ராஜீவ் படுகொலையில் சர்வதேசக் கூலிகள்

ராஜீவ் படுகொலையில் சர்வதேசக் கூலிகள், பதிப்பக வெளியீடு, நக்கீரன் பதிப்பகம், விலைரூ.225. இந்தியாவின் இளம் அரசியல் தலைவர் ராஜிவ் கொலை பின்னணியில், பல உறுத்தலான காட்சிகள் ஆவணமாக வெளியிடப்பட்டுள்ளன. புலனாய்வு இதழியல் என்ற தன்மையில் சாதாரண பொதுமக்களுக்கு, ராஜிவ் படுகொலையில் தொடர்புடைய அனைத்து வகை தகவல்களையும் வழங்கியுள்ளது. ஒவ்வொரு குறிப்புகளும், படங்களும், தேதி மற்றும் நேரம் வாரியாக மிகவும் துல்லியமாக அச்சேற்றியுள்ளனர்.இதை முழுமையாகப் படித்து முடித்தால், ராஜிவ் படுகொலைக்கான காரணமாகப் பலதரப்பட்ட பிரச்னைகள் புதிய கண்ணோட்டங்களாக விரியும். இந்திய மக்களுக்குப் பல உண்மைகள் இன்னமும் […]

Read more

ஜம்மு & காஷ்மீர் முழுமையான வரலாறு

ஜம்மு & காஷ்மீர் முழுமையான வரலாறு, எம்.குமார், மணிமேகலை பிரசுரம், விலைரூ.140. ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தின் வரலாறு முழுமையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து வரை, மிகத் தெளிவாக பதிவு செய்யப்பட்டு உள்ளது. வரலாற்று காலம் தொட்டு மிகத் தெளிவான வரலாறு சுருக்கமாக உள்ளது. ஒன்பது தலைப்புகளில் தொகுக்கப்பட்டுள்ளது. எளிய தமிழில் புரியும் வண்ணம் படைக்கப்பட்டு உள்ளது. இறுதியில் தொகுத்தாய்வோம் என்ற தலைப்பில், மாநிலம் பற்றிய கருத்தை ஆசிரியர் பதிவிட்டுள்ளார். கடுமையாக முயன்று, தகவல்களை தொகுத்து உருவாக்கப்பட்டுள்ள […]

Read more

என் பார்வையில் இந்திய அரசியல்

என் பார்வையில் இந்திய அரசியல் , அ.பிச்சை, சந்தியா பதிப்பகம், பக்.134, விலை ரூ. 130.   இந்திய நாடு விடுதலை பெற்ற 1947 ஆகஸ்ட் 15 அன்றும் அதற்கு முந்தைய நாளிலும் தொடங்கி, நாட்டின் 73 -ஆவது விடுதலை நாளைக் கொண்டாடிய கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15 வரை நாட்டில் நிகழ்ந்த பல்வேறு நிகழ்வுகளை வெவ்வேறு தலைப்புகளில் சுவையான கட்டுரைகளாகத் தொகுத்துத் தந்துள்ளார் நூலாசிரியர். சுதந்திர இந்தியாவில் ஜவாஹர்லால் நேரு முதலாவது பிரதமராகப் பொறுப்பேற்காமல் சர்தார் வல்லபபாய் பட்டேல் பொறுப்பேற்றிருந்தால் நாடு எப்படி […]

Read more

சாவர்க்கரின் வாக்குமூலம்

சாவர்க்கரின் வாக்குமூலம், ஜனனி ரமேஷ், தடம் பதிப்பகம், விலைரூ.100.   மகாத்மா காந்தி கொலை செய்யப்பட்ட போது, குற்றம் சாட்டப்பட்ட சாவர்க்கரின் வாக்குமூலம் தமிழாக்கப்பட்டுள்ளது. விசாரணை நீதிமன்றத்தில் அவர் சமர்ப்பித்த எழுத்து மூலமான ஆவணம் மாறாமல் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. குற்றத்தில் தொடர்பில்லை என்பதை பல்வேறு ஆதாரங்கள் மூலம் மறுத்து வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளார். காந்தி கொலை வழக்கில் முக்கியமான ஆவணமாக உள்ளது. நன்றி: தினமலர்,18/7/21 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000031349_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் […]

Read more

ஒரு செக்யூலரிஸ்டின் வாக்குமூலம்

ஒரு செக்யூலரிஸ்டின் வாக்குமூலம், ஸ்ரீதர் சுப்ரமணியம், கோதை பதிப்பகம், விலை: ரூ.180 மதச்சார்பின்மை இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கொள்கையா இல்லையா என்னும் விவாதம் தீவிரமாக முன்னெடுக்கப்படும் காலத்தில் அரசியலிலும் நிர்வாகத்திலும் மதச்சார்பின்மையைக் கடைப்பிடித்தல் என்னும் கோட்பாட்டின் முக்கியத்துவத்தையும், அதனால் உலகுக்குக் கிடைத்த பயன்களையும், மனித குலம் அடைந்த முன்னேற்றங்களையும் விளக்கும் நூல் இது. மதச்சார்பின்மை என்றால் என்ன என்னும் அடிப்படை விளக்கத்துடன் தொடங்கும் இந்நூல், மதச்சார்பின்மையால் விளைந்த நன்மைகளை விளக்கும் ஐந்து அத்தியாயங்களுடன் நிறைவடைகிறது. இடையில் உள்ள அத்தியாயங்கள் மதச்சார்பின்மைக்கு நேரெதிர் கொள்கையான […]

Read more

ஆயிரம் பிறை கண்ட அண்ணாச்சி

ஆயிரம் பிறை கண்ட அண்ணாச்சி, சந்தனம்மாள் பதிப்பகம்,பக்.300, விலைரூ.300. விஜிபி குழுமத் தலைவரான வி.ஜி.சந்தோஷத்தின் 85 – ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, நாட்டின் குடியரசுத்தலைவர், மாநில முதல்வர், துணைநிலை ஆளுநர், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர், அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்கள், முக்கியப் பொறுப்பு வகிப்பவர்கள், நீதியரசர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், வணிகர் சங்கப் பொறுப்பாளர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்களின் வாழ்த்துகள், கட்டுரைகள், நினைவுக் குறிப்புகளின் தொகுப்பாக இந்நூல் மலர்ந்திருக்கிறது. “இவர் மனிதரல்ல. மிக நல்ல மனிதர்.உலகமே போற்றும் மாமனிதர். […]

Read more

எனது அரசியல் பயணம்

எனது அரசியல் பயணம், தி.ராமசாமி, செந்தமிழன் வெளியீடு, விலைரூ.75. தமிழ் மண்ணில் கம்யூனிஸ்டுகளின் தியாகங்கள் மறைந்து கிடக்கின்றன. அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில் கம்யூனிஸ்டுகளின் போராட்டங்களையும், தியாகங்களையும் எடுத்துரைக்கிறது இந்த நுால். முதல் பகுதியில் நுாலாசிரியரை உருவாக்கிய தலைவர்களையும், மூத்த ஆளுமைகளையும் பற்றி கூறப்பட்டுள்ளது. அடுத்த பகுதியில் போராட்ட அனுபவங்கள், இயக்க வளர்ச்சி, பேரிடர் காலங்களில் இயக்கத்தின் சேவை என அரசியல் பயண அனுபவங்கள் உள்ளன. கம்யூனிஸ்டுகளின் போராட்டங்களையும், தியாகங்களையும், அடுத்த தலைமுறை அறிந்து கொள்வதை முன்வைத்து படைக்கப்பட்டுள்ள நுால். – முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன். […]

Read more

தெற்கிலிருந்து ஒரு சூரியன்

தெற்கிலிருந்து ஒரு சூரியன், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.300. தமிழக சட்டமன்றத்தில் கருணாநிதி ஆற்றிய உரைகளிலேயே சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது ‘மாநில சுயாட்சி’ தீர்மானத்தை நிறைவேற்றக் கோரும் அவருடைய 20.04.1974 உரை. நீண்ட அந்த உரையிலிருந்து சிறு பகுதி: “கடந்த ஐந்தாறு ஆண்டுகளில் பசுமைப் புரட்சியின் மூலமாக உணவுத் துறையிலே தன்னிறைவு பெற்று, இன்றைக்கு மற்ற மாநிலங்களுக்கு உணவுத் தானியங்களை வழங்கி, அவர்களுடைய பசியை ஓரளவு குறைக்கின்ற பெருமை உடையதாகத் தமிழக அரசு விளங்குகிறது. பியுசி வரை இலவசக் கல்வி, 1967-க்கு […]

Read more

சாவர்க்கரின் வாக்குமூலம்

சாவர்க்கரின் வாக்குமூலம், ஜனனி ரமேஷ், தடம் பதிப்பகம், விலை 100ரூ. மகாத்மா காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட இந்து மகாசபைத் தலைவரான சாவர்க்கர், தான் குற்றமற்றவர் என்று கொடுத்த வாக்குமூலத்தின் முழு விவரம் இந்த நூலில் இடம்பெற்றுள்ளது. கொலை வழக்கில் இருந்து விடுதலையான சாவர்க்கரின் இந்த வாக்குமூலத்தில் இந்திய வரலாற்றுச் செய்திகள் பல இடம்பெற்றுள்ளன. நன்றி: தினத்தந்தி, 2/5/21 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000031349_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் […]

Read more

இந்தியா – அடிமைப்படுத்தப்பட்ட வரலாறு

இந்தியா – அடிமைப்படுத்தப்பட்ட வரலாறு: ஐரோப்பிய ஆக்கிரமிப்புகள் (1498 – 1765), ராய் மாக்ஸம், தமிழில் – பி.ஆர். மகாதேவன்; கிழக்கு பதிப்பகம், பக். 280; விலை ரூ. 325.   ராய் மாக்ஸமின் தி தெப்ஃட் ஆஃப் இந்தியா நூலின் மொழிபெயர்ப்பு இந்த நூல்.இந்தியாவின் உப்புவேலி, ஆப்பிரிக்காவின் தேயிலைச் சுரண்டல் பற்றிய நூல்களுக்கான தரவுகளைத் தேடியபோது கண்டடைந்த தகவல்களின் அடியொற்றி மேற்கொண்ட தொடர் தேடுதல்களின் அடிப்படையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இந்தியா மீதான ஆக்கிரமிப்பு கால கறுப்புப் பக்கங்களை விவரிக்கும் இந்நூலில், ஐரோப்பிய ஆதிக்க […]

Read more
1 2 3 4 5 44