பாப்லோ நெருதாவும் ஈரோடு தமிழன்பனும்

பாப்லோ நெருதாவும் ஈரோடு தமிழன்பனும், ப. குணசேகர், கவிதா பப்ளிகேஷன், பக். 184, விலை 120ரூ. தென் அமெரிக்காவின், சிலி நாட்டுக் கவிஞன் பாப்லோ நெருதாவையும், தமிழன்பனையும் கவிதைகளால் உரசிப் பார்த்திருககிறார் நூலாசிரியர். மக்கள் கவிஞராக இருவரையும் பார்த்ததோடு மட்டும் அல்லாமல், இரு கவிஞர்களின் மேடைப் பிரம்மாண்டங்களையும் விரித்துப் படைத்துள்ளார். எட்டு தலைப்புகளில் இரு மொழிக் விஞர்களின் கவிதைகளைச் சாளரத்தின் வாயிலாகக் காட்டுகிறார். சில இடங்களில் கதவைத் திறந்தும் வெளிப்படுத்துகிறார். திறனாய்வு, விமர்சனம் எனும் எல்லைகளைக் கடந்து, இரண்டு பேரின் படைப்புகளையும் எடுத்து வைத்து, […]

Read more

சித்தர் களஞ்சியம்

சித்தர் களஞ்சியம், நர்மதா பதிப்பகம், சென்னை, விலை 300ரூ. சித்தர்களின் கோட்பாடுகள் மக்களுக்குத் தரமான வாழ்க்கையையும், சமநிலையையும், சீரான வளர்ச்சியையும் தர வல்லன. அத்தகைய சித்தர்களின் குறிக்கோள்களையும், சிந்தனைகளையும், அற்புதங்களையும் இந்த நூலில் முத்துக் கொத்தள மாரியப்ப செல்வராஜ் விரிவாக எடுத்துரைக்கிறார். இந்த நூல் சித்தர்கள் குறித்த பிற நூல்களில் இருந்து பெரிதும் வேறுபட்டது. சித்தர்கள் பற்றிய ஆய்வு பூர்வமான, அறிவியல் பூர்வமான பல செய்திகள் மிக நுணுக்கமாக கூறி இருக்கிறார். சித்த ஆர்வலர்களுக்கும், நெறியாளர்களுக்கும் இந்த நூல் ஒரு பொக்கிஷம். நன்றி: தினத்தந்தி, […]

Read more

திருக்குறள் (தமிழ் ஆங்கில உரை)

திருக்குறள் (தமிழ் ஆங்கில உரை), நேஷனல் பப்ளிஷர்ஸ், சென்னை, விலை 200ரூ. வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ் நாடு என்பது பாரதியாரின் பாராட்டுரை. வள்ளுவர் தந்த பொதுமறையாம் திருக்குறள், தனி மனித ஒழுக்கம் உயர்வடைய வேண்டும் என்ற உன்னத நோக்கில் எழுதப்பட்டது. திருக்குறளுக்கு பலரும் உரை எழுதியுள்ளனர். இருந்தபோதிலும், ‘திருக்குறள் தூதர்’ மு.க. அன்வர் பாட்சா, எளிய உரையை எல்லோருக்கும் புரியும் வகையில் தந்திருக்கிறார். மேலும், ஆங்கிலம் அறிந்த மாணவர்கள் பயனடையும் வகையில் பாதிரியார்கள் டபிள்யூ.எந்.ட்ரூ, ஜான் லாசரஸ் […]

Read more

ஸ்ரீ வியாசரின் மஹாபாரதம் (3 பாகங்கள்)

ஸ்ரீ வியாசரின் மஹாபாரதம் (3 பாகங்கள்), ஸ்வாமி, கண்மணி கிரியேட்டிவ் வேவ்ஸ், சென்னை, பக். 1230, விலை 900ரூ. உலக இலக்கியங்களிலே ஒப்புயர்வற்றது வியாசர் அருளிய மஹாபாரதம். இதில் இல்லாதது வேறு எதிலும் இல்லை என்னும் அளவுக்கு ஆன்மிகம், வாழ்வியல், அரசியல், உளவியல், வரலாறு, புவியியல் என அனைத்துத் தகவல்களையும் தன்னகத்தே கொண்டது. இப்போது வெளிவந்துள்ள இந்நூல், காலவோட்டத்துக்குத் தகுந்தபடி, நவீன காலத்துக்கு ஏற்ப நன்கு தொகுக்கப்பட்டுள்ளது. நூலாசிரியரின் சில விளக்கங்கள் ரசனையை மெருகேற்றுகின்றன. ‘ஜய’ என்ற சொல் மஹாபாரதத்தைக் குறிக்கும் சங்கேதச் சொல் […]

Read more

உரையியல்

உரையியல், பெ. மாதையன், பாவை பப்ளிகேஷன்ஸ், பக். 254, விலை 160ரூ. பெண்களை ‘பா’ போட்டு அழைக்கலாமா? தமிழ் இலக்கண, இலக்கிய உலகில், உரையாசிரியர்களின் உன்னத இடத்தை, இந்த ஆய்வு நூல் விரிவாக உரைக்கிறது. அகராதியின் சொற்பொருள், உரையாசிரியர்களின் விளக்கங்கள், மூலநூலை எளிதாக்கிவிடுகின்றன. தொல்காப்பியத்திற்கு, சேனாவரையரின் உரை, மறுப்புத்திறன் மிக்க உரையும், தெய்வச் சிலையாரின் மிக எளிய உரையும், திருக்குறளுக்கு மணக்குடவர் விளக்க உரையும், நற்றிணைக்கு பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் பதிப்பும், உரைநெறிகளும், அவ்வை துரைசாமிப்பிள்ளை பதிப்பும், பாட பேதங்களும், நாவலர் ந.மு. […]

Read more

அர்த்த சாஸ்திர அறிவுரைகள்

அர்த்த சாஸ்திர அறிவுரைகள், நல்லி குப்புசாமி செட்டியார், பிரெய்ன் பேங்க், பக்.192, விலை 150ரூ. நீதி நூல்களில் இருந்து பெற வேண்டிய வாழ்வியல், நிர்வாகவியல் பாடங்களை தெளிவாக விளக்கியதோடு, தமது அனுபவத்தையும் கலந்து, அர்த்த சாஸ்திரம் நூல் குறித்து எளிமையான விளக்கத்தை, இந்த நூலில் தந்திருக்கிறார் நூலாசிரியர். கவுடில்யர் என்ற சாணக்கியரை அறிந்திராதவர் யாரும் இருக்க முடியாது. புத்திசாலித்தனத்திற்கும், ராஜ தந்திரத்திற்கும், சாணக்கியத்தனம் என்ற பெயர் இன்றளவும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் சாணக்கியரின் வரலாற்றைச் சுருக்கமாகச் சொல்லியதோடு, என்றைக்கும் பொருந்திப்போகும் அவரது […]

Read more

சில பாதைகள் சில பயணங்கள்

சில பாதைகள் சில பயணங்கள், பாரதி பாஸ்கர், கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 144, விலை 90ரூ. சமூகத்தாக்கத்தோடு, சமுதாய முன்னேற்றத்திற்காக தங்களின் வாழ்க்கையை அர்ப்பணித்து, அதில் வெற்றி பெற்று வரலாற்றில் இடம் பெற்றுள்ள, மதுவிலிருந்து மீள வழிகாட்டும் சாந்தி ரங்கநாதன், அமில வீச்சுக்கு ஆளான அர்ச்சனா குமாரி, பாலியல் தொழிலாளர் குழந்தைகளைப் படிக்க வைக்கும் சோம்லே மாம், தேவதாசி ஒழிப்பில் வெற்றிகண்ட டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, சமையல் புத்தகம் முதலில் எழுதிய மீனாட்சி அம்மாள், கர்நாடக சங்கீதக் கலைஞர் வீணை தனம்மாள், கம்யூனிஸ்ட் பார்வதி […]

Read more

இயக்குநர் சிகரம் கே.பி.

இயக்குநர் சிகரம் கே.பி., சூரியன் பதிப்பகம், சென்னை, விலை 100ரூ. திரை உலகில் வரலாறு படைத்த கே.பாலசந்தரின் வாழ்க்கை வரலாற்றை கூறும் புத்தகம். பாலசந்தர் வாழ்க்கையுடன், அவர் இயக்கிய படங்களின் கதையையும், சிறப்பையும் சுவைபட விவரிக்கிறார் எழுத்தாளர் டி.வி. ராதாகிருஷ்ணன். நிறைய படங்கள் இடம் பெற்றிருப்பது, புத்தகத்துக்கு எழிலூட்டுகிறது. பாலசந்தர் பற்றிஅறிய சிறந்த புத்தகம். நன்றி: தினத்தந்தி, 29/7/2015.   —- முல்லை மண் மக்கள் இலக்கியம், முனைவர் வாணி அறிவாளன், அருண் அகில் பதிப்பகம், சென்னை, விலை 150ரூ. சங்க இலக்கியங்களில் மக்கள் […]

Read more

புனிதராற்றுப்படை

புனிதராற்றுப்படை, எம். அல்போன்ஸ், பொதிகை பதிப்பகம், சென்னை, பக். 104, விலை 80ரூ. சங்ககால ஆற்றுப்படை இலக்கியங்கள் அனைத்தும் இலக்கியக் கருவூலங்களாகும். சங்ககத் தொகை நூல்களுள் ஒன்று பத்துப்பாட்டு. இப்பத்துப்பாட்டில்தான் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை முதலிய ஆற்றுப்படை நூல்கள் இடம்பெற்றுள்ளன. அந்த வரிசையில் தற்போது வெளிவந்திருக்கும் இந்தப் புனிதராற்றுப் படையையும் சேர்த்துக் கொள்ளலாம். ஆற்றுப்படுத்துதல் என்றால், வழிப்படுத்துதல் என்றும், ஆற்றுப்படை என்றால் வழிப்படுத்தி அனுப்புதல் என்றும் பொருள். விறலியர், பாணர், கூத்தர், பொருநர் போன்றோர் தம் வறுமையைப் போக்கிக் கொள்ள வள்ளல்களிடம் சென்று, பொன்னும் […]

Read more

அனுமன் கதைகள்

அனுமன் கதைகள், திருப்பூர் குமரன் பதிப்பகம், சென்னை, விலை 260ரூ. ராமாயணத்தில் முக்கிய கதாபாத்திரமாக வலம் வருபவர் ஆஞ்சிநேயர். அவருடைய சாகசங்களை அனைவரும் அறிவோம். ஆனால் அவர் பிறப்பைப் பற்றி அறிந்தவர்கள் ஒரு சிலரே இருப்பார்கள். வானுலகில் இருந்து பூமிக்கு வந்த புஞ்சிக்ஸ் தலை என்ற அப்சரஸ் குரங்கு முகம் கொண்ட ஒரு முனிவரை கேலி செய்ததால், குரங்காகி விடுகிறாள். பிறகு சிவனை நோக்கி தவம் செய்ததால், சிவன் அவர் முன் தோன்றுகிறார். “சிறிது காலம் குரங்காய் வாழ்ந்து, மிகுந்த பராக்கிரமம் உடைய ஒரு […]

Read more
1 27 28 29 30 31 56