிச்சைக்குள்ளானது குறித்த தனது அனுபவங்களை ஒருவித சுயஎள்ளலுடன் எழுதியிருக்கிறார் கவிஞரும் சிறுகதையாளருமான அகிலா. இதய நோய் என்றவுடன் அய்யோ என்று பயந்துவிடாமல், அதை எப்படி சாதுர்யமாக எதிர்கொண்டார் என்பதை ‘நின்று துடித்த இதயம்’ நூலில் பதிவு செய்துள்ளார். பெண்ணுக்கே உரித்தான மனத்துணிவுடன் தனது உடல், மனப் பிரச்சினைகளை எதிர்கொண்டது குறித்து இயல்பான மொழியில் எழுதியுள்ளார். பைபாஸ் […]

Read more

ஓஷோ 1000 ஒரு ஞானியின் தீர்க்க தரிசனம்

ஓஷோ 1000 ஒரு ஞானியின் தீர்க்க தரிசனம், மு.அப்பாஸ் மந்திரி, நர்மதா பதிப்பகம், பக். 272, விலை 140ரூ. இன்றைய அறிவியல் உலகத்தில், மனித வாழ்க்கை பரபரப்பான சூழ்நிலையோடு ஓடிக் கொண்டிருக்கிறது. மனித எண்ணங்கள் அனைத்தும் தன்னுடைய குடும்பம், வேலையால் வரக்கூடிய வருமானம், குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கை என்னவாகும் என சிந்தித்துக் கொண்டே ஒவ்வொரு நாளும் நகர்கிறது. என்ன தான் வாழ்க்கையை சிக்கனமாக ஓட்டினாலும், வாழ்க்கையில் என்ன நடக்குமோ அது நடக்கத்தானே போகிறது என நினைப்போருக்கு இந்த நுால் ஒரு அற்புத மருந்து. இந்த […]

Read more

நாளும் நலம் நாடி

நாளும் நலம் நாடி, சி.அசோக், மணிமேகலை பிரசுரம், விலை 225ரூ. மாறிவரும் உணவு பழக்கங்களின் காரணமாக இன்று எண்ணற்ற நோய்கள் நம்மை ஆட்கொண்டிருக்கின்றன. அப்படிப்பட்ட நோய்களுக்கான காரணங்கள், அவற்றில் இருந்து விடுபடுவதற்கான தீர்வுகள் மற்றும் அந்த நோய்கள் வராமல் தடுப்பதற்கான வழிமுறைகளை கூறுவதே இந்நூல். அகில இந்திய வானொலி, திருச்சி கோடை எப்.ம்., தருமபுரி எப்.எம். ஆகியவற்றில் ‘நாளும் நலம் நாடி’ என்கிற தலைப்பில் மருத்துவம் தொடர்பாக தான் ஆற்றிய சொற்பொழிவுகளை எழுத்து வடிவமாக்கி புத்தகமாக தந்து இருக்கிறார் மருத்துவர் சி.அசோக். முதல் தொகுதியாக […]

Read more

வலம்புரி ஜானும் சில பனங்கிழங்குகளும்

வலம்புரி ஜானும் சில பனங்கிழங்குகளும், பானுமதி பாஸ்கோ, நெய்தல்வெளி, விலை 100ரூ. எழுத்து, பேச்சு ஆகிய இரு பெருங்கலைகளில் வல்லவராக விளங்கி மறைந்த வலம்புரி ஜானுடனான தனது அனுபவங்களை நூலாசிரியர் அழகு தமிழில் பதிவு செய்துள்ளார். தனது முதல் சந்திப்பில் வலம்புரி ஜான் பனங்கிழங்கு அளித்து உபசரித்த நினைவில், அதையே புத்தகத்துக்கு தலைப்பாக்கி உள்ளார் நூலாசிரியர். வலம்புரி ஜானைப்பற்றிய அரிய பல தகவல்களை சுவைபட எழுதி இருக்கிறார். 1957-ல் இந்தி எதிர்ப்பு மாநாட்டில் இந்தி, ஆங்கிலம், தமிழுக்கு விளக்கம் அளித்து கலைஞர் கருணாநிதி கூறிய […]

Read more

ஆயுளை அதிகரிக்கும் அதிசய உணவு முறைகள்

ஆயுளை அதிகரிக்கும் அதிசய உணவு முறைகள், கே.எஸ்.சுப்ரமணி, புதிய புத்தக உலகம், விலை 140ரூ. அன்றாடம் நாம் சாப்பிடும் உணவுப் பொருள்களில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருக்கின்றன. எந்த உணவுப் பொருளை எப்படி சாப்பிட்டால் எந்த பாதிப்பு தீரும், எந்த உணவைத் தவிர்க்க வேண்டும் என்பவை மிக எளிய முறையில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. ஆரோக்கியமாக நீண்ட காலம் இளமைத் துடிப்புடன் வாழ இந்த நூல் நல்ல வழிகாட்டியாக இருக்கும். கை விரல் முத்திரைகள் மூலம் பல வியாதிகளை விரட்டலாம் என்ற தகவல் வியப்பு அளிக்கிறது. […]

Read more

நானும் என் எழுத்தும்

நானும் என் எழுத்தும், தொகுப்பாசிரியர் தீபம் எஸ்.திருமலை, சஞ்சீவியார் பதிப்பகம், பக். 160, விலை 110ரூ. அகர முதல எழுத்து’ என, கடவுளுக்கு நிகராக எழுத்தை போற்றுகிறது, உலக பொது மறையான திருக்குறள்! கூர்மையான ஆயுதத்தை விட பலம் வாய்ந்தது, பேனா முனையால் எழுதும் எழுத்து என்பதை அனைவரும் அறிவோம். உலக மாந்தர் ஒவ்வொருவரது வாழ்க்கை, சிலருக்கு வரலாறாகவும், பலருக்கு செய்தியாக கேட்கவும் படிக்கவும் உதவுவது, எழுத்தாளர்களின் படைப்புகளாகும். நிகழ்வுகளை, நம் கண்முன் சுவாரசியமாக நிறுத்துவதில் துவங்கி, நாளும் பொழுதும் நம் சிந்தனையை துாண்டுவது […]

Read more

கனவும் விடியும்

கனவும் விடியும், தொகுப்பு அ.வெண்ணிலா, சாகித்திய அகாடமி, விலை 200ரூ. வரலாற்றில் தமிழ்ப் பெண் கவிஞர்கள் பற்றிய ஆய்வுக் கட்டுரை போன்ற தொகுப்பு ஆசிரியரின் முன்னுரை, பல அரிய தகவல்களைத் தாங்கி இருக்கிறது. சங்க காலத்திற்குப் பிறகு, தற்போதுதான் அதிக அளவில் தோன்றி இருக்கும் தமிழ்ப் பெண் கவிஞர்கள் பலரின் ஆற்றலை வெளிக்கொணர்ந்து அவர்களை மெச்சும் வகையில் இந்தக் கவிதைத் தொகுப்பு அமைந்துள்ளது. தேர்ந்து எடுக்கப்பட்ட ஒவ்வொரு கவிதையும் ஆழ்ந்து படித்து இன்புறும் வகையில் அமைந்து இருக்கின்றன. நன்றி: தினத்தந்தி, 21/11/2018. இந்தப் புத்தகத்தை […]

Read more

சிதரால் திருச்சாரணத்துமலை சமணப்பள்ளி

சிதரால் திருச்சாரணத்துமலை சமணப்பள்ளி, சிவ. விவேகானந்தன், காவ்யா, பக்.301, விலை ரூ.300. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு குமரி நாட்டில் சமணம் தழைத்தோங்கி வளர்ந்திருந்தது என்பதற்கு எண்ணற்ற சான்றுகள் உள்ளன. இன்றும் அந்த மதத்தின் அழியாத ஆவணங்களாக பல இடங்கள் திகழ்கின்றன. அவற்றுள் மிக முக்கியமானது திருச்சாரணத்துமலை எனப்படும் சிதரால் ஆகும். சமண மதக் கல்வெட்டுகளும், சிற்பங்களும், ஆலயங்களும் காலஓட்டத்தில் சிதைந்தும், மாற்றமடைந்தும் வந்துள்ளதை அறிய முடிவதுடன், அவை பற்றிய புதிய புதிய தகவல்கள் நம்மை வியக்க வைக்கின்றன. சமயவியல், கட்டடக் கலையியல், கல்வெட்டியல், சிற்பவியல் […]

Read more

திருக்கோளூர் பெண் பிள்ளை ரகசியம்

திருக்கோளூர் பெண் பிள்ளை ரகசியம்,  டி.வி.ராதாகிருஷ்ணன், வானதி பதிப்பகம், பக். 120, விலை ரூ.80. திவ்யதேசம் நூற்றி எட்டினுள் ஒன்று திருக்கோளூர். நம்மாழ்வாரால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட இந்த ஊருக்கு ஒருமுறை ஸ்ரீராமானுஜர் செல்லும் போது, அவ்வூரிலிருந்து பெண்மணி ஒருத்தி அவ்வூரைவிட்டு வெளியே செல்வதைப் பார்த்துக் காரணம் கேட்கிறார். காரணம், ஒன்றா இரண்டா? முயற்புழுக்கை வரப்பில் இருந்தால் என்ன? வயலில் இருந்தால் என்ன? ஞானமற்ற நான் எங்கிருந்தால் என்ன? என்று கூறும் அப்பெண்மணி, அருளாளர்கள் 81 பேரின் அருஞ்செயல்களை எல்லாம் எடுத்துக் கூறி, இவர்களைப் போல […]

Read more

குழந்தைகளுக்கான ஆப்பிரிக்க பழங்கதைகள்

குழந்தைகளுக்கான ஆப்பிரிக்க பழங்கதைகள், மொழிபெயர்ப்பாளர் எம்.பாண்டியராஜன், பக். 100, விலை 99ரூ. குழந்தைகளுக்கான கதைகள் என்று தலைப்பிலேயே தெரிவிக்கப்பட்டிருந்தாலும், பெரியவர்களும் விரும்பி படிக்கும் வகையில் தான் இந்த கதைகள் உள்ளன. பல கதைகளில் குழந்தைகளுக்கு தக்க அறிவுரை மற்றும் ஆலோசனையும், பல கதைகளில் நாம் அறிந்திராத தகவல்களும் அழகாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. ஆப்பிரிக்க மொழியிலிருந்து ரஷிய மொழியில் பெயர்க்கப்பட்ட இந்த கதைகளை, ஆங்கிலவழி தமிழில் தந்திருக்கிறார் ஊடகவியலாளர் பாண்டியராஜன். குழந்தைகளுக்கான அறிவுத் தேடலில் பல நுால்கள் வெளிவந்தாலும், இந்நுால் தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறது. குழந்தைகள் […]

Read more
1 257 258 259 260 261 505