சத்யஜித்ரே வாழ்வும் வழியும்

சத்யஜித்ரே வாழ்வும் வழியும், வீ.பா.கணேசன், விகடன் பிரசுரம், பக்.216, விலை .ரூ.160; இந்திய சினிமாவின் துருவ நட்சத்திரமாக விளங்கும் இயக்குநர் சத்யஜித்ரேயின் வாழ்க்கைப் பயணத்தையும், கலைப் பயணத்தையும் விரிவாக அறிந்து கொள்ள உதவும் நூல். கொல்கத்தா நகரவாசியாக இருந்த ரே, கிராமிய சூழலில் இருந்த சாந்தி நிகேதனில் சேருவதற்குக் காட்டிய தயக்கம், பின்னர், நுண்கலை பயில அங்கே சேருதல், 20 வயதான ரே, 80 வயது தாகூரை நான்குமுறை சந்தித்தும் இயல்பாகப் பேச முடியாமல் போனது, தாகூர் மறைவுக்குப்பின் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வெளியேறியது, […]

Read more

தினமணியின் தமிழ்ப்பணி

தினமணியின் தமிழ்ப்பணி, பதிப்பாசிரியர்: கு.வெங்கடேசன், டுடே பப்ளிகேஷன்ஸ், பக்.122, விலை ரூ.100. தினமணியின் தமிழ்ப் பணி என்பது நூலின் தலைப்பாக இருந்தாலும், தினமணி நாளிதழ் மற்றும் இணைப்புகளில் வெளிவரும் எல்லா விஷயங்களைப் பற்றியும் இந்நூல் பேசுகிறது. பதிப்பாசிரியர் கு.வெங்கடேசன் உட்பட எழுவர் எழுதிய 13 கட்டுரைகளின் தொகுப்பு இது. தற்கால தமிழ் இலக்கணக் கட்டமைப்புக்கு தினமணி எவ்வாறு உதவுகிறது? தமிழ்மணியின் சொல்தேடலும், சொல்புதிதும் புதிய தமிழ்ச்சொற்களை உருவாக்கியவிதம், தமிழ்மணியில் இடம் பெற்ற பழந்தமிழிலக்கியம் தொடர்பான கட்டுரைகளின் சிறப்பு என தினமணியின் தமிழ்ப்பணியை விரிவாக இந்நூல் […]

Read more

தமிழ்க்கதிர் வ.சு.ப.மாணிக்கனார்

தமிழ்க்கதிர் வ.சு.ப.மாணிக்கனார், இரா.மோகன், நிர்மலா மோகன், வானதி பதிப்பகம், பக். 230, விலை 150ரூ. தமிழறிஞர் வ.சுப.மாணிக்கனாரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள நூல் இது. ஒருவரது நூற்றாண்டு விழா எனில் அவரது வாழ்க்கை வரலாறு, படைப்புகள், விருதுகள் என தனிப்பெருமை போற்றும் வழக்கமான நிலையில், வ.சுப.மாணிக்கனாரின் தமிழ் நூல்களைப் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு நூலாக்கியிருக்கிறது. தொல்காப்பியத்தை மற்ற பேராசிரியர்களிலிருந்து வ.சுப.மாணிக்கனார் எப்படி வேறுபட்டு பார்க்கிறார் என்பது மிக நுட்பமாக விளக்கப்பட்டுள்ளது. தமிழ் பல்துறை ஆராய்ச்சிக்கு உரியதாக வளர்ந்தாலும், யாப்பு குறித்த ஆய்வு […]

Read more

நகலிசைக் கலைஞன்

நகலிசைக் கலைஞன், ஜான் சுந்தர், காலச்சுவடு பதிப்பகம், விலை 130ரூ. அனுபவக் கட்டுரைகளின் உண்மையும், ஆழமும் எப்போதும் சுவாரஸ்யமானவை. கற்பனையின் எல்லைக் கோட்டைக்கூட தொட்டுவிடாத அழகில் ஜான் சுந்தர் நகலிசைக் கலைஞர்களின் அனுபவங்களை, உடனிருப்பை ரத்தமும் சதையுமாக எழுதியிருக்கிறார். மெய் மறப்பதும், கவலை துறப்பதும் அனேகமாக திரைப் பாடல்களை கேட்கும் போது மட்டுமே நடக்கிறது. நகலிசைக் கலைஞர்களின் வாழ்க்கையின் சில பக்கங்களை துளி மிகையில்லாமல் செங்கல் சூளையின் வரிசை போல் கச்சிதமான அடுக்கில் கட்டுரைகள். இசையைப் புரிந்து கொள்வதும், அனுபவிப்பதும் ஜானின் எழுத்துகளில் தங்கு […]

Read more

ஸ்ரீ ஜோதி ஸ்வாமிகள்

ஸ்ரீ ஜோதி ஸ்வாமிகள், செல்வி எஸ். பாக்கியலஷ்மி, ஸ்ரீ பிரம்ம ஞான ஜோதி ஆசிரமம், பக். 192, விலை 100ரூ. சுவாமிகளின் அவதாரப் பெருமையையும், அவர் நிகழ்த்திய அதிசயங்களையும் படங்களுடன் விவரிக்கிறது இந்நூல். ஆன்மிக அன்பர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். நன்றி: தினமலர், 5/3/2017.   —-   பொது அறிவுப் பூங்கா, ஸ்ரீராம் காயத்ரி, காயத்ரி பப்ளிகேஷன்ஸ், பக். 96, விலை 70ரூ. ஆயிரம் பொது அறிவு கேள்வி – பதில் அடங்கிய கருத்துக் கருவூலம். கல்வி பயிலும் இளம் மாணவர்களின் அறிவுப் […]

Read more

பெண் எனும் பொருள்

பெண் எனும் பொருள், பெண்கள், குழந்தைகள் லிடியா காச்சோ, தமிழில் விஜயசாய், விடியல் பதிப்பகம், விலை 350ரூ. இது நாம் அறியாத உலகம். புலப்படாத புதிர். இடைவிடாது நடக்கும் பயங்கரம். நாளொன்றுக்கு உலகமெங்கும் பெண்களும், குழந்தைகளுமாக, இருக்கும் இடத்திலிருந்து அவர்கள் உணர்ந்து அறியாத மாய உலகிற்கு கடத்தப்படுகிறார்கள். படு பயங்கரமான வலைப்பின்னல் கொண்ட தொடர்ச்சி இது. இந்த பயங்கரங்களைக் கேட்டு உணர்ந்ததோடு நின்றுவிடாமல், தொடர்ந்து பயணித்து, துணிச்சலாக தகவல் சேகரித்து எழுதியிருக்கிறார் லிடியா. பெண்களைக் கடத்திச் செல்வது, விலைக்கு வாங்குவது, பாலியல் தொழிலுக்கு மூளைச்சலவை […]

Read more

பெரியார் ஒளிமுத்துக்கள்

பெரியார் ஒளிமுத்துக்கள், திராவிடர் கழக வெளியீடு, விலை 70ரூ. தந்தை பெரியாரின் பொன்மொழிகள் கொண்ட புத்தகம். சுயமரியாதை, பொதுத்தொண்டு, சமுதாயச் சீர்திருத்தம், இலக்கியம், திருக்குறள், பொருளாதாரம் முதலிய தலைப்புகளில் தொகுக்கப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி, 15/2/2017.   —-   பொது அறிவுப்பூங்கா, ஸ்ரீ ரங்கம் காயத்ரி, காய்த்ரி பப்ளிகேஷன்ஸ், விலை 70ரூ. பொது அறிவு சம்பந்தமான 1000 கேள்வி – பதில்கள் கொண்ட புத்தகம். நன்றி: தினத்தந்தி, 15/2/2017.

Read more

சிலிர்த்தெழும் இளைஞர் இந்தியா

சிலிர்த்தெழும் இளைஞர் இந்தியா, செந்தமிழ்த்தாசன், இளைஞர் இந்தியா புத்தகாலயம், பக். 160, விலை 120ரூ. வெள்ளையர்களிடமிருந்து நாட்டை மீட்க முன்பு ஒரு விடுதலைப்போர் நடந்ததைத் போல், இன்று நமது அரசியல் கொள்ளையர்களிடமிருந்து நாட்டை மீட்க மீண்டும் ஒரு விடுதலைப் போர் நடந்தாக வேண்டும் என்று ஆதங்கப்படுகிறார் இந்நூலாசிரியர். ஆன்மீகம், அரசியல், கல்வி, கலை, கலாசாரம், பண்பாடு, நாகரிகம், மதச்சார்பின்மை… என்று பல துறைகளில் உயர்ந்த நிலையை உலகிற்கு வழங்கிய இந்தியா, இன்று நமது அரசியல்வாதிகளால் மதவெறி, ஜாதிவெறி, இனவெறி, மொழிவெறி, சுயநலம், ஊழல், லஞ்சம், […]

Read more

மார்டன் தியேட்டர்ஸ்

மார்டன் தியேட்டர்ஸ், ரா. வேங்கடசாமி. விஜயா பப்ளிகேஷன்ஸ், விலை 120ரூ. திரைப்படத் தயாரிப்பில் ஜெமினி, ஏவி.எம்., பட்சிராஜா, ஜுபிடர் நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டிருந்த காலக்கட்டத்தில், அவர்களுடன முன்னணியில் இருந்த நிறுவனம் “மார்டன் தியேட்டர்ஸ்” இதன் அதிபரான டி.ஆர்.சுந்தரம், 97 படங்களைத் தயாரித்து வெளியிட்டார். அவர் மறைவுக்குப்பின் நிர்வாகத்தை ஏற்ற அவர் மகன் ராமசுந்தரம், படங்களின் தயாரிப்பு எண்ணிக்கையை 118 ஆக உயர்த்தினார். தமிழ்நாட்டின் முதல் வண்ணப்படமான “அலிபாபாவும் 40 திருடர்களும்” படத்தைத் தயாரித்தவர் டி.ஆர். சுந்தரம்தான். மாடர்ன் தியேட்டர்சில் பணியாற்றிய கலைஞர் மு. கருணாநிதி, […]

Read more

தண்ணீர் அஞ்சலி

தண்ணீர் அஞ்சலி, தில்பாரதி, காகிதம் பதிப்பகம், பக். 64, விலை 50ரூ. குழந்தையின் கண்ணில் தூசி உறுத்தியது அம்மாவுக்கு இப்படி நிறைய ஹைக்கூ கவிதைகள் நூல் முழுக்க உள்ளன. தாய்மை உணர்வை ஹைக்கூவில் நமக்கு உணர்த்திய கவிஞர், உலக நடப்புகள் அனைத்தையும் தம் ஹைக்கூ கவிதை வழியே நமக்கு காட்சிப்படுத்தி விடுகிறார். இப்படி இன்னும் நிறைய சொல்லலாம். சொல்வளம் மிக்க கவிதைத் தொகுப்பு. நன்றி: குமுதம், 4/1/2017.

Read more
1 420 421 422 423 424 505