காவிரி நாடன் காதலி

காவிரி நாடன் காதலி, கன்னரதேவன், முதற்சங்கு பதிப்பகம், நாகர்கோவில், விலை 300ரூ. இந்த சரித்திர நாவலை எழுதி முடிக்க எனக்கு 35 ஆண்டுகள் பிடித்தன என்கிறார் நூலாசிரியர் தமிழுலகன். ஆதித்த சோழர் வரலாற்றையும், கன்னரதேவன் வரலாற்றையும் அடிப்படையாக வைத்து இந்த நாவல் புனையப்பட்டுள்ளது. ஏராளமான கதாபாத்திரங்கள். எனினும் கதையை குழப்பம் இன்றி விறுவிறுப்பாக எழுதியுள்ளார். தமிழ் உணர்வைத் தூண்டும் நாவல். நன்றி: தினத்தந்தி, 23/9/2015.   —- கற்றபின் நிற்க, கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர், தமிழ்மணி புத்தகப்பண்ணை, விலை 200ரூ. நம் மொழியில் இல்லாத நற்சிந்தனைகள் […]

Read more

தேசிய நீர் வளமும் நதிநீர் இணைப்பும்

தேசிய நீர் வளமும் நதிநீர் இணைப்பும், எஸ்.ஆர்.சுப்பிரமணியம், பழனியப்பா பிரதர்ஸ், பக். 344, விலை 250ரூ. நதிகள் தேசியமயமாக்கப்பட்ட வேண்டும் என்ற சிந்தனையின் அடிப்படையில் உருவான நூல் இது. பேச்சுவார்த்தைகள் மூலம் நைல் நதி, மீகாங் நதி, டெலிவரி நதி, டான்பு நதி, நைஜர், செனகல் நதி, நேபாள அணைக்கட்டுகள், சிந்து நதி பிரச்னை (பக். 12-13) போன்றவை, உலகளவில் தீர்க்கப்பட்டுள்ளதை பட்டியலிட்டுள்ளார், நூலாசிரியர். ஒன்பது ஆண்டுகளில் மேட்டூர் அணை கட்டப்பட்டது (பக். 200) என்பது உட்பட, பல புள்ளி விவரங்களையும் கொடுத்துள்ளார். மகாநதியிலிருந்து […]

Read more

கைக்கு எட்டும் தூரத்தில் அழகு 6 லிருந்து 60 வரை

கைக்கு எட்டும் தூரத்தில் அழகு 6 லிருந்து 60 வரை, ராஜம் முரளி, எழுத்தாக்கம் பிரேமா நாராயணன், விகடன் பிரசுரம், பக். 168, விலை 110ரூ. அழகைப் பராமரிப்பது என்றதுமே நமக்கு உடனே இந்த ஷாம்புவைப் பயன்படுத்துங்கள். இந்த சோப்பை உபயோகியுங்கள் என்பன போன்ற விளம்பரங்கள்தாம் நினைவுக்கு வரும். இதற்கு மாறாக, தலை முதல் பாதங்கள் வரை அழகுபடுத்த இந்நூலாசிரியர் சொல்லியிருக்கும் அழகு சாதனப் பொள்கள் எல்லாமே நாம் அன்றாடம் வீட்டில் பயன்படுத்தும் சாதாரண, இயற்கைப் பொருள்கள்தாம். அந்த இயற்கை அழகு சாதனப் பொருள்களைத் […]

Read more

நல்லவங்க அரசியலுக்கு வாங்க

நல்லவங்க அரசியலுக்கு வாங்க, சாந்தா பப்ளிஷர்ஸ், சென்னை, விலை 75ரூ. இந்நூலில் இன்றைய இளைஞர்கள் பின்பற்ற வேண்டிய லட்சியத் தலைவர்களாக பெருந்தலைவர் காமராஜர், உத்தமர் கக்கன், தோழர் ஜீவானந்தம், மக்கள் தலைவர் மூப்பனார் ஆகியோரின் பொது வாழ்க்கை வரலாறு சுருக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் நாட்டில் தூய்மையான அரசியல் மூலம் நல்லாட்சி ஏற்பட தேவையான நீதித்துறை, காவல்துறை மற்றும் கல்வித்துறை சீர்திருத்தங்கள் பற்றியும் விளக்கப்பட்டுள்ளது. நமது நாட்டின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு உடனடி தேவைகளாக ஊழலற்ற நிர்வாகம், தீண்டாமை ஒழிப்பு, மதுவிலக்கு மற்றும் நதிகள் இணைப்பு […]

Read more

காலச் சப்பரம்

காலச் சப்பரம், விழிகள் பதிப்பகம், சென்னை, விலை 100ரூ. பாவல் கவிமுகில் எழுதிய கவிதைகளின் தொகுப்பு. சிறுவயதில் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சிகளின் மலரும் நினைவுகளாக கவிதை நடையில் உலா வருகின்றன. பேச்சு நடை வீச்சில் கவிதைகள் அமைந்துள்ளன. அமாவாசை கணக்கா ஒருத்தன் வெளுப்பா தேடுனாக்கா கைநகமும் கண்ணு முழியும்தான் ஆனா பேரு வெள்ளத்துரை என்பன போன்ற பாடல்கள். கிராமீய மணம் வீசுகின்றன. நன்றி: தினத்தந்தி, 15/7/2015.   —- நீ உன்னை அறிந்தால், ஜி. மீனாட்சி, வானதி பதிப்பகம், சென்னை, விலை 65ரூ. விண்வெளி, […]

Read more

பொது அறிவுப் புதையல்

பொது அறிவுப் புதையல், பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 280ரூ. சின்னஞ்சிறு உயிரினங்களான பூச்சிகள், வண்டுகள் முதற்கொண்டு, பறவைகள், விலங்குகள் ஆகியவை குறித்த அறிவியல் கருத்துகளைக் கூறும் நூல். மேலும் பல அறியப்படாத வரலாறு, அறிவியல், புவியியல், வானியல், கலை, இலக்கியம், சமூகவியல் தொடர்பான செய்திகளையும் இந்த நூலில் ஆசிரியர் உ. கருப்பணன் தொகுத்து வழங்கியுள்ளார். சாதாரணமாக அனைவரும் தெரிந்து வைத்துள்ள தகவல்களாக இல்லாமல், புதிய செய்திகளையும் அரிய தகவல்களையும் தந்திருப்பது நூலுக்கு சிறப்பு சேர்க்கிறது. மாணவர்களுக்கும், போட்டித் தேர்வுக்ளில் பங்கேற்போருக்கும் பயனுள்ள நூல். […]

Read more

தமிழக வழிபாட்டு மரபுகள்

தமிழக வழிபாட்டு மரபுகள், திருச்சிற்றம்பலம் மு. அருணாசலம், சிவ. முருகேசன், சந்தியா பதிப்பகம், பக். 208, விலை 160ரூ. பேராசிரியர் மு. அருணாசலம் தமிழில் எழுதி வெளிவராத, தலவழிபாடு எனும் படைப்பையும் உள்ளிட்டு, அவர் ஆங்கிலத்தில் எழுதிய ஐந்து ஆய்வுக் கட்டுரைகளை தமிழாக்கம் செய்து, மொத்தம் ஆறு கட்டுரைகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. வாதாபி கணபதிக்கு முன்பே, கணபதி வழிபாடு தமிழகத்தில் நிலவியது என்பதை, பிடியதன் உருஉமை கொளமிகு கரியது (பக். 20) என, அப்பரடிகள் பாடியதையும், புல்லிலை எருக்கம் ஆயினும் உடையவை […]

Read more

செல்லப் பிராணிகள் வளர்ப்பு

செல்லப் பிராணிகள் வளர்ப்பு, கவிதா பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 350ரூ. நன்றி மறவாமைக்கு எடுத்துக்காட்டாய் கூறப்படுவது நாய். காவல் காப்பதிலும், ஆபத்து காலத்தில் உதவுவதிலும் நாய்க்கு நிகரான விலங்கு இல்லை. அதுவே மனிதர்களின் செல்லப் பிராணிகளில் முதலிடம் பெறுகிறது. அத்தகைய நாய்களை முறையாக வளர்பப்து எப்படி? என்பது பற்றி பல சுவையான, சுவாரஸ்யமான தகவல்களை இந்த நூலில் ஆசிரியர் வாண்டு மாமா விவரித்துள்ளார். மேலும் பூனை வளர்ப்பு, முயல் வளர்ப்பு, மீன் வளர்ப்பு, வெள்ளெலி, சீமைப் பெருச்சாளி, தேனீ வளர்ப்பு போன்றவை பற்றியும் இந்த […]

Read more

பேசாத பேச்செல்லாம்

பேசாத பேச்செல்லாம், ப்ரியா தம்பி, விகடன் பிரசுரம், சென்னை, பக். 288, விலை 170ரூ.   To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024596.html இன்றும்கூட ஆணாதிக்கம் இந்த சமூகத்தில் புரையோடிக் கிடக்கிறது. ஆணாதிக்கத்தின் அடிமைகளாய் கிராமங்களில் மட்டுமல்ல, நகரங்களிலும் பெண்கள் கட்டுண்டு கிடக்கின்றனர் என்பதை நூலாசிரியர் இந்நூலில் ஆணித்தரமாகப் பதிவு செய்துள்ளார். வாழ்க்கையின் அடுத்த நிலைக்கு முன்னேறிச் செல்லத் துடிக்கும் பெண்கள், அதற்கான வாய்ப்புகளைத் தேடி கிராமப்புறங்களில் இருந்து நகர்ப்புறங்களை நோக்கி இடம்பெயர்கிறார்கள். ஆனால் பெண் என்பதால் அவர்கள் எத்தகைய துன்பங்களை […]

Read more

பிள்ளைகளின் வெற்றி பெற்றோர் கைகளிலே

பிள்ளைகளின் வெற்றி பெற்றோர் கைகளிலே, வி. நடராஜன், சாந்தா பப்ளிஷிர்ஸ், சென்னை, பக். 336, விலை 200ரூ. குழந்தை பிறந்தது முதல் 10 வயது வரை எப்படி வளர்க்க வேண்டும்? என்று வழிகாட்டும் நூல். குழந்தைகளின் நல்ல வளர்ச்சிக்கு அவர்களுக்கு சிறந்த சூழ்நிலை அமைய வேண்டும். அந்தச் சூழ்நிலையைப் பெற்றோரே ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். வளரும் காலத்தில் தன்னுடன் பிறந்தவர்களுடன் குழந்தைகள் சண்டை போடுவார்கள். சாப்பிட மாட்டார்கள். எந்தப் பொருளையும் உடைத்துவிடுவார்கள். சில குழந்தைகள் பிற குழந்தைகளுடன் நன்றாகப் பழக மாட்டார்கள். பெரியவர்களின் கவனத்தைத் […]

Read more
1 13 14 15 16 17 23