சிவமூர்த்திகள் 64

சிவமூர்த்திகள் 64, தெள்ளாறு M. மணி, சங்கர் பதிப்பகம் வெளியீடு, பக். 408, விலை 250ரூ. சைவம், சாக்தம் ஆகிய இரு சித்தாந்தகளிலும் பரம்பொருளை நிராகார ரூபமற்ற நிலை, அருவுருவ நிலை, ரூபமுள்ள நிலை – என்ற மூன்ற நைலகளிலும் தியானிப்பதாக ஹிந்து மதத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில்தான் லிங்க வடிவ வழிபாடு தோற்றுவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், ரூபமற்ற அருவுருவமாக பரம்பொருள் இருந்தாலும், உருவ அம்சத்தில் சிவலிங்கம் இருப்பதால், அதனையே மூலமாக வைத்து 64 வடிவங்களில் மூர்த்திகள் உருவானதாக ‘சிவபராக்கிரம்’ என்கிற வடமொழி நூல் […]

Read more

எனது வாழ்க்கைப் பயணம்

எனது வாழ்க்கைப் பயணம், மருத்துவர் சு. முத்துசாமி, தாய்த்தமிழ்ப்பள்ளி வெளியீடு, பக். 360, நன்கொடை 200ரூ. ஒரு குக்கிராமத்தில் படிப்பறிவு இல்லாத எளிய குடும்பத்தில் பிறந்து, படித்து இன்று சிறந்த மருத்துவராக விளங்கும் ஒரு கிராமத்துச் சிறுவனின் வாழ்க்கைப் பயணத்தை கதைபோல் சொல்லிச் செல்கிறார் நூலாசிரியர். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 8/2/2016.   —- அருட்பெருஞ்சோதி நாட்டிய நாடகம், அருள்பாரதி, ஸ்ரீஅலமு புத்தக நிலையம், பக். 80, விலை 55 ரூ. வள்ளலார் வாழ்க்கை வரலாற்றை, சிறுவர்கள் படித்து நாடகமாக நடிப்பதற்கு ஏற்ற […]

Read more

ஏன்? எதற்கு? ஆன்மிக சந்தேகங்களுக்கு விடையும் விளக்கமும்

ஏன்? எதற்கு? ஆன்மிக சந்தேகங்களுக்கு விடையும் விளக்கமும், நர்மதா பதிப்பகம், விலை 100ரூ. இந்து சமயத்தில் நிறைய சம்பிரதாயங்கள், சடங்குகள். ஆனால் ஒவ்வொன்றும் பொருள் பொதிந்தவை. அர்த்தம் அறியாததால் அவை வீண் என்று கருதுகிறோம். அவற்றின் பயன் அறிந்து பலன் பெற இந்நூல் உதவும். கோவிலில் இறைவனை வழிபடுதல், பிரகாரத்தைச் சுற்றி வருதல், திருமுழுக்கு (அபிஷேகம்) செய்தல், தானம் செய்தல், பூஜையறையின் விதிமுறைகள் இவை போன்ற ஆன்மிகத்தில் ஏற்படும் சந்தேகங்களுக்கு விளக்கம் அறிய பல விஷயங்களை கேள்வி – பதில் வடிவில் தொகுத்து அளித்துள்ளார் […]

Read more

தாயுமான சுவாமிகள் பாடல் உரை

தாயுமான சுவாமிகள் பாடல் உரை, பதிப்பாசிரியர் சு. இலம்போதரன், முல்லை நிலையம், விலை 450ரூ. இந்திய தத்துவ ஞான மரபில் தாயுமான சுவாமிகளுக்கென்று தனியிடம் உண்டு. தாயுமானவர் ஒரு ஞானக்கடல். அதில் தத்துவ முத்துக்களும், தரங்குறையா பவழங்களும் நிரம்ப உண்டு. அத்தகைய தாயுமான சுவாமிகளின் பாடல்களை அரிய பழைய உரையுடன் க. இலம்போதரன் தொகுத்துள்ளார். “கல் எறியப் பாசி கலைந்து நன்னீர் காணும், நல்லோர் சொல் உணரின் ஞானம் வந்து தோன்றும் பராபரமே” என்று எளிய உவமையைக் கூறி தாயுமானவர் நம்மைத் தெளிவுபடுத்துகிறார். மலரின் […]

Read more

இதய சூத்திரம்

இதய சூத்திரம், ஓஷோ, கவிதா பப்ளிகேஷன்ஸ், விலை 350ரூ. உலகப் புகழ்பெற்ற ஆன்மிகக் குருவாகத் திகழ்ந்தவர் ஓஷோ. மனித குலத்தின் விழிப்புணர்வுக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்டவர். தன்னைக் கொண்டறிதலும், தியானமும் கொண்ட புதிய முறையை அறிமுகப்படுத்தியவர். அவரது இதய சூத்திரம் என்ற நூலைத் தமிழில் சுவாமி சின்மானந்த் மொழிபெயர்த்துள்ளார். ஆன்மிக அன்பர்களின் இதயம் கவரும் நூல். நன்றி: தினத்தந்தி, 20/1/2016.   —- குருசேத்திரக் குடும்பங்கள், ஜோதிர்லதா கிரிஜா, பூம்புகார் பதிப்பகம், விலை 145ரு. இருவேறு பொருளாதார நிலையில் வாழும் இரு குடும்பங்களின் வாழ்வை […]

Read more

இஸ்லாத்தில் முன்னுரிமைகள்

இஸ்லாத்தில் முன்னுரிமைகள், மௌலவி நூஹ்  மஹ்ழரி, இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட், விலை 90ரூ. ஒரே நேரத்தில் இரண்டு செயல்கள் நம் முன்னே நிற்கின்றன. இதில் எதற்கு முன்னுரிமை கொடுபப்து? இடம், பொருள், சூழ்நிலைகளுக்கு ஏற்ப முன்னுரிமை கொடுக்க வேண்டிய அம்சங்களை முடிவு செய்ய வேண்டும். அந்த வகையில் இஸ்லாத்தில் எந்தெந்த செயலுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதை நூஹ் மஷ்ழரி இந்த நூலில் தெளிவாக எடுத்துரைக்கிறார். தனி மனித நலனா? சமுதாய நலனா? எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றால், சமூக நலனுக்கே முன்னுரிமை […]

Read more

புதுச்சேரி கோவில்கள்(பாகம் 1, பாகம் 2)

புதுச்சேரி கோவில்கள்(பாகம் 1, பாகம் 2),  டாக்டர் சி.எஸ். முருகேசன், சங்கர் பதிப்பகம், பக். 672, 440, விலை 550ரூ, 400ரூ. அந்நாளில், வணிகத்தின் பொருட்டு புதுச்சேரிக்கு வரும் கப்பல்கள், சரக்குகளை துறைமுகத்தில் இறக்கிவிட்டு, புதுச்சேரியிலிருந்து பல பொருட்களை ஏற்றிக்கொண்டு செல்லும், துறைமுகப் பகுதியை ஒட்டி இருந்த மணற்குளங்களில், குடிநீரைச் சேமித்து வைத்திருப்பர். அந்த நீரை கப்பல்கள் சேகரித்து, தங்கள் பயணத்தை துவங்கும். இந்த மணற்குளங்களுள், விநாயகர் வீற்றிருந்த சிறிய கோவிலை ஒட்டிய மணற்குளமும் ஒன்று. மக்கள் அடையாளத்திற்காக, மணற்குளத்து விநாயகர் என்று அழைக்க […]

Read more

27 நட்சத்திர தலங்கள் பரிகார முறைகள்

27 நட்சத்திர தலங்கள் பரிகார முறைகள், செந்தூர் திருமாலன்,  தினத்தந்தி பதிப்பகம், பக். 208, விலை 180ரூ. மனித வாழ்வில் நட்சத்திரங்களும், கிரகங்களும் பெரும் பங்கு வகிக்கின்றன. இதில் ரேவதி முதல் அஸ்வினி வரையிலான 27 நட்சத்திரங்கள் மனிதனின் அங்கங்களாக விளங்குகின்றன. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் தனித்தன்மை, பார்வை, நிறம், குணம், ஆடை, அணிகலன், பூக்கள், தொழில், நைவேத்தியம், தூபம், மந்திரம், பலன் என்று தனித்தனியாக பல்வேறு அம்சங்கள் இந்து சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டள்ளன. அதன்படி உரிய நட்சத்திர கோவில்களுக்குச் சென்று பரிகாரம் செய்வதால் குறைபாடுகளைக் குறைத்துக் […]

Read more

காற்றில் மிதந்து வருகிறார் கண்ணதாசன்

காற்றில் மிதந்து வருகிறார் கண்ணதாசன், புல்லாங்குழல் வெளியீடு, விலை 150ரூ. பாமர மக்களுக்கு பாட்டு வழியாக மருத்துவம் பார்த்தவர் கவியரசு கண்ணதாசன். அவர் எம். எஸ். விசுவநாதன், டி.எம். சவுந்தராஜன், பி. சுசீலா, இளையராஜா ஆகியோருடன் இணைந்து பாடல் உருவாக்கிய விதம் குறித்து எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நூல். பாடலில் எளிமை, கவிதையில் இனிமை, சொற்களை நெய்யும் நேர்த்தியில் எழுத்தின் வன்மை குறித்து விவரித்து அதிகமான படங்களுடன் தொகுத்தளித்திருக்கிறார் கவிபாஸ்கர். நன்றி: தினத்தந்தி, 16/12/2015   —-   அருணகிரிநாதர் அருளிய கந்தர் அந்தாதியில் […]

Read more

நட்பை வழிபடுவோம் நாம்

நட்பை வழிபடுவோம் நாம், கற்பக புத்தகாலயம், சென்னை, விலை 45ரூ. நட்பிலே நல்ல நட்பு, போலி நட்பு, தீய நட்பு, கூடா நட்பு என்று பலவகை இருக்கின்றன. இலக்கியங்களும் அதை நமக்கு எடுத்து சொல்கின்றன. அத்தகைய நட்பையெல்லாம் இப்புத்தகத்தின் வாயிலாக விளக்குவதுடன் நல்ல நட்பு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சில சான்றுகளை காட்டி அதன் வாயிலாக நட்பின் பெருமை உணர்த்தப்படுகிறது. கபிலர் – பாரியின் நட்பு, கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு, அவ்வையார் – அதியமான் நட்பு ஆகிய சங்க காலச் சான்றோர்களின் […]

Read more
1 62 63 64 65 66 128