திருவடி

திருவடி, நா.க.ராமசாமி, ஸ்ரீ அலமு புத்தக நிலையம், விலை 90ரூ. சிவச்சிந்தனை என்ற தலைப்பில் வெளியான கட்டுரைகளின் நிறைவுப் பகுதி திருவடி என்ற பெயரில் நூல் வடிவம் பெற்றுள்ளது. பாவப் பலன்கள் தீரும் வழி, இறைவனை எவ்வாறு அடைவது, சிக்கல் இல்லாமல் வாழ்வது எப்படி என்பதுபோன்ற விச நெறி சார்ந்த வளமான கருத்துகள் இந்த நூலில் உள்ளன. நன்றி : தினத்தந்தி, 18/4/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – […]

Read more

ஆன்மீகம் தெய்வீகம்

ஆன்மீகம் தெய்வீகம் , சத்யவதனா, சத்யா பதிப்பகம்,  பக்.236, விலை ரூ.300. “பிரதோஷத்தின் பலன்கள்’,”ஐந்தெழுத்து மந்திர ஆற்றல்’, “கடவுளைக் காண்பது எப்படி?’, “ஸ்ரீராமபக்த ஆஞ்சநேயரின் பெருமை’ என்பன உள்ளிட்ட 52 தலைப்புகளில் எழுதப்பட்ட ஆன்மிக கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். திருக்கோயில்கள், தரிசனங்கள், வழிபாட்டு முறைகள் குறித்த அபூர்வ தகவல்களை நூலாசிரியர் இந்நூலில் வாரி வழங்கியிருக்கிறார். போகருக்கே ஞானம் வழங்கிய புலிப்பாணிச் சித்தரின் வரலாறு வியப்பூட்டுகிறது. “ஒருவன் தீய எண்ணத்துடன் மற்றவர்களுக்கு அன்னதானம் செய்தால், அதை உண்டவனின் ரத்தத்திலும் தீய எண்ணம் கலந்து விடும். நான் […]

Read more

திகம்பர நினைவுகள்

திகம்பர நினைவுகள் ,  தேவகாந்தன், ஆதி பதிப்பகம், பக்.128, விலை ரூ.120. யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் பிறந்த நூலாசிரியர்,1984முதல் 2003 வரை தமிழ்நாட்டில் வாழ்ந்தார். தற்போது கனடா நாட்டில் வாழ்கிறார். என்றாலும் தான் பிறந்த மண்ணோடான அவருடைய அனுபவங்களை அவரால் மறக்க முடியவில்லை.அந்த நினைவுகளை இந்நூலில் பகிர்ந்துள்ளார். யாழ்ப்பாணத்தின் ஒவ்வொரு வீட்டிலும் அமைக்கப்பட்டிருக்கும் கிடுகு வேலி கலாசாரத்துடன் தொடங்குகிறது நூல்.இந்தக் கிடுகுவேலிகள் மழைக்காலத்தில் மண்ணரிப்பைத் தடுப்பவையாக இருந்திருக்கின்றன. குறுகியமணல் பாதைகளின் திருப்பத்தில் செல்லும் வண்டிகள் கிடுகு வேலிகளில் மோதி, வேலி சேதமடையாமல் இருப்பதற்காக வேலியின் மூலையில் […]

Read more

அகத்தைத் தேடி

அகத்தைத் தேடி, தஞ்சாவூர்க் கவிராயர், விலை: ரூ. 200. அகத்தின் சாவி அஷ்டாவக்கிரர், அரிஸ்டாட்டில் காலத்திலிருந்து சத்தியம் என்பது வெளிப்படையாகவே உள்ளது. அதைப் புரிந்துகொள்வதற்கான திராணிதான் அனைவருக்கும் இல்லை. திறந்து கிடக்கும் உண்மையைப் பார்ப்பதற்கான, எதிர்கொள்வதற்கான திராணி இல்லாத இடத்தில்தான் உண்மைக்குத் திரை போடப்பட்டு, பூசைகளும் புனஸ்காரங்களும் தொடங்குகின்றன. அனுஷ்டானங்களும் மடத்தனங்களும் நியமங்களும் மனிதனைப் பிரித்து வகுக்கும் பாகுபாடுகளும் தொடங்குகின்றன. நன்மை, தீமை, கருத்தியல், விருப்புவெறுப்புகள், ஆசைகள், அச்சங்களால் மனிதர்களும் சமூகங்களும் தேசங்களும் தங்களுக்குள் போரிட்டு மாயும் காலத்தில் மனிதர்கள் நேசிக்க மறந்துவிட்ட சூழலில் […]

Read more

சேக்கிழாரின் பெரிய புராணம்

சேக்கிழாரின் பெரிய புராணம், பா.சு.ரமணன், தாமரை பிரதர்ஸ் மீடியா, விலை 360ரூ. இரண்டாம் குலோத்துங்கச் சோழ மன்னரிடம் அமைச்சராக இருந்த சேக்கிழார், 63 நாயன்மார்கள் தொடர்பான செய்திகளை பல்வேறு தரவுகள் மூலம் சேகரித்து, அவர்களின் வரலாற்றை பெரியபுராணம் என்ற நூலாக ஆக்கினார். பகவான் ரமணரின் வாழ்வில் திருப்புமுனை ஏற்படுத்திய, 63 நாயன்மார்களின் வரலாறு, எளிய தமிழில் உரைநடை வடிவத்தில் இந்த நூலில் இடம் பெற்றுள்ளது. நாயன்மார்களுக்கு அருள் புரிய அந்த இறைவன், சாதாரண வடிவத்தில் வந்து, அவர்கள் பெருமைகளை உலகறியச் செய்த வரலாறுகள் இலக்கியத்தரத்துடனும் […]

Read more

வியாசர் இயற்றிய ஸ்ரீமத் பாகவதம்

வியாசர் இயற்றிய ஸ்ரீமத் பாகவதம், அனந்தாச்சாரி, அருணா பப்ளிகேஷன்ஸ், விலை 230ரூ. மகாபாரதத்தை எழுதிய வியாசர், ஏராளமான கிளைக் கதைகளைக் கொண்ட ஸ்ரீமத் பாகவதம் என்ற மிகப் பெரிய நூலையும் எழுதியுள்ளார். அந்த நூலில் உள்ள அனைத்து கருத்துகளும், கிளைக் கதைகளும் எளிய முறையில் படித்து அறிந்துகொள்ளும் வண்ணம் இந்த நூல் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. காக்கும் கடவுளான விஷ்ணு அனைத்து உயிரினங்களையும் காப்பதற்காக எடுத்த 20-க்கும் மேற்பட்ட அவதாரங்களும், அந்த அவதாரங்களின் சிறப்பும், அதன் மூலம் வெளிப்பட்ட அறநெறிகளும் விளக்கமாகச் சொல்லப்பட்டு இருக்கின்றன. சிருஷ்டி […]

Read more

சைவமும் சன்மார்க்கமும்

சைவமும் சன்மார்க்கமும்,  செந்நெறி பா.தண்டபாணி, விஜயா பதிப்பகம், பக். 200, விலை ரூ.180. உலகம் இன்றளவும் தேடிக் கொண்டிருக்கும் மிகச் சிறந்த வாழ்வியல் முறைகளை நமக்கு வழங்கியவர் வடலூர் வள்ளல் பெருமான். அவரது சிறப்புகளும் சன்மார்க்க கோட்பாடுகளும் எளிய முறையில் தொகுத்து இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ளன.  பதினெட்டு அத்தியாயங்களில் வள்ளலார் பற்றியும் அவரது மரணமில்லாப் பெருவாழ்வு குறித்த சிந்தனைகளும் தரப்பட்டுள்ளன. “சைவ சித்தாந்தமும் சன்மார்க்கமும் வேறு வேறு அல்ல; சன்மார்க்கம் என்பது சைவத்தின் உச்சநிலை’ என்கிறார் நூலாசிரியர். “உருவராகியும் அருவினராகியும் உருஅருவினராயும் ஒருவரே உளார் கடவுள் […]

Read more

கடோபநிஷத்

கடோபநிஷத்,க. மணி, அபயம் பப்ளிஷர்ஸ், பக். 264, விலை ரூ. 350. உபநிஷத்துகளில் தனிச்சிறப்பு கொண்டது கடோபநிஷத். பெரியதும்கூட. 119 மந்திரங்களைக் கொண்டது. கடோபநிஷத்துக்குத் தமிழில் நிறைய உரைகள் வந்திருக்கின்றன. எல்லாரும் படித்து எளிதில் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது இந்த விளக்கவுரை. விச்வஜித் யாகத்தில் அதிருப்தியுற்று எழுப்பும் கேள்வியால் ஆத்திரமுற்று, எமனுக்கே தானமாகத் தருவேன் என்று தந்தையால் கூறப்படுகிறான் அல்லது சபிக்கப்படுகிறான் மகன் நசிகேதஸ். மூன்று இரவுகள் காத்திருந்து தன்னைச் சந்திக்கும் நசிகேதஸுக்கு மூன்று வரங்கள் அருளுவதாகக் கூறுகிறார் எமதர்மன். தந்தை கோபம் நீங்கியவராகத் தன்னை […]

Read more

உமாபதி சிவாச்சாரியார் அருளிச் செய்த திருவருட்பயன்

உமாபதி சிவாச்சாரியார் அருளிச் செய்த திருவருட்பயன், விளக்க உரை, சு. சிவபாதசுந்தரனார், சந்தியா பதிப்பகம்,  பக்.238,  விலை ரூ.225.   சைவ நெறியில் சமயக் குரவர் நால்வர் இருப்பது போலவே சந்தானக் குரவர் நால்வர் உளர். அவர்களுள் நான்காமவரான உமாபதி சிவாச்சாரியார், “மெய்கண்ட சாத்திரம்’ என்று கூறப்படும் பதினான்கு நூல்களுள் எட்டு நூல்களை இயற்றியுள்ளார். “சித்தாந்த அட்டகம்’ எனப்படும் அவற்றுள் ஒன்றுதான் “திருவருட்பயன்’. இந்நூலுக்கு சைவ அறிஞர் இலங்கை சு. சிவபாதசுந்தரனார் எழுதிய உரையுடன் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. இது திருக்குறளைப் போலவே குறள் வெண்பா […]

Read more

மாசாணியம்மன் வழிபாடு

மாசாணியம்மன் வழிபாடு, தே.ஞானசேகரன், காவ்யா, விலைரூ.170 கோவை சொக்கம்புதுாரில் வாழும் தேவேந்திரர்களின் குலதெய்வம் என்னும் துணைத் தலைப்புடன் வெளிவந்திருக்கும் நுால் மாசாணியம்மன் வழிபாடு. மாசாணியம்மன் வழிபாடு பற்றி தெரிவிப்பதற்கு முன், பழங்காலம் முதல் இருந்து வரும் சிறுதெய்வ வழிபாட்டையும் தொன்மத்தையும் விளக்குகிறது. பெருந்தெய்வ வழிபாட்டிற்கும், சிறுதெய்வ வழிபாட்டிற்கும் உள்ள வேறுபாடுகளையும், தெய்வ நம்பிக்கையுடன் கூடிய சடங்குகளின் விளக்கங்களையும் வரையறுக்கிறது. கொங்குநாட்டில் வாழும் தேவேந்திர குல வேளாளர் வரலாற்றைத் தெளிவுபடுத்துகிறது. மாசாணியம்மன் தொடர்பான கதைகளையும், கதைப் பாடல்களையும், போற்றிப் பாடல்களையும் தேவைப்படும் இடங்களில் எல்லாம் பயன்படுத்தியுள்ளது. […]

Read more
1 5 6 7 8 9 128