திருக்கயிலைக்கு ஒரு மறக்கவியலாப் பயணம்

திருக்கயிலைக்கு ஒரு மறக்கவியலாப் பயணம், மணிமேகலைப் பிரசுரம், விலை 75ரூ. திருக்கயிலையின் புனிதப் பயணத்தை விவரிக்கும் நூலிது. கயிலைக் காட்சி மயிலைக் காட்சி போல மனத்திற்கு நிறைவு தந்திருப்பதை இந்நூலில் காணலாம். வெறும் பயண விளக்கம் தரும் வழிகாட்டி நூலாக இல்லாமல் வாழ்விற்கு அருள் வழிகாட்டியாய் இப்புத்தகத்தை செம்மைப்படுத்தியுள்ளார் முனைவர் வாசுகி கண்ணப்பன். அவர் வேதம், திருமுறை, புராணம், வரலாறு எனப் பல்வேறு துணை விளக்கங்களையும் அளித்து, மேற்கொண்டு யாரேனும் திருக்கயிலை யாத்திரை மேற்கொண்டால் அவர்களுக்கு உதவும்வகையில், முகவரிகள், ஆலாசனைகள், எடுத்துச்செல்ல வேண்டிய பொருள்கள், […]

Read more

இஸ்லாமிய சட்ட கருவூலம்

இஸ்லாமிய சட்ட கருவூலம், அஷ்ஷெய்க் ஸெய்யத் சாபிக், இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட், விலை 250ரூ. திருக்குர்ஆன் மற்றும் நபிமொழி அடிப்படையில் இஸ்லாமிய சட்டங்கள் குறித்து அஷ்ஷெய்க் ஸெய்யத் சாபிக் எழுதிய ‘பிக்ஹுஸ் சுன்னா’ (இஸ்லாமிய சட்ட கருவூலம்) என்ற நூலை மவுலவி நூஹ் மஹ்ழரி தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இதுவரை 5 பாகங்கள் வெளியாகி உள்ளன. இது 6 வது பாகம். இதில் முழுக்க முழுக்க ‘திருமணம்’ குறித்து விளக்கப்பட்டுள்ளது. திருமண வாழ்வின் முக்கியத்துவம், திருமணம் செய்யும் முறை, மணக்கொடை, பலதாரமணம் போன்ற பல்வேறு தலைப்புகளில் […]

Read more

இஸ்லாமும் ஜீவகாருண்யமும்

இஸ்லாமும் ஜீவகாருண்யமும், கவி.கா. மு. ஷெரீப், கலாம் பதிப்பகம், பக். 80, விலை 50ரூ. கவிஞர், எழுத்தாளர், பாடலாசிரியர், விடுதலைப் போராட்டவீரர், சீறாப்புராண உரையாசிரியர் என்று பன்முக அடையாளம் கொண்ட கவி.கா. மு. ஷெரீப், தமிழ் இலக்கியத்துக்கு இஸ்லாமிதயர் ஆற்றியிருக்கும் அரும்பணிக்கு அடையாளமாகவும் திகழ்பவர். உயிர் நேயம் மனித உணர்வின் உச்சம். இதை இஸ்லாம் இயல்பான வாழக்கை முறைக்குள் எந்தளவு நடைமுறைச் சாத்தியமாகியிருக்கிறது என்பதை தனது ஆய்வு அறிவின் மூலம் ஆதாரங்களோடு விளக்கும் நூல் இது. சமூக நல்லிணக்கம் நாடுவோர் அவசியம் படிக்க வேண்டிய […]

Read more

புதுச்சேரி கோயில்கள்

புதுச்சேரி கோயில்கள், சங்கர் பதிப்பகம், விலை முதல்பாகம் 550ரூ, இரண்டாம் பாகம் 400ரூ. புதுச்சேரி, இந்திய பிரெஞ்சு கலாச்சாரத்தின் வியத்தகு வரலாற்றுப் பெட்டகம். சித்தர்கள், கவிஞர்கள், தேசாபிமானிகள் நிறைந்த ஊர். புதுச்சேரி சிறிய மாநிலம் என்றாலும் இங்கு கோயில் இல்லாத ஒரு தெருவைக்கூட காண முடியாது. அத்தகைய கோயில்களின் தலவரலாறு, தலபுராணச் செய்தி, ஆலயத்தின் தனிச் சிறப்புகள், திருவிழாக்கள், கோவில்களுக்குரிய பாடல்களை டாக்டர் சி.எஸ். முருகேசன் தொகுத்து வழங்கியுள்ளார். இதில் விநாயகர் கோயில்கள், முருகன் கோயில்கள், சிவன் கோயில்கள், பெருமாள் கோயில்கள், அய்யனார் கோயில்கள், […]

Read more

அம்மா ஓர் உலகளாவிய தலைவி

அம்மா ஓர் உலகளாவிய தலைவி, ஸ்ரீ நித்யா பதிப்பகம், விலை 300ரூ. முதல்-அமைச்சர் ஜெயலலிதா பற்றி, அ.இ.அ.தி.மு.க., தலைமைக் கழகப் பேச்சாளர் வி.ஜி.ஆர்.ராமதாஸ் எழுதிய புத்தகம். அன்னை தெரசா, ஜோன் ஆப் ஆர்க், விக்டோரியா மகாராணி, மார்க்ரெட் தாட்சர், இந்திரா காந்தி ஆகியோருடன் ஒப்பிட்டு ஜெயலலிதா சிறப்புகளை எடுத்துக்கூறுகிறார். தமிழ்நாட்டின் பல்வேறு பிரச்சினைகளை, துணிச்சலுடன், தொலைநோக்குடனும் தீர்த்த அவர் மதிநுட்பத்தை போற்றுகிறார். சுருக்கமாகச் சொன்னால் ஜெயலலிதா பற்றிய சிறந்த புத்தகம், வண்ணப்படங்கள் அழகுக்கு அழகு சேர்க்கின்றன. நன்றி: தினத்தந்தி, 18/11/2015.   —- பெரியாழ்வார், […]

Read more

ஸ்ரீ வியாசரின் மஹாபாரதம்

ஸ்ரீ வியாசரின் மஹாபாரதம் (3 பாகங்கள்), ஸ்வாமி, வீடியா மாஸ்டர்ஸ், பக். 358, 404, 472, விலை 900ரூ (3 பாகங்கள் சேர்த்து). இந்த நூலில், 16 பர்வங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பர்வத்தின் பொருளடக்கமும் நூலின் முன்பகுதியில் இருப்பதால், நமக்குத் தேவையான பகுதியை மட்டும் படித்து அறியமுடிகிறது. சூரியனின் தேரோட்டி அருணனின் பெருமையும் (பக். 41), கவுரவர் நூறு பேரின் பெயர்கள் (பக். 77), சகுந்தலையின் கதை (பக். 101), அறுவகை வாரிசுகளின் பெயர்கள் (பக். 147), ஜராசந்தன் கதை (பக். 286), யட்சனின் […]

Read more

சொல்லில் அடங்காத உலகம்

சொல்லில் அடங்காத உலகம், பா. ராமமூர்த்தி, பாவை பப்ளிகேஷன்ஸ், விலை 90ரூ. கால தேச வர்த்தமானங்களைக் கடந்து எடுக்கப்பட்டிருக்கும் ஆவணப்படம் பராக்கா. அந்தப் படத்தின் காட்சிகள் வழியாகத் தான் அடைந்த அனுபவத்தை வார்த்தைகளில் கடத்துவதற்கு நூலாசிரியர் செய்திருக்கும் முயற்சியே இந்த நூல். பக்கத்துக்குப் பக்கம் விதவிதமான உணர்ச்சிகள், அறைகூவல்கள், போராட்டங்கள், பொழுதுபோக்குகள், விழிப்புணர்வுகள், பழிவாங்கல்கள், மனித நேயத்தின் அவசியம் இப்படிப் பல அம்சங்களும் இந்நூலில் உள்ளன. புத்தகத்தை முழுவைதுமாக வாசித்து முடிக்கும்போது, பங்கேற்பாளராக இல்லாவிட்டாலும், இந்தப் புத்தகச் சாளரத்தின் மூலமாக உலகின் பார்வையாளராக நாம் […]

Read more

ஆமுக்த மால்யத

சூடிக்கொடுத்தவள் (ஆமுக்த மால்யத), டாக்டர் எஸ். ஜெகத்ரட்சகன், ஆழ்வார்கள் ஆய்வு மையம், விலை 200ரூ. தமிழில் ஐம்பெரும் காப்பியங்கள் இருப்பதைப் போன்று தெலுங்கிலும் ஐம்பெரும் காப்பியங்கள் இருக்கின்றன. மனுசரித்ரம், வசுசரித்ரம், ஆமுக்த மால்யத, பாரிஜாதாபகர்ணம், ச்ருங்கார நைஷதம் ஆகிய ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று ‘ஆமுக்த மால்யத.’ இந்த நூல், ஆண்டாளின் அவதாரத்தை மட்டும் சொல்லவில்லை. இப்பெருமாட்டியை வளர்த்த விஷ்ணுசித்தர் எனப்படும் பெரியாழ்வாரின் சரித்திரத்தைத் தெளிவாகச் சொல்வதும் ஆகும். அதனால் விஷ்ணுசித்தீயம், ஆமுக்த மால்யத ஆகிய இரு காப்பியங்கள் இணைந்த பெருங்காப்பியம் என்று இதனைக் குறிப்பிடலாம். […]

Read more

உண்மை

உண்மை, கே.எஸ். நாகராஜன் ராஜா, கிரி டிரேடிங் ஏஜென்சிஸ், விலை 120ரூ. ஷீரடி பாபாவின் ஜீவசமாதி இருக்கும் இடத்தையும், கர்ம வினையிலிருந்து யாரும் தப்ப முடியாது என்ற நிலையையும், பரமாத்மா அனைத்து விஷயங்களுக்கும் சாட்சியாக இருக்கிறார் என்ற தகவல்களுடன், பாதாள புவனேஷ்வர், காமாக்யா, கைலாஷ் – மானசரோவர் போன்ற பல ஆன்மிக தலங்களிலும் நூலாசிரியர் பெற்ற அனுபவங்களும் இடம் பெற்றுள்ளன. நன்றி: தினத்தந்தி, 9/12/2015.   —- சிந்திப்போமா?, ஆ. சூசைமாணிக்கம், வாசன் பிரதர்ஸ் வெளியீடு, விலை 50ரூ. ஒழுக்க நெறிகளை வலியுறுத்துவதுடன், அனைவரும் […]

Read more

ஸ்ரீ பரப்பிரம்ம ரகசியம்

ஸ்ரீ பரப்பிரம்ம ரகசியம் (இந்து மத ஆன்மீகத் தலைமை), வி.என். கஜேந்திர குருஜி, ஸ்ரீ பரப்பிரம்மன் ஐந்தியல் ஆய்வு மையம், பக். 1279, விலை 800ரூ. இந்தப் பிரபஞ்சத்தில் தோன்றிய முதல் ஆண், முதல் பெண் யார்? என்பதைத் தெரிந்துகொள்ள நாம் முயற்சி செய்திருக்கறோமா? இல்லை. ஆனால் அந்த ரகசியம் வெட்டவெளிச்சமாகி இருக்கிறது. உயிரினங்கள் வாழும் பூலோகம் என்பது, விண்சேர்க்கையும் பூமிச் சேர்க்கையும் ஒன்றுசேர்ந்த இடமாகும். பூலோகத்தில் ஆண்தன்மையும், பெண்தன்மையும்இணைந்து அலித் தன்மையில் ஓர் உருவம் என அமைந்ததுதான் ஸ்ரீபரப்பிரம்மம். அந்தப் பிரம்மம் ஆண்-பெண் […]

Read more
1 64 65 66 67 68 128