தமிழ் இலக்கியத்தில் மேற்கத்தியக் கொள்கைகளின் தாக்கம்

தமிழ் இலக்கியத்தில் மேற்கத்தியக் கொள்கைகளின் தாக்கம், க. பூரணச்சந்திரன், காவ்யா,பக்.214,விலை ரூ.210 தமிழ் இலக்கியத்தின் மறுமலர்ச்சியில் தொடங்கி, தமிழ் இலக்கியத்தில் மார்க்சியம், ஃபிராய்டியம், இருத்தலியம், நவீனத்துவம், பின் நவீனத்துவம், பெண்ணியம், தலித் இலக்கியம் போன்ற பதின்மூன்று தலைப்புகளில் ஆழமான கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இது. இலக்கியம் சமகாலச் சமூகத்தைப் பற்றி, மக்களைப் பற்றி வருணிப்பதாகவும், கவலை கொள்வதாகவும், மாறியது இருபதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட ஓர் அடிப்படை மாற்றம் என்கிற கட்டுரையாளரின் கருத்து முக்கியமானது. மேலும், புத்திலக்கியங்கள் தமிழில் தோன்றுவதற்கான சூழல் 19-ஆம் நூற்றாண்டில் உருவாயிற்று […]

Read more

திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும்

திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும், கோ. வடிவேலு செட்டியார் இயற்றிய தெளிபொருள் விளக்கமும், கருத்துரையும், குறிப்புரையும் (இரண்டு பாகங்கள்), பதிப்பாசிரியர் சிவாலயம் ஜெ. மோகன், வெளியீடு சிவாலயம், பக். 872+888 (இரு பாகங்கள்) விலை 1400ரூ. பரிமேலழகரை விளக்கிய வடிவேலு செட்டியார்! திருக்குறளுக்கு உரைகண்ட பழைய உரையாசிரியர்களில், பரிமேலழகரே மிகுந்த சிறப்புடையவர் என்பது, அவரைத் திட்டுகின்றவர்களும் சேர்ந்து சொல்லுகின்ற முடிபாகும். ‘வடநூல் துறையும் தென்திசைத் தமிழும் விதிமுறை பயின்ற நெறியறி புலவன்’ எனப் பாராட்டப் பெறுபவர் அவர். மூலநூலாசிரியராகிய திருவள்ளுவரோடு சேர்த்து வைத்துக் கொண்டாடும் […]

Read more

தொல்காப்பியக் கலைச்சொல் விளக்கம்

தொல்காப்பியக் கலைச்சொல் விளக்கம், இரா. இளங்குமரனார், தமிப்பேராயம், பக். 384, விலை 200ரூ. தொல்காப்பியத்தில் இடம்பெறும் கலைச்சொற்களுக்கு விரிவான வகையில் விளக்கமளிக்கிறது. தொல்காப்பியர் தமிழர்தம் வாழ்க்கையை அகம், புறம் என இரண்டாகப் பிரித்துக் கூறினார். வேறு எந்த மொழியிலும் இல்லாத பொருளிலக்கணத்தைத் தொல்காப்பியர் கூறினார். பண்டைத் தமிழ் மக்களின் காதல், கற்பு நிலைகள், நாகரிகம், நகர் அமைப்பு, பண்பாடு, ஆட்சி முறை, போர்முறை, கலை நுணுக்கங்கள், ஆன்றோர் பண்பு, கவின் கலைகள், தொழில்கள், வாணிகம் முதலிய பலவற்றை கூறியுள்ளார். அத்தகைய தொல்காப்பியத்துள் இடம் பெற்றுள்ள […]

Read more

தமிழில் விமர்சனக் கலை – விமர்சனத்தின் எல்லைகள்

தமிழில் விமர்சனக் கலை – விமர்சனத்தின் எல்லைகள், எம்.ஆர். ரகுநாதன், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக். 104, விலை 65ரூ. இலக்கிய விமர்சனம் குறித்த ஆழமான கருத்துகள் அடங்கிய நூல். எவ்வாறு விமர்சனம் அமைய வேண்டும்? என்பதை விளக்கும் நூலாசிரியர், கலை, இலக்கியங்களின் தோற்றம், இலக்கியம் படைப்பவரின் அனுபவம், அறிவு, அவருடைய வாழ்க்கைப் பார்வைக்கும், இலக்கியத்துக்கும் இடையிலான உறவு, இலக்கியத்தின் உள்ளடக்கத்துக்கும் அதன் வடிவத்துக்குமான தொடர்பு, ஓர் இலக்கியம் உருவான காலம், சமூகப் பின்னணி, வாசகர்களிடம் அது ஏற்படுத்தும் தாக்கம் என எல்லாவற்றையும் உள்ளடக்கியதாக […]

Read more

ஜுலயஸ் சீசர்

ஜுலயஸ் சீசர், ஜனனி ரமேஷ், கிழக்கு பதிப்பகம், பக். 136, விலை 110ரூ. உலகை வசப்படுத்திய ஒரு மாவீரனின் கதை இது. சீசரின் காதல், வீரம், தலைமைப்பண்பு, போர்த்திறன், அரசியல், உத்திகள், மனிதநேயம் உள்ளிட்ட அனைத்தையும் ஒரே நூலில் சொல்லிச் செல்கிறார் ஆசிரியர். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 8/6/2016.   —– திருக்குறள் அகர வரிசையில் தெளிவுரை, வெளியீடு பொ.கிருஷ்ணன், விலை 100ரூ. அகர வரிசையை முதன்மைப்படுத்தி திருக்குறளை மனப்பாடம் செய்ய ஏற்ற நூலாக உருவாக்கியுள்ளார் நூலாசிரியர் பானுமதி கிருஷ்ணன். அகரத்தில் தொடங்கும் […]

Read more

கம்பனின் ஆற்றலும் இராமாயணத்தின் சிறப்பும்

கம்பனின் ஆற்றலும் இராமாயணத்தின் சிறப்பும், அருட்கவிஞர் அ. காசி, மணிமேகலை பிரசுரம், பக். 88, விலை 60ரூ. சீதாபிராட்டியாரின் ஜானகி, மைதிலி, வைதேகி என்ற பெயர் விளக்கம் ஒவ்வொன்றும் அறிந்தது என்றாலும் ‘சீ’, ‘தை’க்குக் கொடுத்த பொருள் போற்றச் செய்கிறது. ராமனின் கை நிக்கிரகம், சீதையின் கை அனுக்கிரகம். சீதையின் கரம் பற்றினால்தான் அனுக்கிரக சக்தி கிடைக்கும் என்ற ஆசிரியரின் கற்பனை, அவரின் பக்தி உணர்வைக் காட்டுகிறது. துந்துபி என்ற கதாபாத்திரத்தின் எலும்பை லட்சுமணன் தன் காலால் எட்டித் தள்ளும் காட்சி விளக்கத்தில் இதுவரை […]

Read more

ராமாயணம்

ராமாயணம், தேவி வனமாலி, தமிழில்: நாகலட்சுமி சண்முகம், மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ் , பக்.320, விலை ரூ.275. பெண் துறவியும், எழுத்தாளருமான தேவி வனமாலி, ஸ்ரீ ராம்லீலா என்ற தலைப்பில் எழுதிய ஆங்கில நூலின் தமிழாக்கம் இது. மொழிபெயர்ப்பு என்றாலும் மூலத்தைப் படிப்பதைப் போன்ற விறுவிறுப்புடன் தமிழாக்கம் செய்திருக்கிறார் நாகலட்சுமி சண்முகம். எல்லாருக்கும் தெரிந்த வால்மீகி ராமாயணத்தின் சுருக்கமான வடிவம்தான் இந்நூல். அதனை நூலாசிரியர் கொடுத்திருக்கும் விதம் சிறப்பு என்றால், அவர் எழுதியிருக்கும் முன்னுரை மிகச் சிறப்பு. ராமபிரானின் குணாதிசயங்கள் குறித்து எழுந்துள்ள சில சர்ச்சைகளுக்குத் தீர்வு காணும் […]

Read more

தொல்காப்பியக் கலைச்சொல் விளக்கம்

தொல்காப்பியக் கலைச்சொல் விளக்கம், முனைவர் இரா. இளங்குமரனார், தமிழ்ப் பேராயம், திருராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம், விலை 200ரூ. தொல்காப்பியம், தமிழில் கிடைத்துள்ள மிகவும் தொன்மையான இலக்கண நூலாகும். தமிழ் அமைப்பையும், பண்டைத் தமிழ் மக்களின் வாழ்வியல் சிறப்புகளையும் வெளிப்படுத்தும் பெருமையுடைய நூலாகும். இத்தகைய சிறப்பு பெற்ற தொல்காப்பியத்தைத் தமிழ் மக்கள் படித்து நன்கு புரிந்துகொள்ளும் வகையில் அதில் உள்ள கலைச்சொற்களுக்கு முனைவர் இரா.இளங்குமரனார் அழகிய முறையில் பொருள் விளக்கம் அளித்துள்ளார். உண்மை என்ற சொல்லை விளக்குகையில், உள்> உண்>உண்மை. இதற்கு “உள்ளத்தே உள்ளதாம் தன்மை […]

Read more

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம்

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம், இந்திரா சவுந்தர்ராஜன், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், பக். 272, விலை 150ரூ. அபிமன்யு பெயர்க்காரணம் தெரியுமா? மகாபாரதம் மாபெரும் கடல். வியாசர், விநாயகருக்கப் பிறகு அதில் மூழ்கி முத்தெடுத்து மாலையாகக் கோர்த்தவர்கள் அநேகம் பேர். அதில் இந்திரா சவுந்தர்ராஜனும் ஒருவர். தான் கண்டெடுத்த முத்துக்களை அழகான மாலையாக கோர்த்திருக்கிறார், இந்த நூல் வழியாக. மலர்கள் தனித்தனியாக இருப்பது அழகுதான். அதே மலர்களை மாலையாக தொடுத்தால் இன்னும் கூடுதல் அழகு பெறுகிறது அல்லவா! அப்படி ‘தினமலர்’ ஆன்மிக […]

Read more

இதயமே இதயமே

இதயமே இதயமே, டாக்டர் எஸ். தணிகாசலம், தொகுப்பு: அகில் அரவிந்தன், குமுதம் பு(து)த்தகம், பக். 64, விலை 70ரூ. பிரபல இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் தணிகாசலம் இதயத்திற்கு நேர்கின்ற சிக்கலைப்பற்றியும் அதிலிருந்து விடுபடுவதற்கான வழிகளையும் எளிய முறையில் விளக்கும் நூல். நன்றி: குமுதம், 27/4/16.   —- திருக்குறள்: தமிழர்களின் அறிவுக் களஞ்சியம், நர்மதா பதிப்பகம், பக். 280, விலை 175ரூ. திருக்குறளின் தமிழ் மூலப்பாடலுடன் ஆங்கில உரையாக்கம், தமிழ் தெரிந்த பிறமொழியினரும் திருக்குறளை எளிதில் அறிந்துகொள்ள இந்த உரை உதவும். நன்றி: […]

Read more
1 23 24 25 26 27 56