சிவனும் சித்தர்களும்
சிவனும் சித்தர்களும், சத்யா சுரேஷ், கண்ணதாசன் பதிப்பகம், பக்.176 விலை ரூ.100. சித்தர்கள், கோயில்களில் உள்ள சிற்பங்களிலோ, சிலைகளிலோ சிவனைத் தேடாமல் தங்கள் சித்தத்தின் உள்ளேயே சிவனைக் கண்டு, தெளிந்து வழிபட்டதனால்தான் சித்தர்கள் எனப்பட்டனர். “சித்தன் போக்கு சிவன் போக்கு’’ என்கிற பண்டைத் தமிழரின் சொலவடை இதை உணர்த்தும். சித்தர்களிலேயே முதல் சித்தர் சிவபெருமான்தான் என்பதைத் திருவிளையாடல் புராணம் தெரிவிக்கிறது. பதினெண் சித்தர்களும் மெய்ஞ்ஞானியாகவும் விஞ்ஞானியாகவும் திகழ்ந்திருக்கிறார்கள். இவர்கள் சமய உலகிற்கும், மருத்துவ உலகிற்கும், அறிவியல் உலகிற்கும் வழங்கிய கொடைகள் ஏராளம். தற்போது சித்தர்கள் […]
Read more