கிராம ஊராட்சி நிர்வாகம்,

கிராம ஊராட்சி நிர்வாகம், வடகரை செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், பக்.344; ரூ.260. அரசின் பல்வேறு திட்டங்களின் சிறப்பம்சங்கள், பணிகளைத் தேர்வு செய்வதற்கான நடைமுறைகள், நிதி ஒதுக்கீட்டு முறை ஆகியவை குறித்த விவரங்களை ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், கிராமப் பொதுமக்கள் தெரிந்து கொள்வது அவசியம். இது குறித்து இந்த நூல் அலசி ஆராய்கிறது. ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர்கள் ஆகியோரின் செயல்பாடுகள், திட்டங்களைச் செயல்படுத்துவதில் உள்ள நடைமுறைகள், மத்திய-மாநில அரசுகளின் திட்டங்கள் ஆகியவற்றைப் பொதுமக்கள் புரிந்து கொள்ளும் வகையில் நூலாசிரியர் எளிய நடையில் […]

Read more

தொல்காப்பியக் கலைச்சொல் விளக்கம்

தொல்காப்பியக் கலைச்சொல் விளக்கம், இரா. இளங்குமரனார், தமிப்பேராயம், பக். 384, விலை 200ரூ. தொல்காப்பியத்தில் இடம்பெறும் கலைச்சொற்களுக்கு விரிவான வகையில் விளக்கமளிக்கிறது. தொல்காப்பியர் தமிழர்தம் வாழ்க்கையை அகம், புறம் என இரண்டாகப் பிரித்துக் கூறினார். வேறு எந்த மொழியிலும் இல்லாத பொருளிலக்கணத்தைத் தொல்காப்பியர் கூறினார். பண்டைத் தமிழ் மக்களின் காதல், கற்பு நிலைகள், நாகரிகம், நகர் அமைப்பு, பண்பாடு, ஆட்சி முறை, போர்முறை, கலை நுணுக்கங்கள், ஆன்றோர் பண்பு, கவின் கலைகள், தொழில்கள், வாணிகம் முதலிய பலவற்றை கூறியுள்ளார். அத்தகைய தொல்காப்பியத்துள் இடம் பெற்றுள்ள […]

Read more

தமிழ் அகராதிகளும் குற்றங்களும் குறைகளும்

தமிழ் அகராதிகளும் குற்றங்களும் குறைகளும், “திருத்தம்” பொன். சரவணன், சைபர்நெட் சேவை மையம், விலை 200ரூ. அகராதிகளில் காணப்படும் குற்றங்களையும், குறைகளையும் ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டுகிறார், நூலாசிரியர் “திருத்தம்” பொன். சரவணன். சில சொற்களுக்கு புதிய அர்த்தங்களை கூறுகிறார். ஆசிரியர் ஆராய்ச்சித்திறன் பாராட்டத்தக்கது. ஆசிரியர்கள், மாணவர்கள், ஆய்வாளர்கள் படிக்க வேண்டிய நூல். நன்றி: தினத்தந்தி, 15/6/2016.   —- நேர்மையாக சிந்திப்போம் நன்மைகள் பெறுவோம், மணிமேகலைப் பிரசுரம், விலை 90ரூ. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட மாறுபட்ட எண்ணங்கள் இருக்கக்கூடும். இவ்வெண்ணங்கள் முரண்பட்டும் இருக்கும். இருப்பினும் எதிர்மறை எண்ணங்களைத் […]

Read more

மதங்களும் சில விவாதங்களும்

மதங்களும் சில விவாதங்களும், தருமி, எதிர்வெளியீடு, பக். 240, விலை 220ரூ. மதங்கள், நம்பிக்கை அடிப்படையிலானவை. நம்பிக்கை என்பது காரண, காரியத்திற்கு அப்பாற்பட்டது. அதனாலேயே அங்கு கேள்விக்கோ, தர்க்க ரீதியிலான சிந்தனைக்கோ இடமில்லை. விளைவு மதநம்பிக்கை கேள்விக்கு அப்பாற்பட்டதாக போய்விடுகிறது. நூலாசிரியர் பிறப்பால் கிறிஸ்தவர். அந்த மத நம்பிக்கையில் 43 வயது வரை ஆழ்ந்து சென்ற அவர், தர்க்கரீதியாக தன் மனதில் எழுந்த கேள்விகளுக்கு விடை தேடத் துவங்கி, பின் நாத்திகரானார். தன் அனுபவத்தை இந்த நூலில் மிக அழகாக விவரித்திருக்கிறார். அவரது அனுபவத்தோடு […]

Read more

பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும்

பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன் பாலன், எதிர்வெளியீடு, பக். 895, விலை 950ரூ. நூலாசிரியர் பொறியாளர். அதனால், கணிதவியல் முறை சார்ந்த ஆய்வு மரபை முன்னெடுத்து, சங்கப் பிரதிகளை ஆய்வு செய்துள்ளார். இதற்கென அவர் மேற்கொண்ட உழைப்பு மலைக்கச் செய்கிறது என முன்னுரையில் பேராசிரியர் வீ. அரசு கூறுகிறார். சிவராஜப் பிள்ளை, கமில் சுவலபில் ஆகியோரை அடுத்து, தனக்கென தனி முறையியலை உருவாக்கிக் கொண்டு, அதன் அடிப்படையில், தமிழக வரலாற்றை கணியன் பாலன் ஆய்ந்துள்ளதாக, வீ. அரசு தெரிவிக்கிறார். நூலாசிரியர், சங்க இலக்கியத்தை கூர்ந்து […]

Read more

முருகன் விநாயகன் மூன்றாம் உலக அரசியல்

முருகன் விநாயகன் மூன்றாம் உலக அரசியல், கவுதம சித்தார்த்தன், எதிர் வெளியீடு, பக். 44, விலை 40ரூ. குறிஞ்சி நில தெய்வமான முருகன் என்ற பிம்பம், பாரம்பரியமான தமிழ் மரபின் அடையாளம். இந்த பிம்பத்தை கொஞ்சம் கொஞ்சமாக உடைத்து, அந்த இடத்தில் விநாயகன் என்ற பிம்பத்தை முன் வைத்துக் கொண்டிருக்கும் சூழலை மிகவும் விரிவான ஆய்வுகளோடு எதிர்கொண்டு, பல்வேறு தரவுகளை முன்வைக்கிறார் நூலாசிரியர். இது வெறும் இந்துத்துவ வாசகக் கண்ணோட்டம் மட்டுமல்ல. இதற்குப் பின்னால் இயங்கும் சர்வதேச அரசியல் என்ன என, கேள்வி எழுப்புகிறார். […]

Read more

இந்துக்கள் ஒரு மாற்று வரலாறு

இந்துக்கள் ஒரு மாற்று வரலாறு, வெண்டி டோனிகர், தமிழில் க. பூரணச்சந்திரன், எதிர் வெளியீடு, பக். 904, விலை 750ரூ. கடந்த 2014ல், இந்தியாவில் பரபரப்பைக் கிளப்பி, சர்ச்சைக்குள்ளான நூல் இது. நூலாசிரியர் வெண்டி டோனிகர், ஹார்வர்டு, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகங்களில், சமஸ்கிருதம், இந்திய ஆய்வு ஆகியவற்றில் முனைவர் பட்டங்களைப் பெற்றவர். இந்த நூலில் மொத்தம் 25 இயல்கள் உள்ளன. இந்து மதம் தொடர்பான வழக்கமான நூல்களில் இருந்து, பலவிதங்களில் வேறுபட்டது என்கிறார் நூலாசிரியர். ஒன்று, இது மாற்றுக் கதையாடலை முன் வைக்கிறது. இரண்டாவது வரலாற்றின் […]

Read more

தென்பாண்டி தந்த திருவள்ளுவர்

தென்பாண்டி தந்த திருவள்ளுவர், கேசவ. சுப்பையா, துவாரகா பதிப்பகம், பக். 228, விலை 120ரூ. திருவள்ளுவர் பிறந்து வாழ்ந்த இடம் குறித்த சர்ச்சை நீடிக்கிறது. அவர் சென்னை மயிலாப்பூரில் நெசவு தொழில் செய்து வாழ்ந்தார் என்று பலரும் எழுதியுள்ளனர். தமிழக சமணர்கள், திருவள்ளுவரை சமணர் என்றும் அவர் வாழ்ந்தது பொன்னூர் மலை என்று கூறிவருகின்றனர். இந்நிலையில், சிவ. பத்மநாபன், கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் தாலுகா, முட்டம் கடற்கரைக்கு அருகிலுள்ள திருநயினார்க்குறிச்சியில் வள்ளுவர் வாழ்ந்தார் என்று எழுதியும் பேசியும் வந்தார். திருக்குறளில் ஈடுபாடு கொண்ட அப்துல்கலாம், […]

Read more

கம்பனின் ஆற்றலும் இராமாயணத்தின் சிறப்பும்

கம்பனின் ஆற்றலும் இராமாயணத்தின் சிறப்பும், அருட்கவிஞர் அ. காசி, மணிமேகலை பிரசுரம், பக். 88, விலை 60ரூ. சீதாபிராட்டியாரின் ஜானகி, மைதிலி, வைதேகி என்ற பெயர் விளக்கம் ஒவ்வொன்றும் அறிந்தது என்றாலும் ‘சீ’, ‘தை’க்குக் கொடுத்த பொருள் போற்றச் செய்கிறது. ராமனின் கை நிக்கிரகம், சீதையின் கை அனுக்கிரகம். சீதையின் கரம் பற்றினால்தான் அனுக்கிரக சக்தி கிடைக்கும் என்ற ஆசிரியரின் கற்பனை, அவரின் பக்தி உணர்வைக் காட்டுகிறது. துந்துபி என்ற கதாபாத்திரத்தின் எலும்பை லட்சுமணன் தன் காலால் எட்டித் தள்ளும் காட்சி விளக்கத்தில் இதுவரை […]

Read more

மதுரை நாயக்கர்கள் வரலாறு

மதுரை நாயக்கர்கள் வரலாறு, ஆர். சத்தியநாத அய்யர், தமிழில் எஸ். அர்ஷியா, கருத்து பட்டறை வெளியீடு, விலை 370ரூ மதுரை நாயக்கர்கள் மதுரை நாயக்கர்களின் வரலாற்றை விரிவாகப் பேசும் ஆய்வு நூல் இது. விஜயநகரப் பேரரசின் வரலாற்றையும், தொலைதூரத்திலிருந்து அது செயல்படுத்திய அரசப் பிரதிநிதித்துவத்தையும் இணைத்துப் பேசும் ஒரு முயற்சியை இந்த ஆய்வு நூல் செய்கிறது. இந்நூலில் மதுரையை ஆட்சிசெய்த ஒவ்வொரு நாயக்க மனன்ரைப் பற்றிய குறிப்பும் தனித்தனியாக இடம் பெற்றிருக்கின்றன. அத்துடன், நாயக்கர் ஆட்சியின் சிறப்பம்சங்களும் தனிக் கட்டுரையாக இந்நூலில் சேர்க்கப்பட்டிருக்கிறது. அத்துடன், […]

Read more
1 34 35 36 37 38 84