இலக்கிய மலர்கள்

இலக்கிய மலர்கள், ஓ.பாலகிருஷ்ணன், சீதை பதிப்பகம், பக். 136, விலை 70ரூ. சங்க காலம் தொட்டு, இன்றைய வரையிலான இலக்கியத் திறனாய்வியல், நாட்டுப்புறவியல், மானிடவியல், அறிவியல் தமிழ், விடுகதைக் கொள்கைகள், வருணனைகள், குறியீட்டியல் போன்றவற்றில் ஆழ்ந்து ஈடுபட்ட பின்னணியில் செறிவான, 11 கட்டுரைகளின் தொகுப்பாக இந்த நுால் உள்ளது. நம்பிக்கையின் அடிப்படையில், கற்பனையில் உருவாகி, அதீத கற்பனையாக முடிவுறுகிற பழமரபுக்கதை எனப்படும் தொன்மத்தின் சொல் விளக்கம், தோற்றம், அமைப்புகள், பொருள் விளக்கங்கள், படிப்போர் மனதில் புதிய பார்வைகளை விளைவிக்கும். சைகையால் வளரத் துவங்கிய மொழி, […]

Read more

பத்துப் பாட்டினில் ஆளுமை வளர்ச்சி

பத்துப் பாட்டினில் ஆளுமை வளர்ச்சி, கெ.இரவி, நிலாசூரியன் பதிப்பகம், பக்.280, விலை ரூ.200. ஏதேனும் ஓர் இலக்கை எடுத்துரைப்பது இலக்கியம் எனப்படும். மனித உள்ளத்தின் தன்மைகளை எடுத்துரைப்பது உளவியல் எனப்படும். ஆளுமை என்பதை, ஆங்கிலத்தில் பர்சனாலிட்டி என்று கூறுவர். இது, தனி மனிதனது உடல் தோற்றம், பேசுவது, உடுப்பது, பழகுவது, அறிவாற்றல், குணங்கள், பண்புகள் முதலியவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. இம்மூன்றையும் விரிவாக விளக்குகிறது இந்நூல். சங்க இலக்கியங்களை உளவியல் இலக்கியம் என்கிறார் தமிழண்ணல். அந்த வகையில் இலக்கியமும் உளவியலும் நெருங்கிய தொடர்புடையவை. இலக்கியத்தில் உள்ள ஆளுமை […]

Read more

ஈழ இலக்கியம் – ஒரு விமர்சனப் பார்வை

ஈழ இலக்கியம் – ஒரு விமர்சனப் பார்வை, ஜெயமோகன், கிழக்கு பதிப்பகம், பக்.176, விலைரூ.155. நாப அய்யர். அதன் பின்னர் ஈழ இலக்கியத்தை ஈழப்போர் வழியாகவே அறிய நேர்ந்தது. ஈழப்போர் வழியாகவே ஈழ இலக்கியம் சார்ந்த இதழ்கள் உருவாகின. அவையே ஈழ இலக்கியம் பரவலாக அறிமுகமாக வழி வகுத்தது. ஈழத்தின் இலக்கியச் சிந்தனைகளை மு.தளையசிங்கம், கா.சிவத்தம்பி படைப்புகளின் வழியாகவும், சிறுகதையை அ.முத்துலிங்கம் படைப்புகளின் வழியாகவும், கவிதைகளை வில்வரத்தினம், சேரன் படைப்புகளின் வழியாகவும் நூலாசிரியர் ஆய்வு செய்துள்ளார். தத்துவத்தின் விளிம்பில் மெய்யியலில் சஞ்சரிப்பவர் தளையசிங்கம். ஒரு முற்போக்காளராக […]

Read more

குறுந்தொகை

குறுந்தொகை, இரா.பிரபாகரன், காவ்யா, பக். 667, விலை 700ரூ. தமிழ் இலக்கியங்களை வாஷிங்டன் வட்டார மக்கள் படிக்கும் வகையில் தமிழ் இலக்கிய ஆய்வுக்கூடம் என்ற அமைப்பை, 2003ல் உருவாக்கி அவர்களுக்கு புறநானுாறு மற்றும் சங்க இலக்கியங்களை போதித்துத் தமிழ்ப் பணியாற்றி வரும் முனைவர் இர.பிரபாகரன் நம் இலக்கியப் பரப்புரை முயற்சியில் மகுடமாகப் படைக்கப்பட்டது தான் இந்நுால். மேலும், 402 பாடல்களைக் கொண்ட குறுந்தொகைக்கு உரை எழுதிய சவுரிப்பெருமாள் அரங்கனார், உ.வே.சாமிநாதய்யர் வரிசையில் இவரது உரை, 10வது இடம் பெறுகிறது. இறையனார் பாடிய, ‘கொங்கு தேர் […]

Read more

பன்முக நோக்கில் புறநானூறு

பன்முக நோக்கில் புறநானூறு, பேராசிரியர் இரா.மோகன், வானதி பதிப்பகம், விலை 160ரூ. செந்தமிழ் நூல்களுள் பழமையும் இனிமையும் வாய்ந்தது புறநானூறு. எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான புறநானூற்றின் எளிமையும், அதில் மணக்கும் தமிழின் சீர்மையும் காலவளர்ச்சியில் படிப்பார் இன்றி மங்கிவிடாமல் தடுப்பதற்கான அரிய முயற்சியாக எழுதப்பட்டுள்ள நூல். புறநானூற்று நூல்களைப்பற்றி அறிந்தவர் அறியாதவர் என எல்லோரையும் கவர்ந்திழுக்கும் எளிய நடை. நன்றி: குமுதம், 6/12/2017.

Read more

கூவாய் குறளே

கூவாய் குறளே, உரை தமிழறிஞர் க.ப.அறவாணன், தமிழ்க்கோட்டம், விலை 120ரூ. திருக்குறள் அதிகார எண் 71 முதல் 80 வரை வானொலியில் தமிழறிஞர் க.ப.அறவாணன் உரை நிகழ்த்தினார். அந்த உரையே “கூவாய் குறளே” என்ற தலைப்பில் நூல் வடிவம் பெற்றுள்ளது. திருக்குறளின் சிறப்பையும், திருக்குறள் காட்டும் பாதையை விட்டு விலகிச் சென்ற மக்களின் போக்கையும் அறவாணன் சுட்டிக்காட்டுகிறார். திருக்குறளை நுட்பமாக ஆராய்ந்து, அவர் எபதியுள்ள உரையைப் படிக்கும்போது, திருவள்ளுவரே நேரில் நின்று பேசுவது போன்ற உணர்வு ஏற்படுகிறது. நன்றி: தினத்தந்தி, 6/12/2017.

Read more

தலித் இலக்கியம் ஒரு பார்வை

தலித் இலக்கியம் ஒரு பார்வை, முனைவர் பத்மாவதி விவேகானந்தன், ராஜன் வெளியீடு, பக்.224, விலை 140ரூ. தலித்தியமும், பெண்ணியமும் சமத்துவத்திற்கான தத்துவங்களாகும். காலம் காலமாக அடங்கிக் கிடந்தவர்கள் இன்று வெடித்துப் போராட்ட களத்தையும், எழுத்து ஆயுதத்தையும் பயன்படுத்தி அடிமைச் சிறையில் இருந்து வெளிவரத் துடிக்கின்றனர். கடந்த, 20 ஆண்டுகளாக, முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தலித் படைப்பாளிகள், கவிதை, சிறுகதை, நாவல், தன் வரலாறு, திறனாய்வு, தத்துவம் என, அனைத்துத் துறைகளிலும் அறிவாற்றல் மிக்கப் படைப்புகளைத் தந்து சாதனை புரிந்து வருகின்றனர். உறங்கிக் கிடக்கும் […]

Read more

திருக்குறள் விளக்கம் (திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும்)

திருக்குறள் விளக்கம் (திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும்), விளக்கவுரை: கிருஷ்ணாம்பேட்டை கி.குப்புசாமி முதலியார்; பதிப்பாசிரியர்: ஜெ.மோகன், இரண்டு பாகங்கள்,வெளியீடு: சிவாலயம்,பக்.1735, விலை ரூ.1800 (இரண்டு பாகங்களும்). திருக்குறளின் அறத்துப்பால் பொருட்பால், காமத்துப்பால் மற்றும் அறத்துப்பால் தொகுப்புரை ஆகிய நான்கு பகுதிகள் – இரண்டு பாகமாகப் பதிப்பிக்கப்பட்டிருக்கின்றன. பரிமேலழகர் உரைக்கு விரிவான விளக்கவுரை தந்தவர்களுள் வேதாந்த நோக்கில் உரை வகுத்தவர் கோ.வடிவேலு செட்டியார். சித்தாந்தம் திங்களிதழின் ஆசிரியரான, கி.குப்புசாமி முதலியாரோ சித்தாந்த நோக்கில் திருக்குறளை அணுகியிருக்கிறார். மிகச்சிறந்த உரை விளக்கம் மட்டுமல்ல, மிக எளிமையான உரையும்கூட […]

Read more

வைணவக் கலைச்சொல் அகராதி

வைணவக் கலைச்சொல் அகராதி, தெ.ஞான சுந்தரம்,சந்தியா பதிப்பகம், பக்.228, விலை ரூ.220. தமிழ் வைணவ நூல்களுக்குத் தனித்துவமான மொழி உண்டு. வைணவ சமய சிந்தனைகளை தமிழில் அளிப்பதில் புதிய நயங்கள், சொல்லாடல்கள் ஆகியவற்றுக்குத் தனி வரலாறு உண்டு. இந்நூலாசிரியர் வடித்த ஓர் வைணவ ஆய்வு நூலின் பகுதியாக வைணவ அருந்தமிழ்ச் சொற்களுக்குப் பொருள் தொகுத்தார். அப்பகுதியின் மறுபதிப்பு இந்த நூல். பின்னிணைப்பாகப் பாராட்டைப் பெற்ற பகுதி தனி நூலானதும் வலுவிழந்ததாகவே உள்ளது. அருந்தமிழ்ச் சொல் அகர வரிசையில் உரப்பு என்கிற சொல்லுக்கு ‘உறுதி’ என […]

Read more

மகாபாரதம் மாறுபட்ட கோணத்தில்

மகாபாரதம் மாறுபட்ட கோணத்தில், சுரானந்தா, சுரா பதிப்பகம், விலை 200ரூ. இந்தப் புத்தகத்தை எழுதிய சுரானந்தா, உண்மையில் மகாபாரதத்தை நன்கு ஆராய்ந்து, புதிய கோணத்தில் எழுதியுள்ளார். இடையிடையே தன் கருத்துக்களையும் சொல்கிறார். இதில் பல புதிய தகவல்கள் அடங்கியுள்ளன. சகுனி, பகடை உருட்டுவதில் வல்லவன். அதற்குக் காரணம் அவனுடைய அண்ணன், தான் இறப்பதற்கு முன்னதாக இரண்டு பெருவிரல்களையும் வெட்டித் தருகிறான். அவைதான் பகடைக்காய்களாக மாறி, வெற்றி தேடித்தருகின்றன. இப்படி சுவையான தகவல்கள் நிறைய உள்ளன. நன்றி: தினத்தந்தி, 08/11/2017

Read more
1 16 17 18 19 20 56