மொழிகளின் தாய்

மொழிகளின் தாய், பெருங்சக்கவிளை தம்பி நாடார்(எ) அ.சோசிலி சாம்தச், பஃறுளி பதிப்பகம், விலை 100ரூ. மனிதனின் நாக்கு உச்சரிப்பதற்கு முன்னரே பறவைகளாலும், விலங்குகளாலும் உச்சரிக்கப்பட்ட இயற்கை ஒலிகள்தான் தமிழ்மொழியின் 12 உயிர் எழுத்தொலிகளும், 18 மெய் எழுத்தொலிகளும். ஃ என்ற ஆய்த எழுத்தொலியும், இந்த உண்மையை பல்வேறு எடுத்துக்காட்டுகளுடன் கூறுகிறது இந்த நூல். நன்றி: தினத்தந்தி, 17/8/2016.   —-   சாமுத்திரகா லட்சணம், பிரியா நிலையம், விலை 40ரூ. ஒருவருடைய தலைமுடி, நெற்றி, கண்கள், காது, மூக்கு, கன்னம், மார்பு, விரல்கள் முதலான […]

Read more

உரையாசிரியர்களின் செவ்வியல் நோக்கு

உரையாசிரியர்களின் செவ்வியல் நோக்கு, மு.முனீஸ்மூர்த்தி, இராசகுணா பதிப்பகம், பக். 136, விலை 100ரூ. தொல்காப்பியர், செய்யுள் உறுப்புகளுள் ஒன்றாக “நோக்கு‘’ என்பதைச் செய்யுளியலில் குறிப்பிடுகிறார். சில நூற்பாக்களில் இந்த “நோக்கை’‘க் காணமுடிகிறது (எ.கா. “நோக்கே பாவே அளவியல்’‘, “நோக்குதற் காரணம் நோக்கெனப் படுமே’‘). இந்த நோக்கு குறித்து பல ஐயங்களை எழுப்பி, அதற்கான விடையும் தரப்பட்டுள்ளது. இதற்கு முன் நோக்கு குறித்து ஆராய்ந்த அறிஞர்கள் பெருமக்களின் பட்டியல், இந்நோக்கு குறித்து நச்சினார்க்கினியர், பேராசிரியர், இளம்பூரணர், தமிழண்ணல், செ.வை.சண்முகம் போன்றோரின் புரிதல்கள் போன்றவையும் தரப்பட்டுள்ளன. கலித்தொகைக்குத் […]

Read more

ஒரு விற்பனையாளரின் வெற்றி ரகசியங்கள்

ஒரு விற்பனையாளரின் வெற்றி ரகசியங்கள், சி.எஸ். தேவநாதன், சுரா பதிப்பகம், விலை 60ரூ. விற்பனையாளர், தங்கள் செயல்திறனை மேம்படுத்திக் கொள்ளவும், சிறந்த குணங்களை முழுமையாய் வெளிப்படுத்தவும், அடுத்த வாய்ப்பை இன்னும் மகத்தானதாக்கிக் கொள்ளவும், வாடிக்கையாளர்களோடு நம்பிக்கையூட்டும் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளவும் விரும்புபவர்களுக்கு உதவும் வகையில் இந்நூலை எழுதியிருக்கிறார் சி.எஸ். தேவநாதன். நன்றி: தினத்தந்தி, 10/8/2016.   —- சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம், ஆர். பாலகிருஷ்ணன், பாதி புத்தகாலயம், விலை 150ரூ. சிந்து வெளியிலும், ஆப்கானிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளிலும் இன்றுவரை திராவிட இடப்பெயர்கள் […]

Read more

திணை – உணர்வும் பொருளும்

திணை – உணர்வும் பொருளும், பிரகாஷ். வெ, பரிசல் வெளியீடு, பக். 112, விலை 90ரூ. இந்நூல், அளவில் சிறிதாயினும் ஆழமான ஆய்வுச் செய்திகளை உள்ளடக்கியுள்ளது. தமிழ் இலக்கணத்துள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்திணை வழியிலமைந்த வாழ்வியல் இலக்கணம் உள்ளது. ஐந்திணைகளுக்கும், முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என உட்பிரிவுகள் உண்டு. இவற்றுள் உரிப்பொருள் என்பது அவ்வத்திணைகளுக்குரிய அகப்பொருள் ஒழுக்கம் குறித்து வருவது. அன்பின் ஐந்திணையன்றி கைக்கிளை, பெருந்திணை என இரண்டு உள்ளன. உரிப்பொருள்களை உணர்வுகள் எனக் கொண்டு, தொல்காப்பியர் வழிநின்று […]

Read more

லட்சியப் பெண்டிர்

லட்சியப் பெண்டிர். தாயம்மாள் அறவாணன். தமிழ்க் கோட்டம்,  பக்.160, விலை ரூ.125. பெண்ணினம் பயனுற வேண்டும் என்பதற்காக எழுதுகிற நூலாசிரியையின் புதிய, அரிய படைப்புதான் இந்நூல். அகத்திணைப் பாடல்களில் பாலைத்திணைப் பாடல்களே அதிகமாக இருப்பதற்கான காரணங்களை முள்ளியூர்ப்பூதியார் கட்டுரை விளக்குகிறது; தொல்காப்பியமும் மகளிரும்; காலந்தோறும் இலக்கிய மகளிரின் நிலைமை; பெருங்காப்பியங்கள் எல்லாம் ஏன் பெண்களையே முன்நிறுத்தி எழுதப்பட்டன என்பற்கான விளக்கம்; சங்க காலத்தில் பெண் கல்வி எவ்வாறு இருந்தது என்பதற்கான விளக்கம்; ஒüவையாரின் கல்வி ஒழுக்கத்தில் கூறப்பட்டுள்ள முதன்மையான கருத்துகள்; சங்க பெண்பாற் புலவர்களின் […]

Read more

கால்டுவெல்லின் தமிழ்க்கொடை

கால்டுவெல்லின் தமிழ்க்கொடை, தொகுப்பாசிரியர் இரா. காமராசு, சாகித்திய அகாதெமி, விலை 180ரூ. சாகித்திய அகாதெமி சென்னை நடத்திய கால்டுவெல் குறித்த கருத்தரங்கத்தில் நிகழ்த்தப்பட்ட சொற்பொழிவுகளின் தொகுப்பு நூல். கால்டுவெல்லின் தமிழ் நோக்கு, அவரின் தமிழ்ப் பங்களிப்பு, திராவிடக் கருத்தியல் எனப் பல்வேறு பரிமாணங்களில் கால்டுவெல்லின் படைப்புகளையும், வாழ்க்கையையும் அலசி ஆராய்ந்து அவரின் பெருமையை நிலை நாட்டும் இந்நூல் தமிழ் ஆய்வு நூல்களில் முக்கியமான ஒன்றாகும். நன்றி: தினத்தந்தி, 20/7/2016.   —– மனிதனும் தெய்வமும், புத்தகப்பூங்கா, விலை 125ரூ. புராணங்கள், இதிகாசங்கள், வரலாறுகள் முதலியவற்றை […]

Read more

நியாயமா இது நியாயமா

நியாயமா இது நியாயமா, முனைவர் கமல.செல்வராஜ், காவ்யா, விலை 200ரூ. கல்வியின் நிலை, சமுதாய அமைப்புகள், அரசியல், பண்பாடு, கல்வி ஸ்தாபனங்கள், மதம் எனப் பல்வேறு பொருட்களைக் குறித்து அவர் ஆராய்ந்த கருத்துகளின் கருவூலமாக இந்த நூல் திகழ்கிறது. நன்றி: தினத்தந்தி, 20/7/2016.   —- சாயி தரிசனம், தெ. ஈஸ்வரன், திருவரசு புத்தக நிலையம், விலை 100ரூ. ஸ்ரீ சத்திய சாயி பகவான் நேரில் தரிசித்த உணர்வை, இந்த நூலை படிப்பதன் மூலம் அனைவரும் பெற முடிகிறது. நன்றி: தினத்தந்தி, 20/7/2016.

Read more

முருகன் விநாயகன்

முருகன் விநாயகன், கவுதம சித்தார்த்தன், எதிர் வெளியீடு, பக். 44, விலை 40ரூ. மீண்டும் தலைதூக்கும் கலாசாரவாதம்! தமிழகத்தில் சமூக மற்றும் அரசியல் தளத்தில், முருகன் எனும் பிம்பம் மெல்ல கலைந்து, விநாயகர் எனும் பிம்பம் மேலெழுந்து வருவதை, பல்வேறு சான்றாதாரங்கள் மூலம், இந்த நூலில், கவுதம சித்தார்த்தன் சுட்டிக்காட்டி ஆய்வு செய்கிறார். விநாயக பிம்பத்தின் மூலத்தைச் சரியாகக் கணக்கிட்டுவிட முடியாது. எனினும், பிள்ளையார் வழிபாடாக தமிழ்ச் சமூகத்தில் பரவிய அவ்வணக்கத்தின் காலத்தை, இலக்கியங்கள் வழியே ஒரளவு சரியாகவே கணிக்க முடியும். அக்கணிப்பைச் செவ்வனே […]

Read more

கணினி யுகத்திற்குத் திருவள்ளுவர்

கணினி யுகத்திற்குத் திருவள்ளுவர், இரா. மோகன், வானதி பதிப்பகம், பக்.208, விலைரூ.150. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்ட குறள், இந்தக் கணினி யுகத்துக்கும் பொருத்தமானதாக இருக்கிறது. இன்றைய நவீன யுகத்தில், அறிவுலகில் விவாதிக்கப்படும் ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் குறள் உரக்கப் பேசுகிறது. குறிப்பாக, அதிகமாகவும், பரவலாகவும் விவாதத்துக்கு உள்படுத்தப்படும் “ஆளுமை வளர்ச்சி, மனித வள மேம்பாடு, விழுமியக் கல்வி (Value Education), தொடர்பியல் திறன்கள், உடன்பாட்டுச் சிந்தனை’ ஆகியவற்றுக்கு திருக்குறள் கருத்துகள் எவ்வாறு வலுசேர்க்கின்றன என்பது குறித்து விரிவாக ஆராய்கின்றன மேற்கண்ட தலைப்புகளிலான கட்டுரைகள். […]

Read more

கன்னியாகுமரி மாவட்ட மீனவர் கலைச்சொற்களும் வாழ்க்கை முறைகளும்

கன்னியாகுமரி மாவட்ட மீனவர் கலைச்சொற்களும் வாழ்க்கை முறைகளும், ஜே. அருள்தாசன், மெல்சி ஜேசைய்யா பதிப்பகம், விலை 250ரூ. முக்கடலும் சங்கமிக்கும் சிறப்பு பெற்ற ஊர் கன்னியாகுமரி. இந்த மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமத்து மீனவர்கள், மீன் பிடிக்கும் கலையில் வல்லவர்கள். அந்த மாவட்டத்தின் கடலோர கிழக்கு எல்லையான ஆரோக்கியபுரம் முதல் மேற்கு எல்லையான நீரோடி கிராமம் வரையுள்ள 45 கிராமமக்களின் பேச்சு வழக்குச் சொற்களையும், அவர்களது வாழ்க்கை முறைகளையும் அந்தந்த ஊர்களுக்கே சென்று ஆராய்ந்து ஓர் அழகிய ஆய்வு நூலை முனைவர் ஜே. அருள்தாசன் […]

Read more
1 33 34 35 36 37 84