தொல்குடி வேளிர் வேந்தர்

தொல்குடி வேளிர் வேந்தர், பூங்குன்றன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 200ரூ. பழந்தமிழக வரலாற்றின் தொடக்கம், அதன் பின் உருவான தொல்குடிகள், நகரம் அமைப்பு, அரசு உருவாக்கம், வேந்தர்களின் வளர்ச்சி, வணிகப் பெருக்கம் போன்ற பல விவரங்களை ஆராய்ந்து இலக்கிய ஆதாரங்களுடன் விளக்கி இருப்பது தொல்பொருள் ஆர்வலர்களுக்கு வழிகாட்டி போல அமைந்து இருக்கிறது. நன்றி: தினத்தந்தி, 29/3/2017.   —-   ஞானத்தேடல், தென்றல் பதிப்பகம், விலை 75ரூ. ஆன்மிகக் கட்டுரைகள் கொண்ட புத்தகம். நூலாசிரியர் முனைவர் சி.ஆர். மஞ்சுளா, இக்கட்டுரைகளை இலக்கியத் […]

Read more

திருக்குர்ஆனில் அறிவியல் கூறுகள்

திருக்குர்ஆனில் அறிவியல் கூறுகள், ஆ.ப.ஜெ.மு. நசீமா மரைக்காயர், நந்தினி பதிப்பகம், விலை 240ரூ. திருக்குர்ஆன் அறிவியல் சார்ந்த கருத்துகளையும், சிந்தனைகளையும் உள்ளடக்கிய கருவூலமாகத் திகழ்கிறது. இதற்கு ஆதாரமாக திருக்குர்ஆனில் உள்ள அறிவியல் சார்ந்த கருத்துக்களைத் திரட்டி அவற்றோடு இன்றைய அறிவியல்   சிந்தனைகளைத் தொடர்புபடுத்தி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார்ஆ.ப.ஜெ.மு. நசீமா மரைக்காயர். இவர் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் சகோதரர் முத்து மீரா லெப்பையின் மகள். இந்த நூலில் அவர் திருக்குர்ஆனின் தோற்றம், அறிவியல் பொருள் விளக்கம், இறைமறையும் […]

Read more

ஐஎஸ்ஐஎஸ் கொலைகாரன் பேட்டை

ஐஎஸ்ஐஎஸ் கொலைகாரன் பேட்டை, பா. ராகவன், கிழக்கு பதிப்பகம், விலை 140ரூ. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் குறித்து எழுத்தாளர் பா. ராகவன் எழுதிய நூல். அல்கொய்தாவுக்கு பிறகு சர்வதேச சமூகத்திற்கு பெரும் சவாலாக இருக்கும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் தோற்றம், அதன் செயல்பாடுகள் குறித்து விரிவாக எழுதியுள்ளார். நன்றி: தினத்தந்தி, 23/3/2017.   —-   திருவாசகம், அருணா பப்ளிகேஷன்ஸ், விலை 200ரூ. மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகத்தின் மூலமும் உரையும் அடங்கிய நூல். உடலையும் உள்ளத்தையும் ஒருசேர உருக்குகின்ற திருவாசத்திற்கு உரையாசிரியர் தமிழ்ப்பிரியன் எளிய வகையில் விளக்கம் […]

Read more

புத்தம் சரணம் கச்சாமி

புத்தம் சரணம் கச்சாமி, ஈ.அன்பன், திரிபீடக தமிழாக்க நிறுவனம், விலை 150ரூ. புத்தரின் வரலாற்றையும், அவருடைய போதனைகளையும் விரிவாக விளக்கும் நூல். மன்னராக வாழ்ந்தவர், மக்களுக்குத் தொண்டு செய்வதற்காக துறவியான சம்பவம், உலகம் அதற்கு முன்போ பின்போ நடந்திராத ஒன்றாகும். எல்லாம் வல்ல கடவுள் ஒருவர் உண்டு என்று பவுத்தம் நம்புவதில்லை. அதாவது புத்தர், கடவுள் நம்பிக்கை அற்றவர். நாத்திகர். ஆனால் பல நாடுகளில் புத்தரையே கடவுளாக வணங்குகிறார்கள். புத்தர் பிறந்த இந்தியாவில் புத்த மதம் வளரவில்லை என்றாலும், கடல் கடந்த பல நாடுகளில் […]

Read more

தெய்வங்கள் வணங்கிய தெய்வத் திருத்தலங்கள்

தெய்வங்கள் வணங்கிய தெய்வத் திருத்தலங்கள், தெள்ளாறு இ.மணி, சங்கர் பதிப்பகம், விலை 300ரூ. தமிழகத்தில் உள்ள கோவில்கள் ஒவ்வொன்றும் ஒரு வகையில் சிறப்பு பெற்றவை ஆகும். ஆலயங்களுக்கு தெய்வங்களே வந்து வழிபாடு நடத்தி இருக்கின்றன என்பது ஐதீகம். அவ்வாறு எந்த கோவிலில் எந்த தெய்வம் வழிபாடு நடத்தியது என்பதையும், அந்த கோவிலின் வரலாறு உள்பட வேறு பல சிறப்புகள், அந்த கோவில்கள் அமைந்துள்ள ஊர், அங்கே செல்வது எப்படி என்பது போன்ற ஆன்மிக வாசகர்களைக் கவரும் பல்வேறு அம்சங்கள் இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. […]

Read more

வட்டாராதனை கதை உலகம்

வட்டாராதனை கதை உலகம், மூல கன்னட வடிவம்  சிவகோட்டாச்சார், நவீன கன்னட வடிவம்  ஆர்.எல். ஆனந்தராமய்யா, தமிழில் – தி.சு.சதாசிவம், பாவண்ணன், இறையடியான், சாகித்திய அகாதெமி பதிப்பகம், பக்.253, விலை ரூ.125. கன்னட மொழியின் முதல் உரைநடை நூல் என்ற பெருமைக்கு உரித்தானது இந்த நூல். மனித வாழ்வின் துன்பங்களைக் கடந்து கடுமையான நெறிகளின் பயனாக விண்ணுலகப் பேறு அடைந்த சமண துறவிகளின் வாழ்க்கையே வட்டாராதனை எனப்படுகிறது. இந்தக் கதைகள், பத்து அல்லது பதினொன்றாம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. செய்யுள் வடிவில் […]

Read more

சரித்திரப் புகழ் தெய்வீக இசைப் பாடகர்கள் பாகம் – 2

சரித்திரப் புகழ் தெய்வீக இசைப் பாடகர்கள் பாகம் – 2, எஸ்.எஸ். பரத்வாஜ், மணிமேகலை பிரசுரம், பக். 328, விலை 275ரூ. முறையான இசைப் பயில விரும்புவோர், ஒரு சாகித்தியத்தை யார் எழுதியது என்பதையும், அந்த சாகித்தியத்தின் முழு அர்த்தத்தையும் முற்றிலும் புரிந்து கொள்ள முனைவர். இதெல்லாம், இசைக் கல்லூரிகளில் பயின்றால் மட்டுமே சாத்தியம். இப்போதைய அவசர உலகில், சங்கீதம் கற்றுக் கொடுப்பவர்களே, வாக்கேயக்காரர்கள் பற்றி அறிய ஆவல் காட்டுவதில்லை. ஆனால், வாக்கேயக்காரர்கள் பற்றி அறிய ஆவல் கொண்டோர், அவர்களைப் பற்றி மேம்போக்காக எழுதப்பட்டுள்ள […]

Read more

சிவபெருமானுடன் ஒரு திருநடனம்

சிவபெருமானுடன் ஒரு திருநடனம், சத்குரு சிவாய சுப்பிரமுனிய சுவாமி, தமிழில் கொரட்டூர் கே.என். ஸ்ரீநிவாஸ், கண்ணதாசன் பதிப்பகம், விலை 425ரூ. இந்து மதம் தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் பல்வேறுவித வினாக்களுக்கு விடை அளிக்கும் வகையில் சின்னச் சின்ன தலைப்புகளில் ஏராளமான விவரங்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. பிரபஞ்ச தோற்றம், கோவில்களின் அமைப்பு, சிவனின் திருநடன தத்துவம், இறைவழிபாடு, துறவு வாழ்ககை, திருவிழாக்கள், சடங்குகள் எனப் பல தகவல்கள் இதில் உள்ளன. ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும் வேதங்கள், ஆகமங்கள், திருமந்திரம் ஆகியவற்றில் இருந்து மேற்கோள் காட்டி இருப்பது […]

Read more

காலத்தை வெல்லும் திருமுறைகள்

காலத்தை வெல்லும் திருமுறைகள், (ஆன்மிகக் கட்டுரைகள்), கற்பகம் புத்தகாலயம், விலை 150ரூ. திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளுக்கு ஆதாரமாக, சாட்சியாக திருமுறைகள் விளங்குகின்றன என்பதை இந்த நூலின் ஆசிரியர் ராதா நடராஜன் எடுத்துரைக்கிறார். நன்றி: தினத்தந்தி, 15/3/2017.   —-   சித்தர்களின் சித்தமெல்லாம் சிவமயமே, கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், விலை 60ரூ. அகஸ்தியர், திருமூலர், போகர், பத்ரகிரியார் உள்ளிட்ட 11 சித்தர்கள் பற்றிய விவரங்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. அம்மணி அம்மாள் என்ற பெண் சித்தர் பற்றியும் […]

Read more

அருள்வளர் மதுரை மீனாட்சி அம்மை கலிவெண்பா

அருள்வளர் மதுரை மீனாட்சி அம்மை கலிவெண்பா, மு. இராமலிங்கம், எல்கேஎம் பப்ளிகேஷன், பக். 32, விலை 22ரூ. மீனாட்சி அம்மையின் சிறப்புகளை பாடுவதாக அமைந்துள்ளது இந்நூல். நன்றி: தினமலர், 29/1/2017. —- ஐம்பெரும் காப்பியக்கதைகள், ஆர்.சி.சம்பத், அருணா பப்ளிகேஷன்ஸ், விலை 45ரூ. எளிய கதை வடிவில், மாணவர்கள் படித்து பயன் அடையும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது இந்நூல். நன்றி: தினமலர், 29/1/2017.  

Read more
1 51 52 53 54 55 128