கடவுள் தொடங்கிய இடம்

கடவுள் தொடங்கிய இடம், முத்துலிங்கம், விகடன் பிரசுரம், விலை 155ரூ. உலக அகதிகளின் எண்ணிக்கை முதல் முறையாக 5 கோடியை எட்டியிருக்கிறது. நாட்டை விட்டு துரத்தப்பட்டவர்கள் அகதிகள். அவர்களுக்கு இன்னொரு நாடு சுலபத்தில் கிடைப்பதில்லை. சிலர் பாதி வழியில் பிடிபட்டு திருப்பி அனுப்பப்படுவார்கள். சிலர் சிறையில் அடைக்கப்படுவார்கள். சிலர் காடுகளிலோ, கடலிலோ, பனியிலோ, ஆற்றிலோ அகப்பட்டு இறந்துவிடுவார்கள். இந்த நூல் அகதிகள் அலைவதை சொல்கிறது. சரித்திரம் நிலைப்பது புனைவுகளின் மூலம்தான். அகதிகள் பயணத்தை பதிவு செய்யும் இந்த புதினம் ஒரு வரலாற்றை உலகத் தரத்தோடு […]

Read more

ஹெர்மான் ஹெஸ்ஸின் சித்தார்த்தா ஓர் ஆய்வு

ஹெர்மான் ஹெஸ்ஸின் சித்தார்த்தா ஓர் ஆய்வு, சுரானந்தர், சுரா பதிப்பகம், பக். 80, விலை 176ரூ. கடந்த, 1946ம் ஆண்டு இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்றதும், ஜெர்மன் மொழியில் எழுதப்பட்டதும், பின் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டதும், இந்திய கலாச்சாரத்தை உலகிற்கு உணர்த்தியதுமான, ஹெர்மான் ஹெஸ் எழுதிய, ‘சித்தார்த்தா’வை தமிழில் மொழி பெயர்த்துத் தந்துள்ளார் சுரானந்தா. வெறும் மொழிபெயர்ப்பு நூலாக மட்டும் படைக்காமல் ஓர் ஆய்வு நூலாகவும் மாற்றி ஆங்காங்கே தான் படித்தது, கேட்டது ஆகியவற்றையும் தந்திருப்பது கூடுதல் சிறப்பு. அந்தணர் குலத்தில் பிறந்த சித்தார்த்தன், […]

Read more

சிந்தனை ஒன்றுடையாள்

சிந்தனை ஒன்றுடையாள், கே.எஸ். சுப்ரமணியன், அருட்செல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம், பக். 512, விலை 350ரூ. கண்ணாடியும் பிம்பமும்போல தமிழும் சமஸ்கிருதமும்! ஓர் ஆடை, நூலிழையும், பாவுமாய் இணைந்து உருவாவதுபோல், பாரத நாட்டின் பழம் பெருமை, பண்பாடு, ஒருமைப்பாடு ஆகியன, செவ்வியல் மொழிகளான சமஸ்கிருதம், தமிழ் ஆகிய இரு மொழிகளாலும் கட்டிக்காக்கப்படுகின்றன. அந்த வகையில், சமஸ்கிருதத்தில்தான் படித்துச் சுவைத்த அரிய பகுதிகளைத் தமிழில் கொண்டு வர வேண்டும் எனும் பேரவா காரணமாக, நூலாசிரியர் இந்த நூலை உருவாக்கியுள்ளார். வேதம், உபநிஷத்துகள், கீதை, பர்த்ருஹரியின் […]

Read more

வையை தடம் தேடி

வையை தடம் தேடி, ப. திருமலை, இரா.சிவக்குமார், பட்டறிவு பதிப்பகம், பக். 106, விலை 120ரூ. வைகையின் தடம் தேடி புறப்பட்டு, அத்தனை தகவல்களையும் திரட்டி ஆவணப்படுத்தி உள்ளனர், அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர்கள் திருமலை, சிவக்குமார். வைகையை தெய்வமாக மதித்து, அதற்கு படையல் செய்தனர் அன்றைய மதுரை மக்கள். நற்றிணையும், குறுந்தொகையும், ஐங்குறுநூறும் கொண்டாடிய வைகை, இன்று நாறுதே என்ற பெருங்கவலையுடன் நூலாசிரியர்கள் எழுதியிருக்கின்றனர். சிங்கள கதையிலும் வைகை பற்றி குறிப்பிட்டிருப்பதாக கூறும் ஆசிரியர், இன்று வேதிக்கழிவால் வைகை படும் வேதனையையும் விவரிக்கின்றனர். வைகையின் […]

Read more

மீரா

மீரா, இரா. மோகன், சாகித்ய அகாடமி, பக். 112, விலை 50ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024735.html ‘மரபில் பூத்த புதுமலர்’ என்றும், ‘காலத்தின் குரல்’ என்றும், ‘பாவேந்தரின் வாரிசு’ என்றும் திறனாய்வாளர்களால் மதிப்பிடப்பெற்ற மீரா (மீ.ராசேந்திரன்) இருபதாம் நூற்றாண்டு தமிழ்க் கவிதை உலகில் தமக்கென தனியிடம் வகுத்துக்கொண்ட ஆற்றல்சால் ஆளுமையாளர். ‘கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள்’ எனும் புதுக்கவிதை நூல் மூலம், 1980களில், கல்லூரி மாணவர்களின் இதய சிம்மாசனத்தில் வீற்றிருந்தவர். அவரது படைப்புகளில் அங்கதச் சுவை ஆழ்ந்து விரிந்து கிடக்கும். அரசியல்வாதியின் பதவி […]

Read more

எத்திசையும் தமிழ்

எத்திசையும் தமிழ், திருக்குறள் பதிப்பகம், விலை 200ரூ. இந்நூல் சேர நாடாக இருந்த கேரளத்தின் தமிழ்மொழி இலக்கிய வரலாற்றை விரிவாக ஆராய்கின்றது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்குட்பட்ட இலக்கிய வரலாற்றை முரசறைந்து தமிழுலகிற்கு அறிவிக்கின்றது. சங்க காலத்திலிருந்து விடுதலைக்காலம் வரை வெளிவந்துள்ள தமிழ் படைப்புகளை வகுத்தும், தொகுத்தும் ஆய்வு செய்கின்றது. மலையாள நாட்டில் தாய்த்தமிழ் பொலிவோடு சிறப்புற்றிருப்பதைக் கண்டறிகின்றது. கேரளத்திற்கும், தமிழுக்கும் உள்ள உறவுகள் விளக்கப்படுகின்றன. கேரளத்தின் இன்றைய விழாக்களான திருவோணமும், திருவாதிரையும் தமிழரின் பழம்பெரும் விழாக்கள் என சுட்டப்படுகின்றது. கேரளத்தில் படைக்கப்பட்ட இலக்கண நூல்கள், அகத்தியம், […]

Read more

கவுரி கருமை காளமேகம்

கவுரி கருமை காளமேகம், (தமிழாய்வுக் கட்டுரைகள்), க. கதிரவன், இராசகுணா பதிப்பகம், பக்.130, விலை 168ரூ. செவ்விலக்கியங்களும் கேரள உணவுகளும் இந்த நூல் பல்வேறு அரங்குகளில் படிக்கப்பெற்ற 11 கட்டுரைகளின் தொகுப்பு. சங்க இலக்கியம், இரட்டைக் காப்பியங்கள், பக்தி இலக்கியம், தனிப்பாடல், இக்கால இலக்கியம் ஆகிய தளங்களில், ஆசிரியருக்குள்ள புலமையைக் காட்டுகிறது. நூலாசிரியர், தனது அறிமுக உரையினைத் தற்சிறப்பு பாயிரம் என்னும் பெயரில் அமைத்து, உள் தலைப்புக்களுக்குப் படலம் என்று பெயரிட்டுள்ளார். ஒவ்வொரு கட்டுரையும் ஆய்வு நெறிமுறைகளுக்கேற்ப கருதுகோளுடன் சிறந்த ஆய்வு முடிவையும் தருகிறது. […]

Read more

உத்தம நாயகன்

உத்தம நாயகன், த. தியாகையா, நூலக உலகம் வெளியீடு, பக். 88, விலை 60ரூ. ராமபிரானின் பண்பையும், ஒழுக்கத்தையும் விளக்கும் நூலாக உள்ளது. கம்பன் பாடல்களில் சில மிகநுட்பமாக ஆய்வு செய்து எழுதியுள்ளார். ‘திருஉறப்பயந்தனள், உரம் உருகிய வாளி, ஏழிரண்டாண்டில் வா, முறைமை அன்று, என்னது கடன்’ என்ற ஆறு தலைப்புகளில் நூலாசிரியர், கம்பன் பாடல்களில் சிலவற்றை விவரித்துள்ளார். விஸ்வாமித்ரரிடம் இருக்கும்போது தான் தாடகை வதைப் படலம் முதல் அடுத்து வரும் படலங்களில், ராமபிரான் ஆற்றல் வெளிப்படுகிறது (பக். 25). கைகேயின் வரத்தை நிறைவேற்றியதன் […]

Read more

பத்துப்பாட்டு பொருளடைவு

பத்துப்பாட்டு பொருளடைவு, ச.பொ.சீனிவாசன், சேகர் பதிப்பகம், விலை 350ரூ. தமிழின் உயிர்நிலை இலக்கியங்களாக திகழ்வன சங்க இலக்கியங்கள். தமிர் மொழிக்கு செம்மொழி தகுதியையும், நிலைபேற்றையும் பெற்றுத்தந்த பெருமை, சங்க இலக்கியங்களுக்கு உண்டு. சங்க இலக்கியங்களை பொதுவான ஆய்வுக் கண்ணோட்டத்துடன் ஆய்வு செய்த அதிகமான நூல்கள் வெளிவந்துள்ளன. அவை போதுமானதாக இல்லை. தவிர, சொல்லடைவுகள், சொல், பொருள், வருமிடம் இலக்கணக் குறிப்பு இவற்றோடு நின்றுவிடுகின்றன. இத்தகைய தரவுகளின் தேவையை மனதில் கொண்டு எழுதப்பட்டுள்ள நூல்தான் “பத்துப்பாட்டு – பொருளடைவு” என்னும் ஆய்வு நூல். நன்றி: தினத்தந்தி, […]

Read more

இயற்கை வேளாண்மை

இயற்கை வேளாண்மை, வீ. அன்பழகன், அருட்தந்தை ச. இஞ்ஞாசிமுத்து, கண்ணதாசன் பதிப்பகம், பக். 144, விலை 90ரூ. விவசாயமும் விவசாயிகளும் உயிர்த்துடிப்புப் பெற ஒரே வழி நாம் நமது பாரம்பரிய விவசாய முறைக்கு மாற வேண்டும் என்பதை வலியுறுத்தும் நூல். தவறான விவசாய முறைகளால் குடிக்கும் நீரிலிருந்து உண்ணும் உணவு, உடுத்தும் உடை, இருக்கும் இடம் எனத் தொடங்கி தாய்ப்பாலே நஞ்சாகிவிட்ட நிலையை உதாரணங்களுடன் விளக்கி, இதிலிருந்து மீள, நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற இயற்கை வளத்தை, நாம் நமது சந்ததியினருக்கு விட்டுச்செல்ல வேண்டும் […]

Read more
1 38 39 40 41 42 84