மனம் அது செம்மையானால்?

மனம் அது செம்மையானால்?, க.மணி, அபயம் பப்ளிஷர்ஸ், விலைரூ.200. ஆசிரியர் எழுதியுள்ள பல புத்தகங்களை, வரிசைக் கிரமமாகப் படித்தாலும், ஆங்காங்கே இடைச் செருகலாய் படித்தாலும், ஒன்றைத் திறந்து வைத்து மற்றொன்றைப் படித்தாலும், அச்சு பிசகாமல், அர்த்தம் மாறாமல், பிறவி குறித்தும், மனம் குறித்தும், ஆழ் மனம் குறித்தும் அழகாய் விளக்கி விடுவார். அறிவியல் மூலம் ஆன்மிகத்தைத் தேடி, ‘நான் யார்’ என்ற கேள்விக்கு, ‘இது தான்யா நீ…’ என்ற பதிலை அறிவுப்பூர்வமாய், அழகாக விளக்கிச் சொல்கிறார். மனம், ஆழ் மனம் ஆகியவற்றை அழகாக விளக்கி, […]

Read more

இமய பொக்கிஷங்கள்

இமய பொக்கிஷங்கள், ஆர்.கண்ணதாசன், ஸ்ரீ அனந்த நிலையம், விலை 200ரூ. இமய மலைப் பகுதியில் அமைந்துள்ள ஆன்மிகத் தலங்களான பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி, உத்தர்காசி, குப்த்காசி, ஜோஷிமத், பஞ்சபத்ரி, கோமுக், ரிஷிகேஷ், ஹரித்துவார் ஆகிய இடங்களுக்குச் செல்ல விரும்புகிறவர்களுக்கு இந்த நூல் சிறந்த வழிகாட்டி. ஒவ்வொரு இடங்களின் தலவரலாறு, அங்குள்ள இறைவன் பற்றிய விவரம், அந்த இடங்களுக்குச் செல்லும் வழி ஆகியவையும், புண்ணிய தலங்களின் புகைப்படங்களும் இந்த நூலில் அடங்கி இருக்கின்றன. நன்றி: தினத்தந்தி, 14/2/21 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000031027_/ இந்தப் […]

Read more

திருநாராயணீயம்

திருநாராயணீயம், பிறைசூடன், ஆசிரியர் வெளியீடு, விலைரூ.350. நாராயணனின் பெருமையைக் கூறும் நுால். நாராயண பட்டத்ரியால், வடமொழியில் எழுதப் பட்ட ஸ்லோகம். வடமொழியில் எழுதப்பட்ட ஸ்லோகங்களைத் தமிழில் மொழிபெயர்த்து, 100 தசகங்களாக கவிதையில் எழுதியுள்ளார். கண்ணனின் லீலைகளை எளிய நடையில் தந்துள்ளார். கம்சனின் குவலயம் என்ற பட்டத்து யானையை வென்ற செயல் மற்றும் மல்லர்களைக் கொன்றது போன்ற நிகழ்வுகள், படிப்போரைப் பரவசப்படுத்தும். வடமொழியில் உள்ள ஸ்லோகங்களைத் தமிழில் மொழிபெயர்த்து எழுதுவது எளிதான செயலன்று. நுாலைப் படித்து குருவாயூரப்பனின் பெருமைகளைத் தெரிந்து கொள்ளலாம். – பேராசிரியர் இரா.நாராயணன். […]

Read more

ஆன்மிக ஒளியில் அறிவியல்

ஆன்மிக ஒளியில் அறிவியல், ப.திருமலை, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.240. அன்றாடம் பயன்படுத்தும் மஞ்சள் போன்ற பொருட்கள், வழிபாட்டு முறைகள், சடங்குகள் போன்ற அனைத்தையுமே முன்னோர் ஒரு அர்த்தத்துடன் தான் செய்து வந்திருக்கின்றனர். நம் பழக்க வழக்கங்களில் உள்ள அறிவியல் உண்மைகளை மறந்து விட்டு, வெறும் சடங்குகளாக பார்ப்பதால் உரிய முக்கியத்துவம் தர மறுக்கிறோம். இத்தகைய ஆன்மிக பழக்க வழக்கங்களில் பொதிந்துள்ள அறவியல் ரகசியங்களை வெளிக் கொண்டு வரும் முயற்சி தான் இந்த புத்தகம். முப்பது சிறிய கட்டுரைகளை உள்ளடக்கியது; மருந்துப் […]

Read more

திருவாசகம்

திருவாசகம், மாணிக்கவாசக சுவாமிகள், அழகு பதிப்பகம், விலைரூ.120. பன்னிரு சைவ திருமுறைகளில் ஒன்றாக உள்ளது திருவாசகம். எட்டாம் திருமுறை. முழுமுதல் கடவுளான சிவபெருமான் மீது பாடப்பெற்ற பாடல்களில் தொகுப்பு. பக்தி சுவையும், சிறந்த சமய இலக்கியமாகவும் திகழ்கிறது. இந்த நுால், 51 பகுதிகளையும், 649 பாடல்களையும் கொண்டது. இதில், 38 சிவ தலங்கள் பாடப் பெற்றுள்ளன. முற்றோதல் செய்ய வசதியாக, தெளிவாக பெரிய எழுத்தில் அச்சிடப்பட்டுள்ளது. எளிதாக பயன்படுத்தும் வகையில் கெட்டி அட்டையில் தயாரிக்கப்பட்டுள்ளது. நன்றி: தினமலர்,11/4/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

கனவுகள்

கனவுகள், எப்.அந்தோணிசாமி, அன்னை பதிப்பகம், விலைரூ.75. கிறித்துவ ஆயர்களின் பணிகளையும், அருள்பணியாளரின் பணிகளையும், துறவியரின் பணிகளையும், பொதுவானவர்களின் பணிகளையும் வரையறுத்துத் தெரிவிக்கிற நுட்பமான நுால். கிறித்துவர்களுக்கு மூன்று பிறப்பு இருப்பதாகத் தத்துவார்த்தமாக விளக்குகிறது. அன்னையின் வயிற்றில் பிறக்கும் பிறப்பு, திருமுழுக்குக்குப் பின்னரான பிறப்பு, இறப்புக்குப் பிறகான விண்ணுலகப் பிறப்பு என தெளிவுபடுத்துகிறது. நிகழாத ஒன்றை நிகழ்த்துவதே கனவு என்னும் புதுமையான விளக்கத்தைத் தருகிறது. நம்பிக்கையை விதைக்கும் நோக்கத்தில் படைக்கப்பட்டுள்ளது. கிறித்துவ இறைவாழ்க்கை வாயிலாக நம்பிக்கை பெற்று, உயர்ந்த நிலையை அடைவதற்கான வழியை உணர்த்துகிறது. சிறந்த […]

Read more

ஆன்மிகம் அறிவோம்

ஆன்மிகம் அறிவோம், பிரேமாவதி வீரப்பன், கோரல் பதிப்பகம்,விலைரூ.150. பச்சை கற்பூரம், மலர்களின் மணம், ஊதுவத்தி புகையின் சுகந்தம் என்றெல்லாம் அடுக்கிக் கொண்டே போகும் போது, பூஜை அறை நினைவுக்கு வரும். இந்த புத்தகத்தை புரட்டும் போது, ஒரு பூஜை அறைக்குள் நுழைகிறோம். பவித்திரமாக்குகிறது இந்த வாசிப்பு. இறைவனுக்கு அர்ப்பணிக்கக் கூடிய அற்புதமான மலர்கள் பற்றி புராணங்கள் சொல்லியிருக்கின்றன. அவற்றில் எட்டு மலர்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன. செண்பக மலர், நந்தியாவட்டை, பாதிரி மலர், நீலோற்பவம், வெள்ளெருக்கு, புன்னை, செந்தாமரை, அலரி ஆகியவை முக்கியத்துவம் […]

Read more

இறையுதிர் காடு

இறையுதிர் காடு, இந்திரா சவுந்தர்ராஜன், விகடன் பிரசுரம், விலைரூ.1350. நவபாஷாண முருகன் சிலையை உருவாக்க, போகர் என்னென்ன பாஷாணங்கள் பயன்படுத்தினார்; உறுதித் தன்மைக்கு, என்ன கலவை கலந்தார். இதற்காக, எங்கெல்லாம் சென்று மூலிகை சேகரித்தனர் என விவரிக்கிறது இந்நுால். முருகன், சர்வரோக நிவாரணி என்கின்றனரே அது உண்மையா? ஹிந்து சமயத்தில் எவ்வளவோ கடவுள்கள் இருக்க, போகர் பிரான், எதனால் முருகனை பாஷாணத்தில் கட்டமைத்தார்? அழகிய கோலங்களை பொருட்படுத்தாமல், ஆண்டி கோலத்தில் இருக்கும் முருகனை செய்தார்? போன்ற கேள்விகளுக்கான விடையை விவரிக்கிறது. ஆனந்த விகடனில், 87 […]

Read more

சிவஞான முனிவர்

சிவஞான முனிவர், கா.சுப்பிரமணிய பிள்ளை, வைகுந்த் பதிப்பகம், விலைரூ.70. ‘இறைவன் ஒருவனே’ என்று வாழ்ந்த முனிவர் பற்றிய நுால். வேதம், வேதாந்தம், மீமாஞ்சை, தர்க்கம், வியாகரணம் போன்ற நுால்களைக் கற்றுணர்ந்த முனிவர் தான் வாழ்ந்த, 32 ஆண்டுகளில், ‘ஆனந்த ருத்ரேசுவரர் பதிகம், செப்பறை அகிலாண்டேசுவரி பதிகம், பஞ்சாக்கரமாலை, திருத்தொண்டர் திருநாமக்கோவை, சித்தாந்தப் பிரகாசிகை’ உள்ளிட்ட பல நுால்கள் இயற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.பல சுவையான கருத்துகளையும், அரிய தகவல்களையும் உள்ளடக்கிய நுால்; ஆய்வு நோக்கில் படிக்கலாம். – மெய்ஞானி பிரபாகரபாபு நன்றி: தினமலர், 21-2-21 இந்தப் புத்தகத்தை […]

Read more

என்னை நானே பார்த்தேன்

என்னை நானே பார்த்தேன், அனு. வெண்ணிலா, திருப்பூர் குமரன் பதிப்பகம், விலைரூ.250. தாங்கொணாத் துயரங்கள் தாக்கிய தருணங்களில் சொல்லி அழக்கூட ஒரு துணை இல்லாக் காலங்களின் போதும், இறையருளின் வெளிச்சக்கீற்றுகள் உதவியிருப்பதை பக்தியின் பாதையில் உணர்ந்து கொண்டேன்.ஊரும் உறவுகளும் அந்நியமாகிப் போன நிலையில், தக்க சமயத்தில் உதவியும் ஊக்கமும் பெற என் தாய்த்தமிழ் எனக்கு பெரிதும் உதவியது என சுயமரியாதை இயக்கக் குடும்பத்தில் பிறந்து, ஆற்றுப்படுத்த ஆளில்லாமல் தனிமையில் போராடி, ஆன்மிக வயப்பட்டு மகான்களையும் தரிசித்து, சொந்த ஆன்மிக அனுபவங்களை பதிவு செய்துள்ளார். முழுமையும் […]

Read more
1 7 8 9 10 11 128