பன்னிரு திருமுறை

பன்னிரு திருமுறை, பதிப்பாசிரியர் இராம லெட்சுமணன், சகுந்தலை நிலையம், விலை 1200ரூ. திருஞான சம்பந்தர் – திருநாவுக்கரசர் – சுந்தரர் ஆகியோரின் தேவாரம், மாணிக்கவாசகரின் திருவாசகம், திருக்கோவையார், திருவிசையப்பா, திருமூலர் திருமந்திரம் தொடங்கி பன்னிரண்டாம் திருமுறை சேக்கிழார் வரலாறு, அறுபத்து மூவர் வரலாறு என்று மொத்தம் 18,375 பாடல்கள் அனைத்தும் ஒரே புத்தகத்தில் இடம் பெற்றிருப்பது தமிழ் ஆர்வலர்களுக்கும் மாணவர்களுக்கும் சைவர்களுக்கும் நல்விருந்து என்றே சொல்ல வேண்டும். உரையையும் சேர்த்து வெளியிட்டிருந்தால் இன்னம் பெருவிருந்தாக அமைந்திருக்கும். தமிழுக்கு வைசம் செய்துள்ள அருந்தொண்டின் தொகுப்பே இந்நூல். […]

Read more

சங்க இலக்கியச் சாறு

சங்க இலக்கியச் சாறு, பேராசிரியர் இரா.மோகன், வானதி பதிப்பகம், விலை 140ரூ. தொல்காப்பியம் எனும் இலக்கண நூல், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, திருக்குறள், பாரதியார் பாட்டு என்று இலக்கிய நூல்கள் பலவற்றில் எவ்வாறு இடம்பிடித்து இலக்கிய அந்தஸ்தினைப் பெற்றிருக்கிறது என்பதை விளக்கியிருப்பதோடு, சங்க இலக்கிய நூல்கள் பலவற்றின் சாறுபோல் அவற்றின் நயத்தினையும் சொல்லியிருப்பது சிறப்பு. நன்றி: குமுதம், 11/10/2017.

Read more

நாலடியார் (திருக்குறளுடன் ஓர் ஒப்பிட்டுப்பார்வை)

நாலடியார் (திருக்குறளுடன் ஓர் ஒப்பிட்டுப்பார்வை), மானோஸ், ஹலோ பப்ளிகேஷன்ஸ், விலை 250ரூ. திருக்குறள், உலகின் தலைசிறந்த நீதிநூல், அதை அடுத்து சிறந்த நீதிகளை போதிக்கும் நூல் நாலடியார். இதில் அடங்கிய பாடல்கள், சமண முனிவர்களால் இயற்றப்பட்டவை. சில கருத்துக்களை திருக்குறள், நாலடியார் ஆகிய இரு நூல்களுமே வலியுறுத்துகின்றன. அதுபற்றி “யோகாசித்தர்” என்று புகழ் பெற்ற மானோஸ் ஆராய்ந்து அதுபற்றி இந்த நூலில் அழகாக எழுதியுள்ளார். திருக்குறள், நாலடியார் ஆகிய இரு நீதிநூல்களையும் ஒன்றாக படித்த மகிழ்ச்சியையும், மனநிறைவையும் இந்நூல் தருகிறது. மானோஸ் முயற்சி பாராட்டுக்கு […]

Read more

ஓவியப் பேழை

ஓவியப் பேழை, சிவன் மலைப்பித்தன் நடராசன், அருள் வாக்கு சித்தர் சாமி சிவன் மலைப்பித்தன் அம்மணியம்மாள் வெளியீடு, விலை 1000ரூ. திருக்குறளுக்கு புதுவிதமாக உரை எழுதியிருக்கிறார், சிவன் மலைப்பித்தன் நடராசன். 1330 குறள்பாக்களுக்கு உரை எழுதியிருப்பதுடன், அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் வரைபடங்களும் வைத்துள்ளார். படங்களில் இன்னும் சற்று மெருகேற்றி இருக்கலாம் என்றாலும், இது முதல் முயற்சி என்பதால் எல்லோரும் மனம் திறந்து பாராட்டலாம். நன்றி: தினத்தந்தி, 25/10/2017,

Read more

குறுந்தொகை

. குறுந்தொகை, முனைவர் இர.பிரபாகரன், காவ்யா, விலை 700ரூ. எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகியவை சங்க இலக்கிய நூல்கள் ஆகும். எட்டுத்தொகை நூல்களில் ஒன்று குறுந்தொகை. குறுகிய பாடல்களைக் கொண்டதால் இது குறுந்தொகை எனப்பட்டது. இது மொத்தம் 400 பாடல்களைக் கொண்டது. குறுந்தொகையில் உள்ள பாடல்கள் கற்பனை வளமும், கவிதை நயமும் நிறைந்த காதல் ஓவியங்கள். குறுந்தகைப் பாடல்கள் காதல் வாழ்க்கையின் பல்வேறு கூறுபாடுகளையும், காதலர்களின் உள்ளத்தையும் சுருக்கமாகவும் அழகாகவும் கூறும் சுவையான பாடல்கள். அத்தகைய குறுந்தொகை பாடலுக்கு முனைவர் இர.பிரபாகரன் (மேரிலாந்து, அமெரிக்கா) அழகிய […]

Read more

சாத்தனார் அருளிய மணிமேகலை

சாத்தனார் அருளிய மணிமேகலை, வீ. இளவழுதி, கவிதா பப்ளிகேஷன்ஸ், விலை 200ரூ. தமிழின் ஐம்பெரும் காப்பியங்களம் மூன்று காப்பியங்கள் மட்டுமே முழுமையாக கிடைத்துள்ளன. வளையாபதி, குண்டலகேசி காப்பியங்கள் இரண்டும் முழுமையாக கிடைக்கவில்லை. முழுமையாகக் கிடைத்த காப்பியங்களுள் ஒன்றான மணிமேகலை, கடைச்சங்கப் புலவரான சீத்தலைச் சாத்தனாரால் இயற்றப்பட்டது. மணிமேகலையைக் கதை வடிவில் எழுதியுள்ளார். நூலாசிரியர் 30 காதைகளைக் கொண்ட இக்காப்பியத்தை ஒவ்வொரு காதைக்கும் பல கிளை தலைப்புகளுடன் எளிய மொழிநடையில் கதையாக எழுதியிருப்பது இன்றைய தலைமுறை வாசகர்களையும் வாசிக்கத் தூண்டும் நல் முயற்சி. நன்றி: தி […]

Read more

அருணாசலக் கவிராயர் முதல் ஆலந்தூர் மோகனரங்கன் வரை

அருணாசலக் கவிராயர் முதல் ஆலந்தூர் மோகனரங்கன் வரை, சு.முத்தையா, வசந்தா பதிப்பகம், பக்.112, விலை 70ரூ. தமிழ் இலக்கியத்தில் சுவை, பக்தி இலக்கியத்தில் மனிதநேயத்தை, ‘கண்ணன் பாட்டு’ மூலம் கூறிய ஆசிரியர், சிறுகதையின் யதார்த்தவாதம், ஈழத் தமிழ்ச் சிறுகதைகளில் ஏகாதிபத்திய எதிர்ப்பு, மு.வ.,வின் தேங்காய்த் துண்டுகள், சிற்பியின் தமிழ்ப் பணி உள்ளிட்டவற்றின் சிறப்புகளை இந்நூலில் வழங்கிஇருக்கிறார். நன்றி: தினமலர், 1/10/2017.

Read more

அறிந்த பழமொழிகளும் அறியாத விளக்கங்களும்

அறிந்த பழமொழிகளும் அறியாத விளக்கங்களும், முனைவர் விஜயலட்சுமி ராமசாமி, வனிதா பதிப்பகம், பக். 168, விலை 120ரூ. நம் முன்னோர் தம் பட்டறிவால் கண்டுணர்ந்த பழமொழிகள் எனலாம். சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் திறன் கொண்ட பழமொழிகள் ஆழ்ந்த பொருள் கொண்டவை. ஒரு சமூகத்தின் நாகரிகம், பண்பாடு, பட்டறிவு ஆகியன மிகச் சுருக்கமாகப் பேச்சு நடையில் வெளிப்பட்ட ஒரு சொற்றொடரே பழமொழி. இவ்வாறு விளங்கும் பல்லாயிரக்கணக்கான பழமொழிகளும், 75 பழமொழிகளை மட்டும் தேர்ந்தெடுத்து, அவற்றிற்கு மக்கள் இதுவரை அறிந்து கொள்ளாத நிலையிலான விளக்கங்களை நுணுகி […]

Read more

திருக்குறள் தெளிவுரை மற்றும் கருத்துரையுடன்

திருக்குறள் தெளிவுரை மற்றும் கருத்துரையுடன், மெய்ஞானி பிரபாகர் பாபு, தமிழ்க்கவி பதிப்பகம், விலை 295ரூ. முற்றிலும் தனது நடையில் வார்ப்புரை என்ற வகையில், ஆசிரியர் குறளுக்கு உரை எழுதியிருக்கிறார். எளிய முறையில் மக்களுக்கு குறள் சென்றடைய விரும்பிய வேள்வி தன் மனதில் உதித்ததாக ஆசிரியர் குறிப்பிட்டிருக்கிறார். அதைவிட இந்த எளிய உரை உருவாக தன் மனைவி செல்வி ஒத்துழைத்ததை குறிப்பிட்டிருப்பது சிறப்பு. பாவேந்தர் பாரதிதாசன் நடந்த பாதையில், எளிய முறையில் உரை அமைத்திருப்பதால், தமிழ் அறிந்த அனைவரும் இதைப் படிப்பது எளிது. ‘ஆற்றுவார் ஆற்றல் […]

Read more

திருக்குறள் சிந்தனைகள்

திருக்குறள் சிந்தனைகள், க.ப.அறவாணன், தமிழ்க் கோட்டம் வெளியீடு, பக். 72, விலை 50ரூ. ‘உலக நீதி இலக்கியங்களும் தமிழ் நீதி இலக்கியங்களும், திருக்குறள் ஒரு சமூக இயல் பார்வை, திருவள்ளுவர் செய்த புதுமைகள், கன்பூசியசும் திருவள்ளுவரும், திருக்குறள் ஏன் கல்வெட்டுகள் ஆக்கப்பட வேண்டும். திருவள்ளுவர் தெய்வக் கோட்பாடு, தமிழகத்தில் திருவள்ளுவம் தோற்றதேன்?’ ஆகிய ஒரு கட்டுரைகளின் தொகுப்பு. ‘கடவுள், வழிபாடு, மதம் ஆகியவற்றை முன்னிறுத்தாத சீனம், கிரேக்கம், ரோம் ஆகியன மேம்பாடு அடைந்ததும், மாறாக அவற்றைப் போற்றிய தமிழகம், இஸ்ரேல் ஆகியன துன்புற்றதும் சுட்டிக்காட்டத்தக்கன […]

Read more
1 17 18 19 20 21 56