சொல்வேட்டை

சொல்வேட்டை, நீதிபதி வெ.இராமசுப்பிரமணியன், நர்மதா பதிப்பகம், விலை 125ரூ. தமிழுக்குப் புதுசொற் செல்வம் தேடிய ஓர் இலக்கியப் பயணம்! தமிழ்மொழியில் புதிய சொற்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் தனியாக ஒரு முத்திரை பதித்து உள்ளார் நூசிரியர் நீதிபதி வெ. இராமசுப்பிரமணியன். புதிய விஞ்ஞான படைப்புகள் எடுத்துக்காட்டாக டிஜிடல், பென் ட்ரைவ், ஆன்டெனா போன்ற இவற்றக்கெல்லாம் என்ன தமிழ் பெயர் பயன்படுத்துவது? என்று தெரியாமல், ஆங்கில பெயரையே எல்லோரும் பயன்படுத்தி வந்தனர். அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே உள்ள பல ஆங்கில சொற்களுக்கும் தமிழ் வார்த்தை இல்லாமல் ஆங்கில சொற்களையே […]

Read more

இலக்கிய அமுதம்

இலக்கிய அமுதம், தொகுப்பு முனைவர் இரா. மோகன், திருவரசு புத்தக நிலையம், விலை 180ரூ. வெறும் உணர்வுகள் – வெறும் வார்த்தைகள் என்ற நிலைகளைக் கடந்து தமிழுக்கும், வாழ்வியலுக்கும் புதிய பரிமாணங்கள் கொடுக்கும் படைப்புகளாக இந்த ‘இலக்கிய அமுதம்’ தொகுக்கப்பட்டிருக்கின்றன. மனித குலத்திற்கு இலக்கினை இயம்பி, அவன் மண்ணில் நல்ல வண்ணம் வாழ்வதற்கான வழிமுறையினை – வையத்துள் வாழ்வாங்கு வாழ்வதற்கான வாழும் நெறியினை எடுத்துரைப்பதால் இலக்கியத்தையும் இவ்வரிசையில் ‘அமுதம்’ எனச் சுட்டுவது சாலப் பொருந்தும் வகையில் 30 கட்டுரைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. மனித […]

Read more

ஏன்? எதற்கு? ஆன்மிக சந்தேகங்களுக்கு விடையும் விளக்கமும்

ஏன்? எதற்கு? ஆன்மிக சந்தேகங்களுக்கு விடையும் விளக்கமும், நர்மதா பதிப்பகம், விலை 100ரூ. இந்து சமயத்தில் நிறைய சம்பிரதாயங்கள், சடங்குகள். ஆனால் ஒவ்வொன்றும் பொருள் பொதிந்தவை. அர்த்தம் அறியாததால் அவை வீண் என்று கருதுகிறோம். அவற்றின் பயன் அறிந்து பலன் பெற இந்நூல் உதவும். கோவிலில் இறைவனை வழிபடுதல், பிரகாரத்தைச் சுற்றி வருதல், திருமுழுக்கு (அபிஷேகம்) செய்தல், தானம் செய்தல், பூஜையறையின் விதிமுறைகள் இவை போன்ற ஆன்மிகத்தில் ஏற்படும் சந்தேகங்களுக்கு விளக்கம் அறிய பல விஷயங்களை கேள்வி – பதில் வடிவில் தொகுத்து அளித்துள்ளார் […]

Read more

பழந்தமிழ் நூல்கள் தற்காலத்திற்கும் வழிகாட்டி நூல்கள்

பழந்தமிழ் நூல்கள் தற்காலத்திற்கும் வழிகாட்டி நூல்கள், ச.லோகம்பாள், சுந்தர்லோக் வெளியீடு, பக். 80, விலை 150ரூ. எந்த மொழியையும் சாராது தனித்தன்மையுடன் விளங்கும் தமிழ் மொழியின் சிறப்பை, இந்த நூல் விளக்குகிறது. தமிழ்மொழி, தமிழர் பண்பாடு, சமயம் ஆகியவற்றின் தனிப்பெரும் சிறப்புகள், மானுடத்தை நன்னெறிப்படுத்தும் ஒரே இலக்கில் நிற்கின்றன. ‘வால்மீகி ராமாயணமும், பாரதமும் வடநாட்டிலிருந்து தமிழர்கள் ஏற்றுக்கொண்டனர். ராமனும், கண்ணனும் தலைவர்களாகவே தமிழர்களால் சுட்டப்பட்டுள்ளனர். சைவம் ஒன்றே தென்னகத்திற்கு உரியது’(பக். 16), ‘மரபு சார்ந்த தமிழ் நூல்களே, தமிழர் நன்னெறி வாழ்வு என்னும் வாடாத […]

Read more

கம்பராமாயணம் அயோத்தியா காண்டம்

கம்பராமாயணம் அயோத்தியா காண்டம், கோ.வில்வபதி, பழனியப்பா பிரதர்ஸ், விலை 900ரூ. வடமொழியில் வால்மீகி முனிவர் இயற்றிய ராமாயணத்துக்கு கவிதை அழகு மிக்க வர்ணனைகளுடன் புதுவடிவம் கொடுத்த கம்பரின் அற்புதத் திறமையால், ராமாயணம் என்றாலே கம்பராமாயணம் என்று கூறும் அளவுக்கு பெருமை பெற்ற கம்பராமாயணத்தின் அயோத்தியா காண்டத்திற்கு, மிகச் சிறப்பான தெளிவுரையாக இந்த நூல் வெளியாகி இருக்கிறது. அயோத்தியா காண்டத்தில் இடம் பெற்ற அனைத்து கவிதைகளுக்கும் விரிவான தெளிவுரையும், விளக்கமும் கொடுத்து இருப்பதுடன், கடினமான சொற்களுக்கான அர்த்தத்தையும் தந்து இருப்பதால், கம்பரின் காவிய சுவையை முழுமையாக […]

Read more

புதுமையான அமைப்பில் திருக்குறள் நூல்

புதுமையான அமைப்பில் திருக்குறள் நூல், அருணா பப்ளிகேஷன்ஸ், விலை 300ரூ. உலகப் பொதுமறையாம் திருக்குறள் எண்ணற்ற மொழிகளிலே மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. திருக்குறளுக்கு பரிமேலழகர் முதல் மு. வரதராசனார் வரை ஏராளமானோர் உரை எழுதியுள்ளனர். இப்போது அருணா பதிப்பகம் 6 இன் 1 என்ற வகையில், திருக்குறள் மூலம், ஆங்கிலம் எழுத்துப் பெயர்ப்பு, ஜி.யு. போப் உரை, லாசரஸ் ஆங்கில விளக்கம், பரிமேலழகர் உரை, கீர்த்தியின் தமிழ் விளக்கம் என்று புதிய உரை நூலை வெளியிட்டுள்ளது. பின்னிணைப்பாக செய்யுள் முதற்குறிப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. இது போற்றத்தக்க, பாராட்டத்தக்க […]

Read more

மயில்

மயில், அனைத்திந்திய ஆராய்ச்சிக் கழகம், விலை 350ரூ. அனைத்திந்திய ஆராய்ச்சிக் கழகம் சார்பில் நடைபெற்ற பன்னாட்டுக் கருத்தரங்கில் அறிஞர் பெருமக்களால் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு நூல். இத்தொகுப்பில் இசை, இலக்கணம், இலக்கியம், சமயம், சமூகவியல், செவ்வியல், இலக்கியம், தகவலியல், நாட்டுப்புறவியல், புதினம், வரலாறு என பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. இக்கட்டுரைகள் சமுதாய மக்களுக்குப் பயன் தருவனவாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் பதிப்பித்து இருக்கிறார்கள் முனைவர் இராச. கலைவாணியும், முனைவர் வாணி அறிவாளனும். நன்றி: தினத்தந்தி, 20/1/2016.   —- மு.வ. […]

Read more

முல்லை மண் – மக்கள் – இலக்கியம்

முல்லை மண் – மக்கள் – இலக்கியம், வாணி அறிவாளன், அருண் அகில் பதிப்பகம், பக். 200, விலை 150ரூ. தமிழகத்தின் ஐவகை திணைகளில், முல்லைத் திணை பற்றிய ஆய்வாக, இந்த நூல் திகழ்கிறது. முல்லை பற்றிய 233 பாடல்கள் பாடிய, 82 புலவர்கள் பட்டியல் இடப்பட்டுள்ளனர். கிரேக்க, லத்தீன் உலக இலக்கியங்களுடன், முல்லைப் பாக்கள் ஒப்பிடப்பட்டுள்ளன. முல்லை மலர்களால் இத்திணைப் பெயர்கள் அமைந்ததும், முல்லைப்பண், முல்லை யாழ் பற்றிய விளக்கமும் தரப்பட்டுளள்ன. கற்பை முல்லையோடு மட்டும் சேர்த்து ‘முல்லை சான்ற கற்பு’ என்பதன் […]

Read more

ப்ளிங்க்

ப்ளிங்க், சித்தார்த்தன் சுந்தரம், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், விலை 350ரூ. நமக்குள் இருக்கக்கூடிய உலகத்தை நாம் புரிந்து கொள்ளும் உத்திகளையும், வேக உணர்திறன் சாமானிய மனிதருக்கும் சாத்தியமாகக்கூடியதுதான் என்பதையும் உளவியல் ரீதியாக கற்றத் தருகிறார் நூலாசிரியர் மால்கம் கிளாட்வெல். ஆங்கிலத்திலிருந்து எளிய தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் சித்தார்த்தன் சுந்தரம். நன்றி: தினத்தந்தி, 13/1/2016.   —- குறுந்தொகை மலர்கள், ரமணி பதிப்பகம், விலை 150ரூ. சங்க இலக்கியங்களில் தனிச்சிறப்பு பெற்ற குறுந்தொகையைப் பற்றிய சிறந்த ஆராய்ச்சி நூல். பச்சையப்பன் கல்லூரி தமிழ்த்துறை தலைவரான பேராசிரியை ப. அனுராதா, […]

Read more

அழகிய பாடல் வடிவில் சிலப்பதிகாரம்

அழகிய பாடல் வடிவில் சிலப்பதிகாரம், கிள்ளை வே. முனுசாமி, மணிமேகலைபிரசுரம், விலை 135ரூ. ஐம்பெரும் காப்பியங்களில் தலையாய காப்பியமாக சிலப்பதிகாரம் முழுவதையும் இனிய பாடல் வடிவில் வடிக்கப்பட்ட நூல். சிலப்பதிகாரம் பெரும்பான்மை தமிழ் மக்களிடையே இன்னும் சென்றடையவில்லை என்றே சொல்லலாம். பள்ளிப் பாடத்தில் ஒரு பாடலையே திரும்பத் திரும்ப சுட்டி, ‘சிலப்பதிகாரமே இவ்வளவுதானா’ என்று இளைய தலைமுறை என்னும் வண்ணம் நிலைமை இருந்து வருகிறது. இதற்கு காரணம் இளங்கோவின் செய்யுளாக்கம் கடினச் சொற்கள். பாரதியார், பாரதிதாசன் பாடலைப் புரிந்து கொள்ளும் அளவிற்கு, சங்க இலக்கியங்களைப் […]

Read more
1 25 26 27 28 29 56