ரிப்லெக்ஸாலஜி: தொடு சிகிச்சை மருத்துவம்

ரிப்லெக்ஸாலஜி: தொடு சிகிச்சை மருத்துவம், பெரில் கிரேன், கண்மணிசுப்பு, கண்ணதாசன் பதிப்பகம், பக்.128, விலை 80ரூ. நோய்கள் ஒரே நாளில் வந்துவிடுவதில்லை. நோய்கள் வந்து முற்றிடும் வரை பலர் அதற்கு முக்கியத்துவம் தந்துவிடுவதில்லை. இன்றைய அறிவியல் யுகத்திலும், உலகளாவிய பலவற்றை அறிந்தவர்களாகக் காட்டிக்கொள்பவர்களில் பலர் தங்கள் உடல் உறுப்புகளையோ, அவற்றின் இயக்கத்தையோ, பலவீனத்தையோ அறியாதவர்களாகவே இருக்கின்றனர். மருத்துவத்தின் மீதான அச்சமும் செலவினங்களும் அச்சம் தருவதாகவும் அமைகின்றன. ஆனால், கி.மு., காலத்திலேயே நம்மவர்கள் உடல் தகுதியில் நாட்டமுள்ளவர்களாக இருந்து, ஒவ்வொரு உறுப்புக்கும் உகந்த மூலிகை மருத்துவத்தில் வல்லுனர்களாக […]

Read more

ஓஷோ உயர் வேதம்

ஓஷோ உயர் வேதம், ஓஷோ, கே.என்.ஸ்ரீனிவாஸ், கண்ணதாசன் பதிப்பகம், பக். 560, விலை 360ரூ. வாழ்க்கையை அதன்வழி ஏற்றுக் கொண்டு ஞானம் எய்துவது எப்படி என்பதே உயர்வேதம் எனும் இந்நூலின் இலக்கு. துன்பங்கள் எத்தனை நேர்ந்தாலும் அவற்றை நினைவில் கொள்ளாமல் எப்படி வெல்வது என்பதை ஆணித்தரமாய் அஞ்ஞானிகளுக்கு விரித்துக் காட்டுவதே இந்நூலின் நோக்கம். இன்றைய சமுதாயம் எதிர் கொண்டுள்ள அரசியல் பிரச்னைகளுக்கும், வெகு அவசரமான சமூக பிரச்னைகளுக்கும் விடை தேடும் தனி நபர்களின் தாகத்தை தணிக்க கூடியதாய் விளங்குகிறது. வாழ்க்கை முறைகள் பற்றியும், தியானங்கள் […]

Read more

அகநானூறு – ராஜகோபாலார்யன் உரையும் உரைநெறியும்

அகநானூறு – ராஜகோபாலார்யன் உரையும் உரைநெறியும், பதிப்பும் ஆய்வும்: மா.பரமசிவன், இராசகுணா பதிப்பகம்,  பக்.374, விலை ரூ.300. அகநானூற்றுக்கு இதுவரை 17க்கும் மேற்பட்ட சிறந்த உரைகள் (கவிதை, வசனநடை நீங்கலாக) வெளிவந்துள்ளன. ‘கம்பர் விலாசம் 39’ ராஜகோபாலார்யன் என்ற உரையாசிரியர்தான் அகநானூற்றின் முதற் பதிப்பாசிரியர் என்பது பலருக்கும் தெரியாத செய்தி. 20ஆம் நூற்றாண்டில் அச்சிடப்பட்டு வெளிவந்த முதல் உரை நூல் ராஜகோபாலார்யன் உரைநூல்தான். இவர், தம் உரையை குறிப்புரை என்றே குறிப்பிட்டுள்ளார். அவர் பதிப்பு நெறி, பதிப்பு அறங்களைக் கைக்கொண்டு அகநானூற்றைப் பதிப்பித்திருக்கிறார். இவர், […]

Read more

தலைவர்கள் தேவை

தலைவர்கள் தேவை, முனைவர் நா. சங்கரராமன், விஜயா பதிப்பகம், விலை 120ரூ. “உங்களை நல்ல நம்பிக்கைகளால் நிரப்பிக் கொள்ளுங்கள். வருங்காலத் தலைவர்களாக வருவீர்கள்” என்ற அடிப்படையில் மாணவர்களுக்காக, இளைஞர்களுக்காக முனைவர் நா. சங்கரராமன் எழுதிய தன்னம்பிக்கை கட்டுரைகளின் தொகுப்பு. 15 கட்டுரைகள் மூலம் அவர்களின் உள்ளத்தில் நம்பிக்கைகளை விதைக்கிறார். நன்றி : தினத்தந்தி,23/8/2017.

Read more

இனியெல்லாம் பிஸினஸே!

இனியெல்லாம் பிஸினஸே!, எஸ்.பி. அண்ணாமலை, ஒய்யே பப்ளிகேஷன்ஸ், விலை 500ரூ. தொழில் துறையில் கோலோச்சும் முதல் தலைமுறை தொழில் முனைவோர், வியாபாரக் குடும்பத்தில் இருந்து புதிதாகச் சிந்தித்து தனிப்பாதை கண்டவர்கள் என 52 பேருடைய வெற்றிக்கதைகளை இந்த நூலில் பதிவு செய்துள்ளனர். கோவை உண்ணாமுத்து, மதுரை கமலக்கண்ணன், ஆஸ்திரேலியா செந்தில் உள்பட 52 நகரத்தார்கள் இதில் இடம் பெற்றுள்ளனர். இதை எஸ்.பி. அண்ணாமலை தொகுத்து வழங்கியுள்ளார். முதலீட்டைப் புரட்டும் முறை, பணம் இல்லாவிட்டாலும் வியாபாரம் செய்யும் வாய்ப்பு, வங்கிக் கடன்களைக் கையாளுவது என்று தொழிலில் […]

Read more

மங்கல தேவி கண்ணகி கோட்டம்

மங்கல தேவி கண்ணகி கோட்டம், துரை மலையமான் பதிப்பகம், விலை 60ரூ. நிரபராதியான கோவலன் கொல்லப்பட்டதால் வெகுண்டெழுந்த கண்ணகி, மதுரையை தீக்கிரையாக்கினாள். பிறகு வைகைக்கரை வழியே 14 நாட்கள் நடந்து கேரள எல்லையை அடைந்தாள். அங்கிருந்து விண்ணுலகம் சென்றாள். இதுபற்றி துரைமலையமான் விவரமாக புள்ளி விவரங்களுடன் எழுதியுள்ள புத்தகம் இது. சிறிய புத்தகமானாலும் சிறந்த புத்தகம். ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம். நன்றி : தினத்தந்தி,23/8/2017.

Read more

ராமானுஜர் மற்றும் வைணவச் சமயச் சான்றோர்கள்!,

ராமானுஜர் மற்றும் வைணவச் சமயச் சான்றோர்கள்!, கா.சே. மணவாளன், ஸ்ரீ ஆனந்த நிலையம், பக். 206, விலை 160ரூ. சான்றோர்களின் வாழ்க்கை அனுபவங்கள் நாம் நன்கு வாழ நம் வாழ்க்கையை மாண்பு உடையதாக செய்து கொள்ள பெரிதும் உதவும். ஸ்ரீமத் நாதமுனிகள், ஸ்ரீ ஆளவந்தார் பெரிய நம்பிகள், திருக்கச்சி நம்பிகள், தியாக சீலர் கூரேசர், முதலியாண்டான் எம்பாரும், ராமாநுசமும், பட்டரும்,ந ச்சீயரும், நஞ்சீயரும் நம்பிள்ளையும் போன்ற தலைப்புகளில் ராமானுஜர் மற்றும் வைணவ சமய சான்றோர் பற்றி பக்தி மணம் கமழ சொல்லி சொல்கிறார் மணவாளன். […]

Read more

பொதுமக்களும் சட்டங்களும்

பொதுமக்களும் சட்டங்களும், ஆங்கிலத்தில் ஜி.சி. வெங்கட சுப்பாராவ், தமிழில் க. ராசாராம், முல்லை பதிப்பகம், விலை 150ரூ. நம்முடைய வாழ்க்கையில் காணக்கூடிய, சந்திக்ககூடிய சட்டங்கள் குறித்து ஜி.சி. வெங்கட சுப்பாராவ் ஆங்கிலத்தில் எழுதிய நூல். இதை முன்னாள் சபாநாயகர்,க. ராசாராம் மொழிபெயர்த்துள்ளார். தனிப்பட்ட சட்டங்கள், சொத்துகள் பற்றிய சட்டம், ஒப்பந்தங்களுக்கான சட்டம், கிரிமினல் சட்டம், சிவில் நடைமுறைச் சட்டம் மற்றும் பலவகை சட்டங்கள் எளிமையாக விளக்கப்பட்டுள்ளன. நன்றி : தினத்தந்தி,23/8/2017.

Read more

ரமலான் சிந்தனைகள்

ரமலான் சிந்தனைகள், எம்.ஏ. ஷாகுல் ஹமீது ஜலாலி, அஸீலா பப்ளிகேஷன்ஸ், விலை 60ரூ. ரமலான் மாதத்தில் பள்ளிவாசலில் எம்.ஏ. ஷாகுல் ஹமீது ஜலாலி முப்பது நாட்கள் நிகழ்த்திய சொற்பொழிவு புத்தகமாகத் தொகுக்கப்பட்டுள்ளது. நோன்பைத் தொடங்குவோம், வாரிசுரிமைச் சட்டங்கள், இறை நம்பிக்கை, ஈகைப் பண்பு, மகத்தான இரவு போன்ற 27 தலைப்புகளில் இஸ்லாம் பற்றிய கருத்துகளை எடுத்துரைக்கிறார். அதோடு சொற்பொழிவு உருவான விதத்தையும், அதற்குக் கிடைக்கும் விமர்சனங்களையும் சேர்த்து பதிவு செய்துள்ளார். நன்றி : தினத்தந்தி,23/8/2017.

Read more

உலக வரலாறு

உலக வரலாறு, ஐ. சண்முகநாதன், பூம்புகார் பதிப்பகம், விலை 750ரூ. உலகம் தோன்றியது முதல் இன்று வரை நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. உலகம், இந்தியா, தமிழ்நாடு என்ற தலைப்புகளில் நிகழ்ச்சிகள் தொகுக்கப்பட்டுள்ளன. உலகம் என்ற தலைப்பில் பூமி தொடங்கியது எப்படி என்பது தொடங்கி உலகில் நடந்த முக்கிய செய்திகள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக முதல் உலகப்போர், இரண்டாம் உலகப் போர், சந்திரனில் மனிதன், கென்னடி சுட்டுக்கொலை, இலங்கையில் போர் முடிந்தது போன்ற அனைத்துச் செய்திகளும் இடம் பெற்றுள்ளன. இந்தியா […]

Read more
1 371 372 373 374 375 505