அருள்வளர் மதுரை மீனாட்சி அம்மை கலிவெண்பா

அருள்வளர் மதுரை மீனாட்சி அம்மை கலிவெண்பா, மு. இராமலிங்கம், எல்கேஎம் பப்ளிகேஷன், பக். 32, விலை 22ரூ. மீனாட்சி அம்மையின் சிறப்புகளை பாடுவதாக அமைந்துள்ளது இந்நூல். நன்றி: தினமலர், 29/1/2017. —- ஐம்பெரும் காப்பியக்கதைகள், ஆர்.சி.சம்பத், அருணா பப்ளிகேஷன்ஸ், விலை 45ரூ. எளிய கதை வடிவில், மாணவர்கள் படித்து பயன் அடையும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது இந்நூல். நன்றி: தினமலர், 29/1/2017.  

Read more

தமிழ் வளர்த்த வழக்கறிஞர்கள்

தமிழ் வளர்த்த வழக்கறிஞர்கள், பின்னலூர் மு.விவேகானந்தன், நர்மதா பதிப்பகம், பக். 304, விலை 150ரூ. வழக்குரைஞர்களாகவும், நீதிபதிகளாகவும் பணியாற்றிய சிலர், இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழுக்கும் ஏற்றம் தந்திருக்கிறார்கள். அந்த வகையில், இலக்கிய தமிழ், இலக்கணத்தமிழ், சங்கத்தமிழ், சமயத்தமிழ், அறிவியல் தமிழ், சட்டத்தமிழ், வரலாற்றுத் தமிழ், மொழிபெயர்ப்புத் தமிழ், பதிப்புத் தமிழ், ஆய்வுத் தமிழ் மொழியியல் ஆட்சித் தமிழ் முதலிய பல்வேறு தளங்களில் தமிழ் வளர அரும்பாடுபட்டவர்கள். அவர்களுள் 34 பேரைப் பற்றியும், அவர்கள் செய்த தமிழ்த்தொண்டுகளைப் பற்றியும் இந்நூல் விளக்குகிறது. சிறுகதையின் […]

Read more

ஸ்ரீமத் இராமாயணத்தில் நங்கையர்

ஸ்ரீமத் இராமாயணத்தில் நங்கையர், தொகுப்பாசிரியர் ஜெ. சுவாமிநாதன், பக். 221, விலை 70ரூ. பெண்களுக்கு காலங்காலமாக அளிக்கப்படும் முக்கியத்துவத்தை, ஆசிரியர் இந்த நூலில் விளக்குகிறார்.‘தாய்மை’ என்பது பண்பையும், பாசத்தையும், ஒழுக்கத்தையும் தருவது என்ற விளக்கமும் உள்ளது. ராமபிரான் கானகம் சென்ற பின்னால், புயலுக்கு பின், அமைதியானவர் கைகேயி  என்றும், அவர் செய்த ஏற்க முடியாத செயலாக, மாங்கல்யத்தை கழற்றி எறிந்ததை புராணக் கருத்துக்களில் ஆசிரியர் விளக்குகிறார். அதே போல ராமாயணத்தில் திருப்புமுனைப் பாத்திரமாக, ‘கூனி’ வர்ணிக்கப்படுகிறார். இளமையிலே விதவையான சூர்ப்பனகை, ‘எதிர்நிலைப்பாத்திரம்’ என்று விளக்கி, […]

Read more

மகாபாரதத்தில் வரமும் சாபமும்

மகாபாரதத்தில் வரமும் சாபமும், இ.எஸ். லலிதாமதி, கலைஞன் பதிப்பகம், பக். 176, விலை 165ரூ. மகாபாரத பாத்திரங்களை நம் வாழ்வில் நடக்கும் நன்மை தீமை, நட்பு துரோகம் என அனைத்து செயல்களுக்கும் உதாரணம் காட்ட முடியும். அந்த வகையில் மகாபாரதத்தில் உள்ள சில பாத்திரங்கள் – யயாதி முதல் விஸ்வாமித்திரர் வரை – பெற்ற வரங்களையும் சாபங்களையும் எளிய நடையில் கதைபோல் சுவாரஸ்யப்படுத்தியிருக்கிறார் நூலாசிரியர். ஏன் சாபம்? எதற்காக சாபம்? என்பதன் விளக்கம் படிக்கும் மனிதர்களுக்கு ஒரு படிப்பினையைத் தந்து நீதியை போதிக்க் உதவும். […]

Read more

கம்ப நதிக்கரையினிலே

கம்ப நதிக்கரையினிலே, ஆர். குறிஞ்சி வேந்தன், வானதி பதிப்பகம், பக்.100, விலை 70ரூ. கம்பர் காவியத்தின் பல அழகுகளைக் கூறும் நூலாக அமைந்துள்ளது. கம்பனைச் சுவைக்கும் அன்பர்களுக்கு நல்லதொரு விருந்தாக இந்நூல் திகழ்கிறது எனலாம். ‘கம்ப ராமாயணத்தை விதை நெல்லைப் போல பாதுகாத்து எதிர்காலச் சமூகத்திடம் தந்து விட வேண்டும்’ என்ற நூலாசிரியரின் கனவுக்கு இந்நூல் ஓர் எடுத்துக்காட்டு எனலாம். இந்நூலில் 12 கட்டுரைகள் உள்ளன. ஒவ்வொரு கட்டுரையும் பட்டை தீட்டப்பட்ட வைரமாக விளங்குகின்றன. ‘நதியின் பிழையன்று நறும்புனலின்மை’ என்றும், ‘நின் பிரிவினும் சுடுமோ […]

Read more

மறைமலையம்

மறைமலையம், மறைமலையடிகள், தமிழ்மண் பதிப்பகம், விலை 14,260ரூ. தனித்தமிழ் இயக்கத்தின் நூற்றாண்டில், மறைமலை அடிகளாரின் எழுத்து, சொற்பொழிவு, நாட்குறிப்பு, கடிதங்கள் அனைத்தையும் ‘மறைமலையம்’ என்னும் பெயரில் 34 தொகுதிகளை கொண்ட புத்தகத்தை தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. திருக்குறள் ஆராய்ச்சி, மாணிக்கவாசகரின் வரலாறும் காலமும், திருவாசக விரிவுரை, முல்லைப்பாட்டு ஆராய்ச்சி உரை போன்ற பல்வேறு தலைப்புகளை உள்ளடக்கி இந்நூல் வந்துள்ளது. தமிழ் ஆய்வாளர்கள், பேராசிரியர்கள், ஆய்வு நெறியாளர்களுக்கும், மறைமலை அடிகளாரின் ஆய்வு நெறி பண்பாட்டை அறிவதற்கும் இந்நூல் உதவும். நன்றி: தினமலர், 19/1/2017.

Read more

திருக்குறளில் உயிர்ச்சூழல்

திருக்குறளில் உயிர்ச்சூழல், க.சி. அகமுடைநம்பி, மீனாட்சி புத்தக நிலையம், பக். 217, விலை 160ரூ. அற நூலாகிய திருக்குறளில் ‘உயிர்ச்சூழல்’ பற்றிய சிந்தனைகள் நிறைந்திருப்பதை வெளியில் கொண்டு வந்திருக்கும் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். திருக்குறள் ஆய்வுலகில் இது புதிய முயற்சியும்கூட. அனைத்து உயிர்களும் தத்தம் சூழல்கள் கெடாமல் அல்லது கெடுக்கப்படாமல், இயல்பான முறையில் ஒன்றையொன்று சார்ந்து வாழ்கின்ற சூழலையே ‘உயிர்ச்சூழல்’ என்று வரையறுக்கிறார் பதிப்பாசிரியர். புதிய ஆய்வுக் களத்தை திறந்து வைத்திருக்கும் நூல். நன்றி: குமுதம், 28/12/2016.

Read more

இலக்கியத்தில் இன்பரசம்

இலக்கியத்தில் இன்பரசம், க. முத்துநாயகம், தினத்தந்தி பதிப்பகம், விலை 120ரூ. இலக்கியம் என்றவுடன் பயந்துவிட வேண்டாம். எல்லோரும் படிக்கலாம் என்ற உணர்வை ஏற்படுத்துகிறது இந்த புத்தகம்.அதில் இருந்து சில இனிய காட்சிகள். காதல் வயப்படுகிறவர்களுக்கு முதலில் தொலைந்து போவது, தூக்கம்தான்.காதலியை நினைத்து ஒரு இளைஞன் இரவெல்லாம் தவிக்கிறான். அவளை தேடிச்சென்று கட்டித் தழுவ நினைக்கிறான்.இயலவில்லை. அவன், “மீன் உறங்கும் நேரம்கூட கண் உறங்கவில்லை”யாம்! ஒரு காதலன் தவிப்புக்கு எவ்வளவுஅற்புதமான உவமை! ஒரு புதுப்பெண், கட்டித் தயிரை கையால் பிசைகிறாள். பின் புடவையில் துடைத்துக் கொள்கிறாள்.அந்த […]

Read more

பாவலரேறு பெருஞ்சித்தனார் பாடல்களின் யாப்பமைதி

பாவலரேறு பெருஞ்சித்தனார் பாடல்களின் யாப்பமைதி, ஜெ. மதிவேந்தன், நெய்தல் பதிப்பகம், பக். 208, விலை 130ரூ. தனித்தமிழ் இயக்கத்தின் அறிஞர் பெருமக்கள் பலருள் குறிப்பிடத்தக்கவர் பெருஞ்சித்திரனார். இதழாசிரியராகவும் நூலாசிரியராகவும் எழுத்துப்பணியில் அயராது ஈடுபட்டிருந்தவர். பெருஞ்சித்திரனாரின் இலக்கிய-இலக்கணக் கூறுகளையும் பாவினங்களையும் இந்நூல் ஆராய்கிறது. மக்களில் உயர்வு-தாழ்வைப் படைத்தவர்கள் பாவினங்களிலும் யார் எந்தப் பாவினத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று வகைப்படுத்தியிருந்தனர். ஆனால், பெருஞ்சித்திரனார் இதைத் தகர்த்தெறியும்படியாக, தமிழிலுள்ள அனைத்துப் பாவினங்களையும் பயன்படுத்திப் பாடினார். மேலும், அவர் பயன்படுத்திய யாப்பு வடிவங்களையே முதன்மைப் பொருளாகக் கொண்டு இந்நூல் அமைந்திருக்கிறது. […]

Read more

திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும் தெளிபொருள் விளக்கம்

திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும் தெளிபொருள் விளக்கம், கருத்துரை குறிப்புரை கோ. வடிவேலு செட்டியார், தொகுதி 1, பக். 872, தொகுதி 2, பக். 888, இரண்டு தொகுதிகளும் விலை ரூ 1400. பல்கலை வித்தகரான கோ.வடிவேலு செட்டியார் ஒரு நடமாடும் பல்கலைக்கழகமாக வாழ்ந்தவர். இலக்கியம், இலக்கணம், சித்தாந்தம், வேதாந்தம் முதலியவற்றில் கரைகண்ட வித்தகர். இவர், திருக்குறள் பரிமேலழகர் உரைக்குச் செய்துள்ள தெளிபொருள் விளக்கமும், கருத்துரையும், குறிப்புரையும் அடங்கிய நூல், பல்லாண்டுகளாகத் தமிழறிஞர்கள் பலராலும் போற்றப்பட்டும், பின்பற்றப்பட்டும், பாராட்டப்பட்டும் வந்த பெருமைக்குரியது. இந்நூலில் திருக்குறளின் […]

Read more
1 21 22 23 24 25 56