புலிகளின் புதல்வர்கள்

புலிகளின் புதல்வர்கள், பா. விஜய், புதிய தலைமுறை பதிப்பகம், பக். 164, விலை 275ரூ. ஒன்றாக இணைந்து ஆட்சி நடத்த தெரியாத தமிழர்கள்? கவிஞராக அறியப்பட்ட பா. விஜய், இந்த புத்தகத்தில் ஒரு ஆய்வாளராகவும் தன்னை வெளிப்படுத்தி உள்ளார். 1800 ஆண்டுகளுக்கு முன், தமிழகம் எப்படி இருந்தது என்பதை இலக்கியம் மூலம் காட்சிப்படுத்தி உள்ளார். தமிழ் சினிமாக்களில் காட்சிப்படுத்தப்பட்டதை போன்று, பண்டைய தமிழ் சமூகமும், மன்னர்களும் இருந்ததில்லை. உடல் முழுதும் நகைகளை பூட்டிக்கொண்டு திரியவில்லை. மது குடித்தனர், மாமிசம் உண்டனர் என நிஜத்தை எடுத்துரைத்துள்ளார். […]

Read more

சமுதாயப் பார்வையில் மணிமேகலை

சமுதாயப் பார்வையில் மணிமேகலை, கே. ஜீவபாரதி, ஜீவா பதிப்பகம், பக். 216, விலை 110ரூ. மணிமேகலையின் முன் கதையாகிய சிலப்பதிகார ஆராய்ச்சியில் தொடங்கிப் பதிகமும், வஞ்சிக் காண்டமும், இளங்கோவடிகளால் இயற்றப்படவில்லை எனக்காட்டி, இளங்கோவுக்கு கண்ணகி கதையை சொன்னவர் சாத்தனார் என்பது சரியா என வினவி, மணிமேகலை படைத்த சாத்தனாரும், சங்கத்துச் சீத்தலைச் சாத்தனாரும் ஒருவரல்லர் என, நிறுவிச் செல்கிறது இந்த நூல். பசிப்பிணி அறுத்த பாத்திரமான மணிமேகலையைச் செதுக்கியுள்ள பாங்கினை, வியந்து விதந்து சொல்கிறது. பொதுவுடைமைச் சிந்தனையாளராகிய நூலாசிரியர், தம் கருத்திற்கேற்பச் சமுதாயப் பணியை, […]

Read more

தமிழக ஊரும் பெயரும்

தமிழக ஊரும் பெயரும், தா.குருசாமி தேசிகர், தருமபுர ஆதீனம், குருஞான சம்பத் மடம், பக். 130, விலை 60ரூ. மற்ற மாநிலங்களில் எப்படியோ தமிழ் நாட்டைப் பொருத்தவரை எந்த ஒரு ஊரின் பெயரைக் குறிப்பிட்டாலும் அப்பெயரோடு ஒரு வரலாறு இணைந்தே இருக்கும். ஆனால், காலப்போக்கில், பல வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊர்களின் பெயர்கள் மக்களின் பேச்சு வழக்கில் மாறுபாடடைந்து அவற்றின் உண்மையான பொருளை இழந்து விட்டிருக்கின்றன. இந்நூலில் இருபதுக்கும் மேற்பட்ட ஊர்களின் பெயர்களைப் பல கோணங்களில் ஆய்வு செய்திருக்கிறார் நூலாசிரியர். ஆசிரியரின் பெரும்பாலான முடிவுகள் […]

Read more

அறிவுரைகள் ஜாக்கிரதை

அறிவுரைகள் ஜாக்கிரதை, முனைவர் நா. சங்கரராமன், விஜயா பதிப்பகம், பக். 80, விலை 45ரூ. வருடம் தவறாமல் நமது வேடந்தாங்கலுக்கு, கண்டங்களையும் கடல்களையும் தாண்டி வரும் பறவைகளைப் பாருங்கள். எத்தனை பெரிய நம்பிக்கையோடு அவை வருகின்றன. வாயிலே ஒரு மரக்குச்சியை கவ்விக்கொண்டு மனம் நிறைய நம்பிக்கையோடு பறந்து வரும் பறவையின் நம்பிக்கை, நம்மில் எத்தனை மனிதர்களுக்கு இருக்கிறது? தயவுசெய்து சீக்குப்பிடித்த சிந்தனைகளையும் அழுக்குப்பிடித்த மூளைகளையும் அப்புறப்படுத்தி விடுங்கள். குப்பைகளைக் கொட்டிவைக்கும் குப்பைத் தொட்டியல்ல மனம் என்பதை உணருங்கள். நல்ல எண்ணங்களால் மனதினை நிரப்புங்கள். நம்பிக்கையுடையவர்களையே […]

Read more

பாரதத்தில் ராஜதர்மம்

பாரதத்தில் ராஜதர்மம் அன்றும், இன்றும், ஆர்.பி.வி.எஸ். மணியன், வர்ஷன் பிரசுரம், சென்னை 17, பக். 456, விலை 250ரூ. ஆட்சியாளர்கள் கடைபிடிக்க வேண்டிய உயரிய நெறிமுறைகளே ராஜதர்மம் எனப்படுவது. போற்றத்தக்க இத்தகைய நெறிமுறைகளை உருவாக்கி, அவற்றை உலகிற்கு முதன் முதலில் போதித்தது பாரத நாடு என்று கூறும் இந்நூலாசிரியர், அவை குறித்த பல்வேறு வரலாற்றுத் தகவல்களை இந்நூலில் தொகுத்துள்ளார். இதற்கு ராமாயணம், மகாபாரதம், சுக்ர நீதி, அர்த்த சாஸ்திரம் போன்ற ஹிந்து தர்ம நூல்கள் முதல், திருக்குறள், அகநானூறு, புறநானூறு போன்ற சங்க கால […]

Read more

பணம் விரும்புதே உன்னை

பணம் விரும்புதே உன்னை, டி.ஏ. விஜய், புதிய பறவை பதிப்பகம், பக். 204, விலை 555ரூ. தினமலர் வாரமலரில் தொடராக வெளிவந்து, பின் புத்தக வடிவில் வெளியாகி, பலரது பாராட்டுதல்களை பெற்ற புத்தகம். தற்போது 11வது பதிப்பாக வெளிவந்துள்ளது. பங்கு வர்த்தம் என்றாலே, வேப்பங்காயாக கசக்கும். அதில் புழங்கும் நடைமுறைகள், சொற்கள் ஆகியவை எட்ட இருந்து பார்ப்பவர்களுக்கு புரியாத புதிராக இருக்கும். மொத்தத்தில், பலாப்பழ மேல்தோல்போல், பார்வைக்கு கடினமாக காணப்படும் பங்கு வர்த்தகத்தில் பக்குவமாக நுழைந்தால், பணம் என்னும் தேன் சுவை கொண்ட பழத்தை […]

Read more

தமிழில் மொழியியல் ஆய்வு வரலாறு

தமிழில் மொழியியல் ஆய்வு வரலாறு, இதழ்கள், சோ. ராஜலட்சுமி, காவ்யா, சென்னை, பக். 280, விலை 250ரூ. செந்தமிழ், செந்தமிழ்ச் செல்வி, தமிழ்ப் பொழில், புலமை, மொழியியல் ஆகிய ஐந்து இதழ்களில் மொழியியல் குறித்து வெளியான ஆய்வுக் கட்டுரைகளை ஆய்வு செய்யும் நூல். தமிழில் மொழியியல் ஆய்வுகள் எந்த முறையில் நிகழ்த்தப்பட்டன? என்பதை ஆராய்வதே இந்நூலின் நோக்கம். மொழியியலின் வரலாறு, தமிழுக்கும் பிற மொழிக்கும் உள்ள உறவு, தமிழின் வரிவடிவம், தமிழ் மரபிலக்கணம், ஒப்பு மொழியியல், கோட்பாட்டாய்வுகள் என மொழியியல் குறித்து பல்வேறு திசைகளில் […]

Read more

தமிழில் மொழியியல் ஆய்வு வரலாறு

தமிழில் மொழியியல் ஆய்வு வரலாறு, இதழ்கள், சோ. ராஜலட்சுமி, காவ்யா, சென்னை, பக். 280, விலை 250ரூ. செந்தமிழ், செந்தமிழ்ச் செல்வி, தமிழ்ப் பொழில், புலமை, மொழியியல் குறித்து வெளியான ஆய்வுக் கட்டுரைகளை ஆய்வு செய்யும் நூல். தமிழில் மொழியியல் ஆய்வுகள் எந்த முறையில் நிகழ்த்தப்பட்டன? என்பதை ஆராய்வதே இந்நூலின் நோக்கம். மொழியியலின் வரலாறு, தமிழுக்கும் பிற மொழிகளுக்கும் உள்ள உறவு, தமிழின் வரி வடிவம், தமிழ் மரபிலக்கணம், ஒப்பு மொழியியல், கோட்பாட்டாய்வுகள் என மொழியியல் குறித்து பல்வேறு திசைகளில் இந்நூல் பயணிக்கிறது. திராவிட […]

Read more

ஜீவா பார்வையில் பாரதி

ஜீவா பார்வையில் பாரதி, ஜீவா பதிப்பகம், சென்னை, விலை 200ரூ. தமிழக அரசியல்வாதிகளில் தனித்துவமிக்கவர் ஜீவா. இவர் மிகச் சிறந்த பேச்சாளர். இலக்கியவாதி. தொடக்கத்தில் காந்தீய கருத்துகளால் ஈர்க்கப்பட்டு பின்னர் சுயமரியாதை கருத்துக்களை ஏற்று, இறுதியில் கம்யூனிஸ்டாக வாழ்ந்தவர். அவர் பேச்சில் தொடாத துறைகளே இல்லை. இடம் பெறாத தலைவர்களே இல்லை. காந்தியடிகள், வ.உ.சி., பரலி சு.நெல்லையப்பர், மறைமலையடிகள், வ.ரா. போன்றவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு பெற்ற ஜீவா, பாரதியாருடன் பழகியதில்லை. இருந்தபோதிலும் பாரதியின் படைப்புகளை படித்து, தமிழ் மக்களிடம் பாரதியைக் கொண்டு செல்லும் பணியில் […]

Read more

ஜீவா பார்வையில் பாரதி

ஜீவா பார்வையில் பாரதி, கே. ஜீவபாரதி, ஜீவா பதிப்பகம், சென்னை, விலை 200ரூ. காந்தி வ.உ.சி., பரலி சு. நெல்லையப்பர், மறைமலையடிகள், வ.ரா. போன்ற மகாகவி பாரதியார் காலத்தில் வாழ்ந்தவர்களைச் சந்திக்கும் வாய்ப்பையும் அவர்களுடன் கருத்துப் பரிமாற்றம் செய்யும் சூழலையும் ஜீவா பெற்றார். ஆனால் மகாகவி பாரதியைச் சந்திக்கும் வாய்ப்பு ஜீவாவுக்கு வாய்க்கவில்லை. இருப்பினும் பாரதியின் படைப்புகளை கருத்தூன்றிப் படித்து, அதில் தன் மனத்தை இழந்து தமிழ் மக்களிடத்தில் பாரதியைக் கொண்டு செல்லும் மகத்தான பணியைச் சிறப்பாகச் செய்து முடித்தவர் ஜீவா. அதற்கு இந்த […]

Read more
1 56 57 58 59 60 84