காலத்தை வெல்லும் திருமுறைகள்

காலத்தை வெல்லும் திருமுறைகள், ராதா நடராஜன்,  கற்பகம் புத்தகாலயம், பக்.224,  விலை ரூ.150. சைவர்கள் தமிழ் வேதமாகக் கருதுவது அருளாளர்கள் அருளிய பன்னிரு திருமுறைகளை. திருமுறைப் பாடல்கள் பாடிய அருளாளர்களின் வரலாற்றில் நிகழ்ந்த – இறைவன் நிகழ்த்திய அற்புத நிகழ்ச்சியின் பின்னணியிலேயே திருமுறைப் பாடல்கள் அமைந்துள்ளன என்பதை இந்நூல் விவரிக்கிறது. சமயக் குரவர்களான நால்வர் பெருமக்களின் (திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தர், மாணிக்கவாசகர்) வரலாற்றில் நிகழ்ந்த சில அற்புத நிகழ்ச்சிகளை மட்டும் எடுத்துக்கொண்டு, இறைவன் நிகழ்த்திய அற்புதம், திருமுறைகளின் மாண்பு, சில நாயன்மார்களின் சிவத்தொண்டு, திருத்தலப் […]

Read more

மதுரை நகரக் கோயில்கள்

மதுரை நகரக் கோயில்கள், டி.வி.எஸ். மணியன், அமராவதி வெளியீடு, பக். 200, விலை 130ரூ. மதுரை நகரத்திற்குள் அமைந்திருக்கும் கோயில்கள் பற்றி கூறும் நூல். மதுரைக் கோயில்களை காண விரும்புவோருக்கும் ஆராய விரும்புவோருக்கும் இந்நூல் ஒரு நல்ல வழிகாட்டி. கோயில்களை அறிமுகம் செய்யும் அதே வேளையில் கோயில் வரலாறு, கோயில் சார்ந்த மன்னர்கள் வரலாறு, மக்கள் வாழ்க்கை முறை, நம்பிக்கை, புராணப் பின்புலங்கள் என்று அனைத்தையும் நமக்கு எடுத்துக்காட்டிவிடுகிறார் நூலாசிரியர். நன்றி: குமுதம், 3/5/2017.

Read more

திருவருட்பா பதிப்புச் சோலை

திருவருட்பா பதிப்புச் சோலை, இராம.பாண்டுரங்கன், ஐந்திணை வெளியீட்டகம், பக்.224, விலை ரூ.200. காலந்தோறும் ஆவணப்படுத்துதல் என்பது இன்றியமையாத ஒன்று. வரலாறுகளை ஆவணப்படுத்துதலின் மூலமாகவே பல்வேறு வரலாறுகளை அறிந்து கொள்ள முடிகிறது. அந்த வகையில் தமிழ் வரலாறுகளின், தமிழ் ஆய்வுகளை ஆவணப்படுத்தலின் தேவையை இந்நூல் வலியுறுத்துகிறது. 1867 முதல் 1972 வரை வெளியான திருவருட்பா பதிப்புகள் அனைத்தும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. வள்ளலாரின் "திருவருட்பா' தமிழுக்குக் கிடைத்த மிகப்பெரிய செல்வம். தாயுமானவர், பாரதியார், வானமாமலை, ம.பொ.சி. முதலியோர் பார்வையில் வள்ளலார் குறித்த விரிவான விளக்கம் சிறப்பு. தமிழ் நூல் […]

Read more

பகவத் கீதை சிந்தனைகள்

பகவத் கீதை சிந்தனைகள், காந்தாமணி நாராயணன், தென்றல் நிலையம், பக். 96, விலை 50ரூ. எளிமையான நடையில் எழுதப்பட்ட இந்நூல், ‘தர்மசக்தி’ என்ற வார இதழில் தொடர்ந்து ஒரு ஆண்டிற்கும் மேலாக வந்தது. அந்தத் தொகுப்பு தான், இப்போது நூல் வடிவம் பெற்றுள்ளது. மனதிற்கு அமைதியையும், ஆன்மிக அனுபூதியையும் கொடுக்கக் கூடிய நூல் பகவத் கீதை. இதில் கூறப்பட்டுள்ள உண்மைகள் எல்லா காலத்திற்கும் பொருந்தும். ‘நம் மனதில் உள்ள கெட்ட எண்ணங்களைப் போக்குவது, நெற்பயிர்களுக்கு இடையே முளைத்து இருக்கும் களைகளை எடுப்பது போல், நல்ல […]

Read more

தகப்பன் சாமி

தகப்பன் சாமி, ராமசுப்பு, வித்யுத் பப்ளிகேஷன்ஸ், பக். 114, விலை 100ரூ. சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து முருகன் தோன்றியது விசாக நட்சத்திரத்தில். எனவே முருகனை, விசாகன் என்றும் அழைக்கின்றனர். கார்த்திகைப் பெண்கள் வளர்த்ததால், கார்த்திகேயன் எனப்படுகிறான். சூரனை வெல்வதற்காகப் படைக்கப்பட்ட முருகன், வீரபாகு உட்பட, ஒன்பது வீரர்களின் துணையுடன், சக்தி கொடுத்த வேல் கொண்டு தாரகாசுரனையும், சிங்கமுகனையும் மற்றும் சூரனையும் அழிக்கிறான். தீபாவளியும், திருக்கார்த்திகையும் ஒரே விழாக்கள் என்றும், பங்குனி உத்திரத்தில் வள்ளியை, முருகன் மணம் புரிந்தான் முதலான தகவல்களை, இந்த நூல் எடுத்துரைக்கிறது. […]

Read more

ஆன்மிகம் அறிவோம்

ஆன்மிகம் அறிவோம், முனைவர் இளசை சுந்தரம், புகழ் பதிப்பகம், பக். 176, விலை 140ரூ. பூஜை, சடங்குகளை செய்யும் போது அதற்கான காரண, காரியங்களை அறிந்து செய்தால், வழிபாட்டில் ஈடுபாடு அதிகமாகும்; பக்தி பரவசம் பெருகும் என்கிறது இந்நூல். நன்றி: தினமலர், 21/5/2017.   —-   காலத்தை வென்ற ஜோதிட சித்தர்கள், கவிதா, விலை 200ரூ. ஜோதிடக் கலையின் மூலவர்கள் சித்தர்கள். சித்தர்கள் விவரித்துள்ள பஞ்சபட்சி சாஸ்திரம், ஆரூடம், கைரேகை சாஸ்திரம், வான சாஸ்திரம் போன்ற சோதிடக் கலையைப் பற்றிய முழு விளக்கங்களை […]

Read more

திருக்கோயில்கள் திருவிழாக்கள்

திருக்கோயில்கள் திருவிழாக்கள் (சில சுவையான தகவல்கள்), கைலாசம் சுப்ரமணியம், வானதி பதிப்பகம், பக்.480, விலை ரூ.300. ஆலயங்கள் அனைத்தும் கலை, கலாசாரம் இவற்றின் உறைவிடமாகத் திகழ்வதை இந்நூல் எடுத்தியம்புகிறது. ஆலயங்களில் கலைகள், நூல்களின் அரங்கேற்றம் நடைபெறுதல், கோயில்கள் கட்டுதல், கோபுரம் அமைத்தல், தெய்வங்கள் மூலவர், உற்சவர் திருமேனிகள் செய்தல், தெய்வத்திற்கு ஆபரணங்கள் செய்தல், வாகனங்கள், தேர், சிற்பங்கள் செய்தல் என எல்லாக் கலைகளுமே ஆலயத்தை மையமாகக் கொண்டு வளர்ந்து வருவதை விளக்குகிறது. சைவ ஆகமங்கள், வைணவ ஆகமங்கள் கொடியேற்றம் (துவஜாரோஹணம்), கொடியிறக்கம் (துவஜஅவரோஹணம்), துவஜஸ்தம்பத்தின் […]

Read more

மகாபாரதத்தில் வரமும் சாபமும்

மகாபாரதத்தில் வரமும் சாபமும், இ.எஸ்.லலிதாமதி, கலைஞன் பதிப்பகம், விலை 165ரூ. கலைஞன் பதிப்பக வைர விழாவை முன்னிட்டு, மலேஷியாவில் வெளியிட்ட, 60 நூல்களுள் இந்நூலும் ஒன்று. இந்நூல் மகாபாரதத்துள் இடம் பெற்றுள்ள வரம், சாபம் குறித்த, 30 கதைகளைத் தொகுத்துக் கூறுகிறது. இது, மகாபாரதம் முழுமையாகப் படித்தறியாதவர்கள், அது குறித்து அறிந்து கொள்ளும்படியும், படித்தோர் என்னென்ன வரங்கள், என்னென்ன சாபங்கள் உள்ளன என, தொகுத்து நோக்கி இன்புறுவதற்கும் ஏற்ற வகையில் சுவை நிறைந்த சொல்லாடலில் அமைந்துள்ளது. வரங்கள் என்று நோக்கும்போது நாராயணன், உத்தங்கர், சஞ்சயன், […]

Read more

வரலாற்றில் வன்னியர் மகாவம்சம்,

வரலாற்றில் வன்னியர் மகாவம்சம், ந. இறைவன், வன்னியகுல சத்திரிய மகாசங்கம், பக். 488, விலை 450ரூ. பிரமனின் தோளில் இருந்து வலிமையுடன் தோன்றிய ஷத்திரியர்கள், உலக ஒழுங்குமுறையை காக்கப் பிறந்தவர்கள் என்ற கருத்து அழுத்தமாக இந்நூலில் கூறப்பட்டிருக்கிறது. நன்றி: தினமலர், 21/5/2017.   —-   ஷீரடி சாயிபாபா, ஹோவர்ட் மாபெட், அமராவதி வெளியீடு, பக். 112, விலை 80ரூ. ஷீரடி சாயிபாபாவின் வரலாற்றைப் படிக்க, மனதில் பரவசம் பொங்கிப் பெருகும். காலத்தை வென்ற மகான் இவர் என்பதற்கு மாற்றுக் கருத்தே இல்லை என்கிறது […]

Read more

அறுபத்து மூவர்

அறுபத்து மூவர், நாயன்மார்கள் வரலாறு, கவிதா பப்ளிகேஷன்ஸ், விலை 450ரூ. சேக்கிழார் பெருமானால் எழுதப்பட்ட வரலாற்று காப்பியம் பெரிய புராணம். இது, சிவபெருமானின் அடியார்களான 63 நாயன்மார்களின் வாழ்க்கையை விவரிக்கிறது. இந்த நாயன்மார்கள் ஐந்து முதல் பத்தாம் நூற்றாண்டு வரை வாழ்ந்தவர்கள். பெரியபுராணம் 4,286 பாடல்களைக் கொண்டதாகும். பொருள் பொதிந்த சொற்களைக் கொண்டு இந்தப் பாடல்களை இயற்றியுள்ளார் சேக்கிழார். 63 நாயன்மார்களின் வரலாற்றை அனைவரும் உணர்ந்து ரசிக்கும் எளிய இனிய நடையில் எழுதியுள்ளார், ஈரோடு தங்க விசுவநாதன். புத்தகம் சிறந்த கட்டமைப்புடனும், படங்களுடனும் வெளிவந்துள்ளது. […]

Read more
1 50 51 52 53 54 128