மீண்டும் ஆரியரைத் தேடி

மீண்டும் ஆரியரைத் தேடி, த. தங்கவேல், வெளியீடு சமூக இயங்கியல் ஆய்வு மையத்திற்காக, கோவை, விலை 240ரூ. தமிழக அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற உயர் அதிகாரியும், பொறியாளரும், வரலாற்று ஆய்வாளருமான த.தங்கவேல் நீண்ட ஆய்வுகளை நடத்தி, வரைபடங்களுடன் தொகுத்த நூல் மீண்டும் ஆரியரைத் தேடி. இதில் ஆரியர்கள் என்றால் யார்? அவர்கள் ஒரு குறிப்பிட்ட இனத்தவர்களா? எங்கிருந்து, எப்போது வந்தார்கள்? அவர்களின் முக்கியமான அடையாளங்கள் என்ன? என்பன போன்ற விஷயங்களை மிக ஆழமாக ஆய்வு செய்து வெளியிட்டு இருக்கிறார். தமிழ், சமஸ்கிருதம் ஆகிய […]

Read more

சமயங்கள் சமுதாய அடிப்படை மாற்றத்திற்காகவே

சமயங்கள் சமுதாய அடிப்படை மாற்றத்திற்காகவே, ஆங்கிலம் ஆ. அலங்காரம், தமிழாக்கம் அ. அந்தோணி குருசு, என்.சி.பி.எச்., வெளியீடு, பக். 226, விலை 180ரூ. தீண்டாமை இன்னும் ஒழியவில்லை சமயங்களுக்கான விடுதலையை அடிநீரோட்டமாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கும் இந்த நூல், பல தரவுகளையும் ஒருங்கிணைத்த ஆய்வு நூல். ஆறு இயல்கள் கொண்ட இந்த நூலின் முதல் இயலில், ஜாதி, சமயம் குறித்த விவேகானந்தரின் எண்ணங்கள் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்கான வெளிச்சக்கீற்றிற்கு அவை துணை செய்வனவாய் உள்ளன.ஆன்மிகமும் வேதாந்தமும் பின்னிப் பிணைந்த நவீன அறிவியலின் எல்லையை வரையறை […]

Read more

அதிசய சித்தர் போகர்

அதிசய சித்தர் போகர், எஸ். சந்திரசேகரன், கற்பகம் புத்தகாலயம், விலை 90ரூ. தூய தவ வலிமையின் காரணமாக தெய்வநிலையை அடைந்துவிடும் மகான்களான சித்தர்கள் தங்களது அற்புத சக்திகளை, துன்பப்படுபவர்களின் துயரங்களைப் போக்குவதற்கு பயன்படுத்தியுள்ளனர் என்பதை நூலாசிரியர் விரிவாக எடுத்துக் கூறி உள்ளார். நன்றி: தினத்தந்தி, 14/10/2015.   —- இளவரைவியலும் தமிழ்நாவலும், ஆ.சிவசுப்பிரமணியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 155ரூ. ஒரு குறிப்பிட்ட சமூகத்தைப் பற்றிய இனவரைவியல் செய்திகளை மனதில்கொண்டு இனவரைவியலுக்கும் நாவலுக்குமான தொடர்பை இந்நூல் ஆராய்கிறது. நன்றி: தினத்தந்தி, 14/10/2015.   […]

Read more

பழந்தமிழில் சமூக சமய மரபுகளும் பனுவலாக்கக் கோட்பாடுகளும்

பழந்தமிழில் சமூக சமய மரபுகளும் பனுவலாக்கக் கோட்பாடுகளும், மு. இரமேஷ், இராசகுணா பதிப்பகம், பக். 175, விலை 130ரூ. மேலைத் திறனாய்வு அணுகுமுறையைப் பயன்படுத்தி திறனாய்வு நூல்களைப் படைத்துவரும் நூலாசிரியரின் இன்னொரு திறனாய்வுப் படைப்புதான் இது. அகம், புறம் பற்றிய கருத்துருவாக்கத்தில் இணைவும் இயைபும் என்ற தலைப்பில் அடையாள அரசியல் பேசப்படுகிறது. புறானனூற்றை முன்வைத்து தொல் தமிழ் சமூகங்களும் சமயச் சொல்லாடல்களும் எப்படி இருந்தன என்பதை விளக்கியுள்ளார். அகமரபில் முருகன் பற்றிய விளக்கங்கள், அதாவது சங்க இலக்கியங்களில் முருகன் தொடர்பான குறிப்புகள் பல, சிந்துவெளிப் […]

Read more

பாண்டியர் வரலாறு

பாண்டியர் வரலாறு, பேராசிரியர் ம.ராசசேகர தங்கமணி, விகடன் பிரசுரம், சென்னை, விலை 315ரூ. மூவேந்தர்களில் மிகப் பழமையானவர்கள் பாண்டியர்கள். நீண்ட காலம் ஆட்சி நடத்தியவர்கள். கல்வெட்டுகள், செப்பேடுகள், அகழ்வாராய்ச்சிகள் முதலியவற்றால் இவர்களது வரலாற்றை அறிய முடிகிறது. கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி, சதாசிவ பண்டாரத்தார் ஆகியோர், பாண்டியர் வரலாறு பற்றி சிறந்த நூல்கள் எழுதியுள்ளனர். எனினும், அவர்கள் காலத்துக்குப்பின், புதிய கல்வெட்டுகள், செப்பேடுகள் பல கிடைத்துள்ளன. அவற்றையும் சேர்த்து, இந்த நூலை எழுதியுள்ளார், பேராசிரியர் ம.ராசசேகர தங்கமணி. அவர் தெரிவிக்கும் சில கல்வெட்டுச் செய்திகள் மூலம் […]

Read more

நம் வாழ்வோடு இணைந்த 100 மரங்களின் பயன்கள்

நம் வாழ்வோடு இணைந்த 100 மரங்களின் பயன்கள், முனைவர் பி. சாந்தன், மணிமேகலைப் பிரசரம், பக். 288, விலை 120ரூ. மனிதர்கள் உள்பட பூமியிலுள்ள அனைத்து உயிரினங்களும் உயிர் வாழத் தேவை பிராணவாயு. இதைத் தருவது பச்சையம் உள்ள மரங்களே. எனவே, ஒவ்வொரு வரும் ஏதேனும் ஒரு மரத்தையாவது நட்டு வளர்க்க வேண்டும் என்ற நோக்கில் இந்நூலை உருவாக்கியுள்ளார் ஆசிரியர். தாவர வளத்தை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ள இந்நூலாசிரியர், சுமார் 1000 வகையான தாவரச் சிற்றினங்களை கண்டறிந்துள்ளதோடு, மூலிகைப் பண்ணை, உலர் […]

Read more

சொலவடைகளும் சொன்னவர்களும்

சொலவடைகளும் சொன்னவர்களும், சூரியன் பதிப்பகம், சென்னை, விலை 200ரூ. உணர்வுகளை வெளிப்படுத்த, யோசனை சொல்ல, ஆறுதல் தர, அறிவுரை தந்து நெறிப்படுத்த, விமர்சனம் செய்து எச்சரிக்க, பிரச்சினையான நேரத்தில் தீர்வுகள் தேடித்தர, சொலவடைகளைப் போலப் பயன் தருகிற எளிய இலக்கியம் எதுவும் இல்லை. கோபம், குமுறல், ஆற்றாமை, கழிவிரக்கம், வலி, சலிப்பு என அத்தனை மனச்சுமைகளையும் இந்தச் சொலவடைகளில் இறக்கி வைத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். அவர்களின் மனக்கண்ணாடி வழியே இந்த வாழ்க்கையை நாம் புரிந்து கொள்ள இந்த நூல் உதவும். நன்றி: தினத்தந்தி, 19/8/2015. […]

Read more

இயன்றவரையில் இனிய தமிழ்

இயன்றவரையில் இனிய தமிழ், க. முருகேசன், வான்புகழ் வளர்தமிழ் மன்றம், பக். 128, விலை 60ரூ. செம்மொழி என்ற பெருமையும் பகழும் தமிழ்மொழிக்கு இருந்தாலும் தமிழர்கள் பேசும்போது, தேவையே இல்லை என்றபோதும் பிறமொழிகளைக் கலந்து பேசுவதையே கௌரவமாக நினைக்கிறார்கள். குறிப்பாக ஆங்கிலச் சொற்களைக் கலந்து பேசுவதும் எழுதுவதும் பெருகிவிட்டது. இது தமிழ்மொழிக்குச் செய்யும் பெரும் தீங்கு என்பதையே இந்நூலாசிரியர் நூல் முழுதும் அலசியுள்ளார். தக்க உதாரணங்கள் தந்து, அதற்கு இணையான தமிழ்ச்சொற்களையும் வழங்கி தமிழுக்கு உரமூட்டுகிறார். தமிழின் பெருமையை இனிமையை எடுத்து இயம்புகிறார். இயன்றவரை […]

Read more

திருமூலரின் திருமந்திரத் தாவரங்கள்

திருமூலரின் திருமந்திரத் தாவரங்கள், இரா. பஞ்சவர்ணம், பஞ்சவர்ணம் பதிப்பகம், பக். 295, விலை 360ரூ. திருமூலரை சித்தர், முனிவர், யோகி, ஞானி என்றெல்லாம் பலரும் அறிந்திருப்பர். ஆனால் அவர் தலைசிறந்த விஞ்ஞானியாகவும், கணித மேதையாகவும், தாவரவியல் நிபுணராவும், புவியியல் வல்லுநராகவும், மருத்துவ நிபுணராகவும் விளங்கியுள்ளார் என்பதை இந்நூல் தெளிவுபடுத்துகிறது. திருமூலரின் ஆன்மா, கடவுள் பற்றிய கணக்கியல், திருமூலரும் புவி இயலும், திருமூலம் சித்த மருத்துவமும், உடற்கூற்றியலும், திருமூலரின் கருவுறுதல் தத்துவம், திருமந்திரத்தில் இடம்பெற்றுள்ள தாவரங்களின் வகைகள், அத்தாவரங்கள் பற்றிய விளக்கங்கள், தாவரங்களின் வண்ண ஓளிப்படங்கள் […]

Read more

பாப்லோ நெருதாவும் ஈரோடு தமிழன்பனும்

பாப்லோ நெருதாவும் ஈரோடு தமிழன்பனும், ப. குணசேகர், கவிதா பப்ளிகேஷன், பக். 184, விலை 120ரூ. தென் அமெரிக்காவின், சிலி நாட்டுக் கவிஞன் பாப்லோ நெருதாவையும், தமிழன்பனையும் கவிதைகளால் உரசிப் பார்த்திருககிறார் நூலாசிரியர். மக்கள் கவிஞராக இருவரையும் பார்த்ததோடு மட்டும் அல்லாமல், இரு கவிஞர்களின் மேடைப் பிரம்மாண்டங்களையும் விரித்துப் படைத்துள்ளார். எட்டு தலைப்புகளில் இரு மொழிக் விஞர்களின் கவிதைகளைச் சாளரத்தின் வாயிலாகக் காட்டுகிறார். சில இடங்களில் கதவைத் திறந்தும் வெளிப்படுத்துகிறார். திறனாய்வு, விமர்சனம் எனும் எல்லைகளைக் கடந்து, இரண்டு பேரின் படைப்புகளையும் எடுத்து வைத்து, […]

Read more
1 42 43 44 45 46 84