உடல் உள்ளம் ஆன்மா

உடல் உள்ளம் ஆன்மா, ஏ.எம். ஜேம்ஸ், ஓவியா பதிப்பகம், பக். 500, விலை 390ரூ. உடலும் உள்ளமும் தூய்மையாக இருந்தாலே பரிசுத்தமான ஆன்மாவை உணர முடியும். அந்த இலக்கில் இந்நூலை வாசிக்க ஆரம்பிக்கலாம். பல்வேறு மத நூல்கள், அறிஞர் பெருமக்களின் அறிவுரைகள், இந்துமத ஆன்மிகப் பெரியவர்கள், ஏசுநாதர் போதனைகள், அண்ணல் நபிகள் நாயகத்தின் பொறுமையைப் பறைசாற்றும் கட்டுரை.. இத்துடன் திருக்குறள், பாரதியாரின் அமுத மொழிகளையும் தலைப்புக்கு ஏற்றவாறு கலவையாகத் தந்து வியக்க வைக்கிறார் நூலாசிரியர். சமய நல்லிணக்கத்துக்கான மிகச் சிறந்த நூலாகவும் இது விளங்குகிறது. […]

Read more

பெரிய புராணத்தில் வாழ்வியல்

பெரிய புராணத்தில் வாழ்வியல், பேராசிரியர் சாமி.தியாகராஜன், கற்பகம் புத்தகாலயம், பக். 280, விலை 190ரூ. எதிர்கால இளைஞர்கள் பெரியபுராணத்தைப் படிக்கவும், கேட்கவும், பேசவும், பின்பற்றவும் ஏற்ற வகையில், மிகவும் ஆழ்ந்த சிந்தனையில், ஆய்வு நோக்கில் இந்த நூல் உள்ளது. பக்தியும் தொண்டும் வாழ்வை எவ்வாறு உயர்த்தும் என்பதை இந்த நூலில் மிகவும் அழகாக அறிஞர் சாமி.தியாகராஜன் எழுதியுள்ளார். பதினொன்றாம் திருமுறைகள் என்னும் அருள் பெட்டகத்தைத் திறக்கும் தங்கச் சாவியாக, 12ம் திருமுறை ஆகிய பெரிய புராணம் உள்ளதை மிக அழகாக விளக்கியுள்ளார். ‘தொண்டின் தூய்மை’யில் […]

Read more

முதல்வர் இவன்…

முதல்வர் இவன்… தமிழ்மறை தழைக்க வந்த ஸ்ரீ ராமானுஜர், முனைவர் கலியன் எதிராசன், வானதி பதிப்பகம், பக். 260, விலை 150ரூ. வைணவர்கள் தினமும் ஸ்ரீ ராமானுஜரை வழிபடுவதை வழக்கமாக கொண்டவர்கள். 120 ஆண்டுகள் வாழ்ந்த அம்மகானின், 1000மாவது ஆண்டை ஒட்டி இந்நூல் வெளிவந்துள்ளது. ஸ்ரீ ராமானுஜரின் வரலாற்றை நாலாயிர திவ்யப் பிரபந்த பாசுரங்களின் அடிகளை உரைநடைபோல் எழுதி, விளக்கிய பான்மை நூலாசிரியரின் ஆழ்ந்த புலமைக்கு எடுத்துக்காட்டாகும். ஆழ்வார்கள், ஆசாரியர்கள் வைணவத்தை வளர்த்தது, முதல் பகுதியிலும், ஸ்ரீ ராமானுஜர் அவதரித்தது முதல் அவர் ஸ்ரீ […]

Read more

திருக்குர்ஆன் தமிழாக்கம்

திருக்குர்ஆன் தமிழாக்கம், குட்வேர்ட் புக்ஸ், பக். 774. ஆன்மிகம் மற்றும் அறிவுப் பூர்வமான தளங்களில் உண்மையை மனிதன் கண்டடைய வேண்டியதன் முக்கியத்துவத்தைக் கூறும் புனித நூல் குர்ஆன். அதோடு மனித குலத்திற்கான நற்செய்தியைக் கொண்டுள்ள நூலாக குர்ஆன் விளங்குவதை எளிமையாக எடுத்துக்காட்டுகிறார்கள். இறைவனைப் பற்றிய ஞானத்தை அடைதல், இறைவனின் நெருக்கத்தைப் பெறுதல், சாந்தி மற்றும் ஆன்மிக ரீதியிலான வாழ்க்கையை வாழ்தல் என்று குர்ஆனின் முக்கிய நோக்கங்களை புரிந்துகொள்ளும் விதமாக இதன் மொழிபெயர்ப்பும் விளக்க அடிக்குறிப்புகளும் தந்திருப்பது பயனுள்ளதாக உள்ளது. நன்றி: குமுதம், 16/11/2016.

Read more

தித்திக்கும் தேனினும் திகட்டாத திருக்கோவில்கள்

தித்திக்கும் தேனினும் திகட்டாத திருக்கோவில்கள், பா. வரதராசன், குமுதம், ஒவ்வொரு பாகத்தின் விலை 125ரூ. திருக்கோயில்களுக்குச் செல்பவர்களுக்கு அத்திருக்கோவிலின் வரலாறு, தெய்வத்தின் திருநாமம், மகிமை, வரந்தரும் கடவுள்களின் சிறப்பு, தரிசிப்பதால் மக்களுக்கு கிட்டும் பலன்கள் ஆகியவற்றை விளக்குவதோடு, திருக்கோவில்கள் பற்றிய கலைக்களஞ்சியமாகவே இந்நூலை ஆக்கியுள்ளார் ஏ.எம்.ராஜகோபாலன். முதல் பாகத்தில் 18 கோவில்களைப் பற்றியும், 2-ம் பாகத்தில் 23 கோவில்களைப் பற்றியும் விவரம் கொடுக்கப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 9/11/2016.   —- இரா. மோகன், ச. கவிதா, கலைஞன் பதிப்பகம், விலை 90ரூ. பன்மொழிப் பாவலர், […]

Read more

அருள் தரும் ராமர் நரசிம்மர் திருத்தலங்கள்

அருள் தரும் ராமர் நரசிம்மர் திருத்தலங்கள், சிவம், அருணா பப்ளிகேஷன்ஸ், விலை 30ரூ. திருப்புல்லாணி ராமர், மதுராந்தகம் ராமர், கடையம் ராமசாமி கோவில் மற்றும் தமிழகத்தில் காட்சி தந்த நரசிம்மர் கோவில் உள்ளிட்ட 23 கோவில்களின் சிறப்புகள் தொகுக்கப்பட்ட நூல். நன்றி: தினத்தந்தி, 9/11/2016.   —-   தெருவென்று எதனைச் சொல்வீர், தஞ்சாவூர்க் கவிராயர், காலச்சுவடு பதிப்பகம். விலை 180ரூ. மனிதர்களுக்குச் சம்பவங்கள் நேரலாம். அவற்றை நினைவுகூரவும் செய்யலாம், அதனை நூலாசிரியர் இலக்கியமாகப் படைத்து வெற்றி கண்டுள்ளார். நன்றி: தினத்தந்தி, 9/11/2016.

Read more

உங்கள் கேள்விகளுக்கு ஸ்ரீ ராமகிருஷ்ணரின் பதில்கள்

உங்கள் கேள்விகளுக்கு ஸ்ரீ ராமகிருஷ்ணரின் பதில்கள், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், பக். 182, விலை 65ரூ. மோட்சத்தை நாடும் மனிதன் தனக்கு ஏற்படும் சந்தேகங்களை இறைவனிடம் கேள்விகளாகக் கேட்கிறான். தகுந்த குருவை அடைந்து அவரிடம் பணிவுடன் கேள்வி கேட்க வேண்டும் என்று உபநிஷதங்களும் பகவத் கீதைகளும் கூறுகின்றன. அந்த வகையில் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் தமது சீடர்களுக்கு எழும் சந்தேகங்களை நீக்கி அமுத மொழியாக அருளியுள்ளார். அதிலிருந்து பக்தர்கள் பல சூழநிலைகளில் கேட்ட கேள்விகளுக்கு ராமகிருஷ்ணர் தந்த பதில்களின் தொகுப்பு இந்நூல். நன்றி: குமுதம், […]

Read more

அறிவியல் புதையல்

அறிவியல் புதையல், டாக்டர் குமார் கணேசன், இன் அண்டு அவுட் சென்னை பப்ளிகேஷன்ஸ், விலை 100ரூ. மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வத்தை அதிகரிப்பதற்காக எளிய தமிழில் எழுதப்பட்ட 20 அறிவியல் கட்டுரைகளின் தொகுப்பு. நன்றி: தினத்தந்தி, 28/9/2016.   —-   புனித கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் கூறும் அரிய கருத்துகள், இந்திய வரலாற்று ஆய்வாளர் வி.பி. ராமராஜ், மணிமேகலைப் பிரசுரம், விலை 85ரூ. புனித கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் கூறும் அரிய கருத்துக்களை உலகில் உள்ள அனைத்து இன மக்களும் படித்துப் புரிந்து கொண்டு […]

Read more

கழிந்தன கடவுள் நாளெல்லாம்

கழிந்தன கடவுள் நாளெல்லாம், தென்னம்பட்டு ஏகாம்பரம், பக். 136, விலை 125ரூ. ‘ஆலயம் சென்று ஆண்டவனை வழிபடுவதெல்லாம், விளையாட்டுப் பருவத்தில் ஆன்மிகம் முளைவிடுமறும் வழி என்று கூறும் இந்நூலாசிரியர், ஆரம்பத்தில் இறை மறுப்பு சிந்தனைக்கு ஆட்பட்டு 1972-74 வரை ‘முரசொலி’ நாளேட்டில் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர். அதன் பிறகு ஹிந்து சமய அறநிலையத் துறையில் பணியாற்றி, உதவி ஆணையராக பதவி உயர்வு பெற்று ஓய்வு பெற்றவர். ‘அழிவற்ற பரம்பொருளே பிரம்மம். அதன் இயல்பை அறிதலே ஆத்மஞானம்’ என்கிறது பகவத்கீதை. ஆனால், நாமே ஆத்ம ஞானத்தை […]

Read more

ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடம் எழுபது மடாதிபதிகளின் குருபரம்பரை தொகுப்பு

ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடம் எழுபது மடாதிபதிகளின் குருபரம்பரை தொகுப்பு, ஆர். வைத்தியநாதன், ஸ்ரீசங்கராலயம், பக். 208, விலை 250ரூ. ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தை நிர்மாணித்த ஆதிசங்கரர் முதல் அம்மடத்தின் தற்போதைய பீடாதிபதிகளான ஜயேந்திரர், விஜயேந்திரர் வரையிலான எழுபது குருமார்களின் வரலாற்றை எல்லாரும் புரிந்து கொள்ளும் வண்ணம் (குருரத்னமாலிகா பாணியில்) எளிய தமிழில் தொகுத்து வழங்கியுள்ளார் நூலாசிரியர். ஒவ்வோர் ஆச்சார்யாருடைய பூர்வாசிரம பெற்றோர், பிறந்த ஊர், ஆற்றிய பணிகள், முக்தியடைந்த ஊர், நாள் முதலிய செய்திகளைத் திரட்டிக் கொடுத்திருப்பது பாராட்டத்தக்க பணி. பெரும்பாலான ஆச்சார்யார்களைப் பற்றிய […]

Read more
1 54 55 56 57 58 128