குறுந்தொகை மலர்கள்

குறுந்தொகை மலர்கள், ப. அநுராதா, ரமணி பதிப்பகம், பக். 176, விலை 150ரூ. புலி புலி என்று கூவினால் பூக்கள் உதிரும்! சங்க இலக்கியங்களில் ‘நல்ல குறுந்தொகை’ எனும் சிறப்பான அடைமொழியைப் பெற்ற குறுந்தொகையில் காணப்படும் மலர்கள் குறித்து விவரிப்பதுதான் இந்த நூல். குறுந்தொகையில், அடும்பு துவங்கி வேம்பு வரை, 46 மலர்களின் பெயர்கள் காணப்படுகின்றன. அந்த மலர்களது அகர வரிசைப்படி ஒவ்வொரு மலரையும், மலர் குறித்த தாவரவியல் கருத்து, தாவரவியல் பெயர், மலர் இடம் பெறும் பாடல் எண்வரி, புலவரின் பெயர், பாடல் […]

Read more

உன்னை நீ மறந்ததேன்?

உன்னை நீ மறந்ததேன்?, அ. கீதன், கண்ணதாசன் பதிப்பகம், பக். 168, விலை 100ரூ. ஒரு தனிமனிதனின் வாழ்க்கைத் தேடல்கள், சவால்கள், ஆன்மிக விழிப்புணர்ச்சி இவை யாவும் ஒரு மனோதத்துவ நிபுணரின் எழுத்துக்களாக பிரதிபலிக்கின்றன. நன்றி: குமுதம், 28/3/2016.   —- பள்ளு இலக்கியமும் சமுதாயப் பார்வையும், முனைவர் அகிலா சிவசங்கர், தாரிணி பதிப்பகம், பக். 220, விலை 250ரூ. 17,18ம் நூற்றாண்டின் உழவர்கள், அவர்களின் உழைப்பு, களிப்பு, பக்தி என்று கழிந்த அவர்களின் வாழ்க்கை முறைக்கே உரிய நெறிமுறைகளை எடுத்துக்காட்டும் ஆய்வு நூல். […]

Read more

பழனி வரலாற்று ஆவணங்கள்

பழனி வரலாற்று ஆவணங்கள், செ. இராசு, கொங்கு ஆய்வு மையம், விலை 200ரூ. இந்த நூலில் பழனிமலை சுப்பிரமணியர் (முருகன்) கோயில், பெரியாவுடையார் கோவில் ஆகியவற்றில் உள்ள கல்வெட்டுக்களையும், பழனிமலை அடிவாரத்தில் உள்ள பல மடங்களைச் சேர்ந்த செப்புப் பட்டயம் ஆகிய ஆவணங்களையும் தொகுத்து வகைப்படுத்தி விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. நூலாசிரியர் செ. இராசு, தமிழ்ப் பல்கலைகக்ழகத்திலிருந்து ஓய்வு பெற்ற பிறகும் ஓயாது கள ஆய்வு செய்து மிகுந்த ஈடுபாடு கொண்டு செய்துள்ள இந்த ஆவணத் தொகுப்பு பல அரிய செய்திகளைக் கொண்டுள்ளது. இத்தொகுப்பில் உள்ள […]

Read more

தென்மொழி

தென்மொழி, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், விலை 75ரூ. பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், மலையாளம் என்னும் 5 மொழிகளில் படிக்கவும், பேசவும், எழுதவும் வல்லமை பெற்று விளங்கியவர். அவரது ஆராய்சித் திறனாலும், நுண்பொருளை மிக எளிதாக உணர்ந்து பிறருக்கு உணர்த்தும் பிண்பாலும், ஈர்த்த தனது எளிய நடையாலும் “தென்மொழி” என்னும் இந்நூலைத் தந்துள்ளார். தமிழ் மொழி எவ்வளவு பழமையானது, உலக மொழிகளில் தலைமை தாங்கும் பண்புடையது, உயர் தனிச் செம்மொழிகளில் உயிருடன் இயங்கி வரும் தனிச்சிறப்பும் பெற்றது போன்ற […]

Read more

கம்பனின் அரசியல் கூட்டணி

கம்பனின் அரசியல் கூட்டணி, தா. பாண்டியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 140ரூ. கடந்த காலத்தில் படைக்கப்பட்ட ஓர் இலக்கியம், நிகழ்காலத்தில் எப்படிப் பார்க்கப்பட வேண்டுமென்பதற்கு உதாரணமாகத் திகழ்கிறது இந்நூல். கிஸ்கிந்தாவில் சுக்கிருவனின் உதவியை ராமன் நாடவேண்டி வருகிறது. ஏனெனில் சீதையைக் கவர்ந்து சென்றவன் ராவணன் என்பதைத் தெரிந்து கொண்டபின், தனக்கு ஏற்பட்ட அவமானத்தைத் துடைக்கவும், துயரில் சிக்கிவிட்ட மனையாளை மீட்கவும், வலிமை மிக்க, வரபலம், படைபலம், தம்பியர் துணை, ஆட்சி அதிகாரம் கொண்டுள்ள ராவணனை எதிர்க்க இருவரின் வில்கள் மட்டுமே போதாது […]

Read more

இருபதாம் நூற்றாண்டு தலித் தமிழ்ச் சிற்றிதழ்களில் தலித் பண்பாடு

இருபதாம் நூற்றாண்டு தலித் தமிழ்ச் சிற்றிதழ்களில் தலித் பண்பாடு, பாவை பப்ளிகேஷன்ஸ், பக். 244, விலை 170ரூ. எதிர்ப்பு நிலையும் இருப்பு நிலையும் ஆய்வேடுகள் வெகுமக்களால் படிக்கப்படும் நூலாக வெளிவருவது அரிது. எழுதியவரையும் விடை மதிப்பீட்டாளரையும் மிக இம்சிக்கும் ஆற்றலுடைய ஆய்வேடுகள், அப்படிக் காணாமற்போதல் காலவிதி. ஆனால், ஜோஸ்பின் மேரி வழங்கியிருக்கும் இந்த ஆய்வேடு படிக்க தூண்டுவதாகவும் பொருண்மை உடையதாகவும் இருக்கிறது. அயோத்தி தாச பண்டிதர் காலத்திலேயே அடியரம் இடப்பட்ட தலித் தொடர்ச்சியானது, 20ம் நூற்றாண்டின் கடைப் பகுதியில் வீறார்ந்து செயல்பட்டதை, நுண்மையாக அகலத்தோடும் […]

Read more

வாழ்வியல் பண்பாட்டுத் தாளிகைகள்

வாழ்வியல் பண்பாட்டுத் தாளிகைகள், ச. வனிதா, காவ்யா, பக். 288, விலை 300ரூ. பழந்தமிழர் இலக்கிய வரலாற்றில், பலமுறை பதிவு செய்யப்பட்ட கருத்துகள் ஆயினும், புதுப்பொலிவோடும், இன்றைய நோக்கோடும், நயத்தோடும், இந்த நூலில் கிராமங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழரின் உழவும், உணவு முறைகளும், விருந்தோம்பல் பண்பாடும், பசு நேசம், சித்தர் மருத்துவம், விவசாயத்தின் ஏர், கலப்பை, சால், மண்வெட்டி, குதிர், பத்தாயம், எலி பிடிக்கும் கிட்டி ஆகியவையும் விரிவாக்கம் பெறுகின்றன. தமிழரின் பண்பாட்டை வெளிப்படுத்தும் ஆடைகளும், அதன் வண்ணங்களும் விளக்கப்பட்டு உள்ளன. காந்தி மதுரை […]

Read more

யுகாந்தா

யுகாந்தா, மராத்தி மூலம் ஜராவதி கார்வே, தமிழில் அழகிய சிங்கர், ஓரியன் பதிப்பகம். இவர்களைப்போல் பெண்கள் வாழக்கூடாது! ஜராவதி கார்வே, மராத்தியில் எழுதி ஆங்கிலம் மற்றும் இந்திய மொழிகளில் மொழி பெயர்ப்பாகி உள்ள, ‘யுகாந்தா’ என்ற நூலை, சமீபத்தில் படித்தேன். சாகித்ய அகாடமி விருது பெற்ற அந்த நூலை, தமிழில் நானும் மொழி பெயர்த்துள்ளேன். ஓரியன் பதிப்பகம் வெளியிட்டு உள்ளது. மகாபாரதம், ராமாயணம் இரண்டும் இந்தியர்களின் மாபெரும் காப்பியங்கள். இந்த இரண்டிலும் வரும், பெண் கதாபாத்திரங்களைப் பற்றியதுதான், ‘யுகாந்தா’. இரு காப்பியங்களில் வரும் பெண்களின் […]

Read more

வாழ்வியல் பண்பாட்டுத் தாளிகைகள்

வாழ்வியல் பண்பாட்டுத் தாளிகைகள், ச. வனிதா, காவ்யா, பக். 288, விலை 300ரூ. நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் ஒவ்வொரு காலத்திலும் மாறி வந்திருக்கின்றன. புதிய புதிய பொருட்கள் பயன்பாட்டுக்கு வரும்போது பழைய பொருட்களில் பல காணாமற் போய்விடுகின்றன. எவ்வளவுதான் வாழ்க்கை மாறி வந்தாலும் சில பண்பாட்டு வழிமுறைகள் தொடர்ந்து வருகின்றன. சிறு தெய்வ வழிபாடு, மஞ்சள் நீராட்டு விழா, திருமணம், வளைகாப்பு, கண்ணேறு கழித்தல் போன்ற பல நிகழ்வுகள் இன்றைய வாழவிலும் தொடர்ந்த வண்ணம் உள்ளன. தமிழர்களின் அன்றாட வாழ்வில் புழங்கிய பொருட்கள், […]

Read more

அலைகடலுக்கு அப்பால்

அலைகடலுக்கு அப்பால், பூங்கொடி பதிப்பகம், விலை 80ரூ. மலேசியா, சிங்கப்பூர், மொரீசியஸ் முதலிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்த பேராசிரியர் முனைவர் மு.பி. பாலசுப்ரமணியன் தனது அனுபவங்களை இந்த நூலில் எழுதியுள்ளார். தமிழ் மாநாடுகளில் கலந்துகொள்வதற்காக இச்சுற்றுப்பயணங்கள் மேற்கொள்ளப்பட்டதால், கட்டுரைகளில் தமிழ் மணம் கமழ்கிறது. நன்றி: தினத்தந்தி, 17/2/2016.   —-   செல்வம் தரும் தென்னை வளர்ப்பு, டாக்டர் வா.செ. செல்வம், நர்மதா பதிப்பகம், விலை 75ரு. அறிவியல் வழிமுறைகளால் சாதிக்க முடியாதவற்றை தனது அனுபவ ஆராய்ச்சி அறிவால் ஆராய்ந்து, தென்னை வளர்ப்போருக்கு ஒரு […]

Read more
1 36 37 38 39 40 84