சிறுவர்களிடம் தமிழ் சினிமாவின் தாக்கம்

சிறுவர்களிடம் தமிழ் சினிமாவின் தாக்கம், பெரியநாயகம் ஜேசுதாஸ், தமிழில் மங்களம் சுந்தரேசன், மணிமேகலை பிரசுரம், விலை 185ரூ. மற்ற மாநிலங்களை விட, தமிழகத்தில் சினிமா ஏற்படுத்தி உள்ள தாக்கம் மிகப்பெரியது. அந்த தாக்கம், தமிழகத்தின் சமூக, பண்பாடு, பொருளாதார, அரசியல் என பல்வேறு தளங்களில் விரிவடைந்துள்ளது. அதை விவரிக்கிறது இந்த நூல். சிறுவர்களிடம் தமிழ் சினிமா ஏற்படுத்திய தாக்கம்தான் தலைப்பு. ஆனால் தலையை சுற்றி மூக்கை தொடுவதுபோல், சமூகத்தின் பல்வேறு படிநிலைகளுக்கு சென்று வந்த பிறகு, சிறுவர்களிடம் வருகிறது நூல். பெரும்பாலும், வீதிச் சிறுவர்களே […]

Read more

மாமதுரை

மாமதுரை, பொ. இராசேந்திரன், சொ. சாத்தலிங்கம், ஷான்லாக்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக். 282, விலை 250ரூ. பண்டைத் தமிழரின் இதிகாச, புராண, சங்ககால பண்பாட்டுக் கருவூலமாகத் திகழ்கிறது மதுரை மாநகர். மதுரை நகரின் வரலாற்றை எழுதுவது எனும் பணியில் மதுரையைத் தலைநகராகக் கொண்ட பாண்டியர்களின் வரலாற்றை எழுதாமல் எழுத முடியாது என்பதைக் கூறும் நூலாசிரியர்கள் சங்ககாலப் பாண்டியர், முற்காலப் பாண்டியர், பிற்காலப் பாண்டியர் போன்றவர்களைப் பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் கூறியுள்ளனர். பாண்டியர் இல்லையேல் தமிழ் இல்லை எனும் அளவுக்கு சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தவர்கள் பாண்டியர்கள். […]

Read more

சென்றுபோன நாட்கள்

சென்றுபோன நாட்கள், எஸ்.ஜி.இமானுஜலு நாயுடு, ஆ.இரா வேங்கடாசலபதி வெளியீடு, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், விலை 125ரூ. இதழியல் பக்கங்கள் தன் 17வது வயதில் பத்திரிகை தொடங்குவது என்பதை யாரேனும் நினைத்துப்பார்த்திருக்க முடியுமா? 1904ல் எஸ்.ஜி.இராமானுஜலு நாயுடு நினைத்துப் பார்த்ததுடன் பிரஜாநுகூலன் என்ற மாத இதழையும் ஆரம்பித்திருக்கிறார். இந்த இதழை நடத்தினாலும் சுதேசமித்திரன் உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் எழுதியவராகவும் பங்களித்தவராகவும் இவர் இருந்திருக்கிறார். 1926ல் இவர் ஆசிரியராக அமர்ந்த ஆநந்தபோதினி இவருக்குப் பேரும் புகழும் பெற்றுத்தந்தது.1934ல் இந்தப் பத்திரிகையிலிருந்து விலகிய கொஞ்சநாளிலேயே இவர் மரணம் அடைந்தார். […]

Read more

தொல்காப்பியரின் தொல்காப்பியத் தாவரங்கள்

தொல்காப்பியரின் தொல்காப்பியத் தாவரங்கள், இரா. பஞ்சவர்ணம், பஞ்சவர்ணம் பதிப்பகம், பக். 312, விலை 360ரூ. தொல்காப்பியர் பெயர்க் காரணம், அவரது காலம், அவர் முந்துநூல் கண்டது, தொல்காப்பிய விளக்கம், அதிகாரமும் உட்பிரிவுகளும், தொல்காப்பியத் திணைகள், நூற்பாக்கள் போன்றவற்றை விளக்கிவிட்டு, தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ள தாவரங்களின் பட்டியலைத் தந்திருக்கிறார் நூலாசிரியர். அதன்படி, அரை, ஆண், ஆர், ஆல், ஆவிரை, இல்லம், உதி, உழிஞை, உன்னம், எகின், கடு, ஞமை, தளா, காஞ்சி, தும்பை, நமை, குமிழ், குறிஞ்சி, காந்தள், நொச்சி, பனை, பீர், மருதம், முதலிய 48 […]

Read more

இயற்கை வேளாண்மைக் களஞ்சியம்

இயற்கை வேளாண்மைக் களஞ்சியம், ஆர்.எஸ். நாராயணன், யூனிக் மீடியா இண்டக்ரேட்டர், பக். 144, விலை 120ரூ. இயற்கை விவசாய ஆராய்ச்சி விஞ்ஞானியான நூலாசிரியர், செயற்கை ரசாயன உரங்களால் நமது மண் மாசடைந்து, விவசாயம் செய்யவே தகுதியற்றதாக மாறிவிட்டதைக் கண்டு கொதித்து எழுபவர். அவருடைய இயற்கை விவசாயம் சார்ந்த தேடல்கள், அனுபவங்கள், தெளிவான கருத்துகளின் தொகுப்பே இந்நூல். பசுமைப் புரட்சிக்கு முன்பே நிலத்தில் ரசாயன உரங்களைப் போடும் வழக்கம் ஏற்பட்டுவிட்டது என்று நூலாசிரியர் எடுத்துக்காட்டுகளுடன் சொல்லியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. நாம் மண்ணை நேசிப்பதனை மறந்து மண்ணை […]

Read more

பிள்ளையார் அரசியல்(மத அடிப்படைவாதம் பற்றிய கட்டுரைகள்)

பிள்ளையார் அரசியல், மத அடிப்படைவாதம் பற்றிய கட்டுரைகள், ஆ. சிவசுப்ரமணியன், பாவை பப்ளிகேஷன்ஸ், பக். 204, விலை 140ரூ. மத அடிப்படைவாதிகளின் மனசாட்சியை உலுக்கும் கட்டுரைகள் வரலாறு என்பது அதிகார வர்க்கம் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்காக எழுதிக் கொண்ட புனைவுகள் என்பார் எழுத்தாளர் சாருநிவேதிதா. காலம்காலமாக இருட்டடிப்பு செய்யப்பட்ட வரலாறே, முழுமை பெற்ற வரலாறாக நம் முன் வைக்கப்பட்டது. அதையும் நம்பிக்கொண்டிருந்தோம். கடந்த 1990களின் துவக்கத்தில் ஆய்வுலகில் புதியதொரு எழுச்சி ஏற்பட்டது. அது விளிம்பிலிருந்து மைய வரலாறை அணுகியது. அன்றிலிருந்துதான் வரலாற்றில் மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட […]

Read more

அவன் அவள் அன்லிமிடெட்

அவன் அவள் அன்லிமிடெட், கோகுலவாச நவநீதன், சூரியன் பதிப்பகம், பக். 272, விலை 200ரூ. ஆண் பெண் இடையிலான குணநல வேறுபாடுகளை, நகைச்சுவைப்பட விளம்புகிறது இந்த நூல். குங்குமம் இதழில் தொடராக வந்த கட்டுரைகள் தொகுக்கப்பட்டு, தற்போது வெளியாகி உள்ளது. இவள் மாறாமல் இருப்பாள் என்ற நம்பிக்கையோடு ஆணும், இவன் மாறிவிடுவான் என்ற நம்பிக்கையோடு பெண்ணும் திருமணம் செய்து கொள்கின்றனர். இருவருமே ஏமாறுகின்றனர். பெண்களுக்கு பிடித்த சிறந்த ஆண் என்பவன்,அவர்களின் பிறந்த நாளைச் சரியாக நினைவில் வைத்திருக்க வேண்டும். இதுபோன்ற எண்ணற்ற புன்னகைக்க வைக்கும் […]

Read more

சி.பா. ஆதித்தனார்

சி.பா. ஆதித்தனார், முகிலை இராஜபாண்டியன், சாகித்ய அகாடமி, பக். 128, விலை 50ரூ. மக்கள் தமிழ் எனும் எளிமைத் தமிழ் உரைநடையை உருவாக்கி பாமரர்களையும் பத்திரிகை படிக்க வைத்தவர், சி.பா. ஆதித்தனார். லண்டனில் பார்ஸ்டர் பட்டம் பெற்று சிங்கப்பூரில் மிகப்பெரிய வழக்கறிஞராக விளங்கினார். இரண்டாம் உலகப் போர் நிகழ்ந்ததன் விளைவாக பல இன்னல்களுக்கிடையே தாயகம் திரும்பினார். வழக்கறிஞர் பட்டம் பெற்றிருந்தாலும் தமிழ் மீதும், இதழியல் மீதும் நாட்டம் கொண்ட ஆதித்தனார், தமிழன், மதுரை, முரசு, தந்தி போன்ற இதழ்களைத் தொடங்கி நடத்தினார். தமது இதழ்களில், […]

Read more

திறனாய்வுத் திலகம் சிலம்பொலி செல்லப்பன்

திறனாய்வுத் திலகம் சிலம்பொலி செல்லப்பன், சீ.பிரமிளா, மணிவாசகர் பதிப்பகம், சென்னை, பக். 192, விலை 100ரூ. தமிழ்க் கவிதைத் திறனாய்வில் சிலம்பொலி செல்லப்பனாரின் பங்களிப்பு என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வேடாகி தற்போது நூலாகியிருக்கிறது. பிற மொழி இலக்கியத் திறனாய்வுகளை விடத் தமிழ் இலக்கியத் திறனாய்வு மிகவும் தொன்மை வாய்ந்ததாகக் கூறப்படுகிறது. நீண்ட காலமாகவே தமிழ் இலக்கியத் திறனாய்வாளர்கள் பலர் இருந்திருக்கின்றனர். அந்த வரிசையில், சங்க இலக்கியங்கள், காப்பியங்கள், கவிதை நூல்கள் எனப் பலவற்றுக்கும் திறனாய்வுகளை மேற்கொண்டவர் சு. செல்லப்பன். சங்க இலக்கியத் திறனாய்வு, […]

Read more

இந்திய சுதந்திரப் பெரும்போரில் இஸ்லாமியர்கள்

இந்திய சுதந்திரப் பெரும்போரில் இஸ்லாமியர்கள், யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், சென்னை, விலை 700ரூ கி.பி. 1741- ஆம் ஆண்டுகளில் குளச்சலில் மார்த்தாண்ட வர்மா ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடியதில் ஆரம்பித்து கி.பி. 1859ஆம் ஆண்டு வரையிலான இந்தியச் சுதந்திரப்போர் குறித்த பல்வேறு தகவல்களை நூலாசிரியர் தேதி வாரியாகத் தொகுத்தளித்துள்ளார். இந்திய சுதந்திரப் பெரும்போரில் பங்கேற்ற முஸ்லிம் மன்னர்கள், சிப்பாய்கள், தளபதிகள், இளவரசர்கள், மௌலவிகள், அரசிகள் உள்ளிட்டோர் குறித்த இருட்டடிப்புச் செய்யப்பட்ட சரித்திரச் சான்றுகளை ஆதாரத்துடன் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது இந்நூல். கி.பி. 1831ஆம் ஆண்டு முதல் கி.பி. […]

Read more
1 40 41 42 43 44 84