யோகியுடன் கொஞ்ச தூரம்

யோகியுடன் கொஞ்ச தூரம்,  எஸ்.பார்த்தசாரதி, நேசமுடன், சென்னை, பக். 304, விலை: ரூ.150. இந்நூல் யோகி ராம்சுரத்குமாருடன் பழகிய பக்தர்களின் அனுபவங்கள் அத்தியாய, அத்தியாயமாக அனுபவித்து எழுதப்பட்டுள்ளது. அவற்றிலிருந்து சில… “யோகியுடன் இருக்கும்போது அவரிடமிருந்து ஏதோ ஒன்று கனமாக, வேகமாக, வெள்ளமாகப் பரவி அனைவரையும் ஆட்கொள்ளும். அச்சமயத்தில் உடல் செத்துவிடும், மனம் நினைவை இழக்கும். உணர்வு உணர்வற்ற நிலையை அடையும்’ என்று நூலாசிரியர் பார்த்தசாரதி தமது அனுபவத்தை சிலிர்ப்புடன் தெரிவிக்கிறார். யோகி மீது ஒரு மூதாட்டி வைத்திருந்த பக்தி, 85 வயதான பக்தருக்கு அவரது […]

Read more

வேலூர் மாவட்ட வரலாறு

வேலூர் மாவட்ட வரலாறு, வேலூர் மா. குணசேகரன், மணிமேகலைப் பிரசுரம், விலை 100ரூ. இந்நூல் வேலூரின் வரலாற்றைக் கூறம், நல்லதோர் தகவல்களஞ்சியம். வேலூரின் பெருமைகளையும், சிறப்புகளையும் பல கோணங்களில் விவரித்து படிப்போர் மனதைக் கவரும் வகையில் தொகுத்தளித்துள்ளார் நூலாசிரியர் வேலூர் மா. குணசேகரன். இது இணையத்திலும், விக்கிபாடியா போன்ற இணையத் தகவல் களஞ்சியங்களில் இடம் பெறவேண்டும். நன்றி: தினத்தந்தி, 04/5/2016.   —- சுற்றுலாச் செல்ல 12 ஜோதிர் லிங்கங்கள், டாக்டர் கே. என். சரஸ்வதி, கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், விலை 50ரூ. சிவத்தலங்கள் பலவற்றுள் […]

Read more

கீரைக்களூர் ஆதித்தேஸ்வரர் திருக்கோவில்

கீரைக்களூர் ஆதித்தேஸ்வரர் திருக்கோவில், சீ. வசந்தி, கோ. சசிகலா, ஹெரிடேஷ் டிரஷர் வெளியீடு, விலை 65ரூ. சோழர் கலைக்கோவில்கள் என்ற வரிசையில் திருச்சென்னம் பூண்டி சடையார்கோவில், கீரைக்களூர் ஆதித்தேஸ்வரர் திருக்கோவில் ஆகியவை பற்றி தொல்லியல் ஆய்வாளர்களான சீ. வசந்தி, கோ. சசிகலா ஆகியோர் இணைந்து இரு புத்தகங்களை எழுதி இருக்கிறார்கள். ஆசிரியர்கள் இருவரும் தொல்லியல் ஆய்வாளர்கள் என்பதால் இந்த கோவில்களின் சிறப்பை வரலாற்று ஆதாரங்களுடனும் அபூர்வ படங்களுடனும் தந்து இருப்பதால் வரலாற்றை அறிந்துகொள்ள விரும்புபவர்களுக்கு இவை பெரிதும் துணையாக இருக்கும். நன்றி: தினத்தந்தி, 11/5/2016. […]

Read more

ஸ்ரீவைஷ்ணவ தாஸர்கள் என்ற சீர்மிகு ஸ்ரீராமானுஜ தாஸர்கள்

ஸ்ரீவைஷ்ணவ தாஸர்கள் என்ற சீர்மிகு ஸ்ரீராமானுஜ தாஸர்கள், முனைவர் இரா. அரங்கராஜன், பக். 188, விலை 150ரூ. ஸ்ரீ வைஷ்ணவம் எனும் விசிஷ்டாத்வைதம், ராமானுஜரால் புத்துயிர் அளிக்கப்பட்டு, ஆயிரம் ஆண்டுகளாக வளர்ந்து நிலை பெற்றுள்ளது. அதற்கு அடிப்படையாக இருந்த, கைங்கர்யத்தில் ஊன்றிய ஸ்ரீவைஷ்ணவ தாசர்கள், 50பேரின் பெருமைகளைக் கூறுகிறது இந்த நூல். கர்மயோகிகளுக்கும், கைங்கர்ய நிஷ்டர்களுக்கும் உள்ள வேறுபாடுகளைக் கூறுவதும் (பக். 3), ‘ஏறுதிருவுடையான்’ என்ற ஆண்டாள் பாசுரத்தின் சொல்லிற்கு, சரியான பொருள் விளக்குவதும் (பக். 30), தாழ்த்தப்பட்டவரான மாறநேர் நம்பியின் உயர்குணங்களை விளக்குவதும் […]

Read more

தீர்க்க சுமங்கலி பவ!

தீர்க்க சுமங்கலி பவ!, ப்ரியா கல்யாணராமன், குமுதம் புது(த்)தகம், பக். 160, விலை 150ரூ. பெண்களுக்கும் அம்மன்களுக்கும் உள்ள நெருக்கத்தை பக்தி என்ற ரீதியில் மட்டும் காட்டாமல், மகளுக்கும் தாய்க்குமான பாசம் என்ற ரீதியிலும் காட்சிப்படுத்தியுள்ளார் நூலாசிரியர் ப்ரியா கல்யாணராமன். பெண்களுக்கு உரிய காலத்தில் திருமணம், குழந்தை பாக்கியம், சுகப்பிரசவம், நோய்களில் இருந்து விடுதலை, பில்லி சூனியம் போன்றவற்றிலிருந்து பாதுகாப்பு உள்ளிட்ட ஏராளமான பலன்களை அள்ளித்தரும் தெய்வங்களைப் பற்றியும் திருத்தலங்கள் பற்றியும் பக்திமணம் கமழ, குமுதத்தில் வாரந்தோறும் எழுதிவந்தது, இப்போது நூலாக வந்துள்ளது. தம்பதியர் […]

Read more

இஸ்லாமிய சட்டக் கருவூலம்

இஸ்லாமிய சட்டக் கருவூலம், தமிழில் மவுலவி நூஹ், இஸ்லாமிய டிரஸ்ட் நிறுவனம், விலை 150ரூ. இஸ்லாமிய சட்டங்கள் குறித்து அஷ்ஷெய்க் ஸைய்யத் சாபிக் எழுதிய நூல் ‘பிக்ஹுஸ் சுன்னா.’ இதைத் தமிழில் மவுலவி நூஹ் மஹ்லரி மொழிபெயர்த்துள்ளார். இது ஏழாவது பாகமாகும். இந்த நூலில் மண விலக்கு குறித்த அனைத்து செய்திகளும் இடம் பெற்றுள்ளன. மணவிலக்கு (தலாக்), மணவிலக்கின் முறை, குழந்தை பராமரிப்பு, பராமரிப்பதற்கான நிபந்தனைகள் போன்ற அனைத்து சட்டங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இஸ்லாமிய சட்டங்கள் அனைத்து தமிழ் முஸ்லிம்களிடம் சென்று சேர வேண்டும். அவர்களுக்குப் […]

Read more

ஆ. மாதவன் இலக்கியத் தடம்

ஆ. மாதவன் இலக்கியத் தடம், தொகுப்பாசிரியர் நெல்லை சு. முத்து, அருள் பதிப்பகம், விலை 200ரூ. படாடோபம், பந்தாக்கள் ஏதுமின்றி, அமைதியும், எளிமையுமான வெளிப்படையான பேச்சும், எந்தத் துறையிலும், சபையிலும் தன்னை வலியப் புகுத்திக்கொள்ளாத தன்னடக்கமும் மிக்கவர் முதுபெரும் எழுத்தாளர் ஆ. மாதவன். அவரின் சிறுகதைகள், நாவல்கள், குறுநாவல்கள் ஆகியவை தொடர்பாக அவ்வப்போது அவரது சக எழுத்தாளர்கள், அறிஞர்கள், அறிவார்ந்த வாசகர்கள் அனுப்பிய கருத்தாக்கங்களும், விவாதங்களும் பல்வேறு தளங்களில் பதிவாகியுள்ளன. அத்தகைய இலக்கியப் பதிவுகளை செம்மையுறத் தொகுத்தளித்துள்ளார் விஞ்ஞானியும், எழுத்தாளருமான நெல்லை சு. முத்து. […]

Read more

இஸ்லாம் போற்றும் தாய்மை

இஸ்லாம் போற்றும் தாய்மை, என். முகம்மது மீரான், கமருன் பப்ளிகேஷன்ஸ், விலை 60ரூ. இன்றைய நாகரிக உலகில் தாய்மார்களை உதாசீனம் நிலை செய்யும் நிலை நிலவுகிறது. ‘தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது’ என்று தாய்மைக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மேன்மை அளித்தார்கள். தாய், தந்தையரை எப்படி நடத்த வேண்டும் என்பதை இறைவனும் திருக்குர்ஆனில் பல இடங்களில் தெளிவுபடுத்துகின்றான். அதன் அடிப்படையில் தாய்மை, தாய்ப்பால், குழந்தை வளர்ப்பு, தாயின் துஆ போன்ற தலைப்புகளில் என். முகம்மது மீரான் தாய்மை குறித்து தெளிவுபட விளக்கியுள்ளார். குர்ஆன் […]

Read more

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள்

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள், ஆர்.பொன்னம்மாள், கிரி டிரேடிங்ஸ், விலை 50ரூ. சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு, முருகன் அவருக்கு அருளிய நிகழ்வுகள், சண்முக கவசத்தின் சக்தி போன்ற விவரங்களும், சுவாமிகளால் அரளப்பட்ட பரிபூரண பஞ்சாமிர்தவண்ணம், வேற்குழவிவேட்கை, பகைகடிதல் போன்ற பொருளுடனும், சஸ்திரகமல ரத பந்தங்களும் குமாரஸ்தவமும் தொகுக்கப்பட்ட நூல். நன்றி: தினத்தந்தி, 13/4/2016.   —- தன்னம்பிக்கை முழக்கம், முனைவர் பெ. ஆறுமுகம், குமரன் பதிப்பகம், விலை 80ரூ. ஆராய்ச்சி என்பது முடிவே இல்லாத மானுடத் தேடல். அறியாமையாலும், அறிவியல் தெளிவின்மையாலும், மனித வஞ்சகத்தாலும் மூடிக்கிடக்கும் […]

Read more

வளமான வாழ்வு பெற மந்திரங்கள்

வளமான வாழ்வு பெற மந்திரங்கள், ஆபஸ்தம்பன், அழகு பதிப்பகம், விலை 45ரூ. வாணிபம், தொழில் விவசாயம், வழக்குகளில் வெற்றி பெற வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பலன்களையும் பெறுவதற்கு துணை நிற்கும் 112 மந்திரங்கள் தொகுக்கப்பட்ட நூல். நன்றி: தினத்தந்தி, 13/4/2016.     —- யோக வாசிஷ்டம் ஞானத்தின் நுழைவாயில், சிவராமகிருஷ்ண சர்மா, நர்மதா பதிப்பகம், விலை 125ரூ. ஆத்ம தத்துவத்தை விரிவாகச் சொல்லும் நூல். சிறு சிறு கதைகள் மூலம் மிகப்பெரிய ரகசியங்களை தெளிவாக விளக்கப்பட்டுள்ளதால் ஆர்வமாக படித்தால் எளிதில் விளங்கும் வகையில் […]

Read more
1 59 60 61 62 63 128