நவீன தாமிரபரணி மஹாத்மியம்

நவீன தாமிரபரணி மஹாத்மியம், முத்தாலங்குறிச்சி காமராசு, பொன் சொர்ணா பதிப்பகம், விலை 450ரூ. தமிழகத்தில் தோன்றி, தமிழகத்திற்கு உள்ளேயே ஓடி கடலில் கலக்கம் ஒரே நதியான தாமிரபரணி, புண்ணியமானது என்று இதிகாசங்களிலும் புராணங்களிலும் கூறப்பட்டு இருக்கிறது. அப்படிப்பட்ட தாமிரபரணியின் வரலாறு, அதன் முக்கியத்துவம், அது தொடர்புடைய அதிசயிக்கத்தக்க தகவல்கள், கதைகள் ஆகிய அனைத்தும் இந்த நூலில் தரப்பட்டுள்ளன. தாமிரபரணி நதியைப் பற்றி அறிந்து கொள்ள இந்த ஒரு நூலைப் படித்தாலே போதும் என்ற அளவு அத்தனை அம்சங்களும் இதில் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அத்தியாத்தின் […]

Read more

பிள்ளைப் பெருமாள் அய்யங்கார் (எ) துளசிதாசரின் அஷ்டப் பிரபந்தம்

பிள்ளைப் பெருமாள் அய்யங்கார் (எ) துளசிதாசரின் அஷ்டப் பிரபந்தம் , தொகுப்பாசிரியர்: கோ. எழில்வேந்தன், கவிதா பப்ளிகேஷன், பக்.416; விலை ரூ.300 அஷ்டப் பிரபந்தம் கற்றவன் அரைப்பண்டிதன் என்னும் புகழ்ச் சொல்லுக்கு உரியது இந்நூல். இதை இயற்றிய பிள்ளைப் பெருமாள் அய்யங்கார் திவ்யகவி அதாவது தெய்வத் தன்மை பெற்ற கவி எனப் புகழப்படுபவர். நாலாயிர திவ்யப் பிரபந்தத்துக்குப் பிறகு தமிழ் வைணவ நூல்களில் மிகவும் போற்றுதற்குரியதாக அஷ்டப் பிரபந்தம் விளங்குகிறது. பிரபந்தத்தின் கருத்துச் செறிவு, வைணவ குருபரம்பரையைச் சேர்ந்த அருளாளர்களின் வைபவங்கள் அடங்கியது இது. திருவரங்கக் கலம்பகம், திருவரங்கத்து […]

Read more

வெற்றி வித்துக்கள்

வெற்றி வித்துக்கள், நல்லி குப்புசாமி செட்டியார், நன்னூல் அகம், பக்.146, விலை ரூ.100. நூலின் தலைப்புக்கு ஏற்றவிதத்தில் படைக்கப்பட்டிருக்கும் அருமையான குறுங்கதைகளின் தொகுப்பு இந்நூல். தன்னம்பிக்கை, சுயமுன்னேற்றம் குறித்து பல நூல்கள் வெளிவந்திருந்தாலும், அவை எல்லாம் சொல்லக் கூடிய விஷயங்களை நேரடியாகச் சொல்பவையாக இருக்கின்றன. அல்லது ஆலோசனை சொல்பவையாகவோ, அறிவுரை சொல்பவையாகவோதான் புரிந்து கொள்ளப்படுகின்றன. பிறரின் அறிவுரையை ஏற்றுக் கொள்ளக் கூடிய மனநிலை குறைந்துவரும் இக்காலத்தில், அத்தகைய நூல்கள் ஏற்படுத்தும் தாக்கமும் குறைவாகவே இருக்கிறது. இந்நூல் அவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டு, குறுங்கதைகள் மூலம் வாழ்க்கைக்குத் தேவையான […]

Read more

தாமஸ் பெய்னின் பொது அறிவு

தாமஸ் பெய்னின் பொது அறிவு, மொழியாக்கம் மருத்துவர் ஜீவானந்தம், மேன்மை வெளியீடு, பக். 64, விலை 50ரூ. அமெரிக்க சுதந்திர போராட்ட காலகட்டத்தில், சிந்தனையாளர் தாமஸ் பெய்னால், 1776ம் ஆண்டு இயற்றப்பட்டது இந்நுால். மன்னர் ஆட்சியில் எழுதப்பட்டது. தற்போதைய மக்களாட்சிக்கும் பொருந்துகிறது. இதை தமிழில் அழகாக மொழியாக்கம் செய்துள்ளார், மருத்துவர். ஜீவானந்தம். அமெரிக்காவில், 240 ஆண்டுகளுக்கு முன் இருந்த மன்னராட்சி முறை, அரசியல் சாசனம், காலனி ஆதிக்கம் போன்றவை குறித்து, எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. இன்றைய மக்களாட்சிக்கும் இது பொருந்தும் என்பதே நிதர்சனம். அறிவுப்பூர்வமாக […]

Read more

கந்தரலங்காரம் மூலமும் உரையும்

கந்தரலங்காரம் மூலமும் உரையும், கவிஞர் பத்மதேவன், ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ், பக். 120, விலை 120ரூ. கந்தன் என்ற சொல்லுக்கு பற்றுக்கோடானவன் என்பது பொருளாகும். கந்தன் என்றால் ஒன்று சேர்க்கப்பட்டவன். பல்வேறு மலர்களைக் கொண்டு, பூமாலை கட்டி அழகனுக்கு அணிவித்து அழகு செய்வது போல, முருகனின் பல செயல்களைக் கொண்டு செய்யுளால் அலங்காரம் செய்து அருணகிரிநாதரால் பாடப்பட்டது கந்தரலங்காரம். கந்தரலங்காரத்தில் முருகனுடைய அடி முதல், முடி வரை வருணிக்கப்பட்டுள்ளது. யாக்கை நிலையாமை, செல்வம் நிலையாமை, யம பயம் நீங்குதல் போன்ற வாழ்வியல் செய்திகள் விளக்கப்பட்டுள்ளன. […]

Read more

கொ.மா.கோதண்டம் நாவல்கள்

கொ.மா.கோதண்டம் நாவல்கள், காவ்யா, பக். 588, விலை 600ரூ. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக, ஓங்கிக் குரல் கொடுப்பவர் கொ.மா.கோதண்டம். முற்போக்கு எழுத்தாளரான இவர் கதைகள் ரஷ்ய, ஆங்கில, ஹிந்தி, தெலுங்கு, சிங்கள மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆரண்ய காண்டம் என்ற இவரது குறிஞ்சிக் கதைகள் முதுகலை படிப்பிற்கு பாடமாக உள்ளது! கொ.மா.கோதண்டம் நாவல்கள் என்ற இந்த நுாலில் மூன்று நாவல்கள் இடம் பெற்றுள்ளன. அவை, ஏலச்சிகரம், குறிஞ்சாம் பூ, ஜன்ம பூமிகள். ஏலச்சிகரம் என்பது தமிழக ஏலத் தோட்டத் தொழிலாளர்கள் பற்றிய தமிழின் முதல் நாவல்! மலைப்பிரதேசத்தின் […]

Read more

ஆண்டாள்

ஆண்டாள், பேரா.ஜெய.குமார பிள்ளை, சங்கர் பதிப்பகம், பக்.112, விலை 100ரூ. தமிழ்மொழியின் வளமைக்கும், உயிர்ப்புக்கும் பெருமை சேர்த்தோர் ஆழ்வார்களும், நாயன்மார்களும் ஆவர். தமிழ் மொழியின் இருண்ட காலமான களப்பிரர்கள் காலத்தில், தமிழை அழியாமல் காத்தவர்கள் அவர்கள். பாவைப் பாடல் என்ற புதிய இலக்கிய மரபைத் தமிழுக்குத் தந்த பெருமை ஆண்டாள் நாச்சியாருக்கே உரியது. அக்றிணை பன்மைக்கு, ‘கள்’ விகுதி சேர்த்து எழுதும் முறையை ஆண்டாள் பாடலால் அறியலாம் என்று பெரியோர் கூறுவர். அத்தகு ஆண்டாளின் திருப்பாவையையும், நாச்சியார் திருமொழியையும் விளக்கும் உரை நுாலாக, இந்நுால் […]

Read more

திருக்குறள் களஞ்சியம்

திருக்குறள் களஞ்சியம், கீழாம்பூர், கலைமகள் பப்ளிகேஷன்ஸ், பக். 560, விலை 600ரூ. திருவள்ளுவரும் திருக்குறளும், நம் பண்டைய நீதி நுாலாசிரியர், கம்பன் கண்ட வள்ளுவர், வாழ்க்கை துணை நுால், திருக்குறளும் பொது நோக்கமும், இரந்து வாழும் வாழ்வு, தோன்றின் புகழோடு, குறள் நெறி, குறள் உணர்த்தும் பாடங்களை பட்டியலிடுகிறது இந்நுால். குறளில் சைவ சித்தாந்தம், கீதையும் குறளும், நுண்பொருள்மாலை ஆய்வுரை, குறள் வழங்கும் செய்தி, வள்ளுவரும் புத்தரின் ஒழுக்க இயல்பும், சீர்திருத்தம் உள்ளிட்ட கட்டுரைகள் அடங்கியது இந்நுால் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. நன்றி: தினமலர், […]

Read more

காட்டுக்குள்ளே கணித மாயாவி

காட்டுக்குள்ளே கணித மாயாவி, இரா.செங்கோதை, மகா யுகம், பக்.72, விலை 60ரூ. கணிதத்தில் தோன்றும் பல்வேறு சிறந்த புதிர்களை மையமாகக் கொண்டு, ஒவ்வொரு அத்தியாயமும் செதுக்கப்பட்டுள்ளது. இந்நுாலை படிக்கும் இளம் மாணவர்களுக்கு, கணிதம் மீதுள்ள அச்சம் நீங்கி மகிழ்வை ஏற்படுத்தும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. அழகிய கதை வடிவில் கணித கோட்பாடுகளை திறமையாக வெளிப்படுத்திய நுாலாசிரியரை நிச்சயம் பாராட்டலாம். நன்றி: தினமலர், 21/10/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – […]

Read more

எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய சட்டங்கள்

எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய சட்டங்கள், ஆ.சங்கரசுப்பிரமணியன், சைவ சபை, பக். 75, விலை 80ரூ. அன்றாட வாழ்விற்கு பயன்படும் சட்டங்களை எல்லாரும் அறிந்து கொள்ளும் வகையில் தன், 53 ஆண்டு கால வழக்கறிஞர் தொழிலில் கிடைத்த அனுபவங்களை கொண்டு, எல்லாரும் தெரிந்து கொள்ள வேண்டிய சட்டங்கள் என்ற நுாலில் தந்துள்ளார். சட்டங்களை விளக்குவதுடன், அதை வாழ்வில் நடந்த நிகழ்வுகளுடன் ஒப்பிட்டு தந்துள்ளது, படிக்க அலுப்பு தட்டாமல் கொண்டு செல்கிறது. இந்து வாரிசுரிமைச் சட்டம், திருமணச் சட்டம், வரதட்சணை தடுப்பு சட்டம், குடும்ப வன்முறையிலிருந்து […]

Read more
1 258 259 260 261 262 505