பகவத் கீதை

பகவத் கீதை, புலவர் கோ. அருளாளன், ஸ்ரீபாலகங்கை பப்ளிகேஷன்ஸ், விலை 90ரூ. மகாபாரதத்தில் முக்கியமான பகுதி பகவத்கீதை. போர்க்களத்தில், “உறவினர்களை கொன்று குவிப்பதா?” என்று சோர்வு அடையும் அர்ச்சுனனுக்கு கண்ணன் செய்யும் உபதேசமே பகவத்கீதை. இதில், மனிதர்களின் கடமை, நீதி – அநீதி பற்றிய விளக்கம், மனித குலம் அறிய வேண்டிய உண்மைகள் யாவும் அடங்கியுள்ளன. பகவத் கீதையை எல்லோரும் எளிதில் புரிந்துகொள்ளும் வண்ணம், எளிய – இனிய நடையில் எழுதியுள்ளார், புலவர் கோ. அருளாளன். நன்றி: தினத்தந்தி, 4/1/2017.

Read more

காரேய் கருணை இராமாநுஜா

காரேய் கருணை இராமாநுஜா, வேதா டி. ஸ்ரீதரன், வேதப்ரகாசனம், பக். 174, விலை 150ரூ. ஸ்ரீமத் ராமானுஜரின், 1,000வது ஆண்டில் அவரைப் பற்றி பலரும் நூல் எழுதுகின்றனர். இந்நூல் அவ்வரிசையில் வந்துள்ள போதிலும், சற்று மாறுபட்ட சிந்தனைகளுடன் வெளிவந்திருக்கிறது. எடுத்துக்காட்டாக, ராமானுஜர் தன் மனைவியைத் துறந்தது நியாயமா என்று ஆய்வு செய்கிறார். படிக்கச் சுவையாக உள்ளது. இந்நூலில், 11 தலைப்புகளில் கட்டுரைகள் உள்ளன. கட்டுரைகளின் இடையில் பெட்டிச் செய்திகள் பல, புதிய செய்திகளை நமக்குத் தருகின்றன. உதாரணமாக, மத்திய பிரதேசத்தில் விதிஷா நகருக்கு அருகேயுள்ள […]

Read more

ஆன்மிக இலங்கைத் திருப்பயணம்

ஆன்மிக இலங்கைத் திருப்பயணம், “கயிலை மாமணி” மருத்துவர் நா. மோகன்தாஸ், இமாலயா பதிப்பகம், விலை 90ரூ. பயண நூல்களில் இது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில், பல இந்துக்கோவில்கள் உள்ளன. அங்கு யாத்திரை சென்ற “கயிலை மாமணி” மருத்துவர் நா. மோகன்தாஸ், தமது அனுபவங்களை இந்த நூலில் விவரித்துள்ளார். குறிப்பாக, யாழ்ப்பாணம், திரிகோணமலை வரலாறுகளையும், கதிர்காமம் கந்தன் திருக்கோவில், நயினார் தீவு, நாகபூசணி அம்மன் திருக்கோவில், நகுலேஸ்வரம் சிவன் திருக்கோவில் போன்ற திருக்கோவில்கள் பற்றி அவர் கூறுகின்ற தகவல்களைப் படிக்கும்போது மெய்சிலிர்க்கிறது. […]

Read more

தெய்வத்தின் அருள்

தெய்வத்தின் அருள், தொகுப்பாசிரியர் கார்த்திகேயன், தங்கத் தாமரை பதிப்பகம், விலை 60ரூ, காஞ்சி பரமாச்சாரியார் சந்திரசேகேந்திர சரஸ்வதி சுவாமிகள் பற்றிய பக்தர்களின் பரவச அனுபவங்களை எழுத்தாளர் கார்த்திகேயன் தொகுத்து வழங்கியுள்ளார். 1 முதல் 10 தொகுதிகள். ஒவ்வொன்றும் விலை 60ரூ. நன்றி: தினத்தந்தி, 28/12/2016.   —- புலவர் த. கோவேந்தனின் மொழிபெயர்ப்பு கவிதைகள், கொற்றவை வெளியீடு, விலை 400ரூ. கவிஞர், கட்டுரையாளர், திறனாய்வாளர் என்று பன்முகம் கொண்டவர், த.கோவேந்தன், அவர் வெளிநாட்டுக் கவிஞர்களின் கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். அந்தக் கவிதைகளின் தொகுப்பே இந்த […]

Read more

ஆட்சி பீடம்

ஆட்சி பீடம், ஏர்பாத் பப்ளிஷர்ஸ், விலை 120ரூ. வீரமும் ஈரமும் கொண்ட உமர் (ரலி) அவர்கள் ஜனாதிபதியாக (கலீபா) பொறுப்பேற்றதும் எளிமைக்கோர் எடுத்துக்காட்டாக வாழ்ந்தார். அவர்களின் வரலாற்றை ச.சி.நெ. அப்துல் ரசாக் சுவைபட எழுதியுள்ளார். நன்றி: தினத்தந்தி, 21/12/2016.   —- திருக்குர்ஆன் விளக்கவுரை, மவுலானா சையத் அபுல் அக்லா மவுதூதி (ரஹ்), இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட், விலை 130ரூ. மவுலானா சையத் அபுல் அக்லா மவுதூதி (ஸல்) எழுதிய திருக்குர்ஆன் விளக்கவுரை, பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது. தமிழில் இதை மவுலவி எம்.ஐ.முகம்மது […]

Read more

ஸ்ரீ ராகவேந்திர மகிமை

ஸ்ரீ ராகவேந்திர மகிமை, அருள்மிகு அம்மான் பதிப்பகம், விலை 280ரூ. அம்மன் சத்தியநாதன் எழுதிய “ஸ்ரீராகவேந்திர மகிமை” நூலின் பத்தாம் பாகம் வெளிவந்துள்ளது. இந்த வரலாற்று நூல் ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது என்பதில் இருந்தே இதன் சிறப்பை அறிந்துகொள்ளலாம். 5 ஆயிரம் பக்கங்கள் கொண்ட இந்த மாபெரும் வரலாற்று காவியத்தை சிறப்பாக எழுதியுள்ள அம்மான் சத்தியநாதன் பாராட்டுக்கு உரியவர். நன்றி: தினத்தந்தி, 28/12/2016.

Read more

நான் ப்ரம்மம் (முதல் பகுதி)

நான் ப்ரம்மம் (முதல் பகுதி), மராத்தி ஒலிப்பதிவுகள், ஸ்ரீ நிசர்கதத்த மஹராஜ், ஆங்கிலத்தில் மோரிஸ் பிரைட்டன், தமிழில் சி. அர்த்தநாரீஸ்வரன், கண்ணதாசன் பதிப்பகம், பக். 408, விலை 250ரூ. இருபதாம் நூற்றாண்டில் இந்தியாவின் மிகப் பெரும் ஞானிகளில் ஒருவராகக் கருதப்பட்டவர் ஸ்ரீ நிசர்கத்த மஹராஜ். மஹாராஷ்டிராவில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்த இவருக்கு மாருதி என்பதே இயற்பெயர். திருமணம் செய்து கொண்டு (ஒரு மகன், மூன்று மகள்கள்) சிறு வியாபாரம் செய்வதன் மூலம் குடும்பத்தைக் காப்பாற்றி வந்தவருக்கு, ஸ்ரீசித்தராமேஷ்வர் மஹராஜ் என்ற ஆன்மிக குரு […]

Read more

பிரம்ம ஞானம்

பிரம்ம ஞானம், உ.நீலன், அருள் பதிப்பகம், பக். 190, விலை 125ரூ. பிரம்மம் எது? என்று தேடும் தத்துவச் சிந்தனை கொண்ட நூல். சங்கரரின் அத்வைதம், ராமானுஜரின் விசிஷ்டாத்வைதம், மத்வரின் துவைதம் காட்டும், ‘பிரம்மம்’ பற்றிய வாதங்களைத் தொகுத்துள்ளார். தாளில் போட்ட வட்டத்தை அளக்கலாம். ஆனால், வானில் போட்ட வானவில்லை அளக்கும் முயற்சி தான் பிரம்மத்தை வரையறை செய்வது. ஆனாலும், தெளிவாக தேடி அறிய முயற்சித்துள்ளார். வினா – விடைப் பாங்கில் நூல் முழுவதும் ஆர்வமாக நகர்கிறது. ஆன்மா எது? பிரம்மம் எது? உலகம் […]

Read more

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் எழுபது பீடாதிபதிகளின் குருபரம்பரை தொகுப்பு

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் எழுபது பீடாதிபதிகளின் குருபரம்பரை தொகுப்பு, தொகுப்பு டாக்டர் ஆர். வைத்தியநாதன், பக். 208, விலை 250ரூ. ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் குரு பரம்பரையை வரிசைப்படுத்தி, வண்ணத்தாளில், உரிய படங்களுடன், அதற்கான தகவல்களுடன் இப்புத்தகம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆசிரியர் முனைவர் மட்டும் அல்ல பட்டயக்கணக்காளரும் கூட. வழிவழியாக இந்த மடத்தின் சீடர் கூட்டத்தில் பிரதானமானவர் என்பதை முன்னுரையில் தெரிந்து கொள்ளலாம். பொதுவாக காஞ்சி மாமுனிவர், அவரது அருளுரைகள் தாங்கிய, ‘தெய்வத்தின் குரல்’ தமிழகம் நன்கு பழகியதொன்றாகும். நம் நாட்டில் வேதநெறி தழைக்கவும், […]

Read more

பக்தி யோகம்

பக்தி யோகம், (ஸ்ரீமத் பகவத் கீதை 12வது அத்தியாயம்), மஹாரண்யம் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிஜி), பக். 192, விலை 80ரூ. சனாதன தர்மம் எனப்படும் இந்து மத நெறியை, பகவத் கீதை பார்வையில் அழகாக விளக்கும் நூல். பக்தி நெறி மூலம் பழகும், இறையின் நாம கீர்த்தனமே உயிருக்கு ஆதாரமான உரமூட்டும் சிந்தனையை வளர்க்கும் என்ற பார்வையில், முரளிதர சுவாமிகள் பகவத் கீதையில் பக்தியோகத்தை தன் சொற்பொழிவுகளில் தெரிவித்த கருத்து, இங்கே அழகிய மாலையாக உருவாகியிருக்கிறது. பக்தியில் பிரகலாதன் போல அல்லது துருவன் போல […]

Read more
1 53 54 55 56 57 128