ஆழ்வார்கள் நோக்கில் அரங்கன்

ஆழ்வார்கள் நோக்கில் அரங்கன், கல்யாணி ஸ்ரீதரன், சார்யன் பதிப்பகம், பக். 404, விலை 300ரூ. திருவரங்கம் பெரிய கோவிலின் சிறப்புகளையும், அக்கோவில் குறித்த அனைத்துச் செய்திகளையும் இந்த நூல் தொகுத்துக்கூறுகிறது. திருவரங்கம் செல்வோர், இந்த நூலைப் படித்துவிட்டுச் சென்றால், மிகவும் பயனடைவர். நூலில் திருவரங்கம் கோவிலின் அமைப்பு, மிக விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.(பக். 30-50). ஆழ்வார்கள் காவிரி குறித்துப் பாடியுள்ள பாசுரங்களை மிக விரிவாக விளக்கிக் காட்டுவதும் (பக். 60-68), சோலைகள், பூம்பொழில்களின் விளக்கமும் (பக். 69 -77), ஆழ்வார்களின் பாசுரங்கள் வாயிலாக, அரங்கனின் குணங்களையும், […]

Read more

கும்பகோணத்தில் உலா

கும்பகோணத்தில் உலா, வலையப்பேட்டை ரா. கிருஷ்ணன், யுனிவர்சல் பப்ளிஷிங், பக். 376,விலை 270ரூ. சோழ வளநாட்டின் சரித்திரத்தை குடந்தை நகருக்குச் சிறப்பான ஒரு பெரும் பங்குண்டு என்று கூறுவர். குடந்தையின் பெருமையை திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், திருமழிசை ஆழ்வார், திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார், நம்மாழ்வார், பேயாழ்வார் போன்றோர் போற்றிப் பாடியுள்ளனர். மகாமகக் குளத்தின் சிறப்பு, திருக்கோயில்களின் சிறப்பு போன்றவற்றைக் கல்வெட்டுச் சான்றுகளுடனும், தேவாரப் பாடல்களுடனும் புராணக் குறிப்புகளுடனும் தந்திருப்பது சிறப்பு. குடந்தை மட்டுமின்றி, குடந்தையைச் சுற்றியுள்ள திருவலஞ்சுழி, சுவாமிமலை, பட்டீஸ்வரம், திருபுவனம், திரவிடைமருதூர் முதலிய ஊர்களில் உள்ள […]

Read more

நபி வழி அறிவோமா?

நபி வழி அறிவோமா?, திருமதி வசந்தகுமாரி செல்லையா, திருமதி வசந்தகுமாரி வெளியீடு, பக். 433, விலை 280ரூ. இந்நூலாசிரியர், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும், எழுத்தாளருமாவார். இவர் தன் மகன் இஸ்லாத்தை ஏற்று முஸ்லிமாக மாறியதால், இஸ்லாம் குறித்து அறியும் விதமாக அது குறித்த நூல்களை ஆழமாக படிக்க, அதன் விளைவாக உருவானதே இந்நூல். இஸ்லாமிய மார்க்க அறிஞரைப் போல் மிக நுட்பமாக நபிகள் நாயகத்தையும், அவரது தூதுத்துவத்தையும் இஸ்லாமியை சித்தாந்தங்களுடன் இந்நூலில் விளக்கியுள்ளது – படிப்பவர்களை வியக்க வைக்கிறது. இந்நூல் 10 அத்தியாயங்களைக் கொண்டது. […]

Read more

தமிழை வளர்த்த முக்கியத் தமிழ் அறிஞர்கள்

தமிழை வளர்த்த முக்கியத் தமிழ் அறிஞர்கள், மறைமலை ராதா, மணிமேகலை பிரசுரம், விலை 60ரூ. தமிழ்த்தொண்டு புரிந்த உ.வே.சாமிநாத அய்யர், மறைமலை அடிகள் உள்ளிட்ட 20 செம்மொழிச் சிற்பிகளைப் போற்றுவதுடன், அவர்கள் ஆற்றிய பணிகளின் சிறப்பை எடுத்துக்காட்டும் வகையில் இந்த நூல் அமைந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 17/2/2016.   —- ஸ்ரீஹரி வம்சம், எல். வரலட்சுமி நரசிம்மன், அருள்மிகு அம்மன் பதிப்பகம், விலை 250ரூ. வேத வியாசரால் இயற்றப்பட்ட மகாபாரதத்தோடு இணைந்த ஒரு பாகமாக இருக்கிறது ஸ்ரீஹரி வம்சம். சுமார் 12 ஆயிரம் சுலோகங்கள் […]

Read more

பிராஜக்ட்

பிராஜக்ட், ஜீவா புத்தக நிலையம், விலை 200ரூ. மர்ம நாவல் என்ற குறிப்புடன் இந்த நூல் வெளிவந்துள்ளது. நாவலை எழுதியவர் பெயர் கவா கம்ஸ் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதுபற்றி, அணிந்துரையில் “திருக்குறள் பாராயணம்” அமைப்பின் தலைவர் புதேரி தானப்பன் கூறுகிறார்- “இந்த நூலின் ஆசிரியர் ‘கவாகம்ஸ்’ ஸா? இப்படியும் ஒரு பெயரா? இவர் ஆணா, பெண்ணா? நாவல் முழுவதும் ஆங்கிலச் சொற்கள் நிரம்பி வழிகின்றன…” இவ்வாறு தானப்பன் கூறினாலும் நாவல் சிறப்பானது என்று பாராட்டவும் செய்திருக்கிறார். என்ஜீனியர் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, முழு நேர […]

Read more

கனவின் பலன்கள்

கனவின் பலன்கள், திருமுருக கிருபானந்த வாரியார், குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், விலை 33ரூ. கனவின் பலன்களைக் கூறுகிறார், திருமுருக கிருபானந்த வாரியார். கனவில் கழுதையைக் கண்டால், கொஞ்சம் கொஞ்சமாக துன்பம் நீங்கும். யானையைக் கண்டால் அதிர்ஷ்டம். புலிகள், சிங்கங்கள், கரடிகள் முதலிய கொடிய மிருகங்களைக் கண்டால் பலவான்களுடன் விரோதம் ஏற்படும். சிட்டுக்குருவி, வாத்து ஆகியவற்றைக் கண்டால் நல்லது நடக்கும். இப்படி பல பலன்களை சொல்கிறார் வாரியார் சுவாமிகள். புராணங்களிலும் இலக்கியங்களிலும் கனவு கண்டவர்கள் பற்றியும், அவர்கள் கண்ட கனவுக்கான பலன்களையும் குறிப்பிட்டுள்ளார். நன்றி: தினத்தந்தி, […]

Read more

திருக்கோயில் அமைப்பும் ஆலய வழிபாட்டு முறைகளும்

திருக்கோயில் அமைப்பும் ஆலய வழிபாட்டு முறைகளும், ஆர்.பி.வி.எஸ். மணின், வர்ஷன் பிரசுரம், பக். 160, விலை 100ரூ. விச்வ ஹிந்து பரிஷத் முன்னாள் மாநிலத் தலைவரான இந்நூலாசிரியர், ஹிந்து சமயம் மற்றும் அதன் தத்துவங்களைக் குறித்துப் பல நூல்கள் எழுதியுள்ளார். அந்த வகையில், இந்நூலில் ஆலய வழிபாட்டின் அவசியம், ஆலய வடிவமைப்பின் தத்துவம், உத்ஸவங்களால் ஏற்படும் பலன்கள், விக்ரஹ ஆராதனை செய்வதன் தாத்பர்யம், விஷ்ணு கோயில்களில் வழிபாடு செய்யும் முறை, கும்பாபிஷேகம் செய்வதன் உள்ளார்ந்த பொருள், ஆலயங்களில் வழிபடுபடுபவர்கள் செய்யத் தக்கது, செய்யத் தகாதது… […]

Read more

பல்வேறு நோய்களுக்கான உணவு முறைகள்

பல்வேறு நோய்களுக்கான உணவு முறைகள், கற்பகம் புத்தகாலயம், விலை 65ரூ. மனிதனின் தொழில் முன்னேற்றத்திற்கு சூத்திரம் இருப்பதுபோல, அவன் உண்ணும் உணவிற்கும் உண்டு. உடற்கூறுகளில் ஏதாவது மாறுதல்கள் ஏற்பட்டால் அதற்குத் தகுந்தாற்போல் உணவு முறை சூத்திரத்தை மாற்றி அமைத்து உடலின் இயக்கத்தை சீர் செய்யலாம் என்பதை விளக்குகிறது இந்த நூல். வயிற்றுப்புண், குடல் புண், மலச்சிக்கல், அஜீரணம், ரத்தக் கொதிப்பு, சிறுநிரகக் கற்கள், பித்தப்பைக் கற்கள், மூலநோய், நிரழிவு, மாதவிடாய்க் கோளாறு என அனைத்து முக்கியமான நோய்களுக்கான உணவு ஆலோசனைகளை எளிய நடையில் சமையல் […]

Read more

திருக்கோயில் தரிசனம்

திருக்கோயில் தரிசனம், மகேந்திரவாடி உமா சங்கரன், வானதி பதிப்பகம், விலை 140ரூ. குற்றாலம் ஸ்ரீ குற்றாலநாதர்கோவில், நரசிங்கபுரம் லட்சுமி நரசிம்மர்கோவில், அனுமந்தபுரம் அகோர வீரபத்பத்திரர்கோவில், கூடுவாஞ்சேரி நந்தீஸ்வரர்கோவில், நேமம் ஆவுண்டீஸ்வரர் கோவில் மற்றும் சென்னை புறநகரில் அமைந்துள்ள கோவில்கள் உள்பட 40 கோவில்களைப் பற்றி மகேந்திரவாடி உமா சங்கரன் எழுதிய நூல்.  இந்து மத நெறியை அறிந்து கொள்ளவும், இந்தக் கோவில்களைத் தரிசிக்கவும் இந்த நூல் பெரிதும் உதவும். நன்றி: தினத்தந்தி, 12/2/2016.   —- முற்லிம் பெண்களின் நேர்வழிகாட்டி, எஸ்.கே.எஸ். பப்ளிஷர்ஸ், விலை […]

Read more

சமயாதீதம்

சமயாதீதம்(அறு சமய விளக்க உரை), ஆழ்வார்கள் ஆய்வு மையம், விலை 80ரூ. இந்தியாவில் கன்னியாகுமரி முதல் இமயம் வரை பரந்து விரிந்துள்ள சமயங்கள் சைவமும் வைணவமும் ஆகும். மனித இன சிந்தனையும் வாழ்க்கை அமைப்பு முறையும் வளர வளர இவ்விரண்டு சமயங்கள் அறுவகைசமயங்களாக விரிந்து விளங்கலாயிற்று. அதைப் பற்றிய விளக்கமே இந்நூல். சவுரம், சைவம், சாந்தேயம், வைணவம், காணபத்திய, கவுமாரம் ஆகியவை ஆறு சமயங்களாகும். சவுர சமயம் சூரியனையும், சைவ சமயம் சிவபிரானையும், சாந்தேய சமயம் சக்தியையும், காணபத்திய சமயம் கணபதியையும், கவுமார சமயம் […]

Read more
1 61 62 63 64 65 128