நமனை விரட்டும் நாட்காட்டி

நமனை விரட்டும் நாட்காட்டி, நா. துரைசாமி, அனைத்தண்ட இராமலிங்கர் சன்மார்க்க சுத்த மாயா சித்தர் பீடம், பக். 432, விலை 210ரூ. அருட்பிரகாச வள்ளலார் சுமார் 51 ஆண்டுகள் இப்பூமியில் வாழ்ந்துள்ளார். அந்த 51 ஆண்டுகளில் அவர் வாழ்வில் நடந்த அற்புதங்களும், அவர் வெளியிட்ட கருத்துகளும் சிறு சிறு குறிப்புகளாக இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்நூலின் முதல் பகுதியில், அருட்பிரகாசர் அகவல் வடிவில் எழுதிய – இதுவரை ஏட்டில் வராத – பிரபஞ்ச ரகசியமும் அதற்கான எளிய விளக்கமும் தரப்பட்டுள்ளது. இரண்டாம் […]

Read more

சிவனும் சித்தர்களும்

சிவனும் சித்தர்களும், சத்யா சுரேஷ், கண்ணதாசன் பதிப்பகம், விலை 100ரூ. பதினென் சித்தர்கள் யாவரும் ஆதிசித்தனாகிய சிவனிடம் நேரடியாக தீட்சை பெற்றவர்கள். இந்த சித்தர்களை பற்றிய தெளிவான விரிவான தகவல்களை இந்த நூல் வெளிப்படுத்துகிறது. நன்றி: தினத்தந்தி, 7.9.2016.   —- நாராய் நாராய், ஆட்டனத்தி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 115ரூ. தனித்துவமான கதைக் களங்களைக் கொண்ட சிறுகதைத் தொகுதி. நன்றி: தினத்தந்தி, 7.9.2016.

Read more

உற்றதும் உணர்ந்ததும்(3-ம் பாகம்)

உற்றதும் உணர்ந்ததும்(3-ம் பாகம்), சுவாமி ஓங்காரநந்தா ,ஓங்காரம், விலை 350ரூ. “உற்றதும் உணர்ந்ததும்” என்ற தலைப்பில் சுவாமி ஓங்காரநந்தா எழுதி வரும் நூலில் மூன்றாம் பாகம் வெளிவந்துள்ளது. தமது அனுபவங்களையும், சிந்தனைகளையும் கலந்து, ஆன்மிக கட்டுரைகளாக வழங்கியுள்ளார் சுவாமி ஓங்காரநந்தா. நன்றி: தினத்தந்தி, 7.9.2016.   —- திருக்குறள் அறத்துப்பால் தெளிவுரை, மணிமேகலைப் பிரசுரம், விலை 90ரூ. திருக்குறள் அறத்துப்பாலுக்கு எல்லோரும் எளிதில் புரிந்துகொள்ளும் விதத்தில் உரை எழுதியுள்ளார் பி.வி. சண்முகம். நன்றி: தினத்தந்தி, 7.9.2016.

Read more

பூர்வா

பூர்வா (பன்னிரு ஆழ்வார்களின் கதை), லக்ஷ்மி தேவ்நாத், தமிழில் பத்மா நாராயணன், கிரி டிரேடிங் ஏஜென்ஸி, விலை 295ரூ. பூர்வாவுக்கு கிடைத்த ஸ்வாமித் தாத்தா! தாத்தா பாட்டிகள் கதை சொன்ன காலத்து அனுபவங்களை அழகாக மீட்டெடுத்துத் தருகிறார் லக்ஷ்மி தேவ்நாத். ஆங்கிலத்தில் வெளியான ‘பூர்வா’ நூலை வெகு நளினமாகத் தமிழாக்கியிருக்கிறார் பத்மா நாராயணன். ‘பூர்வாவை மீண்டும் ஒருமுறை அவர் புதிதாக உருவாக்கியிருக்கிறார்’ என்று மொழிபெயர்ப்பாளரை மூல ஆசிரியரே வியப்பது அழகு. எல்லோருக்கும் நன்கு தெரிந்த பன்னிரு ஆழ்வார்களின் திவ்ய சரிதம்தான். எறும்புகள் சாரிசாரியாக ஊர்ந்து […]

Read more

திருவாசக ஆய்வுரைக் களஞ்சியம்

திருவாசக ஆய்வுரைக் களஞ்சியம் (51 பகுதிகள் 51 ஆய்வுரைகள்), பதிப்பாசிரியர்கள் தயானந்த சந்திரசேகர சுவாமிகள், குன்றக்குடி பெரியபெருமாள், தா.மணி, பக்.256, விலை ரூ.100. 2002ஆம் ஆண்டில் முதல் பதிப்பாக வெளிவந்துள்ள இந்நூல், தற்போது இரண்டாவது(2016) பதிப்பு கண்டிருக்கிறது. மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தில் உள்ள 51 பதிகங்களுக்கும் 51 சமயத் தமிழறிஞர்கள் எழுதிய ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு. தவத்திரு ஊரன் அடிகள், சாந்தலிங்க இராமசாமி அடிகளார், வை.இரத்தினசபாபதி, தமிழண்ணல், கலைமாமணி விக்கிரமன், ச.வே.சுப்பிரமணியன், அய்க்கண், கு.வெ. பாலசுப்பிரமணியன், பழ.முத்தப்பன், சரஸ்வதி இராமநாதன், சோ.சத்தியசீலன், கவிஞர் மரு.பரமகுரு, […]

Read more

நான் இராமானுசன்

நான் இராமானுசன், ஆமருவி தேவநாதன், விஜயபாரதம் பதிப்பகம், விலை 60ரூ. நாவல் வடிவில் ராமானுஜர் மணிப்பிரவாளத்தைத் தவிர்த்த நடையில் ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை நாவல் வடிவில் முயற்சி செய்திருக்கிறார் ஆசிரியர். அத்துடன் துவைதம், அத்துவைதம், விசிஷ்டாத்வைதம் என்ற மூன்றையும் எல்லோருக்கும் புரியும் வகையில் எடுத்துரைத்திருக்கிறார் ஆசிரியர். ஸார்வாகம், ஜைனம், பவுத்தம், வேதங்கள், உபநிஷத்துகள், யாகங்கள் பற்றிய விளக்கங்களும் பொருத்தமாகவும் அளவோடும் இருக்கின்றன. வைணவத்தைப் பற்றிச் சொல்ல வேண்டியவனவற்றைத் திட்டமிட்டு, ‘சூடிக்கொடுத்த நாச்சியிரைப்’ போலவே வண்ணமயமாகத் தொகுத்துக் கொடுத்திருக்கிறார். வேற்றுமைகளை விதைக்கும் ‘கலை’ தெரிந்தவர்களைப் பற்றிய […]

Read more

வாழ்வை வளமாக்கும் பூஜை விரதமுறைகள்

வாழ்வை வளமாக்கும் பூஜை விரதமுறைகள், தினத்தந்தி பதிப்பகம், விலை 180ரூ. விரதமும், பூஜையும் இந்து மதத்தின் இரு கண்கள். மனிதன் முழுமையாக வாழ்வதற்கும், உயிர்கள் ஆனந்தமாக வாழ்வதற்கும் விரதங்கள் இன்றியமையாதவை. ஜம்புலன்களை அடக்கி இறைவனிடம் சரணாகதி நிலையை அடைய விரதங்கள் உதவுகின்றன. இந்த நூலில் துன்பங்கள் நீங்க, செல்வம் பெருக, திருமணத் தடை நீங்க, தம்பதியர் ஒற்றுமை ஓங்க, குழந்தை வரம் கிடைக்க, கல்வி சிறக்க, தொழில் தடைகள் நீங்க, பகை விலக, நவக்கிரக தோஷம் நீங்க, தீர்க்க சுமங்கலி வரம் அருள, எதிரிகளை […]

Read more

திருவாசக ஆய்வுரைக் களஞ்சியம்

திருவாசக ஆய்வுரைக் களஞ்சியம் -(51 பகுதிகள்- 51 ஆய்வுரைகள்) , பதிப்பாசிரியர்கள் தயானந்த சந்திரசேகர சுவாமிகள், குன்றக்குடி பெரியபெருமாள், தா.மணி, திலகவதியார் திருவருள் ஆதீனம், பக்.256. விலை ரூ.100. 2002ஆம் ஆண்டில் கோட்டை- 1; முதல் பதிப்பாக வெளிவந்துள்ள இந்நூல், தற்போது இரண்டாவது(2016) பதிப்பு கண்டிருக்கிறது. மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தில் உள்ள 51 பதிகங்களுக்கும், 51 சமயத் தமிழறிஞர்கள் எழுதிய ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு. தவத்திரு ஊரன் அடிகள், சாந்தலிங்க இராமசாமி அடிகளார், வை.இரத்தினசபாபதி, தமிழண்ணல், கலைமாமணி விக்கிரமன், ச.வே.சுப்பிரமணியன், அய்க்கண், கு.வெ. பாலசுப்பிரமணியன், […]

Read more

சித்தர் பாடல்கள் பட்டினத்தாரின் பைந்தமிழ்ப் பாடல்கள்,

சித்தர் பாடல்கள் பட்டினத்தாரின் பைந்தமிழ்ப் பாடல்கள், புலவர் அடியன்மணிவாசகன், சங்கர் பதிப்பகம், விலை 240ரூ. பட்டினத்தாரின் பைந்தமிழ்ப் பாடல்களையும், அவற்றுக்கான உரை விளக்கமும் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் தொகுக்கப்பட்ட நூல். ஒவ்வொரு பாடல்களிலும் பொதிந்துள்ள இன்பத்தை நாம் பாடல்களை படிப்பதன் மூலம் அனுபவிக்க முடியும். நன்றி: தினத்தந்தி, 24/8/2016.   —- தேடல், எஸ். கண்ணன், திருவரசு புத்தக நிலையம், விலை 80ரூ. அனைவருக்கும் எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில் எழுதப்பட்ட 23 சிறுகதைகளின் தொகுப்பாகும். நன்றி: தினத்தந்தி, 24/8/2016.

Read more

மாந்தரீகச் சித்தர்கள்

மாந்தரீகச் சித்தர்கள், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், விலை 75ரூ. பதினெண் சித்தர்கள் பற்றி இந்த ஒரே புத்தகத்தில் முழு விவரங்களையும் கொடுத்துள்ளார் ஜெகாதா. மச்சமுனி, சட்டமுனி, அகப்பைமுனி ஆகியோருக்கு தலா 10 மனைவிகள். குதம்பை, தன்வந்தரி ஆகியோருக்கு தலா 16 மனைவிகள். போகருக்கு மனைவியரும், குழந்தைகளும் ‘கணக்கில் அடங்காதவர்கள்’ என்று குறிப்பிடுகிறார் ஆசிரியர். சித்தர்களின் தாய், தந்தை, குரு, சாதி, தலைமுறை, பிறந்த நட்சத்திரம் முதலிய விவரங்களம் உள்ளன. நன்றி: தினத்தந்தி, 24/8/2016.

Read more
1 56 57 58 59 60 128