பொதுவுடைமையரின் வருங்காலம்?

பொதுவுடைமையரின் வருங்காலம்?, தா. பாண்டியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 250ரூ. மார்க்ஸியத்தை சாமியாரிஸம் ஆக்கக்கூடாது! இப்படி ஒரு புத்தகத்தைக் கம்யூனிஸ்ட் விமர்சகரோ அல்லது எதிரியோ எழுதி இருந்தால், கம்யூனிஸ்ட்டுகள் (எல்லா பிராண்ட் கம்யூனிஸ்ட்டுகளும்தான்!) அந்த நபர் மீது விழுந்து பிறாண்டி இருப்பார்கள். ஆனால், எழுதியவர் ஒரு கம்யூனிஸ்ட். அதுவும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவர். அதுவும், தா. பாண்டியன் என்பதால் மார்க்ஸியப் புத்தகங்களை மலையளவு வெளியிட்டுள்ள நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், இந்தப் புத்தகத்தையும் வெளியிட்டு இருக்கிறது. ‘பொதுவுடைமை’ என்ற […]

Read more

இயற்கை விவசாயம் இன்றைக்கு அவசியம்

இயற்கை விவசாயம் இன்றைக்கு அவசியம், தொகுப்பு சபீதா ஜோசப், ராஜமாணிக்கம்மாள் வெளியீடு, விலை 120ரூ. இயற்கை விவசாயமே இன்றைக்கு அவசியம் தேவை. அதைத்தான் இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் வலியுறுத்தி வந்தார். அவர் பத்திரிகைகள், சொற்பொழிவுகள் மூலம் வெளியிட்ட இயற்கை விவசாயம் குறித்த கருத்துகளை இந்த நூலில் எழுத்தாளர் சபீதா ஜோசப் தொகுத்துள்ளார். நன்றி : தினத்தந்தி,23/8/2017.

Read more

அஷ்டபதி (கீதகோவிந்தம்)

அஷ்டபதி (கீதகோவிந்தம்), அம்மன் சத்தியநாதன், அருள்மிகு அம்மன் பதிப்பகம், விலை 100ரூ. கிருஷ்ண பகவான் மீது ஜயதேவ சுவாமிகள் பாடிய பாடல்களே “கீதகோவிந்தம்” ஆகும். கீத கோவிந்தம் காவியத்துக்கு, “அஷ்டபதி” என்ற பெயரும் உண்டு. அஷ்டபதியை பாராயணம் செய்தால், நினைத்தது நடக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. இந்தப் புத்தகத்தில், ஐயதேவ சுவாமிகள் வரலாறு முதலில் இடம்பெற்றுள்ளது. அதையடுத்து, அஷ்டபதி பாடல்களுக்கு விளக்கவுரை கொடுக்கப்பட்டுள்ளது. நன்றி : தினத்தந்தி,23/8/2017.

Read more

ஆகாயத்தில் பூகம்பம்

ஆகாயத்தில் பூகம்பம், பட்டுக்கோட்டை பிரபாகர், வானவில் புத்தகாலயம், பக். 264, விலை 200ரூ. ஆகாயத்தில் பூகம்பம் கதையை தொடராக குமுதத்தில் எழுதியபோது ப்ரியா கல்யாண ராமன் எனக்களித்த உற்சாகத்தையும், சுதந்திரத்தையும் குறிப்பிட்டே ஆக வேண்டும். நான் பாட்டுக்கு எழுதிக்கொண்டேயிருந்தேன். பார்த்தால் 44 வயது அத்தியாயத்தில் தான் முற்றும் வந்து நிற்கிறது. ஆகவே இது நான் எழுதியதிலேயே மிக நீளமான தொடர்கதையானது என்கிறார் பட்டுக்கோட்டை. ஒரு பைலட், ஒரு பிரிகேடியர், மாவோயிஸ்ட் தீவிரவாதிகள், சினிமாவில் சாதிக்க துடிக்கும் இளம் இயக்குனர்கள் என்று பலவகையான கதாபாத்திரங்கள். இவர்களது […]

Read more

இனி இல்லை மரணபயம்

இனி இல்லை மரணபயம், உரையும் மொழிபெயர்ப்பும் சந்தியா நடராஜன், சந்தியா பதிப்பகம், விலை 100ரூ. ஒரு மரணமும் தினசரி மரணமும்! ‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்றார் வள்ளுவர். ஆனால், புத்தகமே எழுதிவிட்டார் சந்தியா நடராஜன். இதயத்தின் ஓரிடத்தில் ரத்த ஓட்டம் தடைபட்டு, அதற்கான சிகிச்சை பெற்றபோது, அவருக்கு மரணத்தைப் பற்றிய சிந்தனைகள் அதிகமாக வந்துள்ளன. எனவே, மரணத்தைப் பற்றிப் படிக்க ஆரம்பிக்கிறார். அதுபற்றிய படைப்புகளைத் தேடத் தொடங்குகிறார். யோசிக்க ஆரம்பிக்கிறார். அவற்றை எல்லாம் தொகுக்கிறார்; எழுதுகிறார். அதையே புத்தகமாகவும் கொண்டுவந்துவிட்டார். யாம் பெற்ற துன்பம் […]

Read more

இயற்கை வைத்தியம்

இயற்கை வைத்தியம், எம்.மரிய பெல்சின், விகடன் பதிப்பகம், விலை 130ரூ. மூலிகைகள் நமக்கு வலி நீக்கும் நிவாரணியாகவும், பிணி போக்கும் மருந்தாகவும், சுவை தரும் உணவாகவும் இருக்கின்றன என்னும் ஆச்சரியம் தரும் தகவல்களை இந்த நூலில் எம்.மரிய பெல்சின் தருகிறார். எந்தெந்த மூலிகைகளில் என்னென்ன நோய் குணமாகும் என்பதை எளிமையாக விளக்கும் நூல். நன்றி : தினத்தந்தி,23/8/2017.

Read more

கொஞ்சம் சமூக சேவை மிஞ்சும் அனுபவங்கள்

கொஞ்சம் சமூக சேவை மிஞ்சும் அனுபவங்கள், ம. சுரேந்திரன், பாரதி புத்தகாலயம், விலை 160ரூ. தான் செய்யும் பணிகளுக்கு இடையே அக்கறையுடன் செய்யும் சமூக சேவை உன்னதமானது. ம. சுரேந்திரன் தனது சமூக சேவை அனுபவங்களை சுவாரஸ்யமாக இந்த நூலில் பதிவு செய்துள்ளார். ஒவ்வொரு அனுபவங்களையும் அழகிய நடையால் நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார். நன்றி : தினத்தந்தி,23/8/2017.

Read more

இராமாயணம் காவிய நாயகர் கலைக் களஞ்சியம்,

இராமாயணம் காவிய நாயகர் கலைக் களஞ்சியம், த.வ.சிவசுப்பிரமணியன், கல்வி உலகம் பதிப்பகம், விலை 200ரூ. இது ஒரு அருமையான புத்தகம். ராமாயணத்தில் வருகிற எண்ணற்ற கதாபாத்திரங்கள் யார் என்பதை அறிமுகப்படுத்தும் நோக்கத்தில் இதை த.வ. சிவசுப்பிரமணியன் எழுதியுள்ளார். இதில் உள்ள சில தகவல்கள்: அக்க குமாரன் (அட்சய குமாரன்); இலங்கை வேந்தன் ராவணனின் இரண்டாம் மகன். அக்கயன்: முப்பதினாயிரம் கோடி வானர சேனைக்குத் தலைவன். அகத்திய முனிவர்: பிரம தேவரின் மகனான புலத்தியரின் மகன். விதரபர்கோன் மகளாகிய உலோப முத்திரையை மணந்து சித்தன் என்னும் […]

Read more

ஆஷ் அடிச்சுவட்டில் அறிஞர்கள் ஆளுமைகள்

ஆஷ் அடிச்சுவட்டில் அறிஞர்கள் ஆளுமைகள், ஆ. இரா.வேங்கடாசலபதி, காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ், விலை 225ரூ. வரலாற்றை வெற்றி கொள்ளும் வழி! பாரதி, வ.உ.சி., மறைமலையடிகள், புதுமைப்பித்தன் ஆகியோரது வரலாற்றின் மறைக்கப்பட்ட பக்கங்கள் மீது ஆ.இரா.வேங்கடாசலபதியின் எழுத்துக்கள் இதுவரை வெளிச்சம் பாய்ச்சி வந்ததை அறிவோம். இதோ இப்போது இந்த வரிசை மேலும் கூடுகிறது… ஜி.யு.போப், உ.வே.சாமிநாதையர், ம.வீ.இராமானுஜாசாரியர், டி.வி.சாம்பசிவம் பிள்ளை, எஸ்.ஜி.இராமாநுஜலு நாயுடு, ஏ.கே.செட்டியார், ரா.அ.பத்மநாபன், ஸி.எஸ்.சுப்பிரமணியம், தே.வீரராகவன் ஆகிய ஆளுமைகளின் பன்முகத்திறமைகள் அடையாளப்படுத்துகின்றன. இவர்களோடு பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸ், எரிக் ஹாப்ஸ்பாம் ஆகியோரது திறனும் சொல்லப்படுகிறது.அனைத்துக்கும் […]

Read more

தமிழக வரலாறும் பண்பாடும்

தமிழக வரலாறும் பண்பாடும், டாக்டர் மா.இராசமாணிக்கனார், சாரதா பதிப்பகம், விலை 280ரூ. தமிழ்நாட்டின் வரலாற்றை விவரித்து டாக்டர் மா. இராசமாணிக்கனார் எழுதிய புத்தகம் சிறப்பு வாய்ந்தது. நீண்ட இடைவெளிக்குப்பின், அது மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 12/7/2017,

Read more
1 372 373 374 375 376 505