திருலோக சீதாராம்

திருலோக சீதாராம், ஏ.ஆர். இராஜமணி, சாகித்திய அகாதெமி, சென்னை, பக். 104, விலை 50ரூ. திருவையாறு லோகநாதய்யர் சீதாராமன் என்கிற திருலோக சீதாராம் அகத்திய முனிவரைப்போல் குள்ளமான உருவம் தாங்கியவர். பளிச்சென்று குங்குமப் பொட்டும் வெற்றிலைச் செல்லமுமாக எந்த நேரமும் உலா வந்தவர். கந்தர்வ கானம் என்னும் கவிதைப் படைப்பால் புகழ்பெற்றவர். சிறந்த மேடைப் பேச்சாளருமான அவர் சிவாஜி இதழின் ஆசிரியர். அவருடைய சித்தார்த்தன் மொழிபெயர்ப்பு சிறப்பு மிக்கது. பாரதி புகழ் பாடியும், பரப்பியும், பாரதி கவிதைகளை மேடையில் உணர்வுடன் பாடியும் பாரதிப் பித்தாக […]

Read more

வள்ளுவர் வாக்கும் வாழ்வியல் நிஜங்களும்

வள்ளுவர் வாக்கும் வாழ்வியல் நிஜங்களும், சி.வி. மலையன், மேகலா பதிப்பகம், பக். 280, விலை 150ரூ. இந்தியா மட்டுமல்லாது, உலகளவில் நடந்த சமீபகால சில நிகழ்வுகள் பற்றி, தினமலர் முதலான சில நாளிதழ்களில் வெளியான செய்திகளைக் கருவாகக் கொண்டு, அந்த நிகழ்வுகளோடு திருக்குறட்பாக்களை பொருத்திக் காட்டுகிறது இந்த நூல். மன்னுயி ரோம்பி அருளாள்வாற் கில்லென்ப தன்னுயி ரஞ்சுவினை எனும் குறட்பாவுக்கு இந்து, முஸ்லிம் பெண்கள் முறையே முஸ்லிம், இந்து பெண்களின் கணவர்களுக்கு, தங்களின் சிறுநீரகத்தை தானமாக கொடுத்த நிகழ்வையும், பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம் […]

Read more

ஆபிரகாம் பண்டிதர்

ஆபிரகாம் பண்டிதர், நா.மம்மது, சாகித்திய அகாதெமி, பக். 112, விலை 50ரூ. கருணாமிர்த சாகரம் தந்த கருணையாளர் தமிழ் இசை துறையில் மறக்க முடியாத ஒரு ஆளுமை, ஆபிரகாம் பண்டிதர். திருநெல்வேலி மாவட்டம். சாம்பவர் வடகரை ஊரில் பிறந்து, படித்து, திண்டுக்கலில் பணிபுரிந்து, தஞ்சையில் இறுதி வரை வசித்து, அங்கேயே மறைந்தவர். இசை மட்டுமின்றி, சித்த மருத்துவம், தமிழாசிரியர் பணி, விவசாயம், பாடகர், வீணை, வயலின் கலைஞர், கீர்த்தனை ஆசிரியர், ஓவியர், புகைப்படக் கலைஞர், பதிப்பாசிரியர், ஜோதிட பண்டிதர், கதாகாலட்சேப விற்பன்னர், இசை புரவலர் […]

Read more

வைணவ இலக்கியம்

வைணவ இலக்கியம் (ஆய்வுக்கோவை), எட்டுதொகுதிகள், பதிப்பாசிரியர்கள்-முனைவர் ந.வெங்கடேசன், முனைவர் தெ.மேகநாதன், முனைவர் இரா. சதாசிவம், வெளியீடு-அண்ணாமலைப் பல்கலைக்கழகம், பக். 2038. தமிழ் இலக்கியத்தின் நாடளாவிய தன்மைக்கு எடுத்துக்காட்டு ஒம் நமோ நாராயணாய் எனும் எட்டெழுத்து மந்திரத்தை உணர்த்தும் வகையில், எட்டுத் தொகுதிகளுடன் வெளியிடப்பட்ட நூல். நானூற்று நான்கு கட்டுரைகளுடன், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்களுடன் வெளிவந்துள்ள இந்த நூல், வைணவ இலக்கிய வரலாற்றில் ஒரு மைல்கல். வைணவ இலக்கியங்களான நாலாயிரத்திவ்ய பிரபந்தம், பாகவதம், ராமாயணம் முதலான இலக்கியங்களில் வெளிப்படையாகத் தோன்றும் கருத்துகளையும், உணர்த்துப்பட்டுள்ள கருத்துகளையும் வெளிப்படுத்தும் […]

Read more

தமிழ்ச் சமூக மரபும் மாற்றமும்

தமிழ்ச் சமூக மரபும் மாற்றமும், பதிப்பாசிரியர்கள் சு. சதாசிவம், க. பூபதி, ஆ. அறிவழகன், பா. சம்பத்குமார், ச.வீரபாபு மற்றும் அறுவர், செம்மூதாய் பதிப்பகம், சென்னை, பக். 560, விலை500ரூ. ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ், அகாதெமி, குடியேற்றம் தமிழ்ச்சங்கம் மற்றும் செம்மூதாய் பதிப்பகம் இணைந்து, சென்னையில் நடத்திய பன்னாட்டுக் கருத்ரங்கில் வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு. பண்டைய காலம் தொட்டு நம் தமிழ் சமூகத்தினர் பலவிதமான மரபுகளைக் கடைப்பிடித்து வந்துள்னர் என்பதற்குத் தொல்காப்பியமே சான்று. நம் தமிழ் மரபு எவ்வாறு இருந்தது என்பதற்கு சங்க இலக்கியங்களே […]

Read more

கபிலர்

கபிலர், ந.மு.வேங்கடசாமி நாடர், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், பக். 144, விலை 70ரூ. உலகிலுள்ள ஒவ்வொரு நாட்டினரும் தத்தம் முன்னோர் வரலாறுகளைத் தெரிந்து கொள்ள அவாவுகின்றனர். நம் முன்னோராகிய தமிழ் மக்கள் பழைய நாளில் பல துறைகளிலும் எத்துணை மேன்மையுற்று விளங்கினார்கள் என்பதனை அக்காலத்தெழுந்த தமிழ் நூல்களினின்றும் தமிழ் மொழியின் திருந்திய நிலையினின்றும் அறிந்து கொள்ளலாகும். அதைக் கருத்தில் கொண்டே நல்லிசைப் புலவர்களைக் கொண்டு ஆராய்ச்சி முறையில் சிறந்த முறையில் எழுதவித்து, வெளியிடுவதை ஒரு சிறந்த கடனாக மேற்கொண்டுள்ளதாகவும் அந்த வரிசையில் ந.மு.வேங்கடசாமி நாட்டார் […]

Read more

திருக்குறள் யாப்பிலக்கண நோக்கில்

திருக்குறள் யாப்பிலக்கண நோக்கில் செம்பதிப்பு, க. கலியபெருமாள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, பக். 492, விலை 370ரூ. உலகப் பொது மறையான திருக்குறள் குறித்து இதுவரை பல்வகை நோக்கிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவிட்டன. ஆயினும் யாப்பிலக்கண நோக்கில் திருக்குறளை இதுவரை எவரும் ஆய்வு செய்திலர். அப்பெரும் பணியை இந்நூலாசிரியர் மேற்கொண்டிருக்கிறார். பரிமேலழகர், தேநேயப் பாவாணர், மு. வரதராசனார், வித்துவான், ச. தண்டபாணி, தேசிகர், வ.சுப. மாணிக்கம் போன்ற தமிழறிஞர்களின் கருத்து விளக்கங்களை அடியொற்றி இந்நூல் எழுதப்பட்டுள்ளது. ஒவ்வொரு குறளையும் எழுத்து, […]

Read more

நாயக்கர் காலக் கலைக்கோட்பாடுகள்

நாயக்கர் காலக் கலைக்கோட்பாடுகள், சா. பாலுசாமி, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், பக். 336, விலை 375ரூ. நாயக்கர் காலத்தின் கட்டடம், சிற்பம், ஓவியம், இலக்கியம் ஆகியவற்றை ஆராய்ந்து, இவை அனைத்திலும் உள்ள ஒத்த தன்மைகளைக் கண்டறிந்து, அந்த ஒத்த தன்மை எவ்விதம் கலைக்கோட்பாடாக பரிணமிக்கிறது என்பதை ஆராயும் நூல். நாயக்கர் கால வரலாற்றைச் சுருக்கமாகச் சொல்லும் இந்நூல், நாயக்கர் காலத்துக்கு முன்பு தோன்றிய கட்டட, சிற்ப, ஓவியக் கலைகளைப் பற்றியும், இலக்கியங்களைப் பற்றியும் அறிமுகப்படுத்துகிறது. நாயக்கர் காலக் கலைகளில் காணப்படும் முக்கிய தன்மைகளைக் கண்டறிந்து […]

Read more

செவ்விலக்கிய மதிப்புகள்

செவ்விலக்கிய மதிப்புகள், செ. ரவிசங்கர், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், பக். 112, விலை 50ரூ. தொல்காப்பியத்திற்குப் பலர் உரை எழுதியுள்ளனர் அவர்களுள் ச.வே.சு.வும் ஒருவர். தொல்காப்பியம் முழுமைக்கும் ச.வே.சு. எளிய விளக்கவுரை எழுதியுள்ளார். தம் உரை நூலில் பல்வேறு இடங்களில் அவர் எடுத்துக் காட்டுகளை தமிழ் சார்ந்து பயன்படுத்தியுள்ள திறத்தை ச.வே. சுப்பிரமணியனாரின் தொல்காப்பிய உரை எடுத்துக்காட்டுத் திறன் என்ற இந்நூலின் முதல் கட்டுரை விளக்குகிறது. அகப்பாடலில் இருக்கும் சங்ககாலச் சூழலியல் கட்டுரையில் வாழிடச் சூழலியல், சுற்றுப்புறச் சூழலியல், பண்பாட்டுச் சூழலியல் போன்றவையும், தமிழர்களின் […]

Read more

தொல்காப்பியத்தில் இசை

தொல்காப்பியத்தில் இசை, ஏழிசை இசை ஆய்வகம், தமிழ்க்கலையகம், மயிலாடுதுறை, விலை 350ரூ. தமிழிசையின் தொன்மையையும், தனித்தன்மையையும் தக்க சான்றுகளுடன் நிலைநாட்டும் ஓர் அரிய ஆய்வு நூல். தொல்காப்பியம் தொடங்கிச் செவ்வியல் இலக்கியங்களிலும், காப்பியங்களிலும் காணப்படும் இசைக்குறிப்புகள் குறித்த விரிவான ஆய்வு நூலாக விளங்குகிறது. இசை, பாவகை, பண்புகள், இசைக்கருவிகள், இசை வடிவங்கள், இசை அழகணிகள், இசைக் கலைஞர்கள், கூத்துக்கள் ஆகிய எட்டுத் தலைப்புகளின் கீழ் தொகுத்தும், வகுத்தும் தந்திருக்கும் செய்திகள், ஆய்வு முடிவுகள் ஒரு வரலாற்றுக் களஞ்சியமாக விளங்குகின்றன. இலக்கண ஆய்வுகள் குறைந்து வரும் […]

Read more
1 54 55 56 57 58 84