ஸ்ரீகுணமிலி

ஸ்ரீகுணமிலி, பதிப்பாசிரியர் சுகவன முருகன், மங்கையர்க்கரசி பதிப்பகம், விலை 750ரூ. கட்டுரை எழுபது தொல்லியல் அறிஞர் வீரராகவன் எழுபதாம் வயது நிறைவையொட்டி வெளிவந்திருக்கும் ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு. மூன்றாகப் பகுக்கப்பட்டுள்ள இத்தொகுப்பில் ‘தொன்மம்’ என்ற தலைப்பின்கீழ் சமகால வரலாற்று ஆய்வாளர்களின் 37 ஆய்வுக் கட்டுரைகளும் ‘அமரம்’ என்ற தலைப்பின்கீழ் 7 ஆய்வுக் கட்டுரைகளும் ‘சுற்றம்’ என்ற தலைப்பின்கீழ் நண்பர்களின் 28 ஆய்வுக் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. வீரராகவன் படியெடுத்த கல்வெட்டுகள், கண்டுபிடித்த தொல்லியல் சான்றுகள் பற்றிய பதிவுகளும் உண்டு. வரலாற்று ஆர்வலர்கள் தவறவிடக் கூடாத கட்டுரைத் […]

Read more

இஸ்லாமிய வெறுப்புத் தொழில்

இஸ்லாமிய வெறுப்புத் தொழில், நாதன் லீன், அடையாளம் பதிப்பகம், விலை 330ரூ. இஸ்லாமிய வெறுப்பு என்கிற சொல்லாடல் முன்னைக் காட்டிலும் இப்போது மிகப் பரவலாக சமூகத்தில் இருக்கிறது. ‘அச்சம் என்பது நல்ல விலைக்குப்போகும் சரக்கு’ என்கிறார் நாதன் லீன். இந்த அச்சம் எப்படி உருவாக்கப்படுகிறது என்பதைத் தனது ஆய்வில் முன்வைக்கிறார். “அமெரிக்கா, ஐரோப்பா என உலகெங்கும் அடித்துச்செல்லும் இஸ்லாமிய வெறுப்பின் பேரலை, இயற்கையாக நிகழும் ஒன்றல்ல. இது இஸ்லாமிய வெறுப்பு ஊழியர்களால் உருவாக்கப்பட்டது” என்கிறார் நாதன் லீன். இஸ்லாமிய வெறுப்புத் தொழில் உருவாக்கும் அச்சத்தின் […]

Read more

இராமாநுசக் கவிராயர் வாழ்வும் வாக்கும்

இராமாநுசக் கவிராயர் வாழ்வும் வாக்கும், டி.ஆர்.கள்ளபிரான், காவ்யா பதிப்பகம், வலை 150ரூ. காந்தி இறந்த செய்தியைக் கேள்விப்பட்டதும் துக்கத்தில் ஆழ்ந்த இராமாநுசக் கவிராயருக்கு அத்துயரத்தோடே சில வரிகள் தோன்றின. “அறக்கனியே, அன்பரசே, அருந்துணையே, அறிவாற்றல் சிறந்தொளிரும் செந்நலமே, செய்வினையின் பயன்அறவே, துறந்தாற்றும் பெருந்துறவே, பேயுலகம் புலம்பிவிழ, மறைந்தனையே நிரந்தரமாய் மதியிழந்தார் செய்கையினால்!” அன்று எழுதத் தொடங்கி 27 ஆண்டுகள் கழித்து ‘காந்தி காவியம்’ என்ற நூலை வெளியிட்டார். ‘காந்தி காவியம்’ எழுதிக்கொண்டிருக்கும்போதே காந்தி பற்றிய நாடக நூல் ஒன்றையும் முடித்திருந்தார். இவர் எழுதிய பூகந்த […]

Read more

எனது சிறிய யுத்தம்

எனது சிறிய யுத்தம், லூயிஸ் பால் பூன், தமிழில் பெர்னார்ட் சந்திரா, காலச்சுவடு பதிப்பகம், விலை 100ரூ. உலகப் போரைப் பேசும் நாவல்! போர்க்காலத்தில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் இன்னல்களைப் பேசும் இலக்கியப் படைப்புகள் யதார்த்த பாணியில் எழுதப்பட்டபோது அவை வாசகர்களிடையே வரவேற்பை இழந்திருந்தன. நிச்சயமற்ற அடுத்த நொடியைப் பரிதவிப்போடு எதிர்கொள்ளும் சாமான்யர்கள், ஒவ்வொருநாளும் எதிர்கொண்ட நெருங்கிய உறவுகளைக் குண்டுகள் சிதைத்த உடல்களாகக் கண்கொண்டு காண நேரும் அவலம், குழந்தைகளின் ஓலம் என போர்க்காலங்களின் பக்கங்கள் ஒவ்வொன்றும் இன்னதுதான் நிரம்பியிருக்கும் என்று போர் இலக்கியங்கள் குறித்த […]

Read more

நிழற்பட நினைவலைகள்

நிழற்பட நினைவலைகள், நேஷனல் செல்லையா, டிஸ்கவரி புக் பேலஸ், விலை 130ரூ. திரைத் துறையில் தொழில்நுட்பப் பிரிவுகளில் பணியாற்றியவர்களின் அனுபவங்கள் தனிச்சிறப்பு மிக்கவை. நட்சத்திரங்களின் தனிப்பட்ட வாழ்க்கையின் பக்கங்களை அறிந்த அந்தக் கலைஞர்கள் எழுதும் புத்தகங்களில் அதுபோன்ற அனுபவங்கள் அசலாக, இயல்பாகப் பதிவாகிவிடும். புகைப்படக் கலைஞராகப் பணியாற்றிய நேஷனல் செல்லையாவின் அனுபவக் குறிப்புகள் அடங்கிய இந்தப் புத்தகமும் அப்படித்தான். ஏவிஎம் ஸ்டுடியோவில் இளம் வயதிலேயே அலுவலக உதவியாளராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கியவர் செல்லையா. ‘ஓர் இரவு’ படத்துக்காகக் கதை-வசனம் எழுதவந்த அண்ணாவுக்கு வெற்றிலை, சீவல், […]

Read more

இருளர்களும் இயற்கையும்

இருளர்களும் இயற்கையும், சி.மஞ்சுளா, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 150ரூ. தமிழகப் பழங்குடிகளில் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்டவர்கள் இருளர்கள். இரண்டாவது நிலையில் இருந்தாலும் இவர்களுடைய எண்ணிக்கை என்னவோ ஒன்றரை லட்சம்தான். தமிழகத்தில் அருகிவரும் ஆறு பழங்குடிகளில் ஓர் இனமாக இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். ‘இருளர்கள் என்றால் பாம்பு பிடிப்பவர்கள்’ என்பதுதான் பொதுச் சித்திரம். அதேநேரம் தாவரங்களை மருத்துவ சிகிச்சைக்குப் பயன்படுத்திவரும் இவர்களது மரபு அறிவைப் பற்றி ஆராய்ச்சி அடிப்படையில் முனைவர் சி. மஞ்சுளா ‘இருளர்களும் இயற்கையும்’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இதுபோன்ற […]

Read more

கம்பனின் தமிழமுது

கம்பனின் தமிழமுது,சாலமன் பாப்பையா,கவிதா பப்ளிகேஷன், பக்.336, விலை ரூ.300. சாலமன் பாப்பையாவின் கம்பனின் தமிழமுது என்ற இந்நூலில், துளசி இராமாயணத்தில் உவமைகள், கம்பனும் பாரதிதாசனும், இராமாயணத்தில் அர்த்த பஞ்சகம், கம்பனில் அமரர்கள், கம்பனின் சூரியன், கம்பனின் கற்பனைகள், கம்பரும் அ.ச.ஞா.வும், மணிவாசகரும் கம்பரும், காப்பிய உதயம் என 9 முத்தான கட்டுரைகள் அடங்கியுள்ளன. துளசி இராமாயணத்தில் உவமைகள் கட்டுரையில், ராமனுக்கும் பரதனுக்கும் உள்ள பாசத்தை விளக்க, ஆமை எப்படி தனது முட்டைகளை மார்பில் வைத்துக் காக்குமோ, அதுபோல ராமன் இரவு பகல் பரதன் நினைவையே […]

Read more

ரகசியமான ரகசியங்கள்

ரகசியமான ரகசியங்கள், கோமல் அன்பரசன், தினத்தந்தி பதிப்பகம், விலை 180ரூ. தினத்தந்தியின் முத்துச்சரத்தில் தொடராக வந்து லட்சக்கணக்கான வாசகர்களின் பேராதரவைப் பெற்ற “ரகசியமான ரகசியங்கள்” அரிய புகைப்படங்களுடன் புத்தகமாகி இருக்கிறது. ஊடகவியலாளர், எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளர் என்ற தளங்களில் இயங்கும் கோமல் அன்பரசன் எழுதிய வரலாற்று ஆய்வுகளில் இது முக்கியமானதாக திகழ்கிறது. பல ஆளுமைகளைப் பற்றி காலத்தில் காலடியில் மறைந்து கிடந்த, மறைக்கப்பட்ட ரகசியங்களைத் தன் சொக்கவைக்கும் நடையில் இந்நூலில் அவர் தந்திருக்கிறார். வரலாறு என்றாலும் எந்த இடத்திலும் சலிப்பில்லாமல் பக்கத்துக்குப் பக்கம் விறுவிறுப்பாக […]

Read more

பன்முக அறிவுத் திறன்கள் ஓர் அறிமுகம்

பன்முக அறிவுத் திறன்கள் ஓர் அறிமுகம், ம.சுசித்ரா, இந்து தமிழ் திசை வெளியீடு, விலை 150ரூ. இந்து தமிழ்’ நாளிதழின் ‘வெற்றிக் கொடி’ இணைப்பிதழில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு. மொழி, தர்க்கம் & கணிதம், காட்சி, உடல் & விளையாட்டு, இசை, மனிதத் தொடர்பு, தன்னிலை அறிதல், இயற்கை, இருத்தல்சார்ந்தவை என ஒன்பது திறன்கள் குறித்து எழுதப்பட்ட சிறப்பான கட்டுரைகள் இவை. ஒவ்வொரு மாணவரும் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம். கல்விக்கு வழிகாட்டி நன்றி: தி இந்து, 17/11/18. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் […]

Read more

உ.வே.சாமிநாதையர் கடிதக் கருவூலம் முதல் தொகுதி

உ.வே.சாமிநாதையர் கடிதக் கருவூலம் முதல் தொகுதி, பழ.அதியமான், பதிப்பாசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதி, உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், விலை 600ரூ. காலத்தின் கருவூலம் உ.வே.சாமிநாதையரின் சமகாலப் புலவர்கள், அடுத்த தலைமுறைப் புலவர்கள், உயர் அதிகாரிகள், ஆதினக் கர்த்தர்கள் போன்றோர் அவருக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பு இப்புத்தகம். பிறருக்கு, சாமிநாதையர் எழுதிய கடிதங்கள் இதில் குறைவு. எனினும், தனக்குக் கடிதம் எழுதியவர்களுக்குப் பதிலாக அவர் எழுதிய சில குறிப்புகள் உண்டு. ஜி.யு.போப், ஜுலியன் வின்சோன், பொன்னம்பலம் குமாரசாமி உள்ளிட்ட சிலர் தவிர, மற்றவர் அனைவரும் தமிழிலேயே கடிதங்களை எழுதியுள்ளனர். […]

Read more
1 255 256 257 258 259 505